கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

உரத்தட்டுப்பாடு நீங்கும் : மு.க.அழகிரி பேட்டி


உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருள் தென் ஆப்ரிக்காவிலிருந்து குறைந்த விலைக்கு தருவதாக உறுதியளித் துள்ளதால் இந்தியாவில் உரத் தட்டுப்பாடு விரை வில் நீங்கும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார். 
தென் ஆப்ரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்ஆப்ரிக்க சுற்றுப் பயணம் சிறப் பாகவும், நம் நாட்டுக்கு பயனுள்ளதாகவும் அமைந்தது. டி.ஏ.பி, எம்.ஏ.பி. போன்ற உரம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் இந் தியாவுக்கு அதிக அள வில் தேவைப்படுகிறது. அவற்றை தென் ஆப்ரிக் காவில் இருந்து அதிக அளவில் பெற வேண் டும் என்ற நோக்குடன் எனது சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டது. இதற்காக தென் ஆப்ரிக் காவில் உரத்திற்கான மூலப்பொருள்கள் தயா ரிக்க பயன்படும் கனி மவள பகுதிகளை பார் வையிட்டேன். தொடர்ந்து உரத்துக் கான மூலப் பொருள் தயாரிக்கப் படும் பிக் சர்ஸ்லே நக ரில் ஹாஸ் கர் தொழிற் சாலையைபார்வை யிட்டு, அந்த ஆலையின் சேர் மனிடம் ஆலோசனை நடத்தி னேன். இந்தியா வுக்கு அதிக அளவில் உரத் துக்கான மூலப் பொருள் தேவைப்படு கிறது. அதை தாராள மாக தருமாறு கேட்டுள் ளேன். இதை யடுத்து ஜோகன்னஸ் பர்க்கில் தொழில் வளத்துறை அதிகாரிகளுடன் குறைந்த விலையில் இந்தி யாவுக்கு அமிலம், மற் றும் ராக்போர்ட்ஸ் பாஸ்பரி என்ற பொருள் கிடைக்கவும் பேச்சு நடத்தி உள்ளோம். அவர்களும் முயற்சிப் பதாக உறுதி அளித்துள் ளனர். அமைச்சர் என்ற முறையில் நான் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 2ஆவது கட்டமாக மத்திய உரத் துறை அதிகாரிகள் விரை வில் தென் ஆப்ரிக்கா சென்று பேச்சு நடத்து வார்கள். இதன் மூலம் தென் ஆப்ரிக்காவில் இருந்து மூலப்பொருள் கள் அதிக அளவில் கிடைக்கும். நம்நாட் டில் டி.ஏ.பி, எம்.ஏ.பி. உரங் களின் உற்பத்தி அதிக ரித்து தட்டுப்பாடு இல் லாமல் உரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 
இவ்வாறு மு.க.அழ கிரி கூறினார்.

நாராயணசாமி - கலைஞர் சந்திப்பு

மத்திய அமைச்சர் நாராயணசாமி, கோபாலபுரத்தில் 14.01.2012 அன்று , தி.மு.க., தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் பேசிய அவர் , ’’பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதற்காக, தி.மு.க., தலைவர் கலைஞரை சந்தித்தேன்.
 

கூடங்குளம் அணு உலையில், 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும்’’ என்றார்.

புதிய காப்பீட்டு திட்டத்தை வரவேற்கிறேன்! தி.மு.க. அரசு கொண்டுவந்த மற்ற திட்டங்களையும் ஏற்க வேண்டும் : தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை


புதிய காப்பீட்டு திட்டத்தை வரவேற்கிறேன், அதே போல தி.மு.க. அரசு கொண்டுவந்த மற்ற திட்டங்களையும் ஏற்க வேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட் டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரத்தில் எல்லாம் புதிய புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப் படுத்தியது மட்டுமின்றி கழகம் ஆட்சிப் பொறுப் பிலே இல்லாத காலங் களில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நிறை வேற்றிய நல்ல திட்டங் களையும் வரவேற்று, யார் ஆட்சிக் காலத்தில் அந்தத் திட்டம் தொடங் கப்பட்டது என்றெல் லாம் எண்ணிடாமல், அந்தத் திட்டத்தினால் பயனடைவோரின் நலன் களை எண்ணிப் பார்த்து, அந்தத் திட்டங்களையும் செம்மையாகவும் சிறப் பாகவும் நடத்திடுவதற் கான முனைப்பிலே ஈடு பட்டது.
குறிப்பாக ஒன்றைக் கூறவேண்டுமானால்
குறிப்பாக ஒன்றைக் கூறவேண்டுமேயானால், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - தி.மு.க. ஆட் சியிலே தொடங்கப் பட்ட திட்டமல்ல. எனினும் அந்தத் திட் டத்தை அ.தி.மு.க. ஆட் சியைவிட தி.மு.க. ஆட்சி தான் தீவிரமாகச் செயல் படுத்தியது. அ.தி.மு.க. ஆட்சியில் தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன் வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே தி.மு.க. ஆட்சியிலே தான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றார்கள். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப்படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியி லேதான், அவர்களுக்கு முதல் முறையாக 1-6-2009 முதல் மாதந்தோ றும் வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி ஆகியவைகளும், 100 ரூபாய் மருத்துவப்படி யும், 2000 ரூபாய் பண் டிகைக் கால முன்பண மும் வழங்கப்பட்டது.
எனவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திட் டங்களின் பயன்கள் தான் கருதப்பட்டதே தவிர, அந்தத் திட்டம் யார் காலத்தில் தொடங் கப்பட்டது என்றெல் லாம் கருதியதில்லை. ஆனால் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காக ஓமந்தூ ரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செய லகக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டு நாள், செம் மொழித் தமிழாய்வு பாவேந்தர் நூலகம் போன்றவைகளை இன்றைய ஆட்சியாளர் கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறி வித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது என்ற உயரிய குறிக்கோளோடு கழக ஆட்சியில் தொடங்கப் பட்ட திட்டத்தை அ.தி. மு.க. அரசு மூடிவிட்ட போதிலும், அந்தத் திட் டத்திற்குப் பதிலாக வேறொரு பசுமை வீடு வழங்கும் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
மூடிவிட்டார்களே- எனக்கு வருத்தமில்லை
அதைப்போலவே கழக ஆட்சியில் தொடங் கப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மூடி விட்டு, அதற்குப் பதிலாக மருத் துவக் காப்பீட்டுத் திட் டத்தைத் தொடங்கியி ருக்கிறார்கள். அதைப் பொறுத்தவரையில் நான் தொடங்கிய திட் டத்தை மூடிவிட்டார்களே என்றுஎனக்கு வருத்தமில்லை. எந்தப் பெயரிலோ; எப்படியோ திட்டம் நடைபெற்று மக்கள் பயன்பெற்றால் போதுமென்றுதான் எண்ணுகிறேன், விரும்புகிறேன்.
தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 642 வகை யான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனு மதி அளிக்கப்பட்ட தற்கு மாறாக, தற்போது 1016 வகையான நோய் களுக்கு சிகிச்சை அளிக் கப் போகிறார்கள் என் றால், அதிலே எனக்கு மகிழ்ச்சிதான். ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட் டத்தின்கீழ் பயனாளி களாக இருந்து பழைய அட்டைகளை வைத்தி ருப்பவர்களும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும் - ஏற்கெனவே கழக ஆட்சி யில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி என்றால், தற்போது ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டு களுக்கு ரூ.4 லட்சம் உதவி என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காக இந்தத் திட் டத்தை வரவேற்கிறேன்.
ஆட்சி வரலாம்- போகலாம் ஆனால்...!
தி.மு.க. அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை யும் பகைமை நோக் கோடு பார்க்காமல், அந்தத் திட்டங்களை யெல்லாம் நான் என்னு டைய சொந்தப் பணத்தி லிருந்தோ, கழகத்தின் பணத்திலிருந்தோ நிறைவேற்றியது அல்ல, அதுவும் அரசின் பணம் தான் என்பதை மனதிலே கொண்டு, சற்று பரந்த நோக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டு மென்று எதிர்பார்க்கி றேன். அனைத்துமே அரசின் திட்டங்கள் தான். எந்தத் திட்டத் தையும் தி.மு.க. அரசின் திட்டம் என்றோ, அ.தி. மு.க. அரசின் திட்டம் என்றோ தனித்துப் பார்ப் பது நல்லதல்ல.
உதாரணத்திற்காகச் சொல்ல வேண்டுமே யானால், தலைமைச் செயலகம் ஒன்று புதி தாகக் கட்டப்பட வேண் டும் என்று ஜெயலலி தாவே பேரவையிலேயே ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த எண்ணம் தி.மு.க. ஆட்சியிலே நிறைவேற் றப்பட்டு விட்டது என்ப தற்காக, அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதனால் யாருக்கு நஷ் டம்? அந்தத் தலைமைச் செயலகத்திலே பணி யாற்றுகின்ற அதிகாரி களும், அலுவலர்களும் இடப்பற்றாக்குறை காரணமாக எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகி றார்கள் தெரியுமா?
ஆட்சி இன்று வர லாம், அடுத்த தேர்தலில் வராமல் போகலாம், மீண்டும் வரலாம். ஆனால் ஆட்சியிலே இருக்கின்ற நேரத்தில் - எதிர்க்கட் சியைப் பற்றியே குறுகிய நோக்கில் எண்ணிச் செயல்படாமல், மக்க ளின் நல் வாழ்க்கைக் காக நமது நேரத்தைச் செலவிடுவதுதான் சிறந்த ஜனநாயகம் என்பதை ஜெயலலிதா இனியாவது புரிந்து கொண்டு, கொஞ்சம் பெருந் தன்மையோடு செயல் பட வேண்டுமென்று விரும்புகிறேன், செயல் படுவார் என்று நம்பு கிறேன். பார்க்கலாம்
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

கனிமொழிக்கு கிராமியக்கலைஞர்கள் வாழ்த்து

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் கிராமியக் கலைஞர்களுக்கு உதவி புரிந்து வந்தார் கனிமொழி எம்.பி.  

இந்நிலையில், கிராமியக் கலைஞர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினர்.   கனிமொழிக்கு நன்றி கூறினர்.

தேவிகுளம்-பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க குரல் கொடுப்போம்! - கலைஞர்


வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இது தொடர் பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்; தொடர்ந்து  பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக  இருந்து வருகிறது.   முல்லைப் பெரியாறு அணை  “பீர்மேடு” வட்டத்தில்  கட்டப்பட்டிருக்கிறது. “தேவிகுளம்”  வட்டத்தில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி அமைந் திருக்கிறது.  

மொழிவழி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்த போது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரள மாநிலத்தோடு - அதன் இடுக்கி மாவட்டத்துடன்  இணைக்கப்பட்டன.   அப்போதிருந்தே தேவிகுளம், பீர்மேடு பகுதி களை கேரள மாநிலத்தோடு சேர்த்தது தவறு என்றும்,  அவை தமிழ்நாட்டோடு  இருந்திட வேண்டுமென்றும்  திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

“முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத் துள்ள  தேவிகுளம், பீர்மேடு பகுதிகளாவது  தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டு மென்றும், தவறினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் விவசாயத் திற்கு போதிய பாசன வசதியின்றி சங்கடப்பட நேரிடுமென்றும்” டாக்டர் பா. நடராஜன் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் ஆரம்பத்திலேயே  எச்சரிக்கை செய்தார்கள்.  பொருளாதார நிபுணர்களின் கருத்தும் -  எச்சரிக்கையும்,  பொது மக்களின் உணர்வும் - தேவையும்  திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின்  கோரிக் கையும் - வலியுறுத்தலும், அன்றைக்கு பொருட் படுத்தப்படாமல், புறந்தள்ளப்பட்டதுதான்; இன்றை க்கு  பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அடங்கிய பீர்மேடு-தேவிகுளம்,  கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து;  பின்னர் சேரநாட்டில் கொடி கட்டிப் பறந்த “பூர்சார்” எனும் பூனை யாறு தமிழ் சமஸ்தான மாக இருந்து வந்தது என்ற வகையில்; தமிழர்களுக்குச் சொந்தமானது எனினும்;  அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உரியதென தவறுதலாகக் கருதப்பட்டு, 1886ஆம் ஆண்டில் ஒப்பந்தமும் நிறைவேற்றப் பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும்,  திரு வாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே  இந்த ஒப்பந்தம் எல்லை சரிவரத் தெரியாமல், போடப் பட்டதென்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  திருவாங்கூரின் எல்லை அரூர், கொட்டாரக்கரை வரைதான்.  ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் தேவிகுளம் - பீர்மேடு பகுதி களையும் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைத்து ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அணை இருக்குமிடம் முழுவதும் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது என்பதால்; பின்னாளில் ஏதேனும்  தகராறுகள் ஏற்படலாம் எனக் கருதி பிரிட்டிஷ் அரசாங்கம் தமக்கு ஆறு இலட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, அணைக்கட்டுப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத் தையும் சென்னை ராஜதானியே எடுத்துக் கொள்ளட்டும் என்று  திருவாங்கூர் மகாராஜாசென்னை யிலுள்ள பிரிட்டிஷ் கவர்னருக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பினார்.   அந்தக் கடிதங்களுக்கு உரிய நேரத்தில் பதில் அனுப்பி,  தமிழகத்தின் உரிமையையும், வரலாற்று ரீதியான உண்மையை யும்,  பிரிட்டிஷ் கவர்னர் நிலை நிறுத்தியிருந்தால், அன்றைக்கே பிரச்சினை முடிவுக்கு வந்திருக் கும்.  பிரிட்டிஷ் கவர்னர் செய்த  பிழையின்  காரணமாகவும்,   மொழிவழி மகாராஜா சென்னையி லுள்ள பிரிட்டிஷ் கவர்னருக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பினார்.   அந்தக் கடிதங்களுக்கு உரிய நேரத்தில் பதில் அனுப்பி,  தமிழகத்தின் உரிமையையும், வரலாற்று ரீதியான உண்மையை யும்,  பிரிட்டிஷ் கவர்னர் நிலை நிறுத்தியிருந்தால், அன்றைக்கே பிரச்சினை முடிவுக்கு வந்திருக் கும்.  பிரிட்டிஷ் கவர்னர் செய்த  பிழையின்  காரணமாகவும்,   மொழிவழி மாநிலப் பிரிவினை யின் போது கடைப்பிடிக்கப்பட்ட தவறான அணுகுமுறையின் காரணமாகவும், முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்றளவும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. 

அண்ணா அன்று எழுதியது

1956ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி பேரறிஞர் அண்ணா அவர்கள் 14-1-1956 அன்று   “தம்பிக்கு”  எழுதிய கடிதத்தில், தேவிகுளம், பீர்மேடு  பகுதி  தமிழகத்திற்கு உரிய வை  என்பதை  ஆணித் தரமாக விளக்கியிருக்கிறார். 
  
தமிழரசுக் கழகம்,  கம்யூனிஸ்ட் கட்சி,  பிரஜா சோஷலிஸ்ட் கட்சி போன்ற பிற கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து பேரறிஞர் அண்ணா அவர்கள் தேவிகுளம் - பீர்மேடு  பகுதிகள் தமிழகத் துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக 20-2-1956 அன்று  நாடெங் கும் பொது வேலை நிறுத்தமும், சென்னையில் பேரணி  ஒன்றையும்  நடத்துவ தென முடிவு செய்தார்.

சென்னை மாநகரில் லட்சோப லட்சம் மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி   பி.டி. ராஜன் அவர்கள் தலைமை தாங்கிட தீவுத் திடலில் இருந்து புறப்பட்டது. அறிஞர் அண்ணா, பொதுவுடைமை வீரர் ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோர் அந்தப் பேரணியில் நடந்தே சென்றனர்.   

அந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முன்பு,  சென்னை மண்ணடியில் 5-2-1956 அன்று நடை பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசும்போது,

“தேவிகுளம் - பீர்மேடு  தமிழருக்கே உரிய பகுதிகள்; தமிழருக்குத்தான் சொந்தம் - என்று  தி.மு. கழகம், கம்யூனிஸ்ட், தமிழரசுக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் கூறுகின்றன. இவற்றுக்குத் துணையாக சோஷலிஸ்ட் கட்சி கூறுகிறது;  பி.சோ. கட்சி நியாயம் என்கிறது; திராவிடர் கழகம் சொல்லுகிறது; இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும் சொல்லுகிறது - “தேவி குளம், பீர்மேடு  தமிழருக்கே”  -  என்று!   பின் யாருடன் நமக்குச் சண்டை? சில பேரின் செயலா ற்றாத தன்மையுடனும்,  சிலரின் நயவஞ்சகத் தன்மையோடும், சிலரின் இரண்டுங்கெட்டான் நிலையோடும் தான் நமக்குச் சண்டை.

மலையாளிகளிடத்திலே நமக்குச் சண்டையா என்றால், அல்ல; இங்குள்ள மலையாளிகள் எல்லாம் கூடிக் கொண்டு,  “தேவிகுளம் -  பீர்மேடு வட்டங்களைத் தரமாட்டோம் தமிழருக்கு” என்று கூறினார்களா என்றால் இல்லை.  பின் மறுப்பவர் யார்? தேவிகுளம், பீர்மேடு  தமிழகத் தோடு சேர வேண்டுமென்று  சட்டசபையில் எல்லோரும் ஏகோபித்து தீர்மானம் நிறைவேற்றி னார்கள்.

காங்கிரஸ்  மந்திரிசபையினர் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.   நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் கோருகிறார்கள்  -  “தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்” - என்று! தேவிகுளம், பீர்மேடு தமிழர் களுக்குத் தரப்பட வேண்டுமென்று கோராதவர் தமிழர்களில் எவருமில்லை.    தேவிகுளம், பீர்மேடு  தமிழர்களுடையது தான்;   தமிழ்நாட்டுடன்தான் அந்தப் பகுதிகள் இணைய வேண்டும் என்பதை அந்தப் பகுதி மக்கள் உலகத்திற்கும், ஊராள்வோருக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்”

- என்று  கருத்து மழை  பொழிந்தார்கள்.

சிதம்பரம் பொதுக் குழுவில்....

29-1-1956 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற  தி.மு.கழகப் பொதுக்குழுவிலும், 17, 18, 19,20-5-1956இல் திருச்சியில் நடைபெற்ற  தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டிலும், 10-2-1957 அன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் சிறப்பு மாநாட்டிலும்,  தொடர்ந்து கழக மாநாடுகளிலும்,  தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டு மென்று தீர்மானம்  நிறைவேற்றப்பட் டுள்ளது.

1956ஆம் ஆண்டுக்குப் பிறகு  முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக நலனைப் பாதித்திடும்  எத்தனையோ பரிமாணங்கள் ஏற்பட்டு விட்டன. பலமுறை கேரள முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.   கேரள முதலமைச்ச ரோடும், கேரள அரசு அலுவலர்களோடும்  அரசியல் ரீதியாகவும்,  அலுவலர் நிலையிலும் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. நீதி மன்றங்களுக்கும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.  எனினும்  இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட, பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.  

2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம்  உறுதியான உத்தரவு ஒன்றை வழங்கியது. அந்த உத்தரவில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும்;  அணையின் நீரளவை 142 அடி வரை உயர்த்தலாமென்றும் தெளிவுபடுத்தியது. எனினும் இந்திய உச்சநீதி மன்றத்தின் அந்த உத்தரவை நிறைவேற்று வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து;  இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பு களைக் காப்பாற்று வதற்கும் - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை அம்சங்களைப் பேணுவதற் கும்,  கேரள அரசு எந்தவித முயற்சியும்  மேற்கொள் ளாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு  மாறாகவும், அதனை நிறைவேற்றாமல் மறுதலிப்பதற்கேதுவாகவும் சட்டத் திருத்தம்  ஒன்றைக் கொண்டு வந்து, அணையின் நீரளவை  136 அடி என்றே நிறுத்தியுள்ளது.

உம்மன்சாண்டியின் கருத்தென்ன?

மீண்டும் இந்தப் பிரச்சினை  இந்திய உச்ச நீதிமன்றத்திற்கே  எடுத்துச் செல்லப்பட்டு;  உச்சநீதி மன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற  முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் அவர்கள் தலைமையில் கேரள மாநில அரசும் உரிய இடம் பெறும்  வகையில் ஐந்து உறுப்பினர் கொண்ட குழு ஒன்று   அமைக்கப் பட்டு, அந்தக் குழுவும் அனைத்து அம்சங் களையும் குறித்த தீவிரப் பரிசீலனையில் ஆழ்ந்துள்ளது.  இந்த உச்சக்கட்ட நிலையில்  கேரள அரசின் - முதலமைச்சர்  திரு. உமன்சாண்டி அவர்கள், முல்லைப்பெரியாறு  பிரச்சினையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டுமென்று பிடிவாதமாகச் சொல்லி வருகிறார்.   மேலும் புதிய அணை  கட்ட வேண்டும் என்ற கருத்திலிருந்து  கேரள அரசு கொஞ்சமும் பின்வாங்காது என்றும்,  தமிழக விவசாயிகளின் உணர்வுகள் கொந்தளிக்கும் வகையில் திரும்பத்திரும்பக் கூறிக் கொண்டிருக் கிறார். எனவே இந்த நெருக்கடி யான நிலையில்;  வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும்  தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும்  சொந்தமான  தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை  மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலியுறுத்திக் கூற வேண்டிய கட்டாயத்திற்கு  கேரள அரசு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றது.  

1956இல் அறிஞர் அண்ணா, பொதுவுடைமை வீரர் ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.  ஆகியோரும், மற்றும் பல தலைவர்களும் ஒன்றிணைந்து  உயர்த்திய  குரலை;  மீண்டும்  ஓங்கி ஒலித்திட வேண்டிய  அவசர அவசியம் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, 1886இல்  சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் கவர்னர் செய்த பிழையினைச்சரி செய்து; மொழிவழி மாநில ஏற்பாட்டின்போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியினைத் துடைத்து; வரலாற்றினை முறைப்படுத்திட,  மத்திய அரசு தற்போதாவது முன்வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.   தமிழ் மாநில அரசும்  அதற்கான முயற்சிகளை முனைப்போடு மேற்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

கொட்டு முரசே! - -கவிச்சுடர் கவிதைப்பித்தன்


கொட்டு முரசே!

'கொற்றம்’அது கிட்டுமென்று கொட்டு முரசே!
கோட்டையில்நம் கொடிபறக்கக் கொட்டு முரசே!
இற்றது தடைகளென்று கொட்டு முரசே!
இருட்திரை விலகுமென்று கொட்டு முரசே!
அற்றது பகைமையென்று கொட்டு முரசே!
ஆரியர்க்கோ நாடிதென்று கொட்டு முரசே!
நற்றமிழ்மேல் ஆணையென்று கொட்டு முரசே!
நாம்பிறந்த மண்ணிதென்று கொட்டு முரசே!
வெற்றுரை, கவர்ச்சிவிழக் கொட்டு முரசே!
வீழ்ந்தஇனம் மீட்சிபெறக் கொட்டு முரசே!
பற்றுமொழிப் பற்றுவரக் கொட்டு முரசே!
பண்டுவளர் தொண்டுயரக் கொட்டு முரசே!
சுற்றம்,நட்பு சூழும்என்று கொட்டு முரசே!
சூரியனே ஆளும்என்று கொட்டு முரசே!
சற்றும்ஐயம் இல்லையென்று கொட்டு முரசே!
தர்மம்வெல்லும் வெல்லும்என்று கொட்டு முரசே!
'முத்தமிழ் அறிஞர்’என்று கொட்டு முரசே!
'மொய்ம்புறு தலைவர்’என்று கொட்டு முரசே!
'சத்தியப் புதல்வன்’என்று கொட்டு முரசே!
'தளபதி’ உழைப்புவெல்லக் கொட்டு முரசே!
கத்துகடல் தோற்றதென்று கொட்டு முரசே!
'கலைஞர்படை’ ஆர்த்ததென்று கொட்டு முரசே!
எத்திசையும் அதிர்ந்ததென்று கொட்டு முரசே!
'இளைஞர்படை’ கிளர்ந்ததென்று கொட்டு முரசே!
நித்திரை கலைந்ததென்று கொட்டு முரசே!
நெஞ்சில்உரம் உள்ளதென்று கொட்டு முரசே!
புத்துணர்வு வந்ததென்று கொட்டு முரசே!
போயொழிக சோம்பல்என்று கொட்டு முரசே!
'சித்திரை’ மறந்ததென்று கொட்டு முரசே!
செந்தமிழ்த்Ôதை’ வென்றதென்று கொட்டு முரசே!
'முத்திரை பதிக்கும்’என்று கொட்டு முரசே!
'முன்னேற்றக் கழகம்’என்று கொட்டு முரசே!
பெண்ணுரிமை ஓங்கிடவே கொட்டு முரசே!
பேதமெல்லாம் நீங்கிடவே கொட்டு முரசே!
தண்மலர்கள் பூக்கவென்று கொட்டு முரசே!
'சமத்துவம்’ மணக்கவென்று கொட்டு முரசே!
மண்ணதிர விண்ணதிரக் கொட்டு முரசே!
'மானுடம்’ தழைக்கவென்று கொட்டு முரசே!
'அண்ணன்’வழி செல்கவென்று கொட்டு முரசே!
அன்னைமொழ்த்Ôதை’ வென்றதென்று கொட்டு முரசே!
பெண்ணுரிமை ஓங்கிடவே கொட்டு முரசே!
பேதமெல்லாம் நீங்கிடவே கொட்டு முரசே!
தண்மலர்கள் பூக்கவென்று கொட்டு முரசே!
'சமத்துவம்’ மணக்கவென்று கொட்டு முரசே!
மண்ணதிர விண்ணதிரக் கொட்டு முரசே!
'மானுடம்’ தழைக்கவென்று கொட்டு முரசே!
'அண்ணன்’வழி செல்கவென்று கொட்டு முரசே!
அன்னைமொழி வெல்க!வென்று கொட்டு முரசே!
எங்கும் ஒளி சூழ்கவென்று கொட்டு முரசே!
ஏருழவன் வாழ்க!வென்று கொட்டு முரசே!
மங்குகவே ஏழ்மையென்று கொட்டு முரசே!
மக்கள்துயர் தீர்கவென்று கொட்டு முரசே!
தங்குகவே இன்பம்என்று கொட்டு முரசே!
'தாயகம்’ செழிக்கவென்று கொட்டு முரசே!
“பொங்குகவே பொங்கல்”என்று கொட்டு முரசே!
“புத்தாண்டுத் தை”சிறக்கக் கொட்டு முரசே!!!

-கவிச்சுடர் கவிதைப்பித்தன்

வியர்வை தொட்டு எழுதிய விடியல்! - கலைஞர் கவிதை


வியர்வை தொட்டு எழுதிய விடியல்!

மார்கழி  உச்சியில்  மலர்ந்தது பொங்கல் என்று  நமது
மனங் கவர்  மகாகவி  பாரதிதாசன்  பாடினார் -  மற்றும்
மரபு வழிக் கவிஞர் பல்லோர் தொடர்ந்து  சொன்னதும்  -  தமிழ்
மண் மீது  உழைக்கும்  மாந்தர்தம் வியர்வை தொட்டு எழுதியதும் தான்
“தை பிறந்தால்  வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை விடியலாகும்;  அந்தத்
தகத்தகாய விடியலிலே  தமிழரெல்லாம்  கண் மலர்ந்து  - 
அகத்திலொரு  அஞ்சாமைக் குணம்   மலர்ந்து
அய்நூறு  தமிழறிஞர்  அய்யன் மறைமலையார் தலைமையிலே
“ஆண்டுக் கணக்கு  தமிழர்க்கு  ஆரம்பமாவது
அட்டியின்றி  சொல்வோம்;  தை முதல் நாள் தான்” என்று;
அறிவித்த  தேதியாம்;  அறிவு சேர்  வரலாற்றை
அன்னையை  மறப்பது போல்  அருந்தமிழர் மறக்கலாமோ?
மறவாதிருக்கத் தான்  மாண்புகொள்
மாத்தமிழ் மழலையர் கூட்டம்  முதல்
மங்கையர்  மணாளர் ஆடிப்பாடும் தோட்டம் வரை
மார்கழி உச்சியில்  மலர்ந்திடும்  தைப் பொங்கல் நாளை
மறவாமல்  தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என  -  தமிழ்
மானமுள்ளோர்  நாமென்று  மாநிலம்  அறிவதற்குப்
பறை சாற்றிப் பகுத்தறிவு வழி நடப்போம்!
துறைதோறும் செம்மொழிப் பயிர் வளர்ப்போம்!

- மு.க.

கழக தணிக்கைக் குழுக் கூட்டம் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கழக தணிக்கைக் குழுக் கூட்டம் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தலைமைக் கழக கணக்குகளை தணிக்கை செய்வதற்காக தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் 2012 ஜனவரி 21, 22 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அதுபோது தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன்.

“அண்ணா அறிவாலயம்”
சென்னை -18
நாள்: 10.1.2012
மு.க.ஸ்டாலின்
பொருளாளர்,
தி.மு.க.

இளைஞர் அணியில் மாநில நிர்வாகிகளுக்கு வயது வரம்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை தி.மு.க. தொடர்ந்து செய்து வரு கிறது என தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் மாவட் டத்தில் ஒன்றிய நகர, பேரூர் இளைஞரணி நிருவாகிகள் நேர்முக தேர்வு விழுப்புரம் கலை ஞர் அறிவாலயத்தில் நடந்தது. நேர்முக தேர்வை தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி இளைஞரணி நிருவாகிகளை தேர்வு செய்தார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதா வது:

திமுக இளைஞரணி 1980இல் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது. தி.மு.க. வளர்ந்ததற்கு காரணம் இளைஞரணி மட்டும்தான். இதனை மற்ற அணியில் இருப்ப வர்களும் ஒப்புக்கொண் டுள்ளனர். தி.மு.க.வில் தொமுச, தொண்டரணி, நெசவாளர் அணி எத் தனையோ துணை அமைப்புகள் உள்ளன.

ஆனால், அனைத் துக்கும் முன்னோடியாக இருப்பது தி.மு.க. இளை ஞரணி மட்டும்தான். இன்றைக்கு உள்ள மந் தமான நிலையை மாற்றி முனைப்புடன் செயல் பட தி.மு.க. தலைவரும், பொதுச்செயலாளரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஒன்றியத் துக்கும் ஒரு இளைஞ ரணி அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திமுகவில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதுபோல மாநில நிர்வாகிகளுக்கும் விûவில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றார்.

இளைஞரணி யினர் சோதனைகளுக் கும், வேதனைகளுக்கும் இடம் கொடுக்காமல் இளைஞரணியின் அங்க மாகவும், சிங்கமாகவும் வெற்றியின் சின்னமாக வும் இருக்க வேண்டும். ஆட்சி பொறுப்பில் தி. மு.க. இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருகிறது.
- இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றிய நிர்வாகிகளிடம் நேரிடையாக கலந்தாய்வு நடத்தினார். 

இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தி.மு.க. சட்ட திட்டத் திருத்தக்குழு - கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழுக் கூட்டம் பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு


தி.மு.க. சட்ட திட்டத் திருத்தக்குழு - கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழுக் கூட்டம்

பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழு மற்றும் கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழு உறுப்பினர் கள் கூட்டம் 2012, ஜனவரி 18, 19 (புதன், வியாழன்) ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, அண்ணா அறிவாலயத் திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அதுபோது சட்டதிட்டத் திருத்தக்குழு மற்றும் கழக அமைப்பு முறைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்: கழக அமைப்புகளுக்கான 14வது பொதுத் தேர்தல் மற்றும் சட்டதிட்டத்திருத்தம்.


“அண்ணா அறிவாலயம்”
சென்னை - 600 018.
நாள் : 10.1.2012
க.அன்பழகன்
பொதுச் செயலாளர்,
தி.மு.க.

தலைமைக் கழக முக்கிய அறிவிப்பு


28.11.2008 அன்று தலைமைக் கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் - அவர்கள் மறைந்திருப் பினும் அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பினும் - அவர்கள் பெயரால் மன்றங்கள், படிப்பகங்கள் போன்ற சார்பு அமைப்புகளை உருவாக்குவதாக இருந்தால்;  தலைமைக் கழகத்தின் ஒப்புதல் பெற்று, அந்தச் சார்பு அமைப்பு, அந்த ஊர் அல்லது அந்தப் பகுதியைப் பொறுத்த ஒன்றாக இருந்து கழகத்தின் சார்பு மன்றமாக இயக்க வேண்டுமே தவிர, அதற்கு வட்டம், ஒன்றியம், மாவட்டம் போன்ற அளவிலே அமைப்புகளை உருவாக்கிடக் கூடாதென்று ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பே தலைமைக் கழகம் அறிவித்து, அதன்படி கழகத்தினர் நடந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சார்பு மன்றங்களைப் பற்றிய அறிவிப்புக்கு மாறாக, கழக முன்னோடிகள் யார் பெயராலும் அமைப்புகளோ, பேரவைகளோ, மன்றங்களோ உருவாகக் கூடுமானால், அவற்றுக்கும் தலைமைக் கழகத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.  அத்தகைய அமைப்புகளோடு கழகத் தோழர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை மீறுவோர் யாராயினும் அவர்கள் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனினும் அண்மைக் காலத்தில் இத்தகைய சார்பு மன்றங்கள் ஒருசிலர் பெயரில் ஆங்காங்கு அமைக்கப்படுவதாக தலைமைக் கழகத்திற்கு புகார்கள் வருவதால் அவற்றை உடனடியாக திருத்திக் கொள்ளுமாறு மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் எச்சரிக்கப்படுகிறது.

“அண்ணா அறிவாலயம்”
சென்னை - 10.1.2012
க.அன்பழகன்
பொதுச் செயலாளர்,
தி.மு.க.

32 பேருக்கு கலைஞர் நிதியுதவி

நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக திமுக தலைவர் கலைஞர் 32 பேருக்கு 11.01.2012 அன்று  3,20,000 ரூபாய் வழங்கியுள்ளார். 


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக திமுக தலைவர் கலைஞர் வழங்கிய நிதி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து, கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த மாதம் கிடைத்த வட்டித் தொகையில் இருந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 3,20,000 ரூபாயை திமுக தலைவர் கலைஞர் வழங்கியுள்ளார். 

நிதி பெறுவோம் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பி வைக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அறிஞர் அண்ணா 103-வது பிறந்த நாளையொட்டி கட்டுரை-கவிதை- பேச்சுப்போட்டி: பரிசுத்தொகை 39 பேருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்!


அறிஞர் அண்ணா 103-வது பிறந்த நாளையொட்டி கட்டுரை - கவிதை - பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு பரிசுத்தொகை
39 பேருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டில் விழா நடைபெற்றது

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவையொட்டி செங்கல்பட்டில் 2 நாட்கள் கோலாகலமாக நடத்தப் பட்ட கட்டுரை, கவிதை ஒப்பித்தல், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 39 பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகையை கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 103வது
பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவியர்களுக் கான, மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித் தல் இறுதிப் போட்டிகள் செங்கல்பட்டு அண்ணா திடலில் கடந்த 2 நாட் களாக மிகவும் கோலாக லமாக நடைபெற்றது.

தி.மு.கழகப் பொருளா ளரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான தளபதி மு.க.ஸ்டாலின் 2 நாட்களாக செங் கல்பட்டிலேயே தங்கியி ருந்து இந்தப் போட்டி களை முன்னின்று நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களும் புதுவை மாநிலத்தில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களும் மாநில அளவிலான இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த இறுதிப் போட்டி நடுவர்களாக தஞ்சை கூத்தரசன், முனைவர் கோவி. செழியன், பொள்ளாச்சி உமாபதி, குழந்தை தமிழர சன், சாவல் பூண்டி சுந்தரே சன்,  ஈரோடு இறைவன், தாயகம் கவி, குமரி மணி மாறன், தாமரைபாரதி, நந்தனம் நம்பிராசன், புதுக்  கோட்டை விஜயா, நளினி சாரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்பு இப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் களுக்கு பரிசளிப்பு விழா நேற்று பகல் நடை பெற்றது. இவ்விழா கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், இ.ஜி. சுகவனம், பனை மரத்துப் பட்டி ராஜேந்திரன், சுபா. சந்திரசேகர், சுப.த.சம்பத், அசன்முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலா ளர் தா.மோ.அன்பரசன் அனை வரையும் வரவேற்றார்.

பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற திருவள் ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.கே.பி.ரிஷி சந்தோஷ் என்ற மாண வனுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நரேன் கவுதம் என்ற மாணவனுக்கு இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன் றாம் இடம் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொ.கணபதி என்ற மாணவனுக்கு 3ஆம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் திருவண்ணாமலை உசேன் செரீப், திருவாரூர் டேனியல் வில்சன், தஞ்சை பிரவீணா, ஈரோடு தமிழ் பிரபாகரன், விழுப்புரம் பிருதிவிராசன்,  காஞ்சிபுரம் விக்னேஷ் குமார், திண்டுக்கல் விநோதினி கோவை அபு பக்கர் சித்திக், விருதுநகர் கார்த்தீஸ் வரி, நாகை ஆர்த்தி ஆகிய 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையை தளபதி மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

கவிதை ஒப்பித்தல் போட்டியில் முதல் இடம் பெற்ற கரூர் மாவட்டத் தைச் சேர்ந்த எஸ். ரோசினி, இரண்டாம் இடம் பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கவுசல்யா, மூன்றாம் இடம் பெற்ற நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ச.புவனேசுவரி ஆறுதல் பரிசாக நாமக்கல் பால ஜெகதீசுவரி, வட சென்னை நிஷாந்தினி, கடலூர் லாவண்யா,  இராம நாதபுரம் பிரவீன் குமார், திருப்பூர் விநோதினி, புதுவை பூர்ணிமா, மதுரை மாநகர் கமலா, திருச்சி விநோதினி, தென் சென்னை வைஷ்ணவி, கன்னியாகுமரி நடராஜ் ஆகிய மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுத் தொகை யாக தலா ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

கட்டுரைப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற நெல்ல மாணவி ராஜப் பிரியா, இரண்டாம் இடம் பெற்ற சேலம் மாவட்டம் ஆ.ச.ஜீவிதா, மூன்றாம் இடம் பெற்ற மாணவி அப்சாரா ஆறுதல் பரிசு பெற்ற மதுரை புறநகர் நீலாப்பிரியா, கிருஷ்ண கிரி மங்களா, நீலகிரி கேத்ரின் கிறிஸ்டினா, அரியலூர் கவுதம், புதுக் கோட்டை கவுசல்யா, வேலூர் ஹேம லதா, பெரம்பலூர் சரவ ணன், தருமபுரி வடக்கு பத்ம ஜோதி, தருமபுரி தெற்கு ப.சிவா ஆகிய மாணவ, மாணவியர் களுக்கு தலா  ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையை அவர் வழங்கினார்.

இங்கு 3 போட்டி களிலும் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவியர் களுக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகையை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:
அண்ணாவின் நூற் றாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக மாநில, மாவட்ட அளவில்பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வரு கிறோம். இதேபோல், திமுக தலைவர் கலைஞ ரின் பிறந்த நாளை முன் னிட்டு 10, 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங் களை பிடிக்கும் மாணவர் களுக்கு பரிசு வழங்கி ஊக் கப்படுத்தி வருகிறோம்.
அண்ணா பிறந்த நாளை  முன்னிட்டு 2008ஆம் ஆண்டு இந்த போட்டி தொடங்கப் பட்டது. இதுவரை 5,616 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 7,500 பரிசு வழங்கியுள் ளோம். 2009ஆம் ஆண்டு முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 6,830 பேருக்கு 1 கோடியே 91 லட்சத்து 4,500 பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடியே 21 லட்சம் பரிசு வழங்கி, மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறோம்.
தி.மு.க.வில் எத்த னையோ துணை அமைப் புகள் இருக்கின்றன. ஆனால் இளைஞர் அணி, தி.மு.க.வின் கொள்கை, லட்சியங்களை செயல் படுத்துவது மட்டுமல்லா மல், மாணவர்களை ஊக்கு விக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எத்தனை பணிகள் செய் தாலும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கும் இந்த பணியில்தான் மன நிறைவு ஏற்படுகிறது. 
 இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப் பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பா ளர்கள் அனைவரும் தனித் தனி யாக விழா மேடைக்கு சென்று தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பொன் னாடை அணி வகுத்து வாழ்த்துப் பெற்றனர்.

முன்னாள் அமைச்சர் கள் க.பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,  மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.கே. எஸ்.விஜயன், ஆர்.டி. சேகர், மாதவரம் சுதர் சனம், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ. வைதியலிங்கம், கோவை மாநகரச் செயலாளர் வீரகோபால், புதுவை மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், கு.க.செல்வம், மு.ஈஸ் வரப்பன், அன்பகம் கலை, சென்னை மாநகர பகுதிச் செயலாளர்கள் மகேஷ் குமார், மணிவேந்தன், டன்லப் ரவி, தமிழ்வேந் தன், ஐ.சி.எப். முரளிதரன்,

காஞ்சிபுரம் மாவட்டக் கழக அவைத் தலைவர் கே. சுந்தர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.வி.எம். அ.பொன்மொழி, வி. எட்டியப்பன், மல்லிகா மோகன், மாவட்டப் பொருளாளர் ஜி.சுகுமார், காஞ்சி மாவட்ட இளை ஞர் அணி அமைப்பாளர் பாலவாக்கம் த.விசுவநா தன், துணை அமைப் பாளர்கள் டி.வி.கோகுல கண்ணன், ப.அப்துல் மாலிக், ஜி.செல்வம்,

புதுவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் இரா.சிவா, கழக ஆதி திராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ. கிருஷ்ணசாமி, எல்லா புரம் மூர்த்தி, பூவை ஜெயக்குமார், அன்பில் பெரிய சாமி, திரு வண்ணாமலை திருமகன், வீரபாண்டி ராஜா, இ.பெ. செந்தில் குமார், தஞ்சை நீலமேகம், திருவள்ளூர் நீலகண்டன், தென் சென்னை வி.எஸ். ராஜ், வேலூர் ஏ.கே.சுந்தர மூர்த்தி, கோவை அருண் குமார், தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் வெ. விசுவநாதன், சன்பிராண்ட் ஆறுமுகம், ஆ.ஜானகிரா மன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள், வீ. தமிழ்மணி, செய்யூர் பால கிருஷ்ணன், கெ.பழனிச் சாமி, எம்.எஸ். கே.இப் ராகிம், ஆ.கோ. பாண்டு ரங்கன், கண்டோன் மெண்ட் நந்தகுமார், கெ.ஞானசேகரன், மலர் விழிகுமார், மீராசபா பதி, நகரச் செயலாளர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, பி.குணா, சி.வி.எம். அ. சேகர், க.அன்புச் செல்வன்,  பம்பல் கருணா, மு.நித்தியானந்தம், ஜெ. சண்முகம்,

ஒன்றியச் செயலாளர்கள் இரா.நாகன், எம்.கே.தண்டபாணி, ஆ.மனோகரன், பி.எம். குமார்,  ரோஸ் எஸ்.நாக ராசன், லத்தூர் சேகர், கே.கண்ணன், அ.விஜயன், இரா.ஸ்ரீதரன் பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பா ளர்கள் படப்பை ராஜேந் திரன், சி.கே.வஜ்ஜிரவேலு, எஸ்.கே.நெப்போலி யன்,  த.விஜயபாலன், ஜனனி ராஜாகிருஷ்ணமூர்த்தி, வனஜா உட்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

செங்கல்பட்டு நகரில் 2 நாட்கள்  மிகவும் கோலாக லமாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இவ் விழாவையொட்டி செங் கல்பட்டு நகரம் முழுவதும் கழக கொடி தோரணங் களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாவட்ட மாநாடு போல மிகவும் எழுச்சியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோ ரின் ராட்சத கட் அவுட்க ளும் மேடை எதிரில் வைக்கப்பட்டிருந்தது.

செங்கை நகர கழகச் செயலாளரும்,   நகர மன்றத் தலைவருமான கே.அன்புச் செல்வன் விழா முடிவில் நன்றி கூறினார்.

பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. பொதுக் குழுக் கூட்டம் : பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு


பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. பொதுக் குழுக் கூட்டம் பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 3.2.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள் :

1.கழக அமைப்புகளுக்கான 14வது பொதுத் தேர்தல் மற்றும் சட்டதிட்டத் திருத்தம்,
2.கழக உறுப்பினர் சேர்த்தலும் புதுப்பித்தலும்,
3.நாடாளுமன்றத் தேர்தல்,
4.தணிக்கைக் குழு அறிக்கை.


“அண்ணா அறிவாலயம்”
சென்னை - 600 018.
நாள் : 9.1.2012
க.அன்பழகன்,
பொதுச் செயலாளர்,
தி.மு.க.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.50 லட்சத்தை நிவாரண நிதியாக தி.மு.க. தலைவர் கலைஞர் வழங்கினார்


புய லால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூ.50 லட் சத்தை நிவாரண நிதி யாக தி.மு.க. தலைவர் கலைஞர் வழங்கினார்.
தி.மு.க. தலைவர் கலை ஞர், ``தானே'' புயலால் பாதிப்புக்குள்ளான புதுச்சேரி மாநிலம் மற் றும் கடலூர், விழுப் புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பகுதிகளை நேரில் பார் வையிட்டு, பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறு தல் தெரிவித்ததுடன், ``புயலால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு செய்யப்படுகின்ற உதவி யாக தி.மு.க. அறக்கட் டளை சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண நிதி யாக வழங்கப்படும். அதனை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கழக அமைப்புகளின் நிர்வாகி கள் தகுந்த முறையில் உரியவர்களுக்கு வழங் குகின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள் கிறேன்'' என அறிவித்தார்.
அதற்கிணங்க, புய லால் பாதிப்புக்குள்ளான பகுதிகளான, கடலூர் மாவட்டத்திற்கென ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை மாவட் டக் கழக நிருவாகிகள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், து.தங்கராசு, பெ.கணே சன், குரு.சரஸ்வதி ஆகி யோரிடமும்; விழுப்புரம் மாவட்டத்திற்கென ரூ.10 லட்சத்திற்கான காசோ லையினை மாவட்டக் கழகச் செயலாளர் க. பொன்முடியிடமும்; திருவாரூர் மாவட்டத் திற்கென ரூ.10 லட்சத் திற்கான காசோலையினை மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த உ.மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, கோட்டூர் அ.ராஜசேக ரன், எம்.எஸ்.கார்த்திக், ஜோதிராமன் ஆகியோரி டமும் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத் திற்கென ரூ.10 லட்சத் திற்கான காசோலையினை புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.வி.ஜானகிரா மன், எஸ்.பி.சிவகுமார், எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம், கென்னடி, சந்திரேஷ் குமார், ஆர்விஜே. சர வணன், வழக்கறிஞர்கள், செந்தில்குமார், பா. நம்பி செல்வன், குமாரசுப்பிர மணி, பா.காந்தி ஆகி யோரிடம் தி.மு.க. அறக் கட்டளை சார்பில் வழங்கினார்.
அப்போது துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப் புச் செயலாளர் டி.கே. எஸ்.இளங்கோவன் மற் றும் பலர் உடனிருந்தனர்.