கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 13, 2011

ஜெயில் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன் - அனிதா ராதாகிருஷ்ணன்


திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது ஆறுமுகநேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு இவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. 32 நாட்களாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று திருச்செந்தூர் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கடந்த 13.09.2011 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 3 வழக்குகளில் இருந்தும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அடுத்து அவர் திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் உத்தரவில் அனிதாராதாகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு செக்ஷன் மட்டும் இடம் பெறவில்லை என்று சிறை அதிகாரிகள் அவரை வெளியே விட மறுத்துவிட்டனர்.

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறையில் இருந்து வெளியே செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய வக்கீல் கிருபா மீண்டும் திருச்செந்தூர் கோர்ட்டு சென்று, விடுபட்ட செக்ஷனை மீண்டும் ஜாமீன் உத்தரவில் இணைத்து 17.09.2011 அன்று  காலை 8.30 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்தார்.

அப்போது சிறை அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை தனிநபர் கையில் எடுத்து வர கூடாது. தபாலில் தான் சிறைக்கு வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து அந்த உத்தரவு விரைவு தபாலில் உடனடியாக திருச்சி சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதன்பிறகு 17.09.2011 அன்று பகல் 1.45 மணிக்கு திருச்சி சிறையில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியே வந்தார். திருச்சி சிறை வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

நான் இந்த சிறையில் 32 நாட்களில் விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 37 நாட்கள் இங்கு இருந்து உள்ளேன். 5 நாட்கள் கூடுதலாக என்னை உள்ளே வைத்து, ஜாமீனில் வர சிரமம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழக்கு பதிவு செய்து, பின்னர் அதற்கான ஜாமீன் உத்தரவில் ஒரு நம்பர் விட்டு போனதாக கூறி, இருக்கிறார்கள். இதற்காக ஜெயில் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அய்யா படத்திற்கு கலைஞர் மலர் தூவி மரியாதை

சென்னை அண்ணாசாலையில் உள்ள சிம்சன் சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் உள்ள பெரியார் படத்திற்கு 17.09.2011 அன்று  தி.மு.க. தலைவர் கலைஞர் தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கனிமொழிக்கு ஜாமீன் கோரும் மனு : அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படும் வழக்காகவே தெரிகிறது - கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் 16.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணையில் சட்ட விவகாரம் சம்மந்தமாக தொடர்புடையவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் கூட அது சம்பந்தமாக விசாரணை எதுவும் நடைபெறாமல் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல், அதற்கான வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் கடத்தி கொண்டேயிருக்கிறார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் கூட, இந்த வழக்கைக் காரணம் காட்டி விசாரணை செய்யாமல் டெல்லி திகார் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதியிருக்கிறார்கள்.

20.6.2011 அன்று என் மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர்   ஜாமீன் கோரியுள்ள கனிமொழி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரையில் பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர், வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் கோரி மனு செய்யலாம்'' என்று கூறியே 3 மாதங்கள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றுகின்ற சரத்குமாரையும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 20 சதவிகித பங்குதாரராக உள்ள கனிமொழி எம்.பி.யையும் கைது செய்து 120 நாட்களாக விசாரணை இல்லாமல் ஜாமீன் கோரும் மனுக்களையும் பெற்றுக் கொள்ளாத சூழ்நிலையில் இனி அடுத்த மாதம் தான் நீதிமன்றமே திறக்கப்பட்டு ஜாமீன் போன்ற பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் ஆராய வேண்டும் என்று இதற்காக அமைந்துள்ள நீதிமன்றம் தனது பணிகளை இப்போது ஒத்தி வைப்பதாகச் சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா மற்றும் சிறையிலே உள்ள பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட போதிலும் கனிமொழியும், சரத்குமாரும் கலைஞர் தொலைக்காட்சி சம்மந்தமான (காசோலை மூலமாகவே) கொடுக்கல், வாங்கல், கடன் வாங்கித் திருப்பிக் கொடுத்தல் என்ற நிலையிலே தான் இதிலே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்களே அல்லாமல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நேரடியான எந்தக் குற்றச்சாட்டிலும் அவர்கள் இல்லை.

இருந்த போதிலும் அவர்களையும் 120 நாட்களாக விசாரணை இல்லாமல் திகார் சிறைச்சாலையிலே அடைத்திருக்கிறார்கள்.

ஜாமீன் வழங்குவது சம்மந்தமாக இந்த வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று நீதிமன்றமே கூறியிருந்த சூழ்நிலையில்    ட்ராய்'' நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலர் வாதாடியதைக் காரணமாக வைத்து   ட்ராய்'' நிறுவனத்தின் அறிக்கைக்காக நீதிமன்றமும் காத்திருப்பதாகச் சொல்லி மீண்டும் ஒரு முறை நீதிமன்ற நடவடிக்கைகள் மேலும் 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளையும் அவற்றுக்குச் சொல்லப்படுகின்ற காரணங்களையும் கூர்ந்து பார்க்கும்போது இது முற்றிலும் அரசியல் நோக்கத்தோடு நடைபெறுகின்ற காரியமாக இருக்குமோ என்று தான் ஐயுறத் தோன்றுகிறது.

நீதிமன்றம் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் வழக்கில் ஜாமீன் மனு கொடுப்பதற்கான காலகட்டத்தை ஏற்கனவே பல நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டிருந்தும் கூட, அதை நினைவுபடுத்தி இப்போது தரப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்காமல் அடுத்த மாதம் முதல் வார வாக்கில் தான் அது பற்றி ஆராயப்படும் என்று அறுதியிட்டுக் கூறியிருப்பதை எண்ணும்போது, இந்த ஒரு வழக்கு, மற்ற வழக்குகளைப் போல அல்லாமல், அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே வெளிப்படையாகவே தெரிகின்றது என்பதை மறைத்திடவோ; மறுத்திடவோ எவரும் முன் வர முடியாது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

எந்தவொரு சர்வாதிகார ஆட்சியும் நீடித்ததாக வரலாறு இல்லை : தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

தி.மு.க. தலைவர் கலைஞர் 15.09.2011 அன்று  அண்ணா பிறந்தநாளையொட்டி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் எந்தவொரு சர்வாதிகார ஆட்சியும் நீடித்ததாக வரலாறு இல்லை என்று கூறினார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:-

செய்தியாளர் :- அண்ணா பிறந்த நாளான இன்று கழகத் தோழர்களுக்கு  நீங்கள் தெரிவிக்கும் செய்தி? 

கலைஞர்  :- அண்ணா  அவர்கள் வாழ்நாள்  முழு வதும்  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு  என்பதிலே  உறுதியாக இருந்தார்.  ஜனநாயகம் தழைக்க வேண்டு மென்பதிலே  அக்கறை கொண்டவராக விளங்கினார்.   ஜனநாயகத்தின்  பெயரால்  சர்வாதிகாரம்  தலையெடுப் பதை அவர் என்றைக்கும் விரும்பிய வரல்ல.    அண்ணா வின் இந்த எண்ணத்தை எதிரொலிப்பவர்களாக  - அவரது  தம்பிமார்கள்  -  அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  செயல்பட வேண்டும்,  செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை  அண்ணாவின் நினைவு போற்றும் இந்நாளில் நான் உறுதிபடக் கூறுகிறேன்.

செய்தியாளர் :-   உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக் கிறீர்கள், அதற்கு என்ன காரணம்? எப்படி சொல் கிறீர்கள்?

கலைஞர்  :-  தனியாக நிற்க முடியும் என்ற தைரியத் தில் சொல்லியிருக்கிறோம்.   அதற்கான காரணங்களை யெல்லாம் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறேன்.

செய்தியாளர் :-  சட்டசபை தேர்தலின் போதே இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று சொல்கிறார்களே?

கலைஞர்  :-  சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கும்  உள்ள வேறுபாட்டினை அறிக் கையிலே சொல்லியிருக்கிறேன்.  இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

செய்தியாளர் :-   தேசிய  அளவில்  அந்த அறிக்கை முக்கியமாகப் பேசப்படுகிறதே?

கலைஞர்  :-  திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில்  நாடாளுமன்றத் தேர்தல்  -  சட்டப் பேரவைத் தேர்தல்  ஆகிய வற்றில்  கூட்டணியோ,  தொகுதி  உடன்பாடோ  மற்ற கட்சிகளோடு கொள் வதில் எந்தவிதமான  பின்வாங்கலும் இல்லை. 

உள் ளாட்சி மன்றத் தேர்தல் அரசியல் ரீதியான அடிப்படையில்  மக்களை அணுகக் கூடியவை அல்ல என்ற காரணத் தாலும்  -  பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை  முன்வைத்து பணிகள்  ஆற்ற வேண்டிய நிலைமைகளாலும்  -  இதில் அரசியலைக் கலக்கத் தேவையில்லை என்ற கருத்தின் அடிப்படையிலேதான்  திராவிட முன்னேற்றக் கழகம் இந்த முடிவினை அறிவித்திருக்கின்றது.

செய்தியாளர் :-  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டி என்று நீங்கள் அறிவித்திருப்பதால்,  காங்கிரஸ் கட்சியோடு தற்போதுள்ள உறவு பாதிக்குமா?

கலைஞர்  :-  காங்கிரசோடு  உறவு  நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போன்ற நேரங்களில்தான் தேவைப்படும்.  அப்போதெல்லாம்  எங்களுடைய உறவு முறியாது.  நீடிக்கும்.     மத்திய அரசோடு  நாங்கள் உற வோடு  இருக்கிறோம்.   

செய்தியாளர்:- அரசியலிலும்  நிர்வாகத்திலும்  ஒரு நல்ல நாகரிகம் இருக்க வேண்டு மென்று சொல்லிக் கொடுத்தவர்  பேரறிஞர் அண்ணா.   அவருடைய பிறந்த நாள் விழா வில் ஒரு கேள்வி.   மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொள்ளவிருந்த  கூட்டங்களுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வராமல் மத்திய அமைச்சரை அவமதித்தது குறித்து  ஒரு மூத்த தலைவர் என்ற முறையில் என்ன கூறுகிறீர்கள்?    

கலைஞர்  :-  ஒரு மூத்த தலைவர் என்ற முறையில்  -  அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்களுக்கு நேர்ந்த அவமானத்தை  யாராலும்  பொறுத்துக்கொள்ள முடியாது.  மக்களுக்கு  ஆற்ற வேண்டிய  பணியைத் தொடருவதற்காகத்தான்  - அவைகளைப் பற்றி  திட்டமிடுவதற்காகத்தான்  கலெக்டர்களோடு அவருடைய நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.   அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டிய கலெக்டர்களே  அந்த நிகழ்ச்சிகளை  புறக்கணிக்கின்ற அளவிற்கு  நடந்து கொண்டார்கள் என்பது  இங்கேயுள்ள மேலிடத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து நான் மிகவும் வருந்துகிறேன்.

செய்தியாளர் :-   மத்தியிலும், மாநிலத்தி லும் தணிக் கைத் துறை அதிகாரிகளின் அறிக்கைகள்  அவ்வப் போது வெளியிடப் படும்போது  அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர்கள் தெரிவிக்கிறார்களே?

கலைஞர்  :-     ஒவ்வொன்றைப் பற்றியும்  தனித் தனியாக தேவைப்பட்டால் விமர்சிக்க முடியுமே தவிர,  பொதுவான கருத்து எதையும் சொல்ல இயலாது.  தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கைகள் குறித்து  ஆரம்பத்தி லிருந்தே  சந்தேகமான  புள்ளிவிவரங் களைக் காட்டுகிறார்கள். தொடங்கியபோதே  எத்த னையோ கோடிகள்  என்று கோடிக் கணக்கில்  நட்டம் என்று வெளியிட்டார்கள்.  பிறகு அது யூகிக்கப்பட்ட தொகை என்றார்கள்.   இப்படி நட்டம்  என்பதையே  கேள்விக்குறியாகச் சொல்லியிருக்கிறார்கள்.  

செய்தியாளர்:- அலைக்கற்றை ஒதுக் கீட்டு பிரச்சினையில் டிராய்  தாக்கல் செய்த அறிக்கையிலும்,  சி.பி.அய். தாக்கல் செய்த அறிக்கையிலும்  குற்றச் சாட்டிற்கு  ஆதாரம் இல்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது.   அதற்குப் பிறகும்  கைது செய்யப்பட்ட வர்கள் எல்லாம் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார்களே?

கலைஞர்  :-  மாண்புமிகு  நிருபர்களுடைய  மனோ நிலையை  நானும் பகிர்ந்து கொள்கிறேன்.   



செய்தியாளர்:- அலைக்கற்றை ஒதுக் கீட்டில் குற்றச்சாட்டு  என்ற நிலையில் கனிமொழியை மாதக்கணக்கிலே சிறையில் வைத்திருக்கிறார்களே?

கலைஞர்  :-  கனிமொழிக்கும் அலைக் கற்றை ஒதுக் கீட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.   கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரர் மட்டுமே.   பொதுவாக  பங்குதாரர்களை  எந்தவொரு நிறுவனத்தின்  இதுபோன்ற  நடவடிக் கைகளில்  இணைத்து வழக்கு போடுவது வழக்கம் இல்லை.   இதை நம்முடைய வழக்கறிஞர்கள் சி.பி.அய். நீதி மன்றத்தில்  மிகத் தெளிவாக விளக்கியிருக் கிறார்கள்.  இருந்தாலும் வழக்கு தொடருகிறது.

செய்தியாளர் :-   தமிழகத்தில்  பலரைக் கைது செய்துவிட்டு காரணங்களைத் தேடி அலைகிறார்கள்.   எதற்காக கைது செய்கி றோம் என்பதையே காவல் துறையினர் சொல்வதில்லை.   சேலத்தில் சிறையிலே வைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கோவைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.   காவல் துறையினராலும் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை.  இதற்கெல்லாம் என்ன பதில் கூறுகிறீர்கள்?

கலைஞர்  :-   எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களை  அடக்குமுறை மூலமும், அவதூறு  செய்திகளை வெளியிட்டு களங்கப்படுத்துவதின்  மூலமும்  -  தனது சர்வாதி காரத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியு மென்று  ஜெயலலிதா  கருதுகிறார்.   இதுபோன்ற நடவடிக் கைகளால்  எந்தவொரு சர்வாதிகார ஆட்சியும் நீடித்த தாக  வரலாறே கிடையாது.

செய்தியாளர் :- டிராய்  நிறுவனம் கொடுத்த அறிக்கையில் அலைக் கற்றை ஒதுக்கீட்டில்  நட்டமே கிடையாது, லாபம் என்று சொல்கிறார்களே?

கலைஞர்  :- அதைத்தான் நானும் கேட்கிறேன்.

செய்தியாளர் :-   தனித்துப் போட்டி என்று நீங்கள் அறிவித்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமை யிலிருந்து யாராவது உங்களுடன் தொடர்பு கொண் டார்களா?

கலைஞர்  :-   பேசவில்லை.   அறிக்கையி லேயே தெளிவாகச் சொல்லி யிருக்கிறோம். 

காங்கிரசுடன் உறவு இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை.   உள்ளாட்சி மன்றத் தேர்தல் களில்  கூட்டணி இல்லை, நாங்கள் தனித்து நிற்கிறோம் என்பதுதான் நான் விடுத்துள்ள அறிக்கை. 

செய்தியாளர் :-   கூட்டணியில் சேர வேறு கட்சிகள் அவர்களாக வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

கலைஞர்  :-     உள்ளூர் விவகாரங்களைப் பொறுத்த வரையில்  யாராவது யோசனை  சொன்னால்  அதை ஏற்றுக் கொள் வோம்.  அதன்படி நடக்க நாங்கள் அவர்களோடு இணைந்து பாடுபடுவோம்.

செய்தியாளர் :-   நீங்கள் தற்போது எடுத்துள்ள முடிவின் காரணமாக  மக்கள் பெருவாரியான ஆதரவை உங்களுக்குத் தந்து வெற்றி பெறச் செய்தால், இந்த முடிவினை அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடருவீர்களா?

கலைஞர்  :-  நடந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது,  நடக்கும் போது  கேளுங்கள்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டி அளித்தார்.

பரமக்குடி கலவரம் - உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் : நிதி உதவி வழங்கினார்


பரமக்குடியில் 11.09.2011 அன்று  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் தி.மு.க. சார்பில் சட்டமன்ற குழு உறுப்பினர்களின் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 15.09.2011 அன்று பரமக்குடிக்கு சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க தி.மு.க. 
தலைவர் கலைஞர் அறிவித்திருந்தார். 

அதன்படி 
வீரம்பல், கீழக் கொடுமலூர், மஞ்சூர், சடையனேரி, இளையான்குடி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார். முதுகுளத்தூரில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து சி.பி.அய். விசாரணை நடத்த வலியுறுத்துமாறு தி.மு.க. தலைவரிடம் கூறுவேன். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே நடந்த கோவை கலவரத்தில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்த சம்பவத்திலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அண்ணா சிலைக்கு கலைஞர் மரியாதை







அண்ணா பிறந்த நாளையொட்டி, 15.09.2011 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கலைஞர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



மக்களின் தேவையை கருத்தில்கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி -  கலைஞர் :

மக்களின் தேவையை கருத்தல் கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்றும் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறார் ஜெயலலிதா : கலைஞர் கண்டனம்

எதிர்க்கட்சியினரை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறார் ஜெயலலிதா. திமுகவினர் மீது அவதூறு பரப்பி களங்கம் ஏற்படுத்துகிறார். திமுகவினரை ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகாரத்தை நிலைப்படுத்த ஜெயலலிதா முயற்சி செய்கிறார். எந்த சர்வாதிகார ஆட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

பெயர்கள்தான் மாறிஇருக்கிறது; சலுகைகளில் பெரிய வேறுபாடு இல்லை: கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் 14.09.2011 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கேள்வி: 10 9 2011 அன்று பேரவையில் 110 வது விதியின் கீழ் முதல் அமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் தமிழக விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறாரே?.

பதில்: இந்த திட்டம் புதிய திட்டம் அல்ல. புதிய திட்டம் என்று முதல் அமைச்சரும் அறிவிக்கவில்லை. அவருடைய அறிவிப்பிலேயே   அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்திலே 15 8 2005 அன்று முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும்; 2006 ம் ஆண்டு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு இந்த திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள்   விவசாயிகள் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது என்றும்; மெஜாரிட்டி அ.தி.மு.க. அரசின் சார்பில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

இதிலே ஜெயலலிதா மறைத்திருக்கின்ற உண்மை தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன் காக்க 2000 ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசால் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு விட்டது. அடுத்து வந்த ஜெயலலிதா அரசு, விவசாய தொழிலாளர் நல வாரியத்தை கலைத்து விட்டுத்தான் உழவர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்தது. எனவே 2006 ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. அரசு அமைந்தவுடன் 2 9 2006 அன்று சட்டப்பேரவையில் "தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல சட்டம்'' நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டத்தைத்தான் ஜெயலலிதா அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் உழவர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்திருக்கிறார்கள். பெயர்கள்தான் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறதே தவிர, சலுகைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

கேள்வி: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியாக மானிய கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலபாரதி பேரவையில் நன்றி தெரிவித்துப்பேசியதாக செய்தி வந்துள்ளதே?.

பதில்: 1969 ல் நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன்தான் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலனுக்கு "தனி இயக்குநர் அலுவலகம்'' அமைக்கப்பட்டது. பின் ஆதிதிராவிடர் நலனிலும், பழங்குடியினர் நலனினும் தனித்தனியே சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக 2000 ஆண்டில், ஆதிதிராவிடர்   பழங்குடியினர் நல இயக்ககத்தை "ஆதிதிராவிடர் நல இயக்ககம்'', "பழங்குடியினர் நல இயக்ககம்'' என இரண்டு தனித்தனி இயக்குநர்களின் கீழ் செயல்பட வழிவகுக்கப்பட்டதும் என்னுடைய ஆட்சிக்காலத்திலே தான்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிபற்றியெல்லாம் அவையிலே அந்தத் துறையின் அமைச்சர் சில புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். 1991 1996 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 696 கோடியே 16 லட்சம் ரூபாய் மட்டுமே!. ஆனால், 1996 2001 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 170 கோடி ரூபாய்; 2001 2006 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசைவிட வெறும் 49 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கீடு செய்து; ஐந்து ஆண்டுகளிலும் மொத்தம் அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 2 ஆயிரத்து 219 கோடி ரூபாய் மட்டுமே!.

ஆனால், 2006 2011 ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய்; இது, முந்தைய அ.தி.மு.க. அரசு ஐந்து ஆண்டுகளில் அனுமதித்த தொகையைவிட 8 ஆயிரத்து 847 கோடி ரூபாய் அதிகமாகும்.

அதிலும், தமிழகத்தில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர்   மலைவாழ் இன மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப 2010 2011 வரவு செலவுத் திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 19.7 சதவீதம் தொகையை ஆதிதிராவிடர், மலைவாழ் இன மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்து வரலாறு படைத்துள்ளதும் தி.மு.க. அரசே!. இந்த விவரங்கள் எல்லாம் பாலபாரதி படிக்க வேண்டிய பால பாடமாகி விட்டதே என்பதுதான் நமது கவலை!.

கேள்வி: முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சவுந்தரராசன் பேரவையில் கேட்டிருக்கிறாரே?.
பதில்: நான் முதலமைச்சராக இருந்த போதும் இப்படித்தான் அந்த கட்சியின் தலைவர்கள் எல்லாம் நேரில் என்னை சந்தித்து சிறுதாவூரில் ஜெயலலிதாவும், அவருக்கு வேண்டியவர்களும் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துள்ளார்கள், அதுபற்றி விசாரணை கமிஷனை உடனடியாக அமைக்க வேண்டுமென்று கேட்டார்கள்.

நானும் உடனடியாக விசாரணை கமிஷனை அறிவித்தேன். அந்த விசாரணை கமிஷனும் விசாரணை நடத்தி, தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டது உண்மை தான் என்று அறிக்கை கொடுத்தது.
ஆனால் மார்க்சிஸ்ட்கள் யார் மீது குற்றஞ் சாட்டினார்களோ, அவர்களையே உத்தமர்கள் என்று கூறி அவர்களோடு தோழமை கொள்ளச் சென்றதோடு, இப்போது எங்கள் மீது விசாரணை கமிஷன் எப்போது என்கிறார்கள்! இது காலத்தின் கோலமா? கம்யூனிஸ்டுகள்தான் கூற வேண்டும்.




இவ்வாறு அறிக்கையில் கலைஞர் கூறியுள்ளார்.

கூட்டணி இல்லை! தி.மு.க. தனித்து போட்டி! கலைஞர் அறிவிப்பு!

தி.மு.க. தலைவர் கலைஞர் 14.09.2011 அன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ   ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க. அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ; கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு   இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற   ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே   கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலைஞர் கூறி உள்ளார்.