கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 31, 2011

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல்: திமுகவினர் கைது


திருவாரூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 30.07.2011 அன்று காலை போலீசார் திடீரென்று கைது செய்தனர். அதை கண்டித்து, சைதாப்பேட்டை பஜார் தெருவில் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, தங்கசாலை ரவுண்டானா அருகே 30.07.2011 அன்று மதியம் 12 மணியளவில் ஆர்கே நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு தலைமையில் பகுதி செயலாளர் டன்லப் ரவி, துறைமுகம் பகுதி செயலாளர் மணிவேலன், கவுன்சிலர் விஜயகுமார், ஏ.பி.மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும், திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதனால் தங்கசாலை பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராயபுரம் சிக்னல் அருகே பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி, மாவட்ட பொருளாளர் இளைய அருணா ஆகியோர் தலைமையில் மறியல் செய்தனர். பொய் வழக்கு போடுவதை கண்டித்து கோஷமிட்ட 100 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லிவாக்கம் எம்டிஎச் ரோடு & ரெட்டித் தெரு சந்திப்பில் பகுதி செயலாளர் சதிஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அமைந்தகரை அண்ணா வளைவு பகுதியில் மறியல் செய்த பகுதி செயலாளர் ராமலிங்கம், இளைஞரணி செயலாளர் பரமசிவம், முன்னாள் இளைஞரணி செயலாளர் ஏ.டி.முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே பகுதிச் செயலாளர் வேலு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருவொற்றியூர் நகர திமுக செயலாளர் தனியரசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சன்னதி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தேரடி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தனியரசு, முன்னாள் எம்எல்ஏ டி.சி.விஜயன், நகர இளைஞரணி அமைப்பாளர் கவி கணேசன் உட்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூரில் நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் திமுகவினர், கத்திவாக்கம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நேரு நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எண்ணூர் போலீசார், கத்திவாக்கம் நகராட்சி தலைவர் திருசங்கு, கவுன்சிலர்கள் வீரச்சந்திரன், சிவக்குமார் உட்பட 70க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
வேளச்சேரி பகுதி செயலாளர் இந்திரா நகர் ரவி தலைமையில், திருவான்மியூர் சிக்னல் அருகில் நேற்று மதியம் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். 66 பேரை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். வடசென்னை பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட அவைத் தலைவர் நெடுமாறன், வட்ட செயலாளர்கள் கமலக்கண்ணன், முருகன், இடிமுரசு, ஆர்.துரைசாமி, ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலையில் நேற்று மறியல் செய்தனர். போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதேபோல் பெரவள்ளூர், அகரம், ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மறியல் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை திமுகவினர் சாலை மறியல் :

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பதவியதால், புதுக்கோட்டை திமுக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமையில் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் வெளியேறும் வாயிலில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். மாற்று பாதையில் பேருந்துகள் சென்று கொண்டிருப்பதால் அந்த பாதையில் இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் பாலு தலைமையில் திமுகவினர் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செந்துறை திமுகவினர் 25 பேர் கைது :
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பரவியதால், குன்னம் தொகுதிக்கு உட்பட செந்துறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கருணாநிதி, பி.ஆர்.பாண்டியன், ஆதி.சங்கர், பரமசிவம், பாஸ்கர் உள்பட திமுகவினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

எ.வ.வேலு தலைமையில் மறியல் - திமுகவினர் கைது
:
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் முன்னால் எம்.எல்.ஏ பிச்சாண்டி, சேர்மன் திருமகன் ஆகியோர் நூற்றுக்கணக்கான திமுகவினருடன் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் செய்தனர்.

போலிசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் கட்சியினர் ஜெ வை எதிர்த்து கோஷமிட்டனர். உடனே போலிசார் அவர்களை கைது செய்தனர்.

பொன்முடி தலைமையில் சாலை மறியல் : விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு திமுக தொண்டர்களுடன் சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, அங்கு சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை - மறியல் செய்த திமுகவினர் கைது
:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து திருநெல்வேலியில் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், டிபிஎம் மைதீன்கான் உள்ளிட்ட திமுகவினர் ஜெங்ஷன் பகுதியில் மறியல் செய்தனர். பொய் வழககுப் போடாதே உள்ளிட்ட அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரசெயலாளர் ராமர், யூனியன் சேர்மேன் முருகேசன் தலைமையில் நடந்த மறியலில் 35 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.






திருவாரூர் அருகே ரோட்டில் வழிமறித்து மு.க.ஸ்டாலின் கைது





திருவாரூர் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நடுவழியில் வழிமறித்து போலீசார் கைது செய்தனர். போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 5,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 30.07.2011 அன்று காலை திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணிக்கு வந்தார். அங்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கொரடாச்சேரி அருகேயுள்ள கிளரியம் கிராமத்தில் பஸ் விபத்தில் பலியான பள்ளி மாணவன் விஜய் வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், மாணவனின் தந்தை சேகருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் வி.ஆர்.என்.பன்னீர்செல்வத்தின் தந்தை வாழாச்சேரி நடராஜன் மரணமடைந்ததை அடுத்து கொரடாச்சேரி அடுத்த வாழாச்சேரியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின், பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் எம்பி தாழை.கருணாநிதி நினைவு நாள் என்பதால் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆலத்தம்பாடி அருகே திருவாரூர் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நடுரோட்டில் நின்று மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். உங்கள் வாகனத்தில் உள்ள திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வேண்டும், அவரை எங்களோடு அனுப்புங்கள் என்று டிஎஸ்பி கூறினார்.
அதற்கு ஸ்டாலின், வாரன்ட் இருந்தால் அழைத்து போங்கள் என்றார். அதற்குள் போலீசார் வாகனங்களை சாலையின் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி ஸ்டாலின் வாகனம் மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் காரைவிட்டு கீழே இறங்கி வந்த மு.க.ஸ்டாலின், நாங்கள் என்ன தீவிரவாதிகளா, இப்படி சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி கைது செய்வதற்கு� என்று போலீசாரிடம் கேட்டார்.
அப்போது, டிஎஸ்பி சீனிவாசன் செல்போனில் உயர் அதிகாரிகளிடம் பேசினார். பின்பு பூண்டி கலைவாணனை கைது செய்கிறோம் என்றார். உரிய ஆவணங்கள் இன்றி கைது செய்ய விடமாட்டோம் எனக்கூறிய மு.க.ஸ்டாலின், திருத்துறைப்பூண்டி&திருவாரூர் சாலை ஆலத்தம்பாடியில் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பூண்டி கலைவாணன், நாகை மாவட்ட செயலாளரும், எம்பியுமான விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோரும் அவருடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை திருவாரூர் அழைத்து சென்றனர். இதையறிந்த ஏராளமான திமுக தொண்டர்கள் புலிவலத்தில் சாலையில் திரண்டனர். இது பற்றி தகவலறிந்த போலீசார் புலிவலம் வழியாக செல்லாமல் வெள்ளக்குடி கிராம சாலை வழியாக திருவாரூர் செல்ல முயன்றனர். அவ்வழியாக செல்லக்கூடாது என வாகனம் முன் திரண்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைதொடர்ந்து புலிவலம் வழியாகவே போலீஸ் வாகனம் திருவாரூர் சென்றது. வெள்ளக்குடி, புலிவலம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் வாகனம் திருவாரூர் வந்தது.

எதற்கும் அஞ்சப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,


இன்று (30.07.2011) காலை தஞ்சாவூரில் இருந்து கிளம்பி திருத்துறைப்பூண்டிக்கு போய்க்கொண்டிருந்தேன். போய்க்கொண்டிருந்த வழியில் நேற்று கொறடாச்சேரியில் பேருந்து விபத்தில் இறந்துபோன மாணவன் இல்லத்துக்கு நானும், விஜயன் எம்பி, மத்திய அமைச்சர் பழணி மாணிக்கம், சுகவனம் எம்பி, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கலைவாணன் ஆகியோர் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்லிவிட்டு, காரில் புறப்பட்டோம்.

திருத்துறைப்பூண்டியில் ஒரு படத்திறப்பு விழா இருந்தது. மன்னார்குடியில் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டமும், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் வந்திருந்தேன். திருவாரூரை தாண்டி ஆலத்தம்பட்டியில் போய்க்கொண்டிருந்தபோது சுமார் 200 போலீசார் எங்கள் வண்டியை வழிமறித்தார்கள். வண்டியை நிறுத்தி என்ன என்று கேட்டோம். பூண்டி கலைவாணனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போகனும். விசாரணைக்காக என்று சொன்னார்கள். என்ன ரிக்கார்டு இருக்கா. வாரண்ட் இருக்கா. இருந்த அழைத்துக்கொண்டு போங்க. இல்லையென்றால் எப்படி அனுப்ப முடியும். சாலையில் வண்டியை மறித்து சொல்லும்போது எப்படி நம்ப முடியும். எதுவாக இருந்தாலும் ஆதாரப்பூர்வமாக காட்டி அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னோம்.


அதன்பிறகு வண்டி போக வழிவிடவில்லை. போலீசார் சாலை மறியல் செய்தனர். ஆனால் நாங்கள் மறியல் செய்ததாக கைது செய்திருக்கிறார்கள். உண்மையில் 15 வாகனங்களை நிறுத்தி அவர்கள் மறியல் செய்தனர். பின்னர் அவர்கள் எங்கெங்கோ போன் செய்தார்கள். பிறகு சாலை மறியல் செய்ததற்காக கைது செய்கிறோம் என்று எங்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றார்கள்.

வரும் 1ஆம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடக்க இருக்கிறது. இந்த போராட்டத்தை நடக்க விடக்கூடாது என்ற எண்ணத்திலும் திமுகவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுகவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை பனங்காட்டு நரி. எவ்வளவோ வழக்குகளை பார்த்து இருக்கிறோம். இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை.


இதுதொடர்பாக மக்கள் மன்றத்தில் அதிமுக அரசு பதில் சொல்லியாக வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை நாடப் போகிறோம். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தலைமைக் கழகம், தலைவர், பொதுச்செயலளர் முடிவு எடுத்து அறிவிப்பார்கள்.


ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இன்று காலை தென் சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகனை கைது செய்துள்ளனர். அதைப்போல முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காவல்நிலையத்துக்கு கையெழுத்துப் போட போகும்போது கைது செய்துள்ளனர். இப்படியெல்லாம் மிரட்டி போராட்டத்தை நசுக்க பார்க்கிறார்கள் என்றார்.



திருவாரூர் எஸ்பி அலுவலகம் வந்ததும் ஸ்டாலின் வந்த வாகனம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் எஸ்பி அலுவலகம் செல்லாமல், வாகனம் வேறு இடத்துக்கு சென்றது. திருவாரூர் அடுத்த வைப்பூருக்கு ஸ்டாலினை கொண்டு செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அங்கும் கொண்டு செல்லவில்லை. திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்துக்கு போலீஸ் வாகனம் சென்றது. கட்டிடத்துக்குள் மு.க.ஸ்டாலினை போலீசார் வைத்திருந்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.�போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 5,000 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மதியம் 2.15க்கு ஸ்டாலின், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், எம்பி விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.
டெல்டாவில் ஆயிரக்கணக்கானோர் கைது:
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து நாகை மாவட்டத்தில் 28 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 1,900 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் 27 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,027 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் 300 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 333 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகம் திடீர் கைது : திமுகவினர் மீது போலீஸ் தடியடி



சேலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை 30.07.2011 அன்று போலீசார் திடீரென கைது செய்தனர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுக தொண்டர் கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அங்கம்மாள் காலனி, பிரீமியர் மில் நில பிரச்னை தொடர்பாக முன் னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் மீது, சேலம் நில அப கரிப்பு மீட்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற முன்ஜாமீன் உத்தரவின்படி, சேலம் குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழு போலீ சில் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார். அவரிடம் போலீசார் 3 நாட்கள் விசா ரணை நடத்தினர். இதை யடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவருக்கு ஜாமீன் கிடைத்தது.
மறு உத்தரவு வரும் வரை சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் தினமும் காலை 8 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதன்படி மூன்றாவது நாளான 30.07.2011 அன்று காலை சரியாக 7.48 மணிக்கு, வீரபாண்டி ஆறுமுகம் டவுன் காவல் நிலையத்தில் உள்ள நில அபகரிப்பு மீட்பு குழு அலுவலகத்திற்கு வந்தார். அவரோடு வழக்கறி ஞர் மூர்த்தி, உதவியாளர் சேகர் ஆகியோர் சென்றனர். ஏராளமான திமுக தொண் டர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு குவிந்திருந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அவர், 'என்னை எதற்காக கைது செய்கிறீர் கள் என்று கேட்டார். தாசநாயக்கன் பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உங்களை கைது செய்கிறோம்’ என்று பதில் கூறினர். 'அவர் யார் என்றே எனக்கு தெரியாதே? யார் புகார் கொடுத்தாலும் கைது செய்து விடுவீர்களா? என வீரபாண்டி ஆறுமுகம் கேட்டார். அதற்கு போலீசார் எந்த பதிலும் அளிக்க வில்லை.
இந்நிலையில் 2 நாட்களாக கையெழுத்து போட்ட 10வது நிமிடத்திலேயே திரும்பி விடும் வீரபாண்டி ஆறுமுகம், 30.07.2011 அன்று 8.15 மணியாகியும் காவல் நிலையத்திலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த திமுக தொண்டர்கள், போலீசா ருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையில் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதால், அவர் கைது செய்யப்பட்டது உறுதியானது. இதைக்கண்ட தொண்டர்கள் 'நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்து போட வந்தவரை எப்படி கைது செய்யலாம்� என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், தொண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதனால் காவல் நிலையத் தின் முன்புறச்சாலை போர்க்களம் போலக் காட்சி யளித்தது. உடல்நலம் பாதித்த வீர பாண்டி ஆறுமுகத்தை போலீசார் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல் வார்கள் என்று கூறப்பட்டதால் அங்கும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை வேனில் ஏற்றிய போலீசார், அய்யந்திருமாளி கையில் உள்ள 4வது மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட் டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை ஆஜர் படுத் தினர். மாஜிஸ்திரேட் உத்தர வுப்படி, வீரபாண்டி ஆறுமுகம் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மீதான புகார் என்ன?
சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சித்தா டாக்டர் பாலமோகன்ராஜ் (54) விஸ்வ இந்து பரிசத்தின் சேலம் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் வீரபாண்டி ஆறுமுகம் மீது புகார் செய்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
தாசநாயக்கன்பட்டியில் சுபம் மெட்ரிக் பள்ளி அருகே 20,416 சதுர அடி நிலம் உள்ளது. கடந்த 25&3&2007 அன்று பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி ஆகியோர் நிலத்தை தருமாறு கேட்டனர். ஆனால் நான், எனக்கு இருப்பது ஒரே நிலம் தான். இதனை தர மாட்டேன் என மறுத்தேன். இதையடுத்து 27&3&2007 அன்று வீரபாண்டி ஆறுமுகம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தினர். நிலத்தை தர மறுத்ததால் வீரபாண்டி ஆறுமுகம் கோபமாக எழுந்து சென்று விட்டார். அன்று மாலை 3 மணிக்கு என்னை தொடர்பு கொண்டு மாலை 5 மணிக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கூறினர். மாலையில் கவுசிகபூபதி பெயரில் பவர் எழுதி வாங்கிக்கொண்டனர். ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு ரூ.40 லட்சத்தை என்னிடம் கொடுத்தனர். இதுகுறித்து கேட்டபோது கொடுத்ததை வாங்கிக் கொண்டு போய்விடு என மிரட்டினர். இவ்வாறு புகாரில் பாலமோகன்ராஜ் கூறியுள்ளார். இதன்பேரில் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி, நாராயணன், பத்திர எழுத்தர் சுந்தரம் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
5 பிரிவுகளில் வழக்கு
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர், சுபம் மெட்ரிக் பள்ளி அருகில் உள்ள தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி, நாராயணன், பத்திர எழுத்தர் சுந்தரம் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 147 (சட்ட விரோதமாக கூடுதல்) 386, 387 (அச்சுறுத்தி பறித்தல்), 447 (அத்துமீறி நுழைதல்) 506(1) (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் கண்ணாடி உடைப்பு
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா, திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் சென்று கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இது மினி எமர்ஜென்சி காலம் - சேலம் மாநகர திமுக கண்டனம் :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்த சம்பவம், தமிழகத்தில் தற்போது மினி எமர்ஜென்சி காலம் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று சேலம் மாநகர திமுக செயலாளர் தெரிவித்தார்.
சேலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி டவுன் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச்சென்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சேலம் மாநகர திமுக செயலாளர் கலைய முதன் கூறியதாவது:
திமுக அரசு, திமுக தொண்டர்கள் மீது திட்டமிட்டு வழக்குகள் போட்டு, பழி வாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறது. இதை கண்டித்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள் ளோம். சேலம் மாவட்டத் தில் இதை முடக்க வேண் டும் என்பதற்காகவே வீர பாண்டி ஆறுமுகத்தை திட் டமிட்டு கைது செய்துள் ளனர். சேலம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக 50 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து வரும் அவரை, கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இது போன்ற செயல்களால் தொண்டர் களை முடக்க முடியாது. திட்டமிட்டபடி அறவழிப் போராட்டத்தை நடத்துவோம். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் அதிமுகவினர் எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மனிதாபிமானம் மறைந்து விட்டது. தமிழகத்தில் தற்போது மினி எமர்ஜென்சி காலம் நடந்து வருகிறது என்பதை வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட விதம், உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்தால் தலைமையின் அனுமதி பெற்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட தயங்கமாட்டோம்.
இவ்வாறு சேலம் மாநகர திமுக செயலாளர் கலையமுதன் கூறினார்.




காகித ஆலையை அபகரித்ததாக புகார் : திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கைது



பேப்பர் மில்லை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சேப்பாக்கம் & திருவல்லிக்கேனி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை திருப்பூர் போலீசார் 30.07.2011 அன்று அதிகாலை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைசேர்ந்தவர் சீனிவாசன் (39). ஸ்பின்னிங் மில் நடத்தி வந்தார். கடந்த 2008ம் ஆண்டு கோவையை சேர்ந்த கிங்ஸ்லி என்பவரிடம் இருந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையத்தில் உள்ள ஜியான் பேப்பர் மில்ஸ் எனும் மில்லை வாங்கினார். முதலில் க்ஷீ 2 கோடியை முன்தொகையாக வழங்கிய சீனிவாசன், தொடர்ந்து க்ஷீ 2 கோடி, க்ஷீ 2.69 கோடியை வழங்கினார். ஏற்கனவே மில்லின் மீது இருந்த கடனை, விற்பனை தொகையில் கழித்துள்ளார். மீதம் க்ஷீ 1.91 கோடி மட்டும் வழங்க வேண்டியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஐயப்பன், தென்சென்னை தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் இடைத்தரகர் சுப்புரத்தினம் ஆகியோர் உதவியுடன் தன் வசம் இருந்த பேப்பர் மில்லை மீண்டும் கிங்ஸ்லி, அவரது மனைவி ஜமிலா கிங்ஸ்லி, சகோதரர் ரவி சாம்ராஜ், அவரது மனைவி மர்ஜினா சாம்ராஜ் ஆகியோர், அபகரித்து கொண்டதாக ஸ்ரீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு மையத்தில் புகார் அளித்தார்.
தான் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளதை அறிந்து, தன் பலவீனத்தை பயன்படுத்தி, சென்னையில் உள்ள ஜெ.அன்பழகன் அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, மிரட்டி பேப்பர் மில்லை எழுதி பெற்றதாகவும், க்ஷீ 12.50 கோடி மதிப்பிலான பேப்பர் மில்லை, க்ஷீ 4.50 கோடிக்கு விற்பதாக தன்னிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றதாகவும், அந்த தொகையையும் தன்னிடம் வழங்கவில்லை என்றும் சினிவாசன் புகாரில் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உட்பட 8 பேர் மீது திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், 29.07.2011 அன்று திருப்பூரில் இருந்து சென்னை சென்ற மாவட்ட குற்றப்பதிவேடுகள் ஆவண காப்பக டி.எஸ்.பி. கவுதமன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தென்சென்னை தி.மு.க. செயலாளரும், சேப்பக்கம்&திருவல்லிக்கேனி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனை 30.07.2011 அன்று அதிகாலை சென்னை, தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
தூக்கத்தில் இருந்த அவர், நான் எம்எல்ஏ, எங்கும் ஓட மாட்டேன், வாரண்ட் இருக்கிறதா சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் போலீசாரோ, வராவிட்டால் இழுத்துச் செல்வோம் என்றவுடன் அவர்களுடன் அன்பழகன் புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் 30.07.2011 அன்று மதியம் அன்பழகன், திருப்பூர் அழைத்து வரப்பட்டார். திருப்பூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு மையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், சுமார் 30 நிமிடங்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பின்னர் திருப்பூரில் இருந்து உடுமலை அழைத்து செல்லப்பட்ட அவர், உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோவையைச் சேர்ந்த கிங்ஸ்லி (42) என்பவரை போலீசார் 30.07.2011 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகிய இருவரும் வேறு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?
சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், க்ஷீ 12.50 கோடி மதிப்பிலான பேப்பர் மில்லை அபகரித்ததாக, கோவையைச் சேர்ந்த கிங்ஸ்லி, அவரது மனைவி ஜமிலா கிங்ஸ்லி, சகோதரர் ரவி சாம்ராஜ், அவரது மனைவி மர்ஜினா சாம்ராஜ், சென்னையைச் சேர்ந்த ஐயப்பன், இடைத்தரகர் சுப்புரத்தினம், சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் தென்சென்னை தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் ஆகிய 8 பேர் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 342 (சட்டவிரோதமாக சிறை வைத்தல்), 418 (ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல்), 420 (மோசடி), 468 (ஏமாற்றுவதற்கு பொய்யாக புணைதல்), 471 (பொய்யான ஆவணத்தை உண்மையென பயன்படுத்துதல்), 387 (மரணம் கொடுங்காயம் விளையும் என அச்சுறுத்துதல்), 506(1) (குற்றமுறு மிரட்டல்) 120 (பி) (கூட்டுச்சதி) ஆகிய 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் சக்சேனா மீது வழக்கு :
பேப்பர் மில் மிரட்டி அபகரித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்சேனா சம்பவத்தின் போது, அங்கு இருக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறுகையில், “சீனிவாசனை மிரட்டி கையெழுத்து பெற்றதாக கூறப்படும் நேரத்தில், ஹன்ஸ்ராஜ் சக்சேனா இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஐயப்பன், சக்ஷேனாவின் ஆதரவாளர் என்பதால், அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச்சதி பிரிவில் சக்சேனா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தென்சென்னை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்ததால், எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்,“ என்றார்.
யார் இந்த சீனிவாசன்? - க்ஷீ 250 கோடி மோசடியில் ஏற்கனவே சிறை சென்றவர் :
எம்எல்ஏ அன்பழகன் கைதாக காரணமாக இருந்த, சீனிவாசன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், ஏற்கனவே கோவை, உடுமலை உட்பட பல்வேறு இடங்களில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் க்ஷீ 250 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கடந்த 2009 ஆகஸ்டில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்தார்.
நலிவடைந்த மில்கள், வேறு நிறுவனங்களை சீனிவாசன் கண்டறிந்து கடன் பிரச்னையை தீர்த்து, புனரமைப்புக்கு நிதி வசதி செய்து கொடுப்பதாக கூறி அவற்றை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொள்வார். இதற்கு உடுமலையை சேர்ந்த வெங்கடாசலபதி, செல்வக்குமார் உள்ளிட்ட 6 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். தங்கள் பெயருக்கு நிறுவனங்களை வாங்கிக் கொண்டு விற்பனை செய்பவர்கள் பெயரிலேயே மீண்டும் போலி ஆவணங்களை தயாரித்து, அதிகாரிகள் உதவியுடன் கடன் வாங்கியுள்ளனர். மோசடி மூலம் கிடைத்த பணத்தில் சினிமா தயாரிப்பு, கொடைக்கானல், பெங்களூரில் குதிரை பண்ணை வாங்க பணத்தை பயன்படுத்தியுள்ளார்.
20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து க்ஷீ 250 கோடி மோசடியில் சீனிவாசனும் அவரது கூட்டாளிகளும் ஈடுபட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Saturday, July 30, 2011

இரு பக்கமும் கூரான ஆயுதம் திமுகவை பழிவாங்க பொய் வழக்குகள் : கருணாநிதி


திமுகவை பழி வாங்க ஜெயலலிதா எடுத்துள்ள தவறான ஆயுதம் இரு புறமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதமாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 27.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொய் வழக்கு போடுவதில் ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமே இல்லை. அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக தனக்கு பிடிக்காதவர்கள் மீது காவல் துறையை ஏவி விட்டு பொய் வழக்கு புனைந்து நடவடிக்கை எடுக்க தவற மாட்டார்.
உதாரணமாக, காஞ்சி சங்கராச்சாரியார்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள். அவர்களே தங்கள் மீது அ.தி.மு.க ஆட்சியினரால் 2004ம் ஆண்டு போடப்பட்டது பொய் வழக்கு என்று நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வழக்கு செங்கல்பட்டு நீதி மன்றத்தில் இருந்து பாண்டிச்சேரி நீதி மன்றத்துக்கு உச்ச நீதிமன்றமே மாற்றியதாகும். மாற்றும்போது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.சி. லகோதி, ஜி.பி. மாத்தூர் ஆகியோர் என்ன சொன்னார்கள்?
�தமிழக அரசு இதில் தேவையற்ற ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர எந்த அளவிற்கும் செல்ல தயாராக உள்ளது. இந்த வழக்கு தொடர்பான செய்திகள் அல்லது பேட்டிகளை வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை அச்சுறுத்த தமிழக அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும் பல்வேறு தடைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது� என கூறி அந்த செய்தி 27&10&05 அன்று வெளியானது.
சங்கராச்சாரியார்கள் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் என்பதை அப்போதே சில ஏடுகள் வெளியிட்டன. சென்னை புறநகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையை கையகப்படுத்துவது குறித்து ஜெயலலிதாவுக்கு சங்கராச்சாரியார்கள் மீது பகை இருந்ததாகவும், அதுதான் கைது அளவுக்கு நடவடிக்கை எடுக்க காரணம் என்றும் எழுதியிருந்தன.
சங்கராச்சாரியார்கள் மீதே இந்த நடவடிக்கை என்றால் அரசியல்வாதிகள் அவருக்குஎம்மாத்திரம்? ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவக காப்பாளர் முத்து, உயர் நீதிமன்ற நீதியரசரின் மருமகன் ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாகவும் வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் வைத்திருந்ததாகவும், மதுரையை சேர்ந்த செரினா கஞ்சா வைத்திருந்ததாகவும் பொய் வழக்குகள் போட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 29&6&01ல் நள்ளிரவில் என் படுக்கை அறை வரை காவல்துறையினரை நுழைய செய்து, என்னை தாக்கி, கைது செய்வதாக கூறி என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்று சொல்லாமலே இழுத்துச் சென்ற கொடுமையை செய்தது யார்? நான் செய்த குற்றம் என்ன? சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் தவறு என்று கூறினார்களே என்ன ஆயிற்று அந்த வழக்கு? நிரூபிக்க முடிந்ததா? பொய் வழக்குதானே அது? என் மீது குற்றப் பத்திரிகையாவது தாக்கல் செய்ய முடிந்ததா?
இதே மேம்பாலங்களை காட்டி சென்னை மாநகர மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் மீதும் பொய் வழக்கு சுமத்தி கைது செய்யவில்லையா? நான் கைது செய்யப்பட்ட அன்றே மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டார்கள். மதுரை மாநகரில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க. அழகிரி போன்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் பழி வாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் அல்லவா?
ராணி மேரி கல்லூரி மாணவிகள் அவர்களுடைய கல்லூரியை இடித்து விட்டு, தலைமைச் செயலகம் கட்டப் போவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களை சமாதானப்படுத்த சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினரே கல்லூரிக்குள் அனுமதித்து அவர்களும் மாணவிகளிடம் ஆதரவு தெரிவித்து திரும்பிய பிறகு, நள்ளிரவில் காவல்துறையினரை இல்லங்களுக்கு அனுப்பி அவர்களை கைது செய்து, அவர்கள் கல்லூரி கேட்டை உடைத்து உள்ளே சென்றதாக வழக்கு போட்டதோடு சிறையிலும் அடைத்தார்கள்.
டான்சி ஊழலில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அனுமதியளித்தார் என்பதற்காக கவர்னருக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஜெயலலிதா வழக்கு தொடுத்ததோடு, சென்னா ரெட்டியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார்.
ஜெயலலிதா பதவியேற்ற மறுநாளே திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீது ஜான் பாண்டியனை தாக்கியதாக கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். ஆனால் உண்மையில் தாக்கப்பட்டவர் பரிதிதான். திமுக பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியின் தம்பி, திருப் போரூர் பரசுராமன், புரசை ரங்கநாதன், திருவில்லிபுத்து�ர் தாமரைக்கனி, நீலங்கரை வி. எட்டியப்பன், ரவி, வெங்கட்ராமன், எஸ்.கே. ரவி ஆகியோர் மீது அ.தி.மு.க .வினர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பொய் வழக்கு தொடர்ந்து அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவின் பழிவாங்கும் நாடகம் என்ற தலைப்புடனும், போயஸ் தோட்டத்தை விட தமிழ்நாடு பெரியது என்பதை எப்போது ஜெயா உணரப் போகிறார்? என்ற தலைப்புடனும் பத்திரிகைகள் தலையங்கம் எழுதின.
ஸீ100 கோடி செலவில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுதாகரன் திடீரென்று கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டார்; அவருடைய தந்தை விவேகானந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுதாகரன் கைதாகி செல்லும்போது, தன்னை திட்டம் போட்டு சதி செய்து உள்ளே தள்ளுகிறார்கள் என்று கூறினார்.
இவ்வாறு எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு கொடுமைப்படுத்துவது என்பது ஜெயலலிதாவிடம் ஆழமாக ஊன்றி விட்ட பழக்கமாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போதும் நில அபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தை காட்டி அதிலும் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிலே கூட இந்த ஐந்தாண்டுகளில் அவருடைய கட்சிக்காரர்கள் செய்த தவறுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சியினரை பழிவாங்கி குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்த வகையில்தான் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மதுரை தளபதி மற்றும் திமுக முன்னணியினர் மீது பொய் வழக்குகளை போட்டு விசாரணை என்ற பெயரால் இழுத்தடிக்கிறார்கள்.
திமுகவை பழிவாங்கத் தவறான ஆயுதத்தை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். அது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம். பொய் வழக்குகள் புனைவதில் அவர் கைதேர்ந்தவர். பொய் வழக்குகளில் ஒருவகை சுகம் காண்பவர் என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி ஆர்ப்பாட்டம் : 2000 திமுகவினர் சிறையில் அடைப்பு




சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்த 2000 திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி திமுக சார்பில் 27.07.2011 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் மாணவர் திமுக தலைவர் இள.புகழேந்தி, சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், பாளையங்கோட்டையில் பூங்கோதை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
சென்னையில் 339 பேர், காஞ்சிபுரம் 768, திருவள்ளூர் 308, திருவாரூர் 19, நாகப்பட்டினம் 52, புதுக்கோட்டை 15, திருச்சி 13, திருநெல்வேலி 54, கன்னியாகுமரி 21, விழுப்புரம் 155, கடலூர் 42, மதுரை 40, சேலம் 60, தர்மபுரி 58, நாமக்கல் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கமாக ஆர்பாட்டம் செய்வோர் மாலையில் விடுவிக்கப்படுவர். ஆனால், திடீரென்று கைதான 2000 பேரும் 27.07.2011 அன்று மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் யாரும் கைது செய்யப்படவில்லை.

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் - பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டம் திமுகவினர் 6000 பேர் கைது :
சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை எப்பாடு பட்டேனும் எத்தகைய நீதிமன்றம் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற முனைப்போடு தனியார் பள்ளியினரும் அதற்கு துணை போகும் தமிழக அரசும் மாணவர்கள் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று செயல்படுகின்றனர்.
இந்த போக்கை தடுக்கவும் அறிவார்ந்த சமுதாயம் உருவாக்கவும் தமிழக கட்சிகளின் ஏகோபித்த குரலுடன் திமுக குரலும் இணைந்துள்ளது. சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலு சேர்க்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகளை 29ம் தேதி புறக்கணிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி, மாணவரணி வேண்டுகோள் விடுத்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் அறப்போர் கிளர்ச்சி நடந்தது.
தென் சென்னையில் திமுக மாணவர் அணி செயலாளர் இள புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள் தாயகம் கவி, ஜெரால்டு, சேக் தாவூத், களக்காடி எல்லப்பன், கோதண்டம் உள்ளிட்ட 100 பேர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
தூத்துக்குடியில் புனித மரியன்னை பள்ளி முன் ஜெயக்குமார் ரூபன் தலைமையில் சௌ.ராஜா, ஜான் அலெக்சாண்டர் உள்ளிட்ட 500 பேர் அறப்போரில் பங்கேற்றனர். கோவில்பட்டி நகரில் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்.ராமர், வி.முருகேசன், மாறன் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை யில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை தலைமையில் போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லியில் நடுக்குத்தகை ராஜி, ஜெயகுமார் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். திருமழிசையில் முனியசாமி, மகாதேவன் உள்ளிட்ட 40 பேர் கைதாகினர். மீஞ்சூரில் பாஸ்கர் சுந்தரம் தலைமையில் 162 பேர் கைதாகினர்.
வேலூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகளில் துண்டுப் பிரசுரம் தந்து அறப்போர் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். மொத்தம் 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 27.07.2011 அன்று தி�முகவினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. நகரில் ஆட்டோ மற்றும் பஸ்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
ஒவ்வொரு பள்ளி முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி வாசலில் நகர்மன்ற தலைவர் தமிழழகன் தலைமையில் திமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி கொண்டிருந்தனர். அங்கு வந்த அதிமுக நகர செயலாளர் பி.எஸ்.சேகர், அயூப்கான், ஜான், ராமமூர்த�தி உள்ளிட்டோர் திமுகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சிலர் திமுகவினரை நோக்கி சோடா பாட்டில்களை வீசினர். இந்த பாட்டில்கள் நடுரோட்டில் உடைந்து சிதறியது. சிலரின் வீட்டின் வாசலில் விழுந்தும் உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக அவைத்தலைவர் முகமதுசகி, மேயர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் அ.மா.ராமலிங்கம், துணை மேயர் முகமதுசாதிக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முப்பதுவெட்டி, சக்கரமல்லூர், அரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் அரசு பள்ளிகள் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர். நெமிலியில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையிலும், காவேரிப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமையிலும், திருப்பத்தூரில் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
போராட்டத்தை போலீசார் வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். பள்ளிகள் முன் ஆசிரியர்கள் நின்று கொண்டு, மாணவர்களை வகுப்புக்குள் செல்லுமாறு எச்சரித்தனர். இருப்பினும் பெரும்பாலான இடங்களில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தர்மபுரி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரவி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் நாகராஜன், பேரூராட்சி துணை தலைவர் பத்தேகான் தலைமையில் 27.07.2011 அன்று காலை கூடிய திமுகவினர், சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாணவர்களிடையே ஆதரவு திரட்டினர்.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த திமுகவினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்:
கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதன் வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பழநி:
பழநி அருகே ஆயக்குடி ஐடிஓ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி முருகேசன் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தினார். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
குமரி:
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர செயலாளரும், இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான வக்கீல் மகேஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அருகில் நின்ற தோவாளை ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 27.07.2011 அன்று மாலை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் நகராட்சி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் தடுத்ததையும் மீறி வகுப்புகளில் இருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 42 பேரை 27.07.2011 அன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 152 பேர் 27.07.2011 அன்று மாலை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி முன் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை மற்றும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நெல்லை கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்ட திமுகவினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 54 பேரும் நெல்லை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மிஷன் வீதியில் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அமைப்பாளர் ஜானகிராமன், இளைஞரணி அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 134 பேரை போலீசார் கைது செய்தனர்.


மகன்களுடன் போராட்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தனது மகன்களான 9ம் வகுப்பு படிக்கும் ஏங்கலேசன், 7ம் வகுப்பு படிக்கும் லெனின் ஆகியோருடன் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன் 27.07.2011 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். போச்சம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்பேரில், பழனிச்சாமி தனது மகன்களுடன் அங்கிருந்து சென்றார்.

Friday, July 29, 2011

பொட்டு சுரேஷை சந்தித்த மாஜி அமைச்சர்கள்


திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு 28.07.2011 அன்று காலை 11 மணிக்கு சென்றனர். அங்கே அடைக்கப்பட்டிருக்கும் பொட்டு சுரேஷை பார்த்துச் சென்றனர்.

இவர்களோடு நெல்லை மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சரும் பாளையங்கோட்டை எம்எல்ஏவான டிபிஎம் மைதீன்கான் ஆகியோர் உடன் சென்றனர்.

வீரபாண்டி ஆறுமுகத்திடம் மத்திய அமைச்சர் அழகிரி உடல் நலம் விசாரித்தார்



முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை 28.07.2011 அன்று நேரில் சந்தித்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடல் நலம் விசாரித்தார்.
நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழுவில் ஆஜரானார். அவரிடம் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 27.07.2011 அன்று மாலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி 28.07.2011 அன்று காலை சேலம் வந்தார். பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்தார். போலீஸ் விசாரணை குறித்தும், விசாரணையின் போது நடத்தப்பட்ட விதம் குறித்தும் கேட்டறிந்தார்.
அழகிரியுடன் மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்தேன். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்தேன்’’ என்றார்.
அப்போது நிருபர்கள், ‘திமுகவினர் மீது தொடர்ந்து வழக்கு போடப்படுகிறதே?’ என கேட்டனர். இதற்கு அழகிரி, ‘‘ஏற்கனவே பொதுக்குழுவில் பேசப்பட்டுள்ளது. அங்கு எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி கட்சியின் நடவடிக்கை இருக்கும்’’ என்றார்.
இது குறித்து வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் என் மீதும், வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ ராஜா மீதும் போடப்பட்டிருக்கும் வழக்குகள் பொய்யானவை. ஆட்சியாளர்களின் தூண்டுதலின்பேரில் தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சியினர் மீது அதிமுக ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக போலீசார் இதுபோல் பொய் வழக்குகளை போடுகின்றனர்.
நிலத்தை ஒருவர் விற்க, ஒருவர் வாங்குவது என்பது நடைமுறை தான். விற்கும் போது இருந்ததை விட ஆண்டுக்கு ஆண்டு அந்த நிலத்தின் மதிப்பும் கூடும். இதை வைத்துக் கொண்டு இன்னார் முன்னிலையில் நிலம் விற்பவரை மிரட்டி குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்தியதாக அதிமுகவினர் தூண்டி விட்டு கிரிமினல் செக்ஷனில் பொய் வழக்கு போட வைக்கின்றனர்.
நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தான் போட முடியும். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில், திமுகவை பயமுறுத்தி விடலாம், செயல்பட முடியாமல் செய்து விடலாம் என நினைத்து சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்காக மாற்றி பொய் வழக்கு போடுகின்றனர். இதை திமுக கடுமையாக கண்டிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இந்த ஆட்சியின் அடக்குமுறையை எதிர்க்கும் ஆற்றலும், சக்தியும் திமுகவிற்கு உண்டு.
மூன்று நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெரிந்ததை கூறி னேன். தெரியாததற்கு தெரி யாது என்று பதிலளித்தேன். போலீசாரும் தங்கள் கடமையை செய்த னர். அதிமுகவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கின்றன. இது நாகரீகமானதல்ல. விசாரணை முடிந்து வெளியில் வந்ததும் என் உடல்நிலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி பாசத்துடன் கேட்டார். வேறு வழக்கு எதுவும் போட்டுள்ளார்களா? என்பதையும் விசாரித்தார். அதேபோல் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் கழக தோழர்கள் என் உடல்நிலை குறித்து விசாரித்தனர். திமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சந்திப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி சந்திப்போம். என்மீது சிலர் தேவையில்லாமல் அவதூறு பரப்பி களங்கப்படுத்த நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். திமுக தொண்டர்கள் என் இரண்டு கண்களைப் போன்றவர்கள். மற்றவர்கள் பொய் பிரசாரம் செய்வது போல் தொண்டர்களால் எந்த கெட்ட பெயரும் இல்லை. என் கீழ் உள்ள தொண்டர்களை நான் அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பற்றி இந்த மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார். 27.07.2011 அன்று காலை முதல் ஏராளமான தொண்டர்கள் நேரில் வந்து அவரிடம் நலம் விசாரித்து சென்றனர்.

முன்னதாக நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள வீரபாண்டி ஆறுமுகம், 28.07.2011 அன்று காவல்நிலையத்தில் முதல் நாள் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது போடப்பட்டுள்ளவை பொய் வழக்குகள் என்றும், அவற்றை முறைப்படி சந்திப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொய் வழக்குகளால் திமுகவை யாரும் அழித்துவிட முடியாது என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திமுகவினரை கைது செய்வதை காவல்துறை நிறுத்த வேண்டும் - வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம் :

ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தி.மு.கவினரையும், தோழமை கட்சி நண்பர்களையும் கைது செய்யும் காவல்துறைக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் உயர் நீதிமன்றத்தால் எனக்கு வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்றம், நான் திமுக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 23, 24ம் தேதிகளில் கலந்து கொள்ளலாம் என்றும், 25, 26, 27 ஆகிய தேதிகளில் சேலம் மத்திய குற்றவியல் காவல் துறையிடம் சரணடைந்து விசாரணைக்கு என்னை ஒப்படைத்து கொள்ள வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பை ஏற்று, நான் நேரடியாக காவல் நிலையம் சென்று தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஓத்துழைப்பு தந்திருக்கிறேன்.
காவல்துறை விசாரணை முடித்து 27ம் தேதி மாலை என்னை காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது, 10 ஆயிரத்தும் மேற்பட்ட கழக தோழர்களும், மக்களும் கூடியிருந்தனர். அப்போது அங்கு எவ்விதமான வன்முறையிலும் கழக தோழர்களோ, தோழமை கட்சி நண்பர்களோ அல்லது மக்களோ ஈடுபடவில்லை.
என் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து உணர்ச்சி வசப்பட்ட கழக தோழர்களும், மக்களும் கூடியிருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் 27ம் தேதி இரவிலும், நேற்றும் பல்வேறு காவல்நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து வருகிறார்கள். இந்த பழிவாங்கும் போக்கை ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர், கழக தோழர்களை கைது செய்வதை உடனே நிறுத்த வேண்டும். நிறுத்தாவிட்டால், நானே தலைமை ஏற்று இந்த ஆட்சியின் அராஜகத்தை பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு வர வீதிகளில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவேன் என்பதை காவல்துறைக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி விஷயத்தில் அரசின் பிடிவாதத்தால் 1.15 கோடி மாணவர்கள் பாதிப்பு : சமச்சீர் கல்வி குழுத் தலைவர் பேச்சு


கடந்த காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் சமச்சீர் கல்வி விஷயத்தில் தற்போது மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சமச்சீர் குழு தலைவர் கூறினார்.
�அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி & உண்மை நிலை என்ன� என்னும் நூல் வெளியிட்டு விழா சென்னையில் 28.07.2011 அன்று நடைபெற்றது. நூலை சமச்சீர் குழு தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான முத்துக்குமரன் வெளியிட மனோன்மணியம் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவி பெற்றுக்கொண்டார்.
பின்னர் முத்துக்குமரன் பேசியதாவது:
சமச்சீர் கல்வியில் அரசின் செயல்பாடு மிகவும் வருத்தப்பட வைக்கிறது. கட்டாய இலவச கல்வி என்று கூறிவிட்டு கட்டண பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்? சமச்சீர் கல்வியில் சரியான நிலைப்பாட்டை காட்ட அரசு தவறிவிட்டது. சமச்சீர் கல்வி பிரச்னையில் கல்வித்துறை எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஏன் என்றால் அரசின் குறுக்கீடுதான் காரணம். ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் தங்கள் வேலைகளை சரியாக செய்தாலே போதும். ஆனால் ஒவ்வொரு துறையிலும் அரசு குறுக்கீட்டால் எதுவும் பண்ண முடியாது. இது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அரசின் பிடிவாதத்தால் தான் சமச்சீர் கல்வி செயல்படுத்த முடியவில்லை. கடந்த காலங்களில் 1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் 1.15 கோடி பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
வசந்திதேவி பேசியதாவது:

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமில்லை என்று இந்த அரசு கூறியிருப்பது அனைத்து ஆசிரி யர்களையும், மாணவ& மாணவிகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதற்கு குறுகிய எண்ணம்தான் காரணம். தரம், தரமற்றவை என்பதை யார் நிர்ணயிக்க வேண்டும். அந்த துறை வல்லுனர்கள். ஆனால் அரசு அமைத்த கமிட்டி உறுப்பினர்களுக்கு தமிழ் தெரியாது. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் உலக தரமில்லை என்று கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.உலக தரம் என்றால் என்ன? இவர்கள் பார்வையில் அமெரிக்கா போன்ற நாடுகளைத்தான் உலக தரம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கெல்லாம் தொடக்க பள்ளிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. மாலை நேரங்களில் டியூசன் எதுவும் கிடையாது. கல்வியை ஒரு விளையாட்டாக்கி விட்டது இந்த அரசு.
70 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். அவர்கள் பற்றி ஒரு துளிகூட அரசு யோசிக்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? குறுகிய எண்ணம், பிடிவாதத்தால் அரசு பள்ளி மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது இந்த அரசு. தமிழகத்தில் ஒரு மாணவனுக்கு கல்விக்காக க்ஷீ 606 மட்டுமே செலவு செய்கிறது அரசு. ஆனால் மற்ற மாநிலங்களில் 1500க்கு மேல் செலவு செய்யப்படுகிறது.

இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
இந்த விழாவில் சமச்சீர் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், நூல் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமச்சீர் புத்தகம் வழங்க ஆகஸ்ட் 5ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம் : உச்சநீதிமன்றம்


சமச்சீர் கல்வி வழக்கு 28.07.2011 அன்று 3வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக வக்கீல்கள் அரிமா சுந்தரம், ராஜீவ் தவான் ஆகியோர் வாதாடினார்கள்.
பெற்றோர் சார்பாக மூத்த வக்கீல்கள் அந்திஅர்ஜூனா, ஏ.கே.கங்குலி, ரவிவர்மா, விடுதலை, கே.பாலு ஆகியோர் ஆஜரானார்கள். முதலில் மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா வாதத்தை தொடங்கினர்.
அவர் வாதாடியதாவது:

சமச்சீர் கல்வியில் குறைகள் இருந்தால், அதை சரிசெய்து பாடப் புத்தகத்தை வெளியிடலாம். இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததால் மாணவ மாணவிகள் 2 மாதமாக எந்த புத்தகத்தை படிப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சமச்சீர் கல்வி கேட்டு தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் அனுபவமிக்க கல்வியாளர்கள் இல்லை. அரசு நியமித்த குழுவின் கருத்தை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது சரியானதுதான். சட்டதிருத்தம் செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கூடாது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 200 கோடி ரூபாய் செலவில் சமச்சீர் பாடப்புத்தகம் தயாராக உள்ளது. எனவே இதை உடனே தர உத்தரவிட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தீர ஆராய்ந்து பார்த்து, மற்ற மாநிலங்களில் உள்ள நிலைகளை ஆராய்ந்து பார்த்து தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இதை தமிழக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு, சமச்சீர் கல்வியை தள்ளிவைத்து இதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது தமிழக அரசு வக்கீல் பி.பி.ராவ் குறுக்கிட்டு, “2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகத்தை தர வேண்டும் என்ற உத்தரவை தள்ளிவைக்க வேண்டும், தி.மு.க. நாளை நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை தர வேண்டும், தி.மு.க போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்க முடியாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.