கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, December 31, 2010

கலைஞர் அரசின் சாதனை துளிகள்


இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ. 220 கோடி
பயனாளிகள் - 11 லட்சம் குடும்பங்கள்.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ. 750கோடி
பயனாளிகள் - 1,40,84,922 குடும்பங்கள்.

இலவச நிலம் வழங்கும் திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ.86.39 கோடி
பயனாளிகள் - 7171 குடும்பங்கள்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ. 501 கோடி
பதிவு செய்து அடையாள அட்டை பெற்றோர் - 1.44 கோடி பேர்
இது வரை பயன் பெற்றோர் - 1.53 லட்சம் பேர்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் :-

திட்ட மதிப்பீடு - ரூ.1800 கோடி
பதிவு செய்து அடையாள அட்டை பெற்றோர் - 21 லட்சம் குடும்பங்கள்.

வெற்றிகள் குவித்திடுவோம்! கலைஞர் புத்தாண்டு வாழ்த்து


முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலப்புத்தாண்டு 2011 புலரும் திருநாள் ஜனவரித் திங்கள் முதல் நாள் உலகம் முழுவதும் மிகுந்த எழுச்சி யோடு கொண்டாடப்படுகிறது.

சென்னையில் பிரம்மாண் டமான வடிவில் தமிழக சட்டப் பேரவை, தலைமைச் செயலக வளாகம் புதிய கட்டடம் திறப்பு விழா, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மகிழ கோவையில், உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு, சென்னையில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா, மாமன்னர் ராசராச சோழன் கட்டிய, தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு நிறைவு விழா, சென்னையின் மய்யப் பகுதியில், செம்மொழிப்பூங்கா தொடக்க விழா என்பனவாக தமிழர் வரலாற்றில் என்றும் நின்று நிலவிடும் அரிய நிகழ்வுகளை வரலாற்றில் பதித்துவிட்ட பெருமிதத்தோடு 2010 ஆம் ஆண்டு நம்மிடம் விடை பெற-வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்டியம் கூறியபடி 2011 ஆம் ஆண்டு நம்மை எதிர்நோக்குகிறது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் கதா நாயகன் எனப் பாராட்டி வரவேற்கப்பட்ட தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி; அந்த வாக்குறுதிகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டை கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, திருமணத் திட்டங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், நலமான தமிழகம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு, அருந்ததியர்க்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு, மாற் றுத் திறனாளிகள் நலன் காத்திடத் தனித் துறை, அருந்ததியர் நலவாரியம் உட்பட உழைப்பாளர் குடும்பங்கள் நலம் பெற 33 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் எனப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்த அரசு.

இந்த அடிப்படையில், இந்தப் புத்தாண்டிலும் தொடர்ந்து தொண்டாற்றி தமிழர் நலம்காத்து, தமிழகத்தின் வளம் பெருக்கி என்றும் வெற்றிகள் குவித்திடுவோம் எனும் உணர் வோடு தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாள் நல் வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

- இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

உயிரிழந்த 99 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி : முதல்வர் உத்தரவு


மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்றுபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 99 பேரின்குடும்பங்களுக்கும், காயமடைந்த 96 பேருக்கும்மொத்தம் 84 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


‘’தமிழக பொது மக்களில் சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்கள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் பலியானவர்கள் விபத்து நிவாரண நிதியுதவி வழங்கிடக் கோரி மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பரிந்துரைகளுடன், மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகத்திற்கும், தனிப்பிரிவிற்கும் வரப்பெற்ற மனுக்களின் மீது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிக்கைகளைப் பெற்று, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் 195 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 84 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதியுதவி

வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

அதன் விவரம்:

துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, சென்னை இராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வன் வி.பரத் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்காக, அவரது தாயார் புஷ்பராணிக்கு 50 ஆயிரம் ரூபாய் ; மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பரிந்துரையை ஏற்று, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், ம.வெள்ளாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதால், வறுமையில் வாடும் அவர்களது இரண்டு குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு

நிதியாக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் ;


முதலமைச்சர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி பரிந்துரையினை ஏற்று, நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம், திருமருகல் ஒன்றியத்தைச் சேர்ந்த இளையரசன் (20) என்பவர் கட்டுமரம் கவிழ்ந்து கடல் நீரில் மூழ்கிஉயிரிழந்ததற்காக, அவரது தாயார் ராஜவள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் ;பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் பரிந்துரையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தீ விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது மனைவி சகாயமேரிக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் பரிந்துரையினை ஏற்று, சென்னைசெனாய் நகரைச் சேர்ந்த
கோவிந்தராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது மனைவி ஜமுனா என்பவருக்கு 50 ஆயிரம்

ரூபாய் ;

சென்னை செனாய் நகரைச் சேர்ந்த ஆர். குணசேகரன் என்பவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதால், அவரது மனைவி கிருஷ்ணவேணி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய்;

கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி பரிந்துரைகளை ஏற்று,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார் கோவில் கிராமத்தினைச் சேர்ந்த 8 பேர் சென்ற கார்

லாரியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 இலட்சம் ரூபாய் ;

பேராவூரணி நாட்டாணிக்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் வீரமணிகண்டன் (12) என்பவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக அவரது தந்தை திரு.எஸ்.செல்வராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;

வல்லுண்டான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ் (13) மற்றும் மதிவாணன் (7) ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கி
உயிரிழந்ததற்காக, அவர்களின் தந்தை குமார் என்பவருக்கு 1 இலட்சம் ரூபாய் ;

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் பரிந்துரையை ஏற்று, சேலம் மாவட்டம், வாழப்பாடி ட்டம், அனுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் என்கிற பெருமாள் என்பவரின் மகனான தாமரைக்கண்ணன் (13),ராஜசுந்தரி என்பவரின் மகன் ஆகாஷ் என்கிற மணிமாறன், மகள் தேவயாணி ஆகிய மூவரும் பள்ளிக்குச் சென்று


விட்டு திரும்பி வரும் வழியில் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதால், உயிரிழந்த மூவரின்
குடும்பத்தாருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 3 இலட்சம் ரூபாய் ;

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அளித்த பரிந்துரைகளை ஏற்று, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், எல்லப்பன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவக்கொழுந்து என்பவருக்குச் சொந்தமான மின்மோட்டார் சிமெண்ட் கான்கிரிட் ஷெட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சம் ரூபாய் அவ்விபத்தில் காயமுற்ற ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய்

ஆக மொத்தம் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ;

குறிஞ்சிப்பாடி கொத்தவாச்சேரி கிராமம், கிழக்குத்தெருவை சேர்ந்த ரவி மற்றும் ரவி என்கிற பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதால்,அந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சம் ரூபாய்;


கடலூர்-சிதம்பரம் சாலையில் பள்ளிக்குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் பவித்ரா (12), திவ்யா (வயது 15), அபிராமி (15) மற்றும் அகிலாண்டேஸ்வரி (12) ஆகிய நான்கு பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளதால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 4 இலட்சம் ரூபாயும் அவ்விபத்தில் காயமடைந்த 31 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ;


சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் அளித்த பரிந்துரைகளை ஏற்று, கன்னியாகுமரி
மாவட்டத்தைச் சேர்ந்த சௌத்திரி என்பவர் கோவையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;

அய்யன் பாறவிளையைச் சேர்ந்த சுதாம்பிகா என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், அவரது கணவர் பகவதிபிள்ளைக்கு 50 ஆயிரம் ரூபாய் ;

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிந்துரையை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த அகமது மொய்தீன் (வயது 55) என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதால், அவரது மனைவி மும்தாஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;

இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பரிந்துரையை ஏற்று, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், தெ.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ம.கதிரேசன் என்பவரது மனைவிக்கு ஒரேபிரசவத்தில் 4 குழந்தைகள் (3 ஆண், 1 பெண்) பிறந்துள்ளதாகவும் மற்றும் வயதான பெற்றோரை வைத்து கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதால், அவரது குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் ;

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அளித்த பரிந்துரைகளை ஏற்று, ஈரோடு மாவட்டம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த பெண் காவலர் நாகஜோதி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது கணவர் பி.விஸ்வநாதன் என்பவருக்கு 1 இலட்சம் ரூபாய் ;

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ஏ.பரமசிவம், இரயில் விபத்தில்
உயிரிழந்ததற்காக, அவரது குடும்பத்தினருக்கு 1 இலட்சம் ரூபாய் ;

மீன்வளத் துறை அமைச்சர் கே. பி. பி. சாமி அளித்த பரிந்துரையை ஏற்று, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லம்பேட்டை கிராமத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியைச் சேர்ந்த குமரேசன், சுமதி, சுகுமார், சுஜிதா மற்றும் குழந்தை தயானந்த் ஆகிய ஐவர் உயிரிழந்ததற்காக, அவர்களின் குடும்பத்தாருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ;

நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆருண் பரிந்துரையை ஏற்று, மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த முருகன்
என்பவர் தனது மகள் தனலெட்சுமி விபத்தில் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்று, அதிர்ச்சியில் முருகனும்உயிரிழந்துள்ளதால், அவர்களின் வாரிசுதாரரான எம்.நித்யா என்பவருக்கு 1 லட்சம் ரூபாய் ;


முன்னாள் அமைச்சர் மற்றும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, சென்னை
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தினேஷ்பாபு (வயது 13) என்பவர், குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரது தந்தை ஆர்.தேவராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


முன்னாள் அமைச்சர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சொ.கருப்பசாமி அளித்த பரிந்துரைகளை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளதால், மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை முருகன் என்பவரும் உயிரிழந்ததற்காக, அவர்களின் வாரிசுதாரரான செந்தாமரை என்பவருக்கு 1 இலட்சம் ரூபாய்;


கே.வி.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததற்காக, அவரது தந்தை
அங்குராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


கீழஅழகுநாட்சியாபுரத்தைச் சேர்ந்த காந்திமதி என்பவரது 1 ஙூ வயது குழந்தை கபில்ரட்சகன் என்பவர்
பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது தாயார் காந்திமதிக்கு 50 ஆயிரம் ரூபாய் ;

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அளித்த பரிந்துரையை ஏற்று, திருநெல்வேலி
மாவட்டம் பாலமார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த கரடிமுத்து (வயது 11) மற்றும் மாரிச்செல்வம் (வயது 11) ஆகிய இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததற்காக, இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 1 இலட்சம் ரூபாய்;


தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் அளித்த பரிந்துரைகளை ஏற்று,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ஆண்டிப்பட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விளக்கு அருகில் லாரியும் மகேந்திரா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர்கள் உயிரிழந்ததற்காகவும் மற்றும் 17 பேர்கள் காயமடைந்துள்ளதாலும், உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் அவர்களின் குடும்பத்திற்குத் தலா 1 இலட்சம் ரூபாய்

வீதம் 11 லட்சம் ரூபாயும், விபத்தில் காயமுற்ற 17 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.4 இலட்சத்து 25 ஆயிரமும் ஆக மொத்தம், 15 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ;

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.லட்சுமணன் அளித்த பரிந்துரைகளை
ஏற்று, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், உத்தமபாளையம் சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் தென்னஞ்சாலை அருகில் தனியார் பேருந்து ஈப்புடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உயிரிழந்த சீனியம்மாள், நிலோபர் நிஸா, சீதையம்மாள், குருவம்மாள், சுரேஷ், செல்வி மற்றும் இந்திரா ஆகிய 7 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 7 இலட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகமொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரம்

ரூபாய் ;

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.கௌஸ்பாஷாகோரிக்கையினை ஏற்று,
மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த எஸ்.மகபூப்பாஷா கும்பக்கரை அருவி நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரதுமனைவி எம்.மகபூ பீவி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன் அளித்த
கோரிக்கையை ஏற்று, தஞ்சாவூர் மாவட்டம், துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (19) நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரது

தந்தை ராஜேந்திரன் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


சென்னை மாவட்டம் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று,
வியாசர்பாடியை சேர்ந்த சுலைமான் (வயது 14) குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரது தாயார் நூர்ஜஉறான் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம் அளித்த பரிந்துரையை
ஏற்று, மன்னார்குடியைச் சேர்ந்த திருவாளர்கள் புகழேந்திரன், சாரதி மற்றும் கணேசன் ஆகிய மூவரும் கோலாலம்பூரில் உள்ள ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்ததால், உயிரிழந்த மூவரின் குடும்பத்தாருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3 இலட்சம் ரூபாய் ;


கோயம்புத்துhர் மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜெயராமன் அளித்த பரிந்துரையை
ஏற்று, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டி கிராமம், காந்திபுரத்தை சேர்ந்த நாகூர்மீரான் என்பவர் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்ததால், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா அளித்த பரிந்துரையை ஏற்று, ஷரீப்
அலி சுபேதார் தெருவினைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததால், உயிரிழந்த சிலம்பரசனின்குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் அளித்த பரிந்துரையை ஏற்று,
பொன்னமராவதி ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி(வயது 15), நிஜபாரதி (வயது 10) மற்றும் பார்வதி (வயது 10) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததால், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ;


நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி அளித்த பரிந்துரையை ஏற்று,
இராசிபுரம் வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.பழனிச்சாமி என்பவரது மகள் அம்சவேணி மின்னல் தாக்கி உயிரிழந்ததால், அவருக்காக ஒரு இலட்சம் ரூபாய், மேலும் பழனிச்சாமி, ருக்குமணி, முருகன், சங்கீதா, சுவாதி ஆகிய ஐந்து பேர் காயமடைந்துள்ளதால், அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என

2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்;


கடலூர் மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன்அளித்த பரிந்துரையை ஏற்று, கடலூர்
ஒன்றியம் திருப்பனாம்பாக்கம் ஊராட்சி களையூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற வேனும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த ரமேஷ் வேலு ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 இலட்சம் ரூபாய் படுகாயம் அடைந்த 12 பேருக்கு தலா 25ஆயிரம் ரூபாய் வீதம் 3

இலட்சம் ரூபாய் என 4 இலட்சம் ரூபாய் ;


நெல்லிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று, பண்ருட்டி
வட்டம், எனதிரிமங்கலம் பூண்டியான் தெருவில் வசித்து வரும் திருமதி நாவம்மாள் என்பவரது மகன் ரோஷன்குமார் (7) குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததால், உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;


திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் அளித்த பரிந்துரையை ஏற்று, மாத்தூர் அருகே
காவல்துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தனியார் லாரி காவல்துறை வாகனத்தின் மீதுமோதியதால், காவல்துறை அலுவலர்கள் திருவாளர்கள் சுப்பையா, கே.துரைராஜ், எம்.குழந்தைச்சாமி ஆகிய மூவரும், இதே விபத்தில் திரு.தமிழ்செல்வன் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்த நால்வரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 இலட்சம்

வீதம் 4 இலட்சம் ரூபாய் ;


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஏ.ராஜன்
அளித்த பரிந்துரையை ஏற்று, வட்டவினையைச் சேர்ந்த ஏ. முகம்மது அனீபா என்பவரது மகள்
திருமணத்திற்கு கலந்து கொள்ள வந்த 12 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் 6 இலட்சம் ரூபாய்;


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் பி.என்.பி. இன்ப சேகரன் அளித்த பரிந்துரையை ஏற்று,
பாலக்கோடு வட்டம், கர்த்தாரப்பட்டி கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த 25 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ;


- எனப் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 99 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்த 96 பேருக்கும், மொத்தம் 84
இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவியாக வழங்கிடமுதலமைச்சர் கருணாநிதி 30.12.2010 அன்று ஆணையிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திமுக ஆட்சிக்கு வந்தால் மழை பொழியாதா? : கலைஞர் பேச்சு


தமிழக முதல்வர் கலைஞர், 31.12.2010 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில், வெள்ள நிவாரணம் மற்றும் சுனாமி நிவாரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் அய்.பெரியசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் கலைஞர் பேசும்போது,
" திமுக ஆட்சிக்கு வந்தால் மழை பொழியாது என்று ஒரு தவறான பிரசாரத்தை சில பேர் செய்து கொண்டிருந்த நிலையை பொய்யாக்கி, அண்மையில் மாதம் மும்மாரி பெய்த சூழ்நிலையில், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
நன்மைகளும், தீமைகளும் உண்டு என்ற வகையில் நாம் அந்தப் பாதிப்புகளை உணர்கின்றோம். அந்த வகையில் இந்த மழையின் காரணமாக, 203 பேர் இறந்துள்ளனர். ஏராளமான வீடுகளும், பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஏரிகள், குளங்கள், சாலைகள், போன்ற நீர்நிலைகளும் சேதத்திற்கு ஆட்பட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடவும், சேதமடைந்த வீடுகள், சாலைகள் செப்பனிடவும் அரசு உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையெல்லாம் பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை விரைவுபடுத்தினர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அரசின் உதவிக்கரம் தாராளமாக நீள வேண்டும் என்ற உணர்வோடு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவியை ஒரு லட்சம் ரூபாயிலி ருந்து 2 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
ஓரளவு பாதிப்படைந்த குடிசைகளுக்கு தலா 2500 ரூபாய்; முழுமையாக பாதிப்படைந்த குடிசைகளுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய்; வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ஓரளவு பாதிப்படைந்த குடிசைகள் அல்லாத பிற வீடுகளுக்குத் தலா 1500 ரூபாய்; குமரி மாவட்டத்தில் மாத்திரம் அதிகமாக பாதிப்பு அடைந்த குடியிருப்புகளுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய்; சேதமடைந்த நெற்பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்; நெற்பயிர் அல்லாத பிற பாசனப் பயிர்களுக்கு எக்டேருக்கு 7500 ரூபாய்; மானாவாரிப் பயிர்களுக்கு எக்டேருக்கு 4 ஆயிரம் ரூபாய்; இறந்த மாடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்; கன்றுக்குட்டி ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்; ஆடுகளுக்குத் தலா 1000 ரூபாய்; கோழிகளுக்கு தலா 30 ரூபாய்; மீனவர்களின் படகு, கட்டுமரம், வலை முழுதும் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் புதிதாக வாங்க 7500 ரூபாய்; ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் 2500 ரூபாய் & என நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்கப்படுகிறது .
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ரூ.1,832 கோடி நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க வருகை தந்து தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்த பின்னர், மத்திய அரசின் உதவி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தமிழக அரசு, பாதிப்படைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க முதற்கட்டமாக ரூ.300 கோடியும், வீடுகள், சாலைகள் சேதங்களை சீர்செய்ய ரூ.200 கோடி என மொத்தம் ரூ.500 கோடி அனுமதித்துள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி, அரசு வழங்கிய அறிவுரைகளுக்கேற்ப மாவட்ட கலெக்டர்களும், அலுவலர்களும், பணியாளர்களும் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நின்று, ஊக்கம் தந்து உதவிகளை வழங்கியுள்ளார்கள் எனும் செய்திகளை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்ந்த இழப்புகளையும், அவற்றுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நேரடியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். தேவைப்படும் உதவிகளுக்காகத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வசதியாக மாவட்ட வாரியாக விவரங்களை எனக்கு வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் " என்று கூறினார் .

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, முதல்வர் கருணாநிதி, நிவாரணப் பணிகள் அனைத்தையும் 2011 ஜனவரி 5ம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் எஸ். வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வெள்ளக்கோவில் சாமிநாதன், மதிவாணன், தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன், வருவாய் துறைச் செயலாளர் ஜெயக்கொடி, நிதித் துறைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் அலாவூதீன், வேளாண்மைத் துறைச் செயலாளர் ராமமோகனராவ், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், பொதுப்பணித் துறை செயலாளர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.



2 ஜி அலைக்கற்றை ஆளாளுக்கு முரணாகப் பேசுவது ஏன்? தூத்துக்குடியில் கி.வீரமணி கேள்வி


2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச் சினையில், ஆளாளுக்கு ஒரு தொகை சொல் வதிலேயே முரண்பாடு என்பதை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆதாரத்துடன் விளக்கி னார்.
தூத்துக்குடியில் நேற்று (30.12.2010) நடை பெற்ற பொதுக்கூட்டத் தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரை யில் குறிப்பிட்டதாவது:

ஆளாளுக்கு ஒன்று

தி.மு.க அரசுக்கு எதிராக 2 ஜி ஸ்பெக்ட் ரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் பார்ப்பன ஊடகங் களின் சூழ்ச்சி பற்றியும், பொதுக்கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை தமிழர் தலைவர் எடுத் துக் கூறினார். சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியுள்ள படி ரூ.1,76,000 கோடி என்கின்றார் பொதுக் கணக்குத் துறை தலைமை அதிகாரி. அருண் ஷோரி ரூ.30,000 கோடிதான் என்கிறார். ஆடிட்டர் ஜெனரல் கூறும்போது ரூ.57,600 கோடி என் கிறார். ஜெயலலிதா ரூ.1,80,000 கோடி என் கிறார். தா.பாண்டியன் ரூ.2,00,000 கோடி என் கிறார். இதுபோல் ஆளா ளுக்கு ஒன்று சொல் கிறார்கள். இன்னும் தேர்தல் வந்தால் இது ரூ.5,00,000 கோடியாகக் கூட சொல்லுவார்கள்.

பித்தலாட்டம்

இது அத்தனையும் பித்தலாட்டம்தான்! கொடநாட்டில் மாதக் கணக்கில் ஓய்வெடுத்து உட்கார்ந்துகொண்டு மக்களுக்கே சம்பந்த மில்லாது இருக்கின்ற இந்த அம்மையார், கலைஞர் ஏலகிரி சென் றதை குற்றம் சாற்று கிறார். இரவில்கூட தலை மைச் செயலகம் சென்று பணியாற்றக்கூடிய வர்தான் முதலமைச்சர் கலைஞர். தி.மு.க வை போல் கட்டுப்பாடான அரசியல் கட்சியை இந்த உலகத்திலேயே பார்க்க முடியுமா? பி.ஜே.பி மாதிரி அல்ல. தி.மு.க கட்டுப்பாடா னது இந்த ஆட்சியை யாரும் தவிர்க்க முடி யாது. 2011இல் இந்த ஆட்சி வரப்போவது உறுதி என்றுகூறி, மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறினார்.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் பாலவிநாயகர் கோவில் தெருவில் 30.12.2010 அன்று மாலை 6.00 மணிக்கு தி.மு.க அர சுக்கு எதிராக 2 ஜிஸ் பெக்ட்ரம் ஒரு கரு வியா? என்ற தலைப் பில் மாபெரும் விளக் கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு தி.க. மண்டலத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன் தலைமை வகித் தார். தி.க. மாவட்டத் தலைவர் பேரா. இர. கனகராசு வரவேற்புரை வழங்கினார். மண்டலச் செயலாளர் மா. பால் ராசேந்திரம் மாவட்ட தி.க.செயலாளர் மு. முனியசாமி தி.க பொதுக் குழு உறுப்பினர் தி.ப. பெரியாரடியான் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். திராவிடக்கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி எம்.ஏ. பி.எல். அவர்களும் திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக் கரசு அவர்களும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். பொதுக் கூட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் பொ.செல்வ ராஜ், நகர தி.க செய லாளர் சி.மணிமொழி யன் ப.க. செயலாளர் ப.பழனிச்சாமி, பொதுக் குழு உறுப்பினர் ச.சக்தி வேல், நகர ப.க. செய லாளர் சு.புத்தன், விளாத் திகுளம் ஒன் றிய தி.க தலைவர் த. நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலை வர் ஆ. மாரிமுத்து மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.சு. மணி, மாவட்ட மாண வரணி தலைவர் சு.கண் ணன், நகர ப.க. துணைத் தலைவர் சு.சுப்புராஜ் மகளிர் பாசறை அமைப்பாளர் பி.சாந்தி நகர துணைச் செயலாளர் த.பெரி யார்தாசன் உமரிக் காடு தி.க தலை வர் சி.சுந்தரேசன், திருவை ஒன்றிய தலை வர் திருமலைக்குமரேசன் திருவை ஒன்றியச் செய லாளர் பொன்னை நாரா யணன் வழக்கு ரைஞர் என்.செல்வம் முடுக் குகாடு புவனேசு வரன் ஆகிய தோழர் கள் கலந்து கொண் டனர். நிறைவாக தி.க. தலைவர் இரா. ஆழ் வார் நன்றி கூறினார்

பார்ப்பன ஊடகங்களின் பத்திரிகா தர்மம் இதுதான் ! உண்மைத் தமிழர்களே புரிந்துகொள்ளுங்கள் !!


சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் மானமிகு ஆ.இராசா அவர்கள், நேற்று தி.மு.க.வின் தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். முதல்வர் கலைஞர் அவர்கள் அவரை தனனுடன் வரச் சொல்லி, தனது காரில் அழைத்துச் சென்று, சில மணிநேரம் உரையாடி, பிறகு இவர் விடைபெற, அனுப்பி வைத்தார்!

தி.மு.கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று, நாடு முழுவதும் ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றிய புரளிப் பிரச்சினை பலூனை தி.மு.க. பிரச்சார மேடைகளும், தி.க. பிரச்சார மேடைகளும் ஊசி குத்தி, ஒன்றுமில்லாமல் ஆக்கி உண்மை விளக்கங்களைத் தருகின்றனர்!

பார்ப்பன ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் கிழிந்து, பலூன் சுருங்கி தொங்க ஆரம்பித்து விட்டனவே!

புரிந்துகொள்ளுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்!!

சிறுபான்மையினரை ஜெயலலிதா பாதுகாத்தாரா? கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததே அவர்தானே! - முதலமைச்சர் கலைஞர் அறிக்கை


முதல்வர் கருணாநிதி நேற்று (30.12.2010 )வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறுபான்மையினத்தவரின் உரிமைகளையும், நலன்களையும் காப்பதில் அ.இ.அ.தி.மு.க. தான் ஒரு வலிமை மிக்க பாதுகாவலனாக எப்போதும் இருந்து வருகிறது என்று ஒரு முழுப் பொய்யை தனது அறிக்கையிலே ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். மேலும் தி.மு.கழக ஆட்சியில்தான் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் நீக்கம் செய்யப்பட்டது என்று ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். ஆனால் எந்த நாளிதழ்கள் என்று அவர் கூறவில்லை.

சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன் களையும் பாதிக்கக் கூடிய சட்டம்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்! அந்தச் சட்டத்தை தி.மு. கழக ஆட்சியில் ரத்து செய்யப்படவில்லை என் கிறார் ஜெயலலிதா - ஆனால் சிறுபான்மை மக் களைப் பாதிக்கக் கூடிய கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தவர் யார்? இதே ஜெயலலிதாவா? அல்லவா?

மத மாற்றத் தடைச் சட்டம்

2002ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்ததா? இல்லையா? அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தபோது, அவைகளை ஜெயலலிதா உதாசீனப்படுத்தி, சிறு பான்மையின மக்களின் நலன்களையும், உரிமை களையும் பாதிக்கச் செய்தாரா? இல்லையா? 2003 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் போப்பாண்டவரே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்த போது, போப்புக்கு அதற்கான எந்தவிதமானஅதிகாரமும் உரிமையும் கிடையாது என்று ஜெய லலிதா அறிக்கை விடுத்து சிறுபான்மையினரான கிறித்தவர்களின் மனதை நோக அடித்தது உண்டா, இல்லையா?செய்தியாளர்கள், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் குறித்து என்னைக் கேட்டபோது, பெரி யாரின் கொள்கைப்படி, அண்ணாவின் கொள்கைப் படி அந்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, அவரவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மதம் மாறி னால் கூட அவர்கள் மதம் மாறியதாகக் கூறி தண்டிக் கப்பட நேரிடும், எனவே அந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்று தெரிவித்தேன். தமிழக அரசின் மத மாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிறுபான்மை யினர் நடத்திய அனைத் துக் கட்சி கண்டன மாநாட்டில் நான் கலந்து கொண்டு உரையாற்றி னேன். சிறுபான்மை மக்களுக் குக் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் காப் பாற்றுவேன் என்றும், அ.தி.மு.க. அரசு மத மாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது என்றும் அந்த மாநாட்டில் நான் அறிவித்தேன். சட்டப் பேரவையில் 31-10-2002 அன்று ஜெயலலிதா ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. தி.மு. கழகமும் மற்ற எதிர்க் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பெரும் பான்மை காரணமாக அந்தச் சட்டம் ஆளுங் கட்சியினால் அவையிலே நிறைவேற்றப்பட்டது. எனவே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்! அதை அப்படியே மறைத்துவிட்டு, அந்தச் சட்டத்தை 18-5-2004 அன்று அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்தேன் என்கிறார் ஜெயலலிதா!
ஒரு அரசு சட்டப் பேரவை நடைபெறாத நாட்களில் ஒன்றை மக்களுக்கு திடீரென அவசரமாக அறிவிக்கக் கருதினால், அப்போது அரசின் சார்பில் கொண்டு வரப்படுவதுதான் அவசரச் சட்டம். அப்படியொரு அவசரச் சட்டம் ஒரு அரசின் சார்பில் பிறப்பிக்கப்படுமேயானால், அதற்கு அடுத்து நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொட ரில், அந்த அவசரச் சட்டத்திற்கு பதிலாக ஒரு சட்ட முன்வடிவு பேரவையிலே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். ஆனால் ஜெயலலிதா ஆட்சி யில் 18.5.2004 அன்று கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து அவசரச் சட்டம் பிறப்பித்த பிறகு, அடுத்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் அந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக ஒரு சட்ட முன்வடிவை பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை. 18-5-2004 அன்று ஜெயலலிதா அவசரச் சட்டம் பிறப்பித்ததற்குக் காரணமே அப்போது நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் அவருடைய கட்சி தோற்ற பிறகு, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது மாத்திரமல்ல, தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள், உரிமை கள், நிறை வேற்றப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி வைத்து விட்டவைகளை யெல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார். அப்போது செய்தியாளர்கள் 18.5.2004 அன்று என்னைச் சந்தித்து ஜெயலலிதாவின் திடீர் அறிவிப்புகளைப் பற்றி கேட்டபோது, திடீரென்று ஒன்றும் அறிவிக்கவில்லை. தி.மு. கழக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளையெல்லாம் மூன்றாண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா ஒழித்துக் கட்டினார். தற்போதைய தோல்விக்குப் பிறகு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக் கேற்ப இப்போது சூரிய நமஸ்காரத்திற்கு வந்திருக் கிறார். சூரியன் தி.மு.க.வின் தேர்தல் சின்னம் என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். மக்கள் ஏமாறுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புகள் தி.மு.க. தலை மையிலே அமைந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் கிடைத்த மகத்தான வெற்றி. 40 இடங்களைப் பெற்றதைப் போல இது 41 ஆவது வெற்றி என்று கூறினேன்.


சட்டம் கொண்டு வந்தது -தி.மு.க. ஆட்சியிலேயே!

தி.மு.கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்கச்) சட்ட முன் வடிவு 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 31-5-2006 அன்று அந்தச் சட்ட முன் வடிவு ஆய்வு செய்யப் பட்டு நிறை வேற்றப்பட்டது. அந்த நேரத்தில் கூட அ.தி.மு.க. சார்பாக அவர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் பற்றி ஜெயலலிதா குறிப் பிட்டபோது, நான் அதற்கு அப்போதே விளக்கம் அளித்து, அது அவை நடவடிக்கை குறிப்பில் இன்றும் உள்ளது. அது வருமாறு :-


Note for circulation, Public Department இல் இருந்து வந்த கோப்பில், “This file relates to introducing a Bill in the ensuing Session of the Tamil Nadu LegislativeAssembly for replacing the Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (Repeal) Ordinance, 2004, (Tamil Nadu Ordinance 4/2004)” என்ற தொடக்கத்தோடு, அடுத்த பக்கங்களில் -“As per the Provisions of Clause 2 of Article 213 of the Constitution, every Ordinance promulgated, has to be replaced by an Act of the Legislature within six weeks from the date of re-assembly of the Legislature. Hence, the Law Department was requested to prepare a Draft Bill to replace the Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (Repeal) Ordinance, 2004”. இந்திய அரசியல மைப்புச் சட்டம், Art.213 (2) (a)-ன்படி, மேதகு ஆளுநரால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, மீண்டும் சட்டமன்றம் கூடும் நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் அந்த அவசரச் சட்டம் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ் வாறு தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வில்லை என்றால், சட்டமன்றம் கூடிய ஆறு வாரங்களுக்குப் பிறகு அந்த அவசரச் சட்டம் காலாவதியாகி விடும் என்று எழுதப்பட்டு, அதிலே முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா 21-6-2004இல் கையெழுத்திட்டிருக்கிறார்.


இவ்வாறு கையெழுத்திட்டவாறு அந்த அவசரச் சட்டத்தை பேரவையிலே வைத்து ஒப்புதல் பெற் றார்களா என்றால் இல்லை. ஆனால் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி அவசரச் சட்டம் நிறை வேற்றினாலே போதுமானது என்று ஜெயலலிதா சொல்லுகிறார் என்றால், பிறகு ஏன் இந்தக் கோப்பிலே பேரவை யிலே வைத்து ஆறு வார காலத்திற்குள் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவரே ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார்? ஜெயலலிதா கோப் பிலே ஒப்புக்கொண்டது உண்மையா? அறிக்கை யிலே கூறியிருப்பது உண்மையா?


ஜெயலலிதாவிற்கு உண்மையிலே சிறுபான்மை யினர் மீது அக்கறை இருக்குமானால், அவசரச் சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை அடுத்துக் கூடிய சட்டப் பேரவையில் ஏன் கொண்டு வந்து நிறை வேற்றவில்லை? பொதுத் துறை கோப்பிலே அடுத்து சட்டசபை கூடிய ஆறு வாரத்திற்குள் அவசரச் சட்டத்திற்கு மாற்றுச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்சியில் இருந்து இறங்குகின்ற வரை அதைப்பற்றி நினைக்கவே இல்லை. ஏனென்றால் அவருக்கு சிறுபான்மையினரைப் பற்றிய நினைவே இல்லை. எப்போதும் அவருக்கு சிறுபான்மையினரின் நினைவு தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.


ஜெயலலிதா தற்போது வைத்துள்ள வாதத்தைத் தான் 27-5-2006 அன்றும் பேரவையிலே எடுத்து வைத்தார். அப்போது கூட காங்கிரஸ் கட்சி உறுப்பி னர் திரு. ஞானசேகரன் குறுக்கிட்டு, ஜெயலலிதா அவர்கள் இங்கே சொல்கிற போது ஏற்கனவே அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, பொதுவாக அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டாலே, அதுவே போதும், நீக்கிவிட்டதாகப் பொருள் என்று சொன்னார்கள். எப்பொழுதுமே ஒரு அவசரச் சட் டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சொன் னால், அதை ஆறு மாத காலத்திற்குள் அவையில் வைத்து நீங்கள் சட்டம் ஆக்கினால்தான், நிச்சயமாக அந்தச் சட்டம் ஒரு உறுதி பெறும். ஜெயலலிதா அவசரச் சட்டத்தைப் போட்டுவிட்டு, அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார் என்று சொன்னால், பிறகு எப்போதுதான் அதற்கு ஒரு விடிவு காலம்? ஏற்கனவே ஆடு, கோழி வெட்டக் கூடாது என்ற தடுப்புச் சட்டம்கூட இந்த அவையிலே கொண்டு வந்தார்கள். இதை மாத்திரம் ஏன் கொண்டுவர வில்லை அன்றைக்கு! ஏனென்றால் சிறுபான்மை மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு அந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்த காரணத்தினால், அதை விட்டு விட்டார்கள். இந்த அவையில் ஜெயலலிதா அவசரச் சட்டத்தை சட்டம் ஆக்காமல் விட்டுவிட்டதே, அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு நேர் எதிரியாக இருந்தார், அவர்களுக்கு துரோகம் செய்தார் என்று தான் பொருள் என்று கூறியது நடவடிக்கை குறிப்பிலேயே உள்ளது.


தேர்தல் வருவதால்...


சிறுபான்மையினரை எந்த அளவிற்கு ஜெய லலிதா சிறுமைப்படுத்தினார் என்பதற்கு மற்றுமோர் உதாரணம்! ஆண்டு தோறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா வழக்கமாக கலந்து கொள்வ தில்லை. அதுபோல் ஆண்டு தோறும் காயிதே மில்லத் நினைவகத்திற்கு வந்து பூவாடை அஞ்சலி செலுத்துவதுமில்லை. ஆனால் தேர்தல் ஆண்டு என்றால் தவறாமல் இந்த இடங் களுக்கு வந்து பெரிதாக புகைப்பட மெடுத்து ஏடுகளிலே விளம்பரம் செய்யாமல் இருப்பதில்லை. பொதுவாக ஜெயலலிதாவுக்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., காய்தே மில்லத், தேவர் திருமகன், அம்பேத்கர் போன்றவர்களின் நினைவெல்லாம் தேர்தல் வருகிறது என்றால் வந்து விடும்!


அந்த வகையில் இந்த 2005ஆம் ஆண்டு தேர்தல் வரப்போகிறது என்றதும், தானே இஃப்தார் நிகழ்ச் சியை கட்சியின் சார்பிலேயே ஏற்பாடு செய்து கலந்து கொண்டுள்ளார். ஆனால் 2003ஆம் ஆண்டும் இது போலவே தான் கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச் சியை ஏற்பாடு செய்து, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த வர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி அழைத்து விட்டு, கடைசி நிமிடத்தில் அந்த விழாவிற்கு தான் செல்லாமல் தவிர்த்தார் என்பது எத்தகைய அநாக ரிகம் என்பதை நடுநிலையாளர்கள்தான் சொல்ல வேண்டும். வீட்டிற்கு விருந்தினர்களையெல்லாம் சாப்பிட வாருங்கள் என்று அழைத்துவிட்டு, அவர் கள் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்களுக்கும் ஜெயலலிதா விற்கும் வேறுபாடு உண்டா?

கோத்ரா - ஜெயலலிதா நிலைப்பாடு என்ன?


27-2-2002 அன்று அயோத்தியிலிருந்து ஆமதா பாத் நகருக்கு சபர்மதி விரைவு ரயிலில் வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் மீது வன்முறைக் கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியதின் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியைத் தாங்கி அனைத்து ஏடுகளும் 28ஆம் தேதி காலையில் வந்ததும் உடனடியாக அன்றைய தினமே அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வன்முறை தொடராமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் அறிக்கை விடுத்தேன். நான் மாத்திர மல்ல; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் கண்டன அறிக்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏட்டில் அந்தச் சம்பவத்தைக் கண் டித்து தலையங்கமே எழுதப்பட்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதே நாளன்று விடுத்த அறிக்கையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்ததோடு மட்டும் நிறுத்தாமல், தேவையின்றி, உண்மையை உணர்ந்து கொள்ளாமல், பெரும் பான்மை சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்று ஏதாவது ஒரு சம்பவம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடிச்சென்று கண்டன அறிக்கை வெளியிடுகி றார்கள். ஆனால் அதைவிட வெறித்தனமான முறையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக நடந்த இந்தத் தாக்குதலைக் கண்டித்து எந்த ஒரு அரசியல் தலைவரும் இதுவரை கண்டன அறிக்கை வெளி யிடவில்லை. இது விநோதமாகவும் வருத்தம் அளிப் பதாகவும் உள்ளது - என்று குறிப்பிட் டிருந்தார்.


இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சினை எழுந்தபோது ஜெயலலிதா முஸ்லிம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர் களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இட ஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன் றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ் லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை என்று கூறினார்.


ராமன் கோயில் கட்ட ஜெயலலிதா ஆதரவு


30.7.2003 அன்று செய்தியாளர் ஒருவர் ஜெயல லிதாவிடம், அயோத்தியில் இராமர் கோவில் கட்டு வதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ஆமாம், ஆதரிக்கிறேன், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்? என்று பதில் அளித்தவர்தான்!


23-8-2001 ஆம் நாளன்று சட்டசபையில் திரு. இரா. திருமாவளவன் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்; அதை நடைமுறைப்படுத்த நான் ஆணையிடுவேன் என்று இஸ்லாமியர்கள் மாநாட் டில் ஜெயலலிதா பேசியது எனக்கு நினைவு இருக் கிறது. ஆகவே, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? என்று ஜெயலலிதாவைக் கேட்ட போது, அப்படிப்பட்ட உத்தரவாதத்தைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்; நான் அல்ல என்று கூறியவர்தான் ஜெயலலிதா. கழக ஆட்சி 2006-இல் பொறுப் பேற்ற பின்புதான், 22-10-2007 ஆம் நாளன்று, தமிழ்நாடு கிறித்தவ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


உடன்பிறப்பே, இந்த விவரங்கள் எல்லாம் சிறு பான்மையோர் மீது நாம் எந்த அளவிற்கு பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதையும், ஜெய லலிதா எந்த அளவிற்கு அவர்களை ஏமாற்ற முனை கிறார் என்பதையும் விளக்கிடும் என்று நம்புகிறேன். ஜெயலலிதாவின் கூற்றினை யார் நம்புகிறார்களோ, இல்லையோ, சிறுபான்மை சமுதாயத்தினர் நிச்சய மாக நம்ப மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழக சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவும், ஆய்வு செய்யவும் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா ஆகியோர் நேற்று (30.12.2010) காலை சென்னை வந்தனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் குரேஷி ஆலோசனை நடத்தினர். அசோக் சுக்லா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, பா.ஜ., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்தவர்கள் அளித்த பேட்டி:
அமைச்சர் பொன்முடி (திமுக):
ஓட்டு போடும்போது யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியவேண்டும். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். ஒரு கட்சி, மற்றொரு கட்சி மீது புகார் செய்யும்போது இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க வேண்டும். பண பட்டுவாடாவை தடை செய்ய வேண்டும். டி.விக் களில் பொய் பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். தங்கபாலு (காங்கிரஸ்):
ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயக முறையில் அமைதியாக, சிறப்பாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குகளை விலைக்கு வாங்க கூடாது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு பணம் தடையாக இருக்க கூடாது. வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வருபவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் ஒரே மாதிரி இருக்க வேண்டும். கட்சி சார்பில் நடக்கும் கூட்டங்களில் வேட்பாளர்கள் கலந்து கொண்டாலும், அதற்கான செலவை கட்சிக் கணக்கிலே சேர்க்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் வேலு (பாமக):
கருத்து கணிப்பு வெளியிட தடை செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தேர்தலை அதிகாரியை மாற்ற வேண்டும். தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை அவரது கணக்கிலேயே சேர்க்க வேண்டும். பேனர், கட்&அவுட் வைக்க தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிற்பகலில் கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் குரேஷி ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் கலைஞருக்கு கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் நன்றி


முதல்வர் கருணாநிதியை 29.12.2010 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் சந்தித்து, கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்காக கூட்டுறவு சங்க பொதுச் செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் சிங்காரம் ரத்தினசபாபதி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். உடன் அமைச்சர் வேலு.

Wednesday, December 29, 2010

அருந்ததியர்க்கான இடஒதுக்கீடு கண்காணித்திட குழு - முதல்வர் கருணாநிதி


அருந்ததியர்க்கான 3 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணித்திட தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முதல்வர் கருணாநிதி 29.5.2009 அன்று ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியுள்ள இடஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.


இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி இன்று (29.12.2010) ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் நேரு சிலை: கலைஞர்


கோவை மாநகராட்சி அலுவலகப் பகுதியில் நேரு சிலை அமைக்க அனுமதி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவை மாநகராட்சி அலுவலகப் பகுதியில் பண்டித நேரு திருவுருவச் சிலையை நிறுவிட அனுமதி வழங்கி முதல்வர் கருணாநிதி இன்று (29.12.2010) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு - ராசா தகவல்


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. `சம்மன்' அனுப்பி இருந்தது. அதை ஏற்று விசாரணைக்காக அவர் டெல்லி சென்றார்.

அங்குள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தில் அவரிடம் கடந்த வெள்ளிக்கிழமை (24.12.2010 ) மற்றும் சனிக்கிழமை (25.12.2010) ஆகிய 2 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். முதல் நாள் 9 மணி நேரமும், மறுநாள் சுமார் 7 மணி நேரமும் விசாரணை நடந்தது.


சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த ஆ.ராசா அங்கிருந்து விமானம் மூலம் நேற்று (28.12.2010) சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் நிருபர்கள் அவரை சந்தித்து, விசாரணை குறித்து கருத்து கேட்டனர்.

அப்போது அவர், ‘`சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை கூறினேன். சி.பி.ஐ. போன்ற எந்த ஒரு விசாரணை அமைப்பின் விசாரணைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன்’’என்று தெரிவித்தார்.

விசாரணை பற்றிய விவரங்களை கேட்ட போது, ‘அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது’என்று கூறி விட்டார்.

இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் 3-வது பட்டியல்


தி.மு.க. பொதுச் செயலாளர், அமைச்சர் க.அன்பழகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

10.1.2011 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். 3-வது பட்டியல் விவரம் வருமாறு:-


விருதுநகர் மாவட்டம்:


டபுள்யூ.புதுப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர்-கோ.ஈஸ்வரன்.

சேத்தூர் பேரூராட்சி 18-வது வார்டு உறுப்பினர்-எம்.அருணாதேவி.


தூத்துக்குடி மாவட்டம்:


சாயர்புரம் பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர்-கே.காமராஜ்.


திண்டுக்கல் மாவட்டம்:


நத்தம் பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினர்-பி.செல்வம்.


பெரம்பலூர் மாவட்டம்:


இலப்பைக்குடிக்காடு பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர்-பி.செல்வி.


நாகை மாவட்டம்:


குத்தாலம் ஒன்றியக்குழு 13-வது வார்டு உறுப்பினர்-பானுமதி அன்னப்பன்.


நீலகிரி மாவட்டம்:


நெல்லியாளம் 3-ம் நிலை நகராட்சி 15-வது வார்டு உறுப்பினர்-டி.கே.மாடசாமி,

உலிக்கல் பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர்-கே.மாரிமுத்து,

ஓவேலி பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர்-என்.சுப்பிரமணியம்.


திருவள்ளூர் மாவட்டம்:


கடம்பத்தூர் ஒன்றியக்குழு 16-வது வார்டு உறுப்பினர்-ஆர்.அண்ணாமலை,

மீஞ்சூர் ஒன்றியக்குழு 1-வது வார்டு உறுப்பினர்-ஆர்.சிலோன்மணி,

புழல் பேரூராட்சி 17-வது வார்டு உறுப்பினர்-எம்.இமயன்,

பூந்தமல்லி 3-ம் நிலை நகராட்சி 4-வது வார்டு உறுப்பினர்-பாத்திமா


இவ்வாறு கூறி உள்ளார்.


தூய்மையற்ற ஆட்சியை நடத்தியவர்தான் ஜெயலலிதா: கலைஞர்


முதல்வர் கருணாநிதி நேற்று (28.12.2010) வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றை படிக்கும்போது, அவருக்கு ஏன் நீங்கள் பதில் சொல்கிறீர்கள் என்று கூட சிலபேர் என் னைக் கேட்கிறார்கள். கேட்பவர்கள் எழுதத் தெரிந்தவர்கள்தான். ஆனால், அவர்களே இது ஏன் வீண் வேலை என்று கருதுகிறார்கள் போலும். அதனால்தான் என்னைக் கேட்கிறார்கள். அது எப்படியோ போகட்டும். ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிவதில்லை.
ஜெ.யின் 26ம் தேதிய அறிக்கையில் 2001 - 2006 ஆட்சியில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மை யான ஆட்சியை நடத்தியதால் என் மீது பொய் வழக்குப் போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற வாசகங்களைப் படித்தபோது சிரிப்பு வராமல் என்ன செய்யும். ஒரு சிறு தவறுகூட நடை பெறாத தூய்மையான ஆட்சியாம். அதைப் படிக்கின்ற அ.தி.மு.க. ஆட்சியிலே பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும், பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலு வலர்களும், எஸ்மா, டெஸ்மா சட்டங்களுக்கு ஆளான தொழிலாளர்களும் தங்களுக்குள் என்ன நினைத் துக் கொள்வார்கள்.
தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்களாம். அதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு ஜெயலலிதா அணியில் நான் முந்தி, நீ முந்தி என்று யார் அவருக்கு Òமுந்திÓயாக இருப்பது என்று பந்தயம் கட்டிக் கொண்டு அணி திரளுகிறார்கள் போலும்.
முதல் அமைச்சராக ஜெ. பதவியேற்றுக் கொண் டதே தூய்மையற்ற ஆட்சிக்கு உதாரணமாக அமைந்தது. ஜெயலலிதாவை முதல் அமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21.9.2001 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில் Òதமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் அவர் முதல் அமைச்சராக நீடிக்க முடியாதுÓ என்று கூறிய பிறகுதான் ஜெயலலிதாவின் வழக்கறிஞரான கே.கே. வேணுகோபால், நீதிபதிகளிடம் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவை யென்று கேட்டார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி, முதல் அமைச்சர் இறந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறதே, இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக் கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாமே என்று கூறினார்கள். இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்குக் கொடுக்கப்பட்ட சான்றிதழ்தானே? இதற்குப் பிறகுதான் இடைக்கால முதலமைச்சர் பதவி பன்னீருக்குக் கிடைத்தது.
சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் போலீ சார் வழக்குப் பதிவு செய்த தோடு, 17.5.2001 அன்று கைது செய்து வேலூர் சிறை யில் அடைத்தனர். இது ஜெயா பதவியேற்ற மூன்றாம் நாளிலே செய்த தூய்மை யான ஆட்சி நிர்வாகம். 23.5.2001 அன்று பரிதியின் ஜாமீன் மனுவிலே உயர் நீதிமன்ற நீதிபதி கூறும் போது, பரிதி மீது புகார் கொடுத்தவரே, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் பரிதி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். பரிதி இளம்வழுதி மட்டுமல்ல, ஆற்காடு வீராசாமியின் தம்பியை 26.5.2001 அன் றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனை 27.5.2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த புரசை ரங்கநாதனை 30.5.2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாமரைக்கனி போன்றவர்களையும் கைது செய்தனர். ஏன் என்னையே 29.6.2001 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து படுக்கையறை வரை வந்து கைது செய்த சம்பவமும் நடைபெற்றது.
கைது செய்ததோடு விட்டார்களா? அதையொட்டி முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள். மு.க.ஸ்டா லினை கைது செய்து மதுரை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க. அழகிரி போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் ஜெ.யின் தூய்மையான ஆட்சிக்கான சான்றுகள்.
11.6.2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்பட்ட சுதாகரனையே போலீசார் கைது செய்தனர். அதே ஜூன் திங்களில் என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தூய்மையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக ஜெய லலிதா 2002ம் ஆண்டில் எந்தக் காரணமும் இல்லா மல் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை இரவோடு இரவாக வீட்டிற்கு அனுப்பினார். இதனை எதிர்த்து சாலைப் பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ‘‘ஒரு அரசு நல்ல வேலை வாய்ப்பு நிறுவனமாகத் திகழ வேண்டுமே தவிர, இது போல செயல்படக் கூடாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்Ó என்றெல்லாம் தீர்ப்பு கூறப்பட்டது.
தமிழகத் தணிக்கைத் துறை அதிகாரி தீத்தன் என்பவர் 31.7.2004 அன்று அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று அறிக்கை கொடுத்தார் என்பதற்காக, அந்தத் தணிக்கைத் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வழக்குத் தொடுத்ததோடு, அவருக்கு எதிராக ஏடுகளில் எல்லாம் முழுப் பக்க விளம்பரங்களும் தரப்பட்டன. அந்த ஜெயலலிதாதான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத் துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்.கே.பாலன் சென்னை யில் 30.12.2001 அன்று கடத்திச் செல்லப்பட்டவர் பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. தி.மு.க ஆட்சி யில் வழங்கப்பட்டு வந்த இல வச மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.
7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 30.01.2003 அன்று இந்த சட்ட முன் வடிவு அ.தி.மு.க. அரசினராலேயே திரும்பப் பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்குத்தான் வெளிச்சம்.