கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 30, 2011

பணத்தால் ஜெயிக்க அதிமுக திட்டம் - முதல்வர் கருணாநிதி பரபரப்பு குற்றச்சாட்டு


தேர்தல் தோல்வி பயத்தில் ஜெயலலிதா இருக்கிறார்; குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு, பணத்தால் அடித்து வெற்றி பெற நினைக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது என்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார் முதல்வர்.
முதல்வர் கருணாநிதி 29.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தோல்வி பயமும் வெற்றி கை கூடாதோ என்ற சந்தேகமும் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு காரிலும், வண்டிகளிலும், வேன்களிலும் ஆட்கள் மூலமாகவும் அனுப்பப்படுவதாக நம்பகமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
எப்படியும் இந்த தேர்தலில் என்னையும், பேராசிரியரையும், ஸ்டாலினையும் மற்றும் சில முக்கிய தளபதிகளையும் தோற்கடித்தே தீர வேண்டுமென்று ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு, சேகரித்த பணத்தையெல்லாம் செலவிட துணிந்து விட்டாராம்.
நாட்டில் அரசியல் அமைப்பிலும், மற்ற சகல அமைப்புகளிலும் பறிபோய்விட்ட பதவி அதிகாரத்தை மீண்டும் பற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, ஒரு தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பத்து கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய தயார் என்று அவர் சவால் விட்டு பணம் ஊர்வலம் நடத்த தயாராகி விட்டார்.
பதுங்கிப் பதுங்கியோ, பலத்த காவலுடனோ தேர்தல் களத்தில் குதித்து ஜனநாயகத்தை விலை பேசிக்கொண்டே பண நாயகத்துக்குப் பகைவர்போல் பாசாங்கு செய்யும் அ.தி.மு.க.வினரை அடையாளம் காணத் தவறாதீர்கள். அவ்வாறு கார்களிலும், வேன்களிலும் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது.
பதுங்கிப் பதுங்கியோ, பலத்த காவலுடனோ தேர்தல் களத்தில் குதித்து ஜனநாயகத்தை விலை பேசிக்கொண்டே பண நாயகத்துக்குப் பகைவர்போல் பாசாங்கு செய்யும் அ.தி.மு.க.வினரை அடையாளம் காணத் தவறாதீர்கள். அவ்வாறு கார்களிலும், வேன்களிலும் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது.
வண்டி வாகனங்களில் வருவார்கள், ஒண்டிக்கட்டை போல் திரிவார்கள், ஏழைகளை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை ஏலம் போட துணிவார்கள். உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒருக்கணமும் உறங்காமல் காவல் காத்திட வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகள் ஏமாற்றி விடுவார்கள். மாதக் கணக்கில் விவசாயி உழைத்து, வியர்வையைச் சிந்தி வளர்த்த பயிரின் மொத்த விளைச்சலை இரவோடு இரவாக களவாடிச் சென்றிட எத்தர்கள் முயலுவார்கள்.
ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோர் புலி வேடம் போடுகிறார், அவர்களின் பொய் வேடத்தைக் கலைத்திட முயலுவதுதான் நம் பணியாக இருக்க வேண்டும். திருவிழா கூட்டத்தில் பணத்தை திருடிக்கொண்டு செல்பவன், துரத்திச் செல்பவர்களோடு தானும் சேர்ந்து ஓடிக் கொண்டே ‘திருடன், திருடன்’ என்று குரல் கொடுப்பதைப் போல நல்லவர்கள் போல மக்களிடம் மீண்டும் நடிக்கப் புறப்பட்டு விட்டார்கள்.
மக்களின் ஞாபக மறதியை மூலதனமாக வைத்துக் கொண்டு யாரோ எழுதிக் கொடுத்ததை பக்கம் பக்கமாக படித்து விட்டு, பதவியேற்பு எப்போது என்று துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்களை நம்பிக் கெட்டோர் நாட்டிலே கண்ணெதிரே இருக்கும்போதே, உண்மை சொரூபத்தைப் புரியாமல் இன்னும் சிலர் உடன் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஐந்தாண்டு காலமாக நாம் சாதனைகளைச் செய்து விட்டுத்தான் தற்போது மக்கள் முன்னால் நிற்கிறோம். ஆனால், அவர்கள் ஆண்ட ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்த தரப்பினரையாவது நிம்மதியாக வாழ விட்டார்களா? அரசு ஊழியர்கள் பட்டபாடு எத்தனை? எஸ்மா, டெஸ்மா சட்டங்களின் மூலமாக அரசு அலுவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட கொடுமைகளையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா?
சாட்டையால் அடித்து அரசு அதிகாரிகளிடம்
வேலை வாங்குகிறேன் என்று சட்டமன்றத்திலே அவர் முழங்கியதுதான் மறக்கக்கூடிய வார்த்தைகளா? ஒன்றிரண்டு பேர் மறந்துவிட்டோ, மீண்டும் தப்பித்தவறி அவர்கள் வந்துவிட்டால் நாம் முந்திக் கொள்ளலாம் என்ற நினைவோடோ பாதை தவறி நடக்க முயற்சிக்கலாம்.
அவர்கள் வழியில் அவர்கள் செல்லட்டும். நாம் நம் வழியிலே செல்வோம். நாளைய தினம் (30ம் தேதி) என்னுடைய இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குகிறேன்.
என்னுடைய சுற்றுப்பயணத்தையும், எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப்பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு ஆங்கில நாளிதழ், நான் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்பதாகவும், ஆனால் ஜெயலலிதா, என்னையும், என் குடும்பத்தினரையும் வேகமாக தாக்கிப் பேசுவதாகவும் எழுதியுள்ளது. அவர்களுக்கு நம்மை தாக்கிப் பேசுவதைவிட வேறு செய்திகள் பேசுவதற்கு இல்லை என்கிறபோது என்ன செய்வார்கள்?
அவர்கள் தாக்கிப் பேசிட, பேசிட அவர்களைப் பற்றி மக்களே நன்கு உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் எப்படியும் வெற்றி பெற முடியாத நிலையில்தானே, குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு பணத்தை அடித்து வெற்றி பெற நினைக்கிறார்கள். அந்த நினைப்புக்கு இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டியது முக்கியம். நாம் நம் வழி ஜனநாயக வழியில் நடப்போம். அவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பணநாயக வழியில் நடக்கட்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



Tuesday, March 29, 2011

நள்ளிரவில் வீடு புகுந்து மிரட்டிய சம்பவம் : மதுரை எஸ்.பி., போலீசார் மீது நடவடிக்கை கோரி திமுக ஒன்றிய செயலர் மனைவி டிஐஜியிடம் புகார்


நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை மிரட்டிய சம்பவம் தொடர்பாக மதுரை எஸ்.பி., போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக ஒன்றிய செயலாளர் மனைவி டிஐஜியிடம் கண்ணீருடன் புகார் கொடுத்தார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன் மனைவி ரூபஜெயந்தி. டிஐஜி சந்தீப் மிட்டலை 29.03.2011 அன்று காலை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மதுரை சர்வேயர் காலனியில் குடியிருக்கி றோம். எனது கணவர், மேலூர் தொகுதியில் திமுகவிற்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 28.03.2011 அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் எனது வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஜன்னல் வழியாக நான் யாரென பார்த்தேன். வெளியே வெள்ளை நிற வேன், சுமோ கார், போலீஸ் வேன் ஆகியன நின்றன.
அதிலிருந்து இறங்கிய 10 பேர் எனது வீட்டைச் சுற்றி நின்றனர். வீட்டின் கதவை ஆறு பேர் பலமாக தட்டினார். கதவை நான் திறப்பதற்குள் அதிவேக மாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் யாரென்று கேட்டேன். அப்போது என்னையும், என் தாயா ரையும் கழுத்து, மார்பு பகுதியில் முரட்டுத் தனமாக தள்ளியவாறு தகாத வார்த்தைகளால் திட்டி எனது கணவர் எங்கே எனக்கேட்டனர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங் களை சேதப்படுத்தினர்.
என் கணவர் வீட்டில் இல்லை. தேர்தல் பணிக்கு சென்றிருக்கிறார் என்றேன். அப்போது அவர்கள், எஸ்பி அஸ்ரா கார்க் அனுப்பியதால் வந்துள்ள தாக கூறி, எஸ்.பி., பங்களா விற்கு வருமாறு என்னை அழைத்தனர். சோதனை யில் வீட்டில் எதுவுமில்லை என தெரிந்ததும், நீ வா என இரண்டு பேர் எனது கையை பிடித்து இழுத்த னர். தடுக்க முயன்ற என் தாயாரையும் தள்ளிவிட்ட னர். அவர்களது செயல் எங்களுக்கு மானக்கேடாக இருந்தது. நாங்கள் கதறி அழுதோம். உன் கணவரை சரணடையச்சொல். இல்லாவிட்டால் எஸ்பி சூட்டிங் ஆர்டர் கொடுத்து விடுவார் என மிரட்டினர். எனது கணவர் உயிருக்கும், எங்கள் மானத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

எங்கள் வீட்டை சோதனையிட வந்தபோது பெண் போலீசார் இல்லை. இதற்காக எஸ்பி அஸ்ராகார்க் மீதும், அவர் அனுப்பியதாக வந்தவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ரூப ஜெயந்தி அழுதவாறே நிருபர்களி டம் கூறுகையில், ‘நள்ளி ரவில் பெண் போலீசார் இல்லாமல் வந்து என்னை யும், என் குடும்பத்தாரையும் அவமதித்து விட்டனர். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் கொட்டாம் பட்டி ஒன்றியத்தில் திமுகவிற்கு அதிக வாக்கு கள் கிடைத்தது. இந்த தேர்தலிலும் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக எனது கணவருடைய தேர்தல் பணியை முடக்கப் பார்க்கின்றனர். அதிமுகவிற்கு ஆதரவாக அவர்கள் தூண்டுதலின் பேரில் எஸ்பி எங்களை துன்புறுத்துகிறார்’ என்றார்.
ரூப ஜெயந்தியுடன் வந்த வக்கீல்கள் லதா சாந்தி, புனிதவல்லி ஆகியோர் கூறுகையில், ‘புகாரின் பேரில் டிஐஜி நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மனித உரிமை கமிஷன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்றனர்.

வீட்டில் புகுந்து சோதனை - போலீசார் கைது மிரட்டல் :

மதுரை சர்க்கியூட் ஹவுசில் தேர்தல் பார்வையாளர் அஞ்சலி பாவ்ராவிடம், சக்கிமங்கலத்தை சேர்ந்த தைப்பூசம் என்பவர் அளித்த மனுவில், ``நானும், மனைவி ஒச்சம்மாவும் பார்வையற்றவர்கள். எனது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக, அ.தி.மு.க.வினர் கூறிய புகாரின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் இல்லை. பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை.’’ என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பார்வையாளரிடம், மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்தி புகார் மனு கொடுத் தார். அவர் கூறுகையில், “பொய் புகாரின்பேரில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீடு, பார்வையற்றவர் வீடு என பல்வேறு வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, தி.மு.க.வின் தேர்தல் பணிக்கு பாதிப்பை உண்டாக்க நினைக்கிறார்கள். மதுரை கிழக்கு தொகுதியில் வெளியூர் ஆட்கள் குவிந்து, ஒரு ஓட்டலில் தங்கி உள்ளனர். அது குறித்து புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. `போலீசார் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்’ என தேர்தல் பார்வையாளரிடம் தெரிவித்தோம்“ என்றார்.


அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது - மு.க.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு



தேர்தல் கமிஷன், மதுரை கலெக்டர் மற்றும் மதுரை ரூரல் போலீசார் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மத்திய அமைச்சர் அழகிரி குற்றம் சாட்டினார்.
திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி 29.03.2011 அன்று காலை கன்னியா குமரி வந்தார்.
பின்னர் அவர் நாகர்கோவிலில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூசை சந்தித்து பேசினார். கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூசை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை. தேர்தல் கமிஷன் அதிமுகவுக்கு ஆதரவு போல செயல்படுகிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரனின் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு சென்ற போலீசார், சோதனை வாரன்ட் ஏதும் இல்லாமல் அங்கு சோதனை நடத்தி உள்ளனர். ரூரல் எஸ்பி அழைத்து வரச்சொன்னார் என்று கூறி அங்கிருந்த பெண்களிடம் போலீசார் தவறாக, முறைகேடாக நடந்து கொண்டார்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
மதுரை கலெக்டர் சகாயம் அதிமுக உறுப்பினர் போல செயல்படுகிறார். பொதுஇடங்களில் சொற்பொழிவுகள் நடத்தும் நேரத்தில் தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்று பேசும் அளவுக்கு செயல்படுகிறார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
கொட்டாம்பட்டி ராஜேந்திரன் வீட்டில் சென்று முறைகேடாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர இருக்கிறேன். தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு
அழகிரி கூறினார்.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் திமுக வேட்பாளர் வக்கீல் மகேஷ், ஹெலன் டேவிட்சன் எம¢பி ஒன்றிய செயலாளர்கள் சிற்றார் ரவிச்சந்திரன், மனோ தங்கராஜ், வக்கீல் லீனஸ் ராஜ், முட்டம் ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீரபெருமாள், மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அழகிரி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரை கட்சியினர் அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சால்வை அணி வித்து அவரை வரவேற்றனர்.

தமிழகத்தில் கருணாநிதி அலை - நிதியமைச்சர் அன்பழகன் பேச்சு


தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜாவை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த எஸ்.பி. பகவன்தாஸ் ரெட்டியார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஆ. ஜானகிராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் பேசியதாவது:
தாம்பரம் தொகுதி படுவேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல¢ மேம்பாலங்கள், சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் ராஜா, பத்து ஆண்டுகளாக தாம்பரம் நகராட்சி தலைவராக இருந்தார். அப்போது குடிநீர், சாலை வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, பல திட்டங்களை தாம்பரம் தொகுதிக்கு கொண்டு வந்துள்ளார். உள்ளாட்சி பொறுப்பில் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் இருந்ததன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக நடந்துள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் முதல்வர் கருணாநிதி அலை வீசுகிறது. காரணம், கடந்த 5 ஆண்டு கால நலத்திட்டங்கள். முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே வழிகட்டி. இந்தியா நெருக்கடி நிலையில் இருந்தபோது அந்த நிலையை மாற்றியதில் முக்கிய பங்கு கருணாநிதிக்கு உண்டு.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினோம். தற்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். வெளியிலிருந்து வந்தவர்களை நம்ப வேண்டாம். இங்கு உள்ளவர்களை நம்புங்கள்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
முடிவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆதிமாறன் நன்றி கூறினார்.

முன்னதாக தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள தொகுதி வேட்பாளர் அலுவலகத்தை அன்பழகன் திறந்து வைத்தார்.

அதிமுக & தேமுதிக கூட்டணி பற்றி ஹனிமூன் கதை சொல்லி பாக்யராஜ் பிரசாரம்


‘தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா கோடநாடு போய் விடுவார். எம்ஜிஆர் ரசிகர்களை வளைத்து விடலாம்‘ என்று கணக்குப் போடுகிறார் விஜயகாந்த். ‘வைகோவையே ஒரு கை பார்த்து விட்டோம். விஜயகாந்த் எம்மாத்திரம்‘ என ஜெயலலிதா நினைக்கிறார். ஆகவே, மக்கள் சிந்தித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பாக்யராஜ் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் துரையை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் 28.03.2011 அன்று இரவு பிரசாரம் செய்தார். கைகாட்டி கோயில் பகுதியில் அவர் பேசியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, மக்களுக்கு இம்முறை என்னென்ன நல்லது செய்யலாம் என திட்டமிட்டு, முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது திமுகதான். எதிரணியில் சீட்டுக்காக சண்டையிடவே நேரம் சரியாய் போய்விட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்க நேரம் இல்லை. ஏற்கனவே தயாரித்து ரெடியாக இருந்த திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே எடுத்து வாசித்துவிட்டார் ஜெயலலிதா.
திருமண உதவி திட்டத்தில் 4 கிராம் தங்கம் தருவேன் என்கிறார். முதல்வராக இருந்தபோது திருமண உதவி திட்டத்தையே நிறுத்தியவர் இவர். கரும்பு கொள்முதல் விலையை விவசாயிகள் ஆயிரம் ரூபாயாக கேட்டபோது மறுத்த ஜெயலலிதா, இப்போது 2 ஆயிரத்து 500 தருவேன் என்கிறார். முதல்வராக இருந்தபோது முட்டையை நிறுத்தியவர், குழந்தைகளுக்கு யூனிபார்ம் தருவேன் என்கிறார்.
புதுமண ஜோடி ஒன்று கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனது. எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டிய கைடு கடைசியாக, கைப்பிடி இல்லாத பாழுங்கிணற்றை காட்டினார். ‘மனதில் ஏதாவது நினைத்துக் கொண்டு இதில் எட்டணா போட்டால் நினைத்தது நடக்கும்’ என்றார் கைடு. உடனே கணவன் எட்டணா போட்டான். அடுத்து மனைவி காசு போட குனிந்தபோது, கால் தவறி உள்ளே விழுந்து விட்டாள். ‘ஐயய்யோ... மேடம் உள்ள விழுந்துட்டாங்க. பதறாம வேடிக்கை பாக்கறிங்களே?’ என்று கத்தினார் கைடு. ‘காசு போட்டா நினைச்சது நடக்கும்னு சொன்னீங்க. இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு சொல்லலியே’ என்றானாம் கணவன்.
அதுமாதிரி, ‘தேர்தல் முடிஞ்சதும் ஜெயலலிதா கோடநாடு போய்டுவார். எம்ஜிஆர் ரசிகர்களை அப்படியே வளைத்து விடலாம்’ என்று கணக்கு போடுகிறார் விஜயகாந்த். ‘வைகோவையே ஒருகை பார்த்து விட்டோம். விஜயகாந்த் எம்மாத்திரம்’ என்ற நினைப்பில் இருக்கிறார் ஜெயலலிதா. இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

அரசு ஊழியரை துன்புறுத்தியவர் எஸ்மா, டெஸ்மா ஜெயலலிதா - துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு


எஸ்மா, டெஸ்மா சட்டங்களால் அரசு ஊழியர்களை துன்புறுத்திய ஜெயலலிதா இப்போது தேர்தல் வந்ததும் அரசு ஊழியர்களின் பாதுகாவலர் என்று கூறி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
குமரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 28.03.2011 அன்று பிரசாரம் செய்தார். நாகர்கோவில் வடசேரியில் திமுக வேட்பாளர் மகேஷை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுபவர் கருணாநிதி. திமுகவின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2 முறை முதல்வராக இருந்தார். 2 முறை ஆட்சியில் இருந்த போதும் அவர் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கும் தகுதியும், தெம்பும் அவர்களுக்கு உண்டா? திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து தனது தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று பிரசாரத்தில் கூறுகிறார். அரசு ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்ததே அவர்தான். அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் உரிமைகளை, கோரிக்கைகளை எடுத்து சொல்ல கூடாது. வீதிக்கு வந்து போராடக்கூடாது. கோரிக்கை மனுக்களை கோட்டையில் வந்து தரக்கூடாது. போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தவர்களைக்கூட இரவோடு இரவாக கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்தவர். இதனால் ஏற்பட்ட அவமானத்தில் எத்தனையோ பேர் நெஞ்சு வலி வந்து உயிரை மாய்த்த நிலை அந்த ஆட்சியில் இருந்தது.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதற்காக சாலை பணியாளர்கள் 10 ஆயிரம் பேரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியவர். மக்கள் நல பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதால் சுமார் 80 பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டதும் ஜெயலலிதா ஆட்சியில்தான். தேர்தல் வந்துவிட்டதால், ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிப்பது போல், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 28.03.2011 அன்று மாலை முதல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று ஸ்டாலின் பேச்சை கேட்டனர். திறந்த வேனில் குடை பிடித்தபடியே ஸ்டாலின் பேசினார்.

விஜயகாந்த் பிரச்சாரத்தை ஏற்பார்களா? கனிமொழி பதில்


திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை ஆதரித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி. பேசியது:

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஒரே தலைவர் முதல்வர் தான். தி.மு.க. தேர்தல் அறிக்கை உலக அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கின்ற நிலையில் உள்ளன.

அ.தி.மு.க. கூட நமது அறிக்கையை பார்த்து தான் இலவச வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இலவசங்களை கிண்டல் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரே கேரள மாநிலத்தில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்துள்ளனர். அரசின் சாதனை திட்டங்களால் கம்யூனிஸ்டுகளுக்கே வழிகாட்டுகின்ற தலைவராக முதல்வர் உள்ளார். மேற்கு வங்காளத்திலும் இதே நிலை தான் உள்ளது.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடியவில்லையே என்கின்ற வருத்தம் முதல்வருக்கு இருந்தது. தற்போது தனித்தொகுதியாக இருந்த திருவாரூர் பொதுத்தொகுதியாக மாறியதால் முதல்வர் தனது விருப்பத்தை நிறைவு செய்து சொந்த மண்ணில் போட்டியிடுகின்ற வாய்ப்பை பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

திருவாரூர் தொகுதி எனது சொந்தங்கள் உள்ள பகுதி என்று அவர் கூறியிருக்கிறார். அதனால், நான் வாக்கு கேட்டு நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. நிச்சயம் நீங்கள் வெற்றி பெறச்செய்வீர்கள். அவருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு திருவாரூர் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தொகுதியில் நமது தலைவர் போட்டியிட்டு முதல்வராக அமர்வது தொகுதிக்கே பெருமை. அதன்மூலம் தமிழகமே தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு திருவாரூர் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். தமிழன் தலைநிமிர திமுக தலைவர் மீண்டும் முதல்வராக வேண்டும்.

தேர்தலில் சரித்திர சாதனை படைக்கின்ற வகையில், மாபெரும் வெற்றியை திருவாரூர் தொகுதி மக்கள் வழங்கிட வேண்டும்," என்றார் கனிமொழி.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி: விஜயகாந்த் பிரச்சாரத்தை மக்கள் ஏற்பார்களா?

பதில்: வேறு எந்த கூட்டணியும் தனக்கு தேவையில்லை. மக்களுடன்மட்டுமே கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுக கூட்டணிபற்றி ஒருமுறை கேட்டபோது, எனக்கு நிழலுக்கு மாலையிட விருப்பமில்லை என்று சொன்னார். அப்படியெல்லாம் பேசிவிட்டு இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.


அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்கப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறிவருவது வேடிக்கையானது .

ஜெ. தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள்: குஷ்பு



ஜெயலலிதாவின். தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள் என்று பழனியில் நடிகை குஷ்பு பேசினார்.

பழனி சட்டமன்றத்தொகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது;

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று கூறுகிறோம். ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள். அவர் தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார்.

பெண்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தவர் கலைஞர். 1989ம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி சுயமரியாதை தந்தவர். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சத்துணவில் வாரம் 5 முட்டை வழங்கினார்.

இலவச மிக்சி, கிரைண்டர் தருவதாக கலைஞர் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்பவர் கலைஞர். துணை முதல் அமைச்சர் கூறியது போல குளிர் சாதன பெட்டியும், வாஷிங் மெஷினும் தேடி வரும் என்றார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - நடிகை குஷ்பு பேச்சு :

திருப்பூர் மாவட் டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சாமிநாதனை ஆதரித்து, நடிகை குஷ்பு 28.03.2011 அன்று மடத்துகுளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மடத்துகுளம் ஒன்றியம் கொழுமம், குமரலிங்கம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குறிச்சி கோட்டை, தளி, பள்ளபாளையம், போடிபட்டி, உடுமலை மத்திய பஸ்நிலையம், குடிமங்கலம் நால் ரோடு ஆகிய பகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குஷ்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
போடிபட்டி பகுதியில் பிரசாரம் செய்த நடிகை குஷ்பு பேசியதாவது:
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக திகழ்ந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, கடந்த தேர்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச டிவி மற்றும் கேஸ் அடுப்புகளை வழங்கி உள்ளார்.
நன்றாக படிக்கும் மாணவர்கள்தான் எப்போதும் நம்பர் ஒன்னாக இருப்பார்கள். கருணாநிதியின் தேர்தல் அறிக்கைதான் நம்பர் ஒன். அதைப் பார்த்து ஜெயலலிதாக காப்பி அடித்துள்ளார். காப்பி அடிக்கும் மாணவர்கள் மூன்றாண்டுக்கு தேர்வு எழுத முடியாது. அதுபோல அடுத்த 5 ஆண்டுக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வரமுடியாது. சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 6வது முறையாக கருணாநிதி, முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்வார்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
தொடர்ந்து, குஷ்பு உடுமலை சட்டமன்ற தொகுதி கொமுக வேட்பாளர் இளம்பரிதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
நடிகை குஷ்புவை காணவும், அவரது பேச்சை கேட்கவும் சாலையின் இருபுறமும் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். பள்ளி மாணவிகள் பலரும், குஷ்புவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

உடுமலை கொமுக வேட்பாளர் இளம்பரிதி, திருப்பூர் தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்குமார், திருப்பூர் வடக்கு திமுக வேட்பாளர் கோவிந்தசாமி, பல்லடம் கொமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார்.

தென் மாவட்டத்தில் 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் அழகிரி பேட்டி


சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் கூறினார்.
மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்பு செயலாளருமான அழகிரி 28.03.2011 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு திமுக கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதி களிலும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டுள்ளன. எனவே தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தென்மாவட் டத்தில் உள்ள 52 தொகுதிக ளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’ என்றார்.
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, மேயர் கஸ்தூரி தங்கம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “திமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்வது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிகிறது. ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் ஆணையம் இப்படி கெடுபிடியாக நடந்து கொள்கிறது’ என்றார்.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு திட்டம்: வடிவேலு



கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வடிவேலு 28.03.2011 அன்று மாலை கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

கொளத்தூர் தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி இருக்கிறது.

இப்போதும் தேர்தல் அறிக்கையில், மிக்சி, கிரைண்டர் என்று அறிவித்து இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கூட, திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அன்னை போல் தாய்மை உள்ளம் கொண்டவராக கருணாநிதி விளங்கி வருகிறார்.

துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 12 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். அரசியலில் கடுமையான போராட்டங்களை சந்தித்து முன்னுக்கு வந்திருக்கிறார். இப்போதும், 12 வயது போலவே துருதுருவென செயல்படுகிறார். அவர் சென்னை நகர மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என்று கூறினார். இதை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், இன்று சென்னையில் எண்ணற்ற பாலங்கள், பூங்காக்கள், குப்பையில்லா கூவம் என்று சென்னை நன்றாக காட்சி அளிக்கிறது. செம்மொழி பூங்கா அமைத்து, அதை சொர்க்க பூமி பூங்காவாக மாற்றியிருக்கிறார்.

நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம், நாங்கள்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள். சினிமாவில் நான் நிறைய பேரை சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால், என்னை சிரிக்க வைத்தவர் விஜயகாந்த்.


234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அந்த ஒரு தொகுதி (விருதாச்சலம்) மக்கள், நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று, உள்ளம் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வீரம் காட்டுவார் விஜயகாந்த். வில்லன்களை அடித்து துவைப்பார். இதெல்லாம் டூப். உண்மையிலேயே அடி வாங்குவது யார் என்றால் நாங்கள்தான்.


தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்கிறார். ஆனால், அவருக்கு எம்.ஜி.ஆரின் குணமில்லையே.


சிவனே என்று இருந்த எனது வீட்டில் கல் எரிந்தனர். இது என் மகள் மீது பட்டது. ஊரையே சிரிக்க வைக்கும் என்னை, அழவைத்தவர் விஜயகாந்த். அந்த அளவுக்கு கொடூரமனம் படைத்தவர் அவர். பண்பாடு தெரியாதவர், அவருக்கு புரட்சி கலைஞர் என்று பெயர் வைத்தவர் என் கலைஞர். அவருடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். அப்படிப்பட்ட அப்பாவுக்கு நிகரானவரை, ஒழிப்பேன் என்று பிரசாரம் செய்து வருகிறார்.

சினிமாவில் எனக்கு மாஸ் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த மாஸ் உடனே நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். ஆனால், சினிமாவில் போணியாகாததால் விஜயகாந்த் உங்களை தேடி வந்திருக்கிறார். அவரை நீங்கள் நம்பாதீர்கள்.

விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.


எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.

எம்ஜிஆர் போல நடிக்கணும் என்றால் அவரைப்போல ஒரு கண்ணாடியும், தொப்பியையும் போட்டு படத்துல நடிக்க வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ரோட்ல வந்து எம்ஜிஆர் மாதிரியே தொப்பியை வாங்கி மாட்டிக்கிட்டு, கண்ணாடிய மாட்டிக்கிட்டு, கையில கர்ச்சிப்பை வச்சிக்கிட்டு அசிங்கமா இல்லையா.


இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்

நேற்று கூட கலைஞர் சொன்னார். எல்லாவற்றையும் உங்களுக்கு செய்திருக்கிறேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு வடிவேலு பேசினார்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின் பிரசாரம்


மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 28.03.2011 அன்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காரில் வந்த அவருக்கு, மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
களியக்காவிளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜயதரணி, ஜான் ஜேக்கப் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:
தமிழகத்தில் 6வது முறையாக முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய உங்களை நாடி வந்திருக்கிறோம். ஓட்டுக்காக மட்டும் உங்களை தேடி வரவில்லை. எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருந்து பணியாற்றி வருகிறோம் என்ற உணர்வோடு, வந்திருக்கிறோம்.
திமுக தலைவர் கருணாநிதி 2006 தேர்தல் அறிக்கையின் போது என்னென்ன திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தாரோ, அத்தனையையும் 100க்கு 100 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார் என்ற உரிமையோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் எத்தனையோ கட்சி தலைவர்கள் வரலாம். உறுதி மொழிகள் தரலாம். வானத்தை கிழித்து விடுவோம். வைகுண்டத்தை காட்டுவோம் என்றெல்லாம் கூறலாம். ஓய்வுக்கு கொடநாட்டுக்கு செல்லும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
திமுக தலைவர் கருணாநிதி சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி உள்ளார். 2006 தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொன்னது 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது தான். ஆனால் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி மாபெரும் அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார். கலர் டிவி யார், யாருக்கு இல்லையோ அவர்களுக்கு எல்லாம் வழங்கப்படும் என்று கூறி அதையும் நிறைவேற்றினார்.
திருமண உதவி தொகையாக பெண்களுக்கு, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் திருமண உதவி தொகை வழங்கும் திட்டத்தை 1989ல் ஸீ5 ஆயிரத்துடன் தொடங்கினார். 96ல் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது அதனை ஸீ10 ஆயிரமாக உயர்த்தினார். அதன்பின்னர் வந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்தியது. 2006 தேர்தலின் போது அதிமுக நிறுத்திய இந்த திட்டத்தை திமுக ஆட்சி வந்தால் மீண்டும் தொடரப்படும். உதவி தொகை ஸீ15 ஆயிரமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். ஆனால், உதவித் தொகை உயர்த்தப்பட்டு ஸீ20,000 ஆனது. பின்னர் ஸீ25,000 ஆனது. தேர்தல் நேரத்தில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் செய்து முடித்துள்ளவர் கருணாநிதி. முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் கலைஞர் பெயரால் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 108 அவசர கால ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 21 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலத் திட்டங்கள் தொடர மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதேபோல், தக்கலையில் பத்மநாபபுரம் திமுக வேட்பாளர் புஷ்பலீலா ஆல்பனை ஆதரித்தும், குமரியிலும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Monday, March 28, 2011

அருந்ததியர், வாணியர் சங்கத்தினர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு


முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், வாணியர் முன்னேற்ற பேரவையினர் சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் ஏ.சி.கணேசன், பொதுச் செயலாளர் இளஞ்செழியன், பொருளாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் 28.03.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உடனிருந்தார்.
தமிழ்நாடு வாணியர் முன்னேற்ற பேரவை தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகளும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கிறிஸ்தவ அமைப்புகள் அறிவிப்பு :

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் கிறிஸ்தவர் கட்சி மற்றும் தமிழ்நாடு கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ் கிறிஸ்தவர் கட்சியின் தலைவர் ஜான் சுவார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1994 முதல் எங்கள் கட்சி திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கே எங்கள் ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களில் சிறுபான்மையினருக்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். சட்ட மேலவையில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும். கல்லறையில்லா ஊர்களில் அரசு இடம் ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் பி.டி.ஆப்ரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியம் பிரசாரத்தில் ஈடுபடும் என்று எங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கிறிஸ்தவ மக்கள் கட்சியின் நிறுவனர் ஆர்.கே.ஜெயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலித் கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெற வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவோம் போன்ற ஏராளமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையை கிறிஸ்தவ கட்சி வரவேற்கிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்துள்ளோம். மீண்டும் கருணாநிதியை முதல்வராக்க பாடுபடுவோம். இதற்காக கிறிஸ்தவ மக்கள் கட்சி ஒத்துழைப்பு வழங்கும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி எழுதிய நூல் ‘தொடரட்டும் நல்லாட்சி’ - முதல்வர் வெளியிட்டார் :

காங்கிரஸ் நிர்வாகி கோபண்ணா எழுதிய நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா, ‘தொடரட்டும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் பேச்சாளர்களுக்கு தேவையான குறிப்புகள் கொண்ட நூல் எழுதியுள்ளார். அதை முதல்வர் கருணாநிதி 28.03.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். நிதியமைச்சர் அன்பழகன் உடன் இருந்தார்.
பின்னர் கோபண்ணா கூறுகையில், “2006 தேர்தலின்போது இதேபோல ‘அராஜக ஆட்சியை வெளியேற்றுவோம்’ என்று நான் எழுதிய நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் ‘வெல்லட்டும் சாதனை கூட்டணி’ என்ற நூல் எழுதினேன். இப்போது இந்த நூல் எழுதி உள்ளேன்” என்றார்.


திமுக கூட்டணியின் வெற்றி தொடரும் - முதல்வரை சந்தித்த பின் ஜி.கே.வாசன் பேட்டி



முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 28.03.2011 அன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் 10.10 மணி முதல் 10.40 மணி வரை சந்தித்தார். அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
கடந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி முழுமையாக நிறை வேற்றினார். மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த முறையும் தேர்தல் அறிக்கையை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்பட பல தேர்தல்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. மக்களின் நம்பிக்கையை பெற்ற அணி இது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த அணி பணியாற்றி வருகிறது. எனவே சட்டசபை தேர்தலிலும் இது வெற்றி கூட்டணியாக அமையும்.
நாளை மறுதினம் தொடங்கி 11 நாட்கள் நான் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்காக முதல்வரை சந்தித்து பேசினேன். கூட்டணியின் வெற்றிக்கான பல்வேறு விஷயங்களை பற்றி விவாதித்தோம். தேர்தல் பிர சாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி பேசுவேன். திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித் தரும். மீண்டும் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் பற்றி தேர்தல் அறிக்கையாக முதல்வர் தந்துள்ளார். அதை மக்கள் முழுமையாக ஏற்றிருக்கிறார்கள். எனவே இந்த அணியை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்வார்கள். மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
காங்கிரசில் போட்டி வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கூட்டணி வெற்றிக்காக காங்கிரசார் அனைவரும் பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு


தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜ்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் கட்சி பணியாற்றி வருகிறோம். பல்வேறு இன்னல்களை சந்தித்தும் கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களின் பிரச்னைகளுக்காக பலமுறை சிறைக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை மதிக்காமல் தேர்தலில் போட்டியிட தளி தொகுதி எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழு, ஓசூர் வட்ட குழு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முறையும் தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி கொடுத்தது மிகுந்த மனவேதனைக்குரிய விஷயம். எனவே, நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் தளி மற்றும் ஓசூர் தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம்.
பாத்திர உற்பத்தியாளர் திமுகவுக்கு ஆதரவு :

தமிழ்நாடு எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்தது.
மாநில தலைவர் பூபதி ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.ஜி.பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ‘சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவது’ என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தி செய்யும் தொழிலில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று பூபதி ராஜா தெரிவித்தார்.

முதுகுளத்தூர் தொகுதிக்கு மு.க.அழகிரி திடீர் விசிட்


முதுகுளத்தூர் தொகுதிக்கு திடீரென வருகை தந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக வேட்பாளர் வெற்றிக்கு சுறுசுறுப்பாக பாடுபட கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மத்திய அமைச்சரும் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி 27.03.2011 அன்று காலை முதுகுளத்தூர் தொகுதிக்கு திடீரென வந்தார். தொகுதிக்கு உட்பட்ட கமுதி, முதுகுளத்தூர், பேரையூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியின் வெற்றிக்கு அயராது உழைக்க நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். வீடு வீடாக மக்களை சந்தித்து, ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.
அவருடன் மதுரை துணை மேயர் மன்னன், ரித்திஷ் எம்பி., முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா(எ)வெள்ளைச்சாமி, பேரூராட்சி துணைத்தலைவர் ஷாஜகான், ஒன்றிய கவுன்சிலர் திருமூர்த்தி, இளைஞர் அணி சக்திமோகன், போகர் துரைச்சிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் வந்தனர். மு.க.அழகிரியின் திடீர் விசிட், திமுக கூட்டணி கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

விஜயகாந்த் கூட்டணி: பாக்கியராஜ் கிண்டல்


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகர் பாக்கியராஜ் பேசிய திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ்,

நல்ல விஷயத்தை யாரும் சொல்ல வேண்டியது, இல்லை. அது தானாகவே விளம்பரமாகிவிடும். அதேபோல் தான் கலைஞர் அறிவித்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பூவின் வாசம் காற்றடிக்கும் திசையை நோக்க வீசும். எதிர் திசையில் வீசாது. ஆனால் ஒரே ஒரு பூவின் வாசம் மட்டும் நான்கு திசைகளிலும் வீசும். அது தான் மனிதனின் நற்பண்பு. அந்த பண்பு கலைஞரிடம் உள்ளது. விஜயகாந்த், கட்சி தொடங்கும் போது, தான் மக்களிடமும், ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று கூறினார். ஆனால் இப்போது மக்கள் கூட்டணியும் இல்லை, ஆண்டவன் கூட்டணியும் இல்லை. அவரை கடுமையாக விமர்சனம் செய்த ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து உள்ளார்.
இன்று தேசிய ஒற்றுமைக்கும், ஒருமை பாட்டுக்கும் கலைஞர் கொடுத்த சமத்துவபுரம் உதாரணமாக திகழ்கிறது. தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையை வேறு வழியின்றி, காப்பிஅடித்து அப்படியே செல்லி இருக்கிறார், ஜெயலலிதா. இப்போது கலைஞர் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்து உள்ளனர். அவரின் திட்டங்கள் எந்தளவு மக்களை சென்றடையும் என்று மக்களுக்கு தெரியும் என்றார்.

அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணை கட்டுது :வடிவேலு


அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’ நாகரிகம் தெரியாத ஒரு ஆள். அவரை சேர்த்துக்கிட்டு அந்த அம்மாவுக்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பிச்சிடுச்சு.

விருத்தாசலம் அப்பாவி மக்கள் சினிமாவுல சண்டை போடுறத எல்லாம் பார்த்துட்டு நம்மையும் காப்பாத்துவாருன்னு அவசரப்பட்டுஏமாந்து ஓட்ட போட்டிடுச்சுங்க.

இன்னைக்கு ஒரு மேடையில பேசியிருக்கிறாரு... நல்லது செய்யனும் நல்லது செய்யலன்னா யாராக இருந்தாலும்விடமாட்டேன்னு பேசியிருக்கிறாரு.

என்ன கணக்கு? ஒண்ணுமே புரியல? சேர்க்கை சரியில்ல; அந்த கூட்டணியில சேர்க்கை
சரியில்லை அவ்வளவுதான். ஒரு மாதிரியான கூட்டம் அது.

இப்ப என்ன நீ ஜெயிச்சுட்டேன்னு 41 சீட்டு வாங்கியிருக்க. இந்த பீஸூ பேச்சை யாரும் நம்ப மாட்டாங்க. கலைஞர் பேச்சைத்தான் பேசுவாங்க

.அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,

‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு...’’ன்னு சொல்லுறார். (
விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)

நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது.

கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.

அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.


ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.

விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.
நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும்
மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.


டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும்
குறிப்பா நான் விடமாட்டேன்.

ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே.

முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசித்தள்ளினார் வடிவேலு.

உதயசூரியன் பட்டனை அழுத்தினால் வீட்டில் கிரைண்டர், மிக்சி ஓடும்


உதய சூரியன் பட்டனை அழுத்தினால், உங்கள் வீட்டில் கிரைண்டனர், மிக்சி ஓடும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை ஆதரித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் 27.03.2011 அன்று செனாய் நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.
தயாநிதி மாறன் பேசியதாவது:
எழும்பூர் தொகுதியில் 6வது முறையாக பரிதி இளம்வழுதியை முதல்வர் கருணாநிதி நிறுத்தியிருக்கிறார் என்றால் என்றென்றும் அவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவராக உள்ளார். தனி ஒருவராக சட்டப்பேரவைக்கு சென்ற போது கூட அதிமுகவுக்கு பாடம் புகட்டியவர். இதனால் அடிக்கடி ஜெயலலிதாவால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சற்றும் தயங்காமல் உங்கள் வாக்குகளை அளித்து அவரை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி எத்தனையோ நலத்திட்டங்களை செய்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை தடுக்கி விழுந்தால் கூட மேம்பாலங்கள் தான் உள்ளது. நாம் கட்டியதை கூட நோண்டி பார்த்து குற்றம் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார் ஜெயலலிதா. ஆனால் முடியவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் பல பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோன்று சென்னையில் இட நெருக்கடியை குறைக்க புதிய நகரை உருவாக்குவோம் என்று முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அண்ணாநகர், கே.கே.நகர், அயன்புரம், மறைமலை நகர், எம்ஜிஆர் நகரை உருவாக்கியவர் முதல்வர் கருணாநிதி. சென்னையை பற்றி கவலைப்படுபவர் அவர். மீண்டும் பெரிய நகர் உருவாக்கப்படும். அதில் குறைந்த செலவில் நீங்கள் சொந்த வீடுகள் கட்டும் நிலை வரும்.
மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தோம். அதை தொடங்கி வைக்க போவதும் முதல்வர் கருணாநிதி தான். அவர் தந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு உங்கள் வீட்டில் உள்ளது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை உங்கள் வீட்டில் யாராவது ஒருவராவது பயன்பெற்றிருப்பார்கள். மே. 14 முதல் மாதத்துக்கு ஒரு முறை 35கிலோ அரிசி இலவசமாக தருவார். டிவி கொடுத்த முதல்வர் கருணாநிதி மிக்சி, கிரைண்டரும் தருவார். இன்னும் அதிகமாக கேட்பீர்களானால் பிரிட்ஜ், வாஷிங் மெஷினும் தருவார். ஒரு தந்தை தான் பெற்ற மகளுக்கு செய்ய வேண்டிய சீதனத்தை முதல்வர் கருணாநிதி வாரி வழங்குவார். இதை எல்லாம் பெற ஏப்ரல் 13ம்தேதி வாக்குப்பதிவு எந்திரத்தில் நீலநிற பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வீட்டில் மிக்சி, கிரைண்டர் எல்லாம் ஓடும். மாணவர்கள் கையில் லேப் டாப் இருக்கும்.
இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.

அவருடன் வேட்பாளர் பரிதி இளம்வழுதி, பகுதிச் செயலாளர் ஏகப்பன், கவுன்சிலர் கோவிந்தன், வட்டச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் அப்பன்துரை, எம்.மணி, காங்கிரஸ் வட்டத் தலைவர் பக்தவச்சலம், ஏழுமலை, அசோக், சுரேந்திரன், டி.தயாநிதி ஆகியோர் உடன் சென்றனர்.