![](http://2.bp.blogspot.com/-XzkglMfRlAs/TbaShaGQ8xI/AAAAAAAAD1o/tUCUr4uEaqA/s400/S.jpg)
உடல் நலக்குறைவால் இறந்த சாய்பாபா உடலுக்கு, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.04.2011 அன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாய்பாபா மறைவு செய்தி கேட்டதும் முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனை அடைந்தார். தனது சார்பில் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை புட்டபர்த்தி செல்லுமாறு கூறினார். இதையடுத்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.04.2011 அன்று மதியம் 12.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் புட்டபர்த்தி சென்றார். அங்கு சாய்பாபா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிறிது நேரம் அங்கிருந்து விட்டு 24.04.2011 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை திரும்பினார்.
No comments:
Post a Comment