கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டது - நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி


‘நடத்தை சரியில்லாததால், விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது’ என நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.
கரூரில் 01.04.2011 அன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக எழுச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாய்மார்கள் கருணாநிதி 6வது முறை முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர். அண்ணா முதன் முறை ஆட்சிக்கு வந்தபோதும், 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோதும் இருந்த ஒரு அலை தற்போது தென்படுகிறது. காரணம் கடந்த 5 ஆண்டுளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், கலைஞர் கான்கிரீட் வீடு திட்டம் என பல திட்டங்களை முதல்வர் வழங்கினார். மக்களுடன் கூட்டணி, கடவுளுடன் கூட்டணி என கூறிவிட்டு, திட்டியவர்களுடனே விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ளார். குடித்துவிட்டு வருவதாக கூறியவரும், ஊற்றி கொடுத்தாரா? எனக் கேட்டவரும் கூட்டணி.
விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. நடத்தை சரியில்லாவிட்டால் அரசியலில் வெற்றி பெற முடியாது. திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது.

இவ்வாறு நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.

No comments:

Post a Comment