கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 23, 2011

ஒழுங்கு நடவடிக்கை பற்றி தன்னிலை விளக்கம் அளிக்க அவகாசம்: திமுக அறிக்கை


தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. தோழர்கள் சிலர் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்களில் ஈடுபட்டதாக தலைமைக் கழகத்திற்கு கிளைக் கழகங்கள், ஒன்றிய கழகங்கள் அல்லது அவற்றின் மேல் அமைப்புகள மூலம் புகார்கள் வந்துள்ளன. அவைப் பற்றி உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் அனைத்துப் புகார்கள் பற்றியும் விசாரித்தறிந்து யார் மீது புகார் கூறப்படுகிறதோ அவர்களிடம் விளக்கம் பெற்று அவற்றை ஆய்வு செய்து கட்சி தலைவரும் பொதுச் செயலாளரும் முடிவு எடுத்து அறிவிக்க இருக்கிறார்கள்.
சட்டப் பேரவை தேர்தலில் கட்டுப்பாட்டை மீறியதாக வந்த புகார்களின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும், யார் மீதாவது ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வந்திருக்குமானால், அவர்கள் தலைமை கழகத்திற்கு மேல் முறையீடு செய்து தன்னிலை விளக்கம் தருவதற்கு வரும் 30ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment