கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 24, 2013

அன்னைத் தமிழின் அரவணைப்பில்

02.08.1986 அன்று அ.தி.மு.க ஆட்சியின் அவலத்தால் ஏற்பட்ட வறட்சித் துயரை துடைத்திட மதுரை விரகனூரில் கழகத்தின் சார்பில் கஞ்சித்தொட்டி திறந்து வைப்பதற்காக தலைவர் கலைஞர் மதுரை வந்து பாண்டியன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.

அப்போது அருப்புகோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபட்டிருந்தது (அருப்புக்கோட்டையில் ஐயா வே.தங்கப்பாண்டியன் அவர்களும், நெல்லையில் ஐயா ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கழக வேட்பாளர்களாக களம் கண்டார்கள்). அதனால் தலைவரை சந்தித்து தேர்தல் நிதி அளித்திட எனது தந்தையார் குரு. இராமச்சந்திரன் ஐந்து வயது கூட நிரம்பாத என்னையும் உடன் அழைத்து சென்றார்.

தலைவருக்கு அருகில் இருந்த ஐயா பி.டி.ஆர் அவர்கள் என் தந்தையை நன்கு அறிந்தவர் என்ற வகையில் தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். என் தந்தை எனது கையால் தலைவரிடம் நிதியை கொடுக்கச் செய்தார். எனது உண்டியல் சேமிப்பான ரூ. 20 ஐ தலைவரிடம் வழங்கினேன். இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப தலைவர் கேட்ட கேள்விகளுக்கு தயங்கமால் பதில் சொன்னேன். அந்த உரையாடல் இதோ 


தலைவர் : உன் பெயர் என்ன?


நான் : வைரமுத்து. வீட்ல வைரகுரு நு கூப்பிடுவாங்க 


தலைவர் : வைரமுத்தா? அப்ப பாட்டு எல்லாம் எழுதுவியா?


நான் : இல்ல. பாடுவேன்


தலைவர் : எங்க ஒரு பாட்டு பாடு 


நான் : பாளையம்கோட்டை சிறையினிலே            
           பாம்புகள் பல்லிகள் நடுவினிலே            
           அஞ்சாமல் இருந்தவர் யாரு            
           அந்த தலைவரின் புகழினை பாடு 


தலைவர் மகிழ்ந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். 05.08.1986 அன்று தேதியிட்ட முரசொலியில் வெளியான நிதி அளித்தோர் பட்டியலில் எனது பெயர் (இரா. வைரகுரு) இடம் பெற்றது. அந்த நாளிதழை என் வாழ்வின் அரிய பொக்கிசமாய் போற்றி பாதுகாக்கிறேன். 


என் தாத்தா அ.இரா. குருசாமி, ஆசிரியர் (ப.நி) அவர்களுக்கும் தலைவர்
என் தந்தை குரு. இராமச்சந்திரன், ஆசிரியர் (ப.நி) அவர்களுக்கும் தலைவர்
எனக்கும் தலைவர் 
என் மகள் வை.மு.கவின்மதி மற்றும் மகன் வை. மு. நற்குணநிதிக்கும் தலைவர்
அவர் தான் கலைஞர் ! 


பின் குறிப்பு : தலைவருடனான தனது முதல் சந்திப்பை பற்றி எழுதி என்னையும் எழுத தூண்டிய அண்ணன் சரவணகுமார் அவர்களுக்கு நன்றி...

Sunday, June 2, 2013

கலைஞர் 90 - வரலாறு

ஆகலாம் தொண்ணூறு
ஆற்றலிலோ பதினாறு
அரசியலில் வரலாறு
அகிலமே, அவருக்கு வாழ்த்து கூறு

#இன்னும் ஒரே நாள்...

கலைஞர் 90 - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு 
சொந்தப் பணத்தில் ரூ.1 கோடி நன்கொடை அளித்து 
தமிழ் வளர்ச்சிக்கு வழி செய்த 
தன்னிகரற்ற தலைவரே வாழ்க வாழ்க

Saturday, June 1, 2013

கலைஞர் 90 - பொற்கிழி

தமிழில் சிறந்த படைப்புகள் உருவாகவும்
தரமான படைப்பாளிகளை ஊக்குவிக்கவும்
வருடந்தோறும் பொற்கிழி வழங்கிட 
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு 
"ஒரு கோடி ரூபாய்" நன்கொடை அளித்த 
ஒல்காப் புகழ் தலைவரே வாழிய பல்லாண்டு

#இன்னும் 3 நாட்கள்..

Thursday, May 30, 2013

கலைஞர் 90 - அறக்கட்டளை

ஒரு கோடியில் அறக்கட்டளை துவங்கி
ஒவ்வொரு மாதமும் வட்டிப்பணத்தை
கல்வி மற்றும் மருத்துவத்திற்காக
கழகத்தின் நலிந்த தொண்டர்களுக்கு
கனிவோடு வழங்கி வரும்
கன்னித்தமிழே வாழ்க பல்லாண்டு

# இன்னும் 4 நாட்கள்...

Wednesday, May 29, 2013

கலைஞர் 90 - இலவச மருத்துவமனை

பெற்றோர் பெயரில்
இலவச மருத்துவமனை ஏற்படுத்திட
வசிக்கும் வீட்டையே
வழங்கிய வள்ளலே
வாழிய வாழியவே

#இன்னும் 5 நாட்கள்..

Tuesday, May 28, 2013

கலைஞர் 90 - தமிழ்வழிக்கல்வி

தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா
என ஏளனம் செய்தோர் வெட்கி தலைகுனியும் வகையில்
"தமிழ்வழிக் கல்வி" பயின்றோருக்கு வேலைவாய்ப்பில்
தனி இடஒதுக்கீடு தந்த
தன்னிகரற்ற தலைவரே
வாழ்க வாழ்க

#இன்னும் 6 நாட்கள்...

Monday, May 27, 2013

கலைஞர் 90 - அமுதத்தமிழ்

கலை & அறிவியல் கல்லூரிகளில் கூட அசைன்மெண்ட் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் எனச் சொல்லும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் "பொறியியல் படிப்பில் தமிழ் வழிக் கல்வி"யை அறிமுகப் படுத்திய
அமுதத் தமிழே வாழிய வாழியவே

#இன்னும் 7 நாட்கள்...

கலைஞர் 90 - உயிரெழுத்து

உயிர்மெய்யின் முதல் எழுத்தே
உடன்பிறப்புகளின் உயிரெழுத்தே
வாழ்க பல்லாண்டு 

கலைஞர் 90 - காவிரி கொண்டான்

வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றத்தையும்
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தையும்
மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பையும் பெற்றுத் தந்து அதை அரசிதழிலும் வெளியிடச் செய்த
"காவிரி கொண்டான்" கலைஞர் வாழிய வாழியவே

கலைஞர் 90 - ஆதாரம்

பதிமூன்று (1976 - 1989) ஆண்டுகால வனவாசத்திலும்
சேதாரம் சிறிதும் இன்றி கழகத்தை காத்த ஆதாரமே
வாழிய வாழியவே 

கலைஞர் 90 - நன்னயம்

இன்னா செய்தார்க்கும் அவர் நாண
நன்னயம் செய்திட்ட நற்றமிழ் நாயகரே
வாழ்க பல்லாண்டு 

கலைஞர் 90 - போக்குவரத்து பொதுஉடைமை

தனியார் வசம் இருந்த போக்குவரத்துத் துறையை
அரசுடைமையாக்கிய அறிவார்ந்த தலைவரே வாழ்க வாழ்க 

கலைஞர் 90 - பெண் குடியரசு தலைவர்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரை
உருவாக்கிய உத்தமத் தலைவரே
வாழிய வாழியவே 

கலைஞர் 90 - தொடர் வெற்றி

55 ஆண்டுகளுக்கும் மேலாக
தொடர்ந்து தேர்தல் களத்தில்
வாகை சூடும் எங்கள்
வாழ்வாதாரமே
வாழ்க பல்லாண்டு

கலைஞர் 90 - குடிசை மாற்று வாரியம்

குடிசையிலே வாழ்ந்தவருக்கு வீடு கொடுத்தார்
சில கோணல் புத்திகாரருக்கு ஈடு கொடுத்தார்
அவர் தான் கலைஞர்
அன்புத் தலைவர் வாழிய பல்லாண்டு 

கலைஞர் 90 - அமைதிப்படை

தமிழ் சொந்தங்களை கொன்று குவித்து
தாயகம் திரும்பிய இந்திய ராணுவத்தை
வரவேற்க மறுத்து மரபை உடைத்த
தமிழினத்தின் தானைத் தலைவரே
வாழ்க பல்லாண்டு

கலைஞர் 90 - கை ரிக்சா

மனிதனை மனிதனே இழுத்துச் செல்வதைக் கண்டு
மனம் பதைபதைத்து மனிதாபிமானத்தோடு
"கைரிக்சா" முறையை ஒழித்த
தலைவரே வாழ்க வாழ்க

கலைஞர் 90 - சுயமரியாதைக்காரர்

ஏரோட்டும் உழவரெல்லாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் ஏன்
உனக்கு தியாகேசா
எனக் கேட்ட
"மானமிகு சுயமரியாதைக்காரர்"
வாழிய பல்லாண்டு

கலைஞர் 90 - கல்லக்குடி

தமிழ்ப் பெயரைக் காத்திட
தன்னுயிரைத் தரத் துணிந்து
தண்டவாளத்தில் தலைவைத்து
கல்லக்குடி களம் வென்ற
கன்னித்தமிழே வாழிய வாழியவே

கலைஞர் 90 - தந்தை பெரியார்

அரசு உயர் பதவி எதையும் வகிக்காத
அய்யா பெரியாருக்கு மரபை உடைத்து முழு
அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடத்தியதோடு,
"இதற்காக ஆட்சியையும் இழக்க தயார்" என மார் தட்டி
பெரியாரைப் போற்றிய பெருந்தகையாளரே
வாழ்க நீவிர் பல்லாண்டு 

கலைஞர் 90 - அய்யன் திருவள்ளுவர் சிலை

ஆழிப்பேரலையையே அடி தொழ வைக்கும் வண்ணம் அய்யன் திருவள்ளுவனுக்கு குமரி முனையில் சிலை அமைத்த தமிழ்க்குலத் தலைவரே வாழ்க வாழ்க

கலைஞர் 90 - முதல் தலைமுறை பட்டதாரிகள்

முதல் தலைமுறை பட்டதாரிகள்
தொழிற்கல்வி (மருத்துவம், பொறியியல்) பயின்றிட
கட்டண சலுகை அளித்து அவர்கள் வாழ்வில்
சிறக்க வழி ஏற்படுத்திய தலைவரே வாழ்க பல்லாண்டு

கலைஞர் 90 - நெருக்கடி நிலை

நெருக்கடி நிலையை
நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு வென்று
இந்தியாவின் இரும்பு பெண்மணியாம்
இந்திராவையே பின்னாளில் (சென்னை கடற்கரை பொதுக்கூட்டம்)
"நெருக்கடிநிலை பிரகடனம் செய்தது தவறு" என
நேரடியாக மன்னிப்பு கேட்டு
மண்டியிட வைத்த
மாவீரமே வாழ்க நீவிர் வானம் உள்ளவரை 

கலைஞர் 90 - தேசியக்கொடி

ஆண்டுதோறும்
ஆகஸ்ட் 15 அன்று
தேசியக் கோடி ஏற்றும் உரிமையை
மாநில முதல்வர்களுக்கு பெற்று தந்த
மாசற்ற தலைவரே வாழ்க வாழ்க 

கலைஞர் 90 - 108

அன்று கடவுளின் 108 போற்றி
இன்றோ கலைஞரின் 108 போற்றி !
உயிர் காக்கும் ஊர்தி தந்த
உத்தமத் தலைவரே வாழிய பல்லாண்டு !!

கலைஞர் 90 - சூரியன்

சூனியமாய்க் கிடந்த
சூத்திரர் வாழ்வில் ஒளியேற்ற
சூன் 3இல் பிறந்த
சூரியனே
வாழ்க நீ எம்மான்

கலைஞர் 90 - செம்மொழி

எம்மொழியை செம்மொழியாக்கிய
எங்கள் தலைவர் கலைஞரே
என்றும் நீர் இளைஞரே

கலைஞர் 90 - பிறந்தநாள்

தலைவருக்குப் பிறந்தநாள்
தமிழருக்கு சிறந்தநாள் 

கலைஞர் 90 - திருக்குவளையின் கருவே

திருக்குவளையின் கருவே
தி.மு.கவின் திருவே
தளராத உழைப்பின் உருவே
தமிழகத்தை தழைக்க வைத்த தருவே
பல்லாண்டு வாழ்க !
பகை வென்று ஆள்க !!

கலைஞர் 90 - தொல்காப்பியமே

தொண்ணூறாம் அகவையைத்
தொடப் போகும் தொல்காப்பியமே
நூறாண்டு தாண்டி வாழ்க !
ஆறாம் முறையாய் ஆள்க !!