கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

கருணாநிதியுடன் சி.எஸ்.ஐ. பேராயர் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை 06.04.2011 அன்று மதுரையில் சி.எஸ்.ஐ. பேராயர் சந்தித்து, தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
மதுரை, முகவை திருமண்டில (சி.எஸ்.ஐ) பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர், மதுரையில் முதல்வர் கருணாநிதியை 06.04.2011 அன்று சந்தித்தார். தேர்தலில் தி.மு.க. அணி முழு வெற்றி பெற்று, 6&வது முறையாக முதல்வராக வேண்டும்“ என வாழ்த்தினார். அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார்.
முதல்வரை சந்தித்த பிறகு பேராயர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதி சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்பது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த சமுதாயத்துக்கு பாதுகாப்பு அரணாக தொடர்ந்து இருக்கிறார். அவரது ஆட்சியில் சிறுபான்மையினர் நலன் காக்கப்பட்டு வருகிறது. அவரது ஆட்சி தொடர வேண்டும் என்பதே சிறுபான்மை மக்களின் விருப்பமாகும்.
அந்த அடிப்படையில் மதுரை, முகவை திருமண்டில திருச்சபை சார்பில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்த முடிவை முதல்வரை நேரில் சந்தித்து தெரிவித்தேன். அவர் 6&வது முறையாக முதல்வராக வேண்டுமென் வாழ்த்தினேன். கிறிஸ்தவ மக்கள் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.

இவ்வாறு பேராயர் தெரிவித்தார். அவருடன்திருமண்டில சட்ட ஆலோசகர் பெர்னாண்டஸ்ரத்தினவேல் இருந்தார்.

No comments:

Post a Comment