கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 31, 2010

மக்களிடம் கையேந்தும் நிலையில்தான் அரசு இருக்கிறது : கலைஞர் பேச்சு


சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு மக்கள் நிலங்களை ஒதுக்கித்தந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.


சென்னை அண்ணாசாலையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகத்தை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைத்தார்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினார். எக்ஸ்பிரஸ் அவென்யூ தலைவர் சரோஜ் கோயங்கா அனைவரையும் வரவேற்றார்.


முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.


அவர், ’’ ஒரு வளாகத்தைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். கோயங்கா குடும்பம் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களை - இன்னும் சொல்லப் போனால், இந்தக் குடும்பத்தின் தலைவர் கோயாங்கா அவர்களையே பழகி அறிந்திருந்த அனுபவ ரீதியாக உணர்ந்திருந்த குடும்பம் ஆகும்.


அப்படிப்பட்ட குடும்பத்தின் வழித்தோன்றல்கள், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் உள்ளங் கவருகின்ற அளவிற்கு “எக்ஸ்பிரஸ் அவென்யூ” வர்த்தக வளாகத்தை அமைத்து பெயருக்கேற்றாற்போல் அடிக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடத்தை முற்றாக முடிக்கின்ற வரையில் - “எக்ஸ்பிரஸ்” வேகத்திலேயே இதை நடத்தி நம் அனைவருடைய வாழ்த்துக்களையும் இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.


சென்னை மாநகரத்தின் தேவை நிரம்ப! அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையில், கோயங்கா குடும்பத்தினரைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவர்கள், வாய்ப்பு கொண்டவர்கள், வசதி மிக்கவர்கள் தான் இதைச் செய்ய முடியும்.

வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும். கோயங்கா அவர்கள் அரசியலிலே ஈடுபாடு கொண்டிருந்த அந்தக் காலந்தொட்டு, நான் அவரை மிக நன்றாக அறிவேன்.

அவரும் என்னை மிக நன்றாக அறிவார். 87 ஆண்டுக் காலம் வாழ்ந்து தமிழகத்திலே, இந்தியத் திருநாட்டிலே அவர் ஆற்றிய பெரும் பணிகள் இன்றைக்கும் நினைவு கூரத் தக்க பணிகளாகும். அத்தகைய பணி களுக்கெல்லாம் ஒரு சிலாசாசனம் நிறுவியதைப் போலத் தான் இன்றைக்கு இந்த வர்த்தக வளாகம் இங்கே அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


தென்னிந்தியாவில் இருக்கின்ற வளாகங்கள் அனைத்தையும் விட பெரிய வளாகம் இது தான் என்று கூறுகின்ற அளவுக்கு இது இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகள், ஓட்டல்கள் போன்ற பல வசதிகளோடு இது அமைக்கப்பட்டிருக்கின்றது’’என்று பேசினார்.


அவர் மேலும், ‘’ என்ன தான் சென்னை மாநகரம் பரப்பளவு மிகுந்தது என்றாலுங்கூட, இன்னமும் நெருக்கடியான சூழ்நிலை இருப்பதை நாம் காணுகிறோம்.

சென்னை மேலும் மேலும் வளர வேண்டும், வளம் பெற வேண்டும் மற்ற இந்தியாவிலே இருக்கின்ற பெரு நகரங்களுக்கு ஈடாக இந்த மாநகரம் விளங்க வேண்டுமென்று நினைத்தாலுங்கூட, அதற்குக் குறுக்கே பல சக்திகள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.


இன்னமும் பக்கத்திலே உள்ள ஆந்திராவில், கர்நாடகாவில் விமான நிலையம் பெரிய அளவிலே அமைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம். சின்னஞ்சிறிய மாநிலங்களில் எல்லாம் பெரிய விமான நிலையங்கள், வசதியான விமான நிலையங்கள் தோன்றியிருப்பதை காணுகிறோம்.


டெல்லியிலே இருக்கின்ற விமான நிலையத்திற்கு ஈடாக இந்தியாவிலே உள்ள மாநிலங்களில் - அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்தபடியாகவாவது விமான நிலையங்கள் இருக்க வேண்டுமென்று கருதுகின்றோம்.

ஆனால் புது விமான நிலையத்திற்கு நாம் அடிக்கல் நாட்டிய மறுநாளே, ஆயிரம் பேர் அல்லது நூறு பேர் ’இந்த இடத்தை ஆக்ரமிக்காதே!’ என்று கோஷம் போட்டுக் கொண்டு, கொடி பிடித்துக் கொண்டு வருவதையும், அவர்களுக்கு சில பேர் தலைமை வகித்து வருவதையும் காணுகிறோம். நான் அவர்களையெல்லாம் வாழ விடக் கூடாது என்று எண்ணுகிறவன் அல்ல.


தமிழ்நாட்டில் பல ஆண்டுக் காலமாக இருந்த குடிசை வாழ் மக்களை கோபுரத்திலே ஏற்றி உட்கார வைக்கவேண்டுமென்று முதன் முதலாக சென்னை மாநகரத்தில் நினைத்தவனே நான் தான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனுடைய விளைவாகத் தான் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு - நடை பாதை யோரங்களில் வாழ்ந்து வந்த குடிசை வாழ் மக்களுக்கெல்லாம் கோபுரம் போன்ற வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன.


அதைப் போல மாற்றுத் திட்டங் கள் அவர்களுக்கு அமைக்கப்படுமென்று உறுதியளித்து, விமான நிலையத்திற்கு கொஞ்சம் விரிவான இடம் தேவை, கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டு மக்களிடத்திலே கையேந்தி, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற வேண்டிய நிலைமையிலே தான் அரசு இருக்கிறது.

அப்படிப்பட்ட நெருக்கடி யான சூழ்நிலை இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்திலே கூட ஏறத்தாழ 18 இலட்சம் சதுர அடி பரப்பில் ஒரு வர்த்தக மையத்தைக் கட்ட முடிகிறது என்றால், அது கோயங்கா குடும்பத்தால் மாத்திரம் தான் முடியும் என்பதை இந்தக் கட்டடம் நமக்கு விவரித்துக் கொண்டிருக்கிறது.


எப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகளை - எப்படிப்பட்ட அருமையான திட்டங்களை இவர்களால் நிறைவேற்ற முடியும், வசதி வாய்ப்புகளை மக்களுக்குத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் தொடக்க விழா அமைந்திருக் கின்றது. இந்த ஆரம்ப விழாவே அதற்கான அச்சாரமாக விளங்குகிறது.


இப்பொழுதே இந்த மாளிகை எழும்ப - இந்த வளாகம் எழும்ப மாநகராட்சி மன்றம், அரசு, அதிகாரிகள் அத்தனை பேரும் தந்த ஒத்துழைப்பை இங்கே நன்றி யோடு பாராட்டினார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். தொடர்ந்து உங்களுக்காக அல்ல - சென்னைக்கு வருகின்ற மக்களின் வசதி வாய்ப்புக்காக - அவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக - அவர்களுடைய உற்சாகத்திற்காக - சுற்றுப் பயணத்தில் ஈடுபடுகின்ற பக்கத்து நாட்டுக்காரர் களுக்காக என்றும் பல வசதிகளைச் செய்து கொடுக்க எவ்வளவு தேவையோ அந்தத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்போம் - அரசின் சார்பாக - மாநகராட்சி மன்றத்தின் சார்பாக செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். கோயங்கா குடும்பத்தாரைப் போன்ற குடும்பத்தினர் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொண்டு - இந்த விழாவிலே கலந்து கொண்டு,

இந்த வளாகத்தை அமைத்தவர்களை வாழ்த்துவதில் நான் பெருமையடைகிறேன். ஏனென்றால் கோயங்கா, தமிழகத்திலே பிறந்தவரல்ல, பீகாரிலே பிறந்தவர் என்றாலுங்கூட - தமிழ்நாட்டு அரசியலிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு - அப்படி ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஈ.வெ.ரா., பேரறிஞர் அண்ணா போன்றவர்களோடெல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவரோடு நானும் கொஞ்ச காலம் தொடர்பு கொண்டிருந்தேன் என்பதையும், அவர் நடத்திய பத்திரிகை நேர்மையான முறை யில் - எங்களைத் தாக்கக் கூடிய முறையிலே எழுதினாலும் - எங்களைக் கண்டிக்கக் கூடிய வகையிலே எழுதினாலும் - அதிலே ஒரு “கண்ணியம்” இருக்கும், அதிலே ஒரு “நாகரிகம்” இருக்கும்.


அப்படிப்பட்ட நாகரிக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களான ஏ.என். சிவராமன் போன்றவர்கள், சொக்கலிங்கம் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நடைபெற்ற “தினமணி” பத்திரிகையானாலும், “எக்ஸ்பிரஸ்” பத்திரிகையானாலும் - இந்தப் பத்திரிகைள் நடந்து கொண்ட நாகரிகமான முறையிலே தொடர்ந்து தமிழகத்திலே உள்ள பத்திரிகைகள் எல்லாம் நடைபெறுமேயானால், அது கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதை -

இந்தக் கட்டிடம் மாத்திரம் கோயங்கா அவர்களுக்குத் தரப்பட்ட காணிக்கை அல்ல, அந்தப் பத்திரிகைகளிலே நாம் கடைப்பிடிக்கின்ற நாகரிகமும், கண்ணியமும் கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற நன்றி யாகும் என்பதை எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்காக மீண்டும் மீண்டும் நன்றி கூறி, குறிப்பாக என்னை அழைத்து இந்த விழாவிலே கலந்து கொள்ளச் செய்த கோயங்கா குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்து இந்த அளவில் விடைபெற்றுக் கொள்கிறேன்.


பெரியார் - அண்ணாவை எதிர்த்த கூட்டம்தான் இன்றைக்கு கலைஞரையும் எதிர்க்கிறது - கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் பேச்சு


பெரியார், அண்ணாவை எதிர்த்த கூட்டம்தான் இன்றைக்கு கலைஞரையும் எதிர்க்கிறது என்று நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் கூறி விளக்கவுரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு:

கிருஷ்ணகிரியோடு நீண்ட காலமாக தொடர்புடையவன். ஏறத்தாழ கிருஷ்ண கிரிக்கு சேலம் மாவட்டச் செயலாளராக சேலம் இ.ஆர். கிருஷ்ணன் அவர்கள், இருந்த காலத்தில் நான் இங்கு வந்தி ருக்கின்றேன். அரசியலில் இலக்கண மாக விளங்குபவர் கலைஞர் அவர்கள்.

அதற்கு அடிப்படையான காரணம் கலைஞர் வெறும் அரசியல்வாதி அல்ல, ஆட்சிக்கு வருவது எப்படி என்பதற்காக கட்சி நடத்துபவர் அல்ல, தமிழ் நாட்டு மக் களின் வாழ்க்கையை மாற்றம் செய்வது எப்படி? வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எப்படி? வறுமையை விரட்டுவது எப்படி? வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவது எப்படி? பசி, பட்டினி இல்லாமல் மக்களை வாழச்செய்வது எப்படி? உழவருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எப்படி? விவசாயி களுடைய முன்னேற்றத்திற்கு வழி செய்வது எப்படி? கைத்தறி நெசவாளர் களை காப்பாற்றுவது எப்படி? என்று ஒவ்வொரு துறையில் எண்ணிப்பார்த்து, செயல்படுகின்ற, மக்களோடு ஒன்றாக இணைந்திருக்கின்ற ஒரு தலைவர் கலைஞர், அவருடைய பக்குவம், அவரு டைய மனப்பான்மை, அவருடைய தொண்டு ஏறத்தாழ நான் அறிந்து 1943 ஆம் ஆண்டு பார்த்தேன்.

1943 லிருந்து 93வரை 50 ஆண்டுகள். இப்பொழுது 67 ஆண்டுகளாக எனக்கு அவரைத் தெரியும். முதன் முதல் அறிஞர் அண்ணாவோடு திருவாரூருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அங்கே நான் அவரைப் பார்த்தேன். அந்த நாள் முதல் அவரு டைய எழுத்து, பேச்சு, எண்ணம் அத்த னையும் இந்த இயக்கத்திற்காக திராவி டத்திற்காக அறிஞர் அண்ணாவால், எப்படிப்பட்ட மறுமலர்ச்சி மாற்றம், வளர்ச்சி இவையெல்லாம் தமிழகத்தில் உருவாகியதோ, ஓர் இன எழுச்சி பிறந் ததோ,ஒரு தன்னம்பிக்கை வளர்ந்ததோ, இப்படி ஒரு கட்டுக் கோப்பான இயக் கத்தை அண்ணா உருவாக்கித் தந்தாரோ, அதை கட்டிக் காப்பாற்றுகிற ஆற்றல் உள்ள தலைவராக உள்ளவர் கலைஞர் என்ற காரணத்தால் அவரால் நாடு வாழும், அவரால் நம்முடைய சமுதாயம் வாழும் என்ற நம்பிக்கையோடு அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.

நான் இன்றைக்கு இங்கேயும் வாழ்த்துகிறேன். என்றைக்கும் வாழ்த்துவேன். சட்டமன் றத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகாலம், தொடர்ந்து உறுப்பினராக இருந்தவர். அவரும் நானும், சட்டமன்றத்திற்கு ஒன்றாகத்தான் போனோம். ஒரு முறை சட்டமன்றத்தை விட்டு நான் மேல வைக்குப் போனேன். ஒரு முறை சட்ட மன்றத்தை விட்டு நாடாளுமன்றத்திற்குப் போனேன். மறுபடியும் சட்டமன்றத் திற்கு தமிழகத்திற்கு வந்தேன்.

அவர் அப்படியல்லாமல், தொடர்ந்து சட்ட மன்றத்தில் இருந்து உறுப்பினராக, ஒரு கட்சி கொறடாவாக, எதிர்க்கட்சி துணைத் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக, அண்ணா அமைச்சரவை யில் இடம் பெற்றவராக, அண்ணா மறைந்த பின், முதலமைச்சராக 5 ஆவது முறை முதலமைச்சராக தமிழக வரலாற்றிலோ இந்திய வரலாற்றி லேயோ 5 ஆவது முறை முதலமைச்ச ராக ஆனவர்கள் யாரும் கிடையாது. ஒரு இயக்கத்திற்கு பாடுபாடமல் எவராலும் இப்படி 5 முறை முதல மைச்சராக ஆக முடியாது. மாட மாளிகையில் இருந்த அரசியல் கட்சிகளை சாதாரண மரத்தடிக்கு கொண்டு வந்தவர். பேரறிஞர் அண்ணா.

நாங்கள் நீதிக்கட்சியில் பணியாற்றி வந்தவர்கள்! தெலுங்கர், மலையாளி, கன்னடர் அத்தனை மொழி பேசுகிற மக்களிடையே தலைவர்களாக இருந் தவர்கள் ஒன்று சேர்ந்து நீதிக்கட்சியை உருவாக்கினார்கள். ஏன் அப்படி உரு வாக்கினார்கள். பார்ப்பனிய ஆதிக்கம் இருக்கிற வரையில் இந்த நாட்டினு டைய குடிமக்கள் முன்னேற முடியாது; விவசாயிக்கு வாழ்வு கிடைக்காது;

தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்காது; நம்முடைய பிள்ளை களுக்கு நல்ல கல்வி கூட கிடைக்காது; எனவே இந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டும் என்று அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 1917 ஆம் ஆண்டு குரல் கொடுத்து தொடங்கியது நீதிக் கட்சி.

நான் பிறந்தது 1922, நான் பிறக்க அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னாலே முதல் குரல் நீதிக்கட்சி குரல். அதற்கு ஓர் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னாலே கருத் தளவிலே டாக்டர் நடேசனார் திராவிட சங்கம் ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர் பெரியார் தலைவராக வந்த உடனேதான் சமுதாயத்திலே, மக்களிடத்திலே அந்த இயக்கம் பரவிற்று. பெரியார் மக்கள் தொண்டர். இன்னும் சொல்லப் போனால் அடித் தட்டு மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்பதற்காக வாதாடுகிற இயக்கத்தைத் தோற்று வித்தவர்.

பெரியாருடைய சுயமரியாதை இயக் கம் இந்த மேடையிலே இருக்கிற வர்களுடைய குடும்பங்களை எல்லாம், அவர்களுடைய பெற்றோர்களை எல்லாம்கூட, நம்முடைய வெங்கடே சனுடைய தந்தை சிறீராமுலுவைக்கூட, இந்த இயக்கத்திலே ஈடுபட வைத்தது. நாமெல்லாம் தாழ்ந்தவர்கள் அல்ல. இங்கே இருக்கிற வெங்கடேசனாக இருந்தாலும், வெங்கடாஜலமாக இருந் தாலும், வெற்றிச் செல்வனாக இருந் தாலும் அத்தனை பேர்களும் பார்ப்பனர் களுடைய அகராதியிலே, அந்த அகராதி யிலே அவர்கள் வைத்த வேதத்திலே சூத்திரர்கள்.

நான் உள்பட எம்.ஏ, படித்தாலும் சூத்திரன்தான், வக்கிலுக்குப் படித்தாலும் சூத்திரன் தான், டாக்டராக ஆனாலும் சூத்திரன் தான். நாம் சூத்திரன் அல்ல, அப்படிச் சொல்வது அயோக் கியத்தனம். பித்த லாட்டம் என்று எதிர்த்துக் குரல் கொடுத்து நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் பெரியார். அறிஞர் அண்ணா அவர்கள் அந்த நாளிலேதான் சொன்னார் என் வாழ் நாளில் நான் கண்ட ஒரே தலைவரும், கொண்ட தலைவரும் பெரியார் ஒருவர் தான் என்றார். அறிஞர் அண்ணா அவர் கள் அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடினார்கள். அந்தக் கொள்கை வளர் வதற்கு எப்படி பக்கு வமாக மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டுமோ அப்படிச் சென்றார்கள்.

அதே வழியிலே கலைஞர் அவர் களும் ஒரு பெரிய எழுத்தாளராக, திரைப்படத் துறையிலே 60 ஆண்டு காலம் அவர் பணியாற்றி இருக்கிறார். அவர் எழுதிய பராசக்தி தமிழ் நாட்டிலே ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கியது. அவர் எழுதிய மனோகரா தமிழிலே ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அவர் எழுதிய சிலப்பதி காரத்தைப் பின்பற்றி அவரால் உரு வாக்கப்பட்ட பூம்புகார் அறிஞர் அண்ணாவே பாராட்டினார்.

சிலப்பதிகாரம் ஒரு சிறப்புமிகுந்த இலக்கியம், 2000 ஆண்டுகளுக்கு முன் னாலே ஒரு பெரிய மேதையாக இருந்த இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் இப்போது என்னுடைய தம்பி கருணாநிதி அந்த சிலப்பதிகாரத்தையே பூம்புகாராக உருவாக்கி அந்த இளங்கோ அடிகள் பார்த்தால்கூட மகிழ்ச்சி அடைவார். அந்த அளவுக்கு அருமை யாகச் செய்திருக்கிறார்.

எவ்வளவு பாடுபட்டு, எவ்வளவு உழைத்து, எவ்வளவு கற்று, எத்தனை இரவு கண் விழித்து இதை கருணாநிதி செய்திருப் பார். அவருடைய தாயாரைக் கேட் டால் தெரியும். அவ்வளவு துன்பப் பட்டு, பாடுபட்டு, உழைத்து, தியாகஞ் செய்து இந்த இயக்கக்தை வளர்த்தவர் கருணாநிதி என்று பாராட்டினார்.

எதிர்க்கட்சி அம்மையார் இருக் கிறாரே அவர்கள் கூட்டத்தைக் கூட்டி வரச் சொல்லி, கூட்டத்திற்கு முன் னாலே தீய சக்தி, திருக்குவளை தீயசக்தி என்று கர்ஜித்திருக் கிறார். கருணாநிதி தீய சக்தியா? இல்லை, யார் குடும்பத் திற்காவது கேடு செய்திட்டாரா? இல்லை அந்த தீய சக்தி உன்னை கொட நாட்டிலே தூங்கவிடாமல் தடுத்ததா? (சிரிப்பு) அந்தத் தீய சக்தி இங்கே சென்னைக்குப் பக்கத்திலேயே சிறு தாவூரிலே பங்களா கட்டியபோது நிறுத்தியதா? அவர் அரசியல் கட்சி யிலே வந்தபோது எம்.ஜி.ஆரே அரசி யல் கட்சிக்கு வரவில்லை.

1945 ஆவது ஆண்டு பெரியாரிடத்திலே சீடராக, அவருடைய பயிற்சிப் பாசறையிலே இடம் பெற்றவர் கலைஞர் அதற்குப் பின்னாலே அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்து பணியாற்றினார். அப்பொழுது எம்.ஜி.ஆரே திராவிட இயக்கம் அல்ல, சுயமரியாதை இயக்கம் அல்ல.

கோயம் புத்தூரிலே கலைஞர் திரைப்பட எழுத்தாளராக இருக்கிறபோது அங்கே நடிப்புக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். கலை ஞரிடத்திலே பழகித்தான் எம்.ஜி.ஆர் அதற்கு முன்னாலே நான் நினைக்கி றேன் ஒருவேளை தவறாக இருக்கலாம் விபூதி பட்டை அணிந்து கதர் சட்டை போட்டு தேசிய உணர்வோடு இருந்தார். அவர் கெட்டவர் என்று நான் சொல்ல வில்லை. அவருக்குத் தெரிந்த அரசியல் காந்தி பெயரை, நேரு பெயரைச் சொல்வது. அவர் கலைஞரோடு பழகித் தான் அறிஞர் அண்ணாவோடு வந்து அதற்குப் பின்னர்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திலே சேர்ந்தார்.

இன்னும்கூட ஒரு உண்மையைச் சொல்கிறேன். முதன் முதலிலே ஒரு மாநாட்டிலே அவரைப் பேசச் சொன்னபோது அவர் என்னைத்தான் கேட்டார். நான் இன்ன இன்ன பேசலாமா என்று கேட்டார். அப்படிப் பேசுகிறபோது அவர் சொன்னார் பெண்கள் கற்பு இழக்கக்கூடாது அப்படின்னு நான் பேசப்போகிறேன் என்றார். நான் சொன்னேன் அதை நீங்கள் பேசக் கூடாது, இதெல்லாம் நாம பேசற சங்கதி இல்லை.

நீங்கள் கலைத் துறையிலே இருக்கிறீர்கள். உங்கள் துறையைப் பற்றி மற்றவர்கள் வேறுமாதிரி பேசுவார்கள். நாங்களும் பெரியார் வழியிலே வந்தவர்கள், நாங்கள் மதிக்கிறோம் அது வேறு. ஆக நீங்கள் சொன்னால் அது தப்பாகப் போய்விடும். கற்பு பற்றியெல்லாம் நீங்கள் பேசாதீர்கள். அப்படி அவர் வந்தவர் திராவிட முன்னேற்றக் கழ கத்திலே. அதற்குப் பின்னர் அண்ணா வினுடைய இயக்கத்தைப் பற்றிகூடத் தெரியாமல் தவறாகப் பேசி, அது ஒரு எதிர்ப்பாக வளர்ந்து, அவர் கூட்டத்தை விட்டு போய், சென்னைக் கடற்கரை யிலே பொதுக் கூட்டமே கலைந்து போனது, அப்படியெல்லாம் ஆனவர்.

அவர் ஒன்றும் கெட்டவர் அல்ல, அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவரையே இந்த இயக்கத்துக்குக் கொண்டு வந்த கலைஞர் பற்றி ஒரு தீய சக்தி என்றார். எம்.ஜி.ஆரை அழைத்து வந்தது தீய சக்தியா? இல்லை இந்த நாட்டிலே அவரால் ஏற்பட்ட கெடுதல் என்ன? அவர் தீட்டியுள்ள திட்டங் களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்ன? அப்படி ஒரு தலைவி இந்த நாட்டிலே அரசியல் நடத்துகிறார். அந்தத் தலைவி எழுப்புகிற பேச்சு என்னவென்று கேட் டால் கலைஞரை ஒழித்துவிட வேண்டும்.

கலைஞர் உன்னைக்கேட்டு அரசியலுக்கு வந்த வரா? அல்லது உன்னுடைய ஆதரவு பெற்று தலைவர் ஆனவரா? அல்லது உன்னுடைய கருத்துச் செல்வாக்காலே அவர் என்றைக்காவது சட்டமன்றத்திலே உன்னுடைய ஆதரவு பெற்று அதன் மூலமாக ஆட்சி நடத்துகிறாரா? தன்னு டைய ஆட்சி இல்லையென்ற உடன் கருணாநிதி ஆட்சியை ஒழிக்கவேண்டும். நாங்கள் சொல்லக்கூடிய வாதத்திற்கெல் லாம் அந்த அம்மாவாலே ஒன்றும் பதில் சொல்ல முடியாது. ஆனால் எப்படியா வது ஒரு வெறுப்பை உண்டாக்க வேண்டும்.

பத்திரிகைகளிலே அதற்குத் தகுந்தாற்போல் சில பத்திரிகைகள் இருக்கின்றன. அந்த அம்மையார் வருகிற கூட்டத்தைப் பற்றி பெரிய கூட்டம் என்று போடுகிறார்கள். அந்தப் பத் திரிக்கை செய்தியாளர்களுக்குக் கூட் டத்தைப் பார்த்தால் அளவு தெரியாதா? நான் ஒரு பத்திரிகையிலே, தினமலர் என்று நினைக்கிறேன் பெரிய அளவிலே அந்தப் படத்தை திருச்சியிலே ஜெய லலிதா பேசுகிற கூட்டம். பெரிய கூட்டம் அதைப் படம் போட்டிருக்கிறார்கள்.

நான் எண்ணிப் பார்த்தேன். ஒரு சின்ன கூட்டம் போட்டால் அதில் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று எங்களுக்கு ஒரு கணக்குத் தெரியும். ஒரு நூறு தலை இருந்தால் இருநூறு என்று கணக்குப் பண்ணுவோம். 200 புள்ளி இருந்தால் 400 பேர் என்று கணக்குப் போடுவோம். 500 புள்ளி இருக்கிற கட்டமாக இருந்தால் 1000 என்று கணக்குப் போடுவோம்

. அப்படிக் கணக்கிட்டால் 12,000 பேர் இருப்பார்கள். வெறும் 12,000 பேர் கூட்டத்தை பத்திரிகையாளர்கள் ஒரு மாபெரும் கூட்டம், கோவையிலே கூடிய கூட்டத்தைவிட இங்கே அதிக கூட்டம் அதைவிட இங்கே செலவு அதிகம். (சிரிப்பு) அப்படியே கூட்டம் கூடினால் என்ன?

அப்படி கூட்டம் கூடினால் அத்தனை பேரும் கட்சிக்காரர்களா? இந்தக் கூட்டத்தில் உள்ள அத்தனை பேர்களையும் என்னுடைய கட்சிக்காரர்கள் என்று எடுத்துக்கொள்ள லாமா? (கைதட்டல்) தி.மு.க உறுப்பினர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? (கைதட் டல்) என்னதான் பேசுகிறார்கள் பார்க்கலாம் என்று வேறு கட்சிக்காரர்கள் வந்திருக்க மாட்டார்களா? அல்லது நடு நிலையாளர்கள் இருக்க மாட்டார்களா? எல்லாக் கூட்டத்திலும் இருப்பார்கள். அந்தக் கூட்டத்திலும் இல்லை. அந்தக் கூட்டத்தில் எல்லாம் அவர்கள் அழைத்துக்கொண்டு வந்த கூட்டம்தான்.

அதனாலே பிரியாணி சாப்பிட்ட கூட்டம், செங்குட்டுவன் சொன்னதெல் லாம் சாப்பிட்ட கூட்டம். (சிரிப்பு) ஆனால் அந்தக் கூட்டத்தை பெரிய பெரிய பத்திரிகையிலே ஏதோ அவர் களுக்கு ஒரு பெரிய சக்தி இருப்பதைப் போல இந்தக் கூட்டத்தைப் பார்த்து கலைஞரோ தி.மு.கவோ மிரண்டு போய் விட்டது என்பதைப் போல ஒரு மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள் நாங்கள் உங்கள் அப்பனைப் பார்த்தே மிரளவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்து பெரும் பெரும் ஆரியக் கலாச் சாரத்து புலவர்களைப் பார்த்தே நாங்கள் மிரளவில்லை. பெருந்தலைவர் காமராச ரையே நாங்கள் எதிர்த்து நியாயத்துக் காகப் போராடியவர்கள் தான் எங்கள் மனதிலே பட்ட நியாயத்துக்கு. அதே காமராசரை தமிழன் என்பதற்காக குடி யாத்தத்திலே ஆதரித்தவர்கள் தான் நாங் கள்.

இராஜாஜியை நாங்கள் எதிர்க்க வில்லையா? பண்டித நேருவை எதிர்த்து கறுப்புக்கொடி பிடிக்கவில்லையா? நாங்கள் எதிர்த்துப் போராட மாட்டோம் என்பதல்ல, நாட்டிற்கு இந்த நேரத்தில் யாருடைய ஆட்சி தேவை, யார்மூலம் நாட்டைப் பாதுகாக்கலாம் அதைக் கருதுகிறார்கள். ஆனால் ஆரியம் அப்படி யல்ல. நம்மைப்போல நாட்டுக்காக அல்ல. அந்த ஒரு இனத்திற்காக எந்த இனத்தை ஒழிக்கலாம். எந்த ஆட்சியைக் கவிழ்க்க லாம். யாரை மாற்றலாம்.

கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்து 89 ஆவது ஆண்டு முதலமைச்சர். இரண்டாவது ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. கலைத்தவர் யார் தெரியுமா? அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட் ராமன். குடியரசுத் தலைவர் வெங்கட் ராமனுக்கு கலைக்க, கையெழுத்துப் போடுவதற்கு எப்படி அந்த மனப் பான்மை வந்தது. அந்த மனப்பான்மை உடைய இனத்தைச் சேர்ந்தவர் அவர். வேறு யாராக இருந்தாலும் என்ன சொல்லியிருப்பார்கள்.

அந்த ஆட்சி சரியாக இல்லாவிட்டால் பொதுமக்கள் தீர்ப்பு அளிக்கட்டும். இடையிலே நாம் எப்படி தலையிடுவது என்று கேட்டிருப்பார்கள். நம்முடைய மிகப்பெரிய இலக்கியம், தமிழ் மொழியினுடைய பெருமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய ஒரு நூல் திருக்குறள். அதனுடைய பெருமையைப் பற்றி பாரதியார் பாடுகிறபோது வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றார்.

மற்ற புலவர் கம்பரையோ, சேக்கிழாரையோ உலகத்திற்குத் தரமுடியாது, அது ஒரு தமிழ் மொழி இலக்கியம் மனித நேய இலக்கியம், சமத்துவ சமுதாய இலக்கியம், பண்பாட்டு இலக்கியம், எனவே அப்படிப்பட்ட அறநூல் உலகமெல்லாம் மதிக்கிற நூல் என தேசியக் கவி பாரதியார் பாரதிதாசன் பாடினால் ஆச்சரியம் அல்ல; கலைஞர் பாடினால் ஆச்சரியம் அல்ல; பாடியது பாரதியார். அந்த வள்ளுவனுடைய திருக்குறளைப் பற்றி வைதிக மனப்பான்மைக் கொண்டவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியுமா? ஆண்டாள் பாட்டிலே வைத்துச் சொல்லுகிறார்கள்.

நாங்கள் இறைவனுக்கு வழிபாடு செய்வதற்கு முன்னால் தீக்குறளைத் தீண்டோம். திருக்குறள் தீக்குறளாம். திருக்குறள் தீக்குறள் அதைத் தீண்ட மாட்டோம் என்றார்கள். அதேபோல் திராவிடம் என்று நாங்கள் தொடங்கிய காலத்திலே எல்லாம் இது தீரா இடம் என்றார்கள். இது என்றைக்கும் தீராத நந்தி என்றார்கள்.

தமிழ்நாட்டை தமிழன் ஆளுவதை விரும்பாத கூட்டம்!

இன்னும் சொல்லப்போனால் பெரியாரைப் பற்றி எவ்வளவோ கேவலமாகக் கண்டித்துப் பேசினார்கள். அண்ணாவைப் பற்றி பேசினார்கள், இன்றைக்கு கலைஞரைப் பற்றிப் பேசுகிறார்கள். அதையெல்லாம் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் அவர்களுக்கு எங்கிருந்து அந்த ஆதரவு வருகிறது, இன உணர்வு, இனப் பற்று. தமிழ்நாட்டை தமிழன் ஆளுவதைப் பற்றி விரும்பாத ஒரு கூட்டம் தமிழ்நாட்டிலே இருக்கிறது.

அவர்கள் வேண்டுமானால் நமக்கு எதிரே நம்மிடத்திலே அன்போடு மகிழ்ச்சியாகத்தான் பேசுவார்கள். ஆனால் மனதிற்குள் அன்பழகன் நல்லாத்தான் பேசினீர்கள் என்பான். அப்புறம் ஓட்டுப் போடுகிறபோது கேட்டால் சொல்வான் அதுவேறு, இது வேறுங்க என்பான். ஓட்டுப் போடுகிறபோது வேறு யாருக்கோதான் போடுவான். அவன் அப்படி எண்ணுகிற எண்ணத்தைப் பல பேர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிலே பல நல்லவர்கள் இருக்கிறார்கள்.

உத்தமர்கள் இருக்கிறார்கள், யோக்கியர்கள் இருக்கிறார்கள், தியாகிகள் இருக் கிறார்கள், அவர்களை நாங்கள் வணங்குகிறோம். ஆனால் அயோக்கியத்தனத்திற்குப் பிறப்பிடமே அந்த இனம்தான். அரசியலிலே பித்தலாட்டத்தை வளர்த்தது அந்த இனம் தான். பெரியாரோ, அண்ணாவோ பெற்றிருக்க வேண்டிய அந்தப் பெருமையை அந்தக் காலத்திலேயே பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது அந்த சக்திதான். திரு.வி.க வைப் போல ஒரு பண்பாளரை அரசியலிலே வளரவிடாதவர்கள் அவர்கள்தான்.

இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொன்னால், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை அரசியலைவிட்டு ஒதுக்கி வைத்தது அந்தக் கூட்டம்தான். ஆக அப்படி ஒரு காலம். அதையெல்லாம் எதிர்த்து நின்று வெற்றி பெற்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்தான் கலைஞர். அவரை எதிர்ப்பதற்கு இந்த ஒரு சக்தியைத் தவிர வேறு சக்தி கிடையாது என்ற காரணத்தினால்தான் அந்த அம்மையாரைப் பத்திரிகைகளிலே தூக்கி விடுகிறார்கள். பிரமாதமாகத் தூக்குகிறார்கள்.

அந்த அம்மா அரசாங்க நிலத்தை டான்சி நிலத்தை வாங்கிவிட்டு நீதிமன்றத்திலே என்ன சொன்னார்கள் நான் வாங்கவில்லை என்றார்கள். இந்தக் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்களே அது யாரு என்று கேட்டார்கள். அதுவும் நான் இல்லையென்றார்கள். உச்சநீதிமன்றத் திலே என்ன சொன்னார்கள் அந்த அம்மா நிலத்தை வாங்கியதும் தவறுதான் வாங்கவில்லை என்று சொன்னது அதைவிட தவறு, அந்தக் கையெழுத்தை தன் கையெழுத்து இல்லையென்று, தானே கையெழுத்து போட்டு பொய் சொல்வது ஒரு முதலமைச்சருக்குக்கான தகுதிக்கான அழகு இல்லை.

அவர்களை நான் இரண்டு ஆண்டுகள் தண்டித்ததற்காக நான் அதைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் விடுதலை செய்கிறோம் என்று உச்சநீதிமன்றத்திலே சொல்லி ஒரு முதல மைச்சரைத் தண்டிக்க வேண்டாம் என்று ஒரு வரலாற்று அடிப்படையிலே இந்தியாவிலே முதலமைச்சரையே தண்டித்தோம் என வேண்டாம் என முதலமைச்சராக இருந்த நிலையிலே தண்டிக்க வேண்டாம் என விட்டு விட்டார்கள். விட்டுவிட்ட காரணத்தினாலே நீ யோக் கியன் ஆகிவிடுவாயா? நீதிமன்றத்திலே உங்களை விட்டுவிட்டார்கள், ஆனால் நீதிமன்றத்தில் சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் அந்தப் பதிவிலே இருக்கிறதே அதை என்ன செய்யப்போகிறீர்கள்?

அதேபோல, ஒரு பிறந்த நாள் நேரத்திலே அம்மை யாருக்கு இரண்டு கோடி ரூபாய் நன்கொடை வந்தது. அந்த இரண்டு கோடி ரூபாய் நன்கொடை ஒரு முதலமைச்சருக்கு வந்தால், கலைஞராக இருந்தால் என்ன செய்வார்? அண்ணாவாக இருந்தால் என்ன செய்வார்? காமராசராக இருந்தால் என்ன செய்வார் என்றால், முதலமைச்சர் பெயரால் வந்திருக்கிறதப்பா? அரசாங்கத்திலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி முதலமைச்சர் நிவாரண நிதி என்று ஒன்று இருக்கிறது அதிலே போடுவார்கள். இந்த அம்மா என்ன செய்தார்கள்.

வேறு எங்கு போடலாம் என்று விசாரித்தார்கள். செய்யாறிலே ஒரு வங்கி இருக்கிறது அங்கே போடலாம் என்றார்கள். அங்கே யார் மூலம் போடலாம் என்று, அங்கே ஒரு ஆளை நியமித்து அங்கே அவர்கள் பெயரால் அந்தப் பணத்தைப் போட்டார்கள். அதுதான் இப்போது வழக்கு நடக்கிறது. அரசியல் பிழைப்பு நடத்த

ஜெயலலிதாவை புகழும் கூட்டம்!

அந்த வழக்கை நடத்தவிடாமல் திரும்பத் திரும்ப இங்கே பேசிய நம்முடைய செங்குட்டுவன், மற்றவர்கள் எல்லாம் சொன்னது மாதிரி இழுத்தடித்து இழுத்தடித்து இவ்வளவு நாள் ஆகி, இப்பொழுதும் அந்த வழக்கு நடக்கிறபோது, திரும்பவும் உயர்நீதிமன்றத்திற்குப் போய் என்ன கேட்கிறார்கள்? வழக்கைத் தொடரவிடக் கூடாது. நான் திருடுவேன், கையைப் பிடிக்கக்கூடாது. நான் கொள்ளையடிப்பேன், கேள்வி கேட்கக்கூடாது.

என் மேலே குற்றச்சாட்டு இருக்கலாம் ஆனால் என்னை விசாரிக்கக்கூடாது. ஒருவேளை அந்த அம்மா என்ன சொல்லுவார்கள் நான் பிராமணர் என்று தெரிந்தும் என்மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு சொல்கிறார்கள். அந்தக் காலத்திலே இது எப்படி என்று தெரியுமா? பிராமணன் திருடினால் அவனைத் தண்டிக்கக்கூடாது. ஆகவே அவர் தீய சக்தி என்று சொல்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அப்படிச் சொன்னால் அதைக் கேட்க பல பக்தர்கள் கிடைப்பார்கள். அதை நம்புவதற்கு கட்சிக் காரர்கள் கிடைப்பான்.

அதை நம்புவதற்கு சில தீவட்டிகள் கிடைப்பார்கள். அதை நம்பினால் தான் எம்.எல்.ஏ ஆகலாம் என்றால் நிச்சயம் நம்புவான். அதை நம்பினால் மந்திரியாவேன் என்றால் அதுதான் உண்மை என்பான். பிழைப்பு நடத்துவதற்கு அரசியலிலே சில பேர் இருக்கிற இந்தக் காலத்தில் அப்படி ஏமாந்து போகிறவர்கள் பலபேர் இருப்பார்கள். ஆனால் பொதுமக்கள் எது உண்மை எது நியாயம் என்பதை திண்ணையிலே உட்கார்ந்து வாதித்துப் பேசி உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே கலைஞருடைய அரசு எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருக்கிறது என்பதை வேறு மாநிலத்திலே உள்ள முதலமைச்சர்கள் எல்லாம் கூட ஆச்சரியப்படுகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு தேவையான சலுகைகள்! அது மட்டுமா? இடஒதுக்கீடு நூற்றுக்கு மூன்று புள்ளி அய்ந்து விழுக்காடு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு, அதிலும் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கியிருப்பது அவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய ஒரு நன்மை.

உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். அந்தக் காலத்திலே காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் முஸ்லிம் லீக்கினுடைய தலைவராக இருந்த காலத்தில் பெரியாரிடத்திலே அவருக்குப் பழக்கம், பற்று, அண்ணாவிடத்திலே அவர்களுக்குப் பழக்கம் நானும் பழகியிருக்கிறேன், கலைஞரும் பழகியிருக்கிறார். அவர் படுக்கையிலே இருந்தபோது அவருக்கு 75 வயதிலே கொஞ்சம் நோய் அதிகமாகி படுக்கையிலே இருந்தார்.

அப்போது அவரைப் போய் பார்த்தபோது அன்று பார்த்துச் சொன்னார் கலைஞர் நீங்கள் தான் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு பாதுகாவலராக இருக்க வேண்டும்.(கைதட்டல்) உங்களை நான் மிகவும் நம்புகிறேன். எங்கள் கொள்கை வழியிலே எங்களோடு உடன்பட்டவர்கள் நீங்கள். எங்கள் இஸ்லாமை மதிப்பவர்கள் நீங்கள். நீங்கள் எங்களுடைய பிள்ளை களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் எங்கள் இனத்தைப் பாதுகாக்கவேண்டும். நான் அதற்காகத்தான் உங்களோடு கூட்டணி வைத்தேன். வெறும் எம்.எல்.ஏ பதவிக்காக அல்ல என்று சொன்னார். அது இன்றைக்கும் கலைஞரால் நிறைவேற்றப்படுகிறது.

அதேபோல நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்களேயானால், அருந்ததியர் சமூகம், அருந்ததியர் சமூகம் என்றால் ஆதிதிராவிடர்களிலே அவர்கள் இன்னும் தனிப்பட்ட ஒரு பிரிவாக பாதிக்கப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்ட வர்கள் அதிலும் அவர்கள் ஏதோ சில காரணங்களால், ஒரு சூழ்நிலையால் எப்படியோ அவர்கள் செய்கிற ஒரு தொழில் காரணமாக இழிவான நிலையிலே ஆளாகியிருந்தார்கள். அவர்கள் படிப்பு வசதி பெறாமல் இருந்தார்கள். அவர்களுக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.

வன்னிய சமுதாயத்திற்கு கலைஞரை விட நன்மை செய்தது யார்?

வன்னிய சமூகத்திற்கே முதன்முதலாக மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் தனி இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய அளவிற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்தவர் கலைஞர் தான். இப்போது ஒரு அரசியல் தலைவர் இருக்கிறார், செவ்வாய்க் கிழமை ஒரு கட்சியில் இருப்பார், புதன் கிழமை வேறு ஒரு கட்சியிலே இருப்பார், கிழமை அதேதான் என்பார். (கைதட்டல்) அவர் சொல்லியிருக்கிறார் சமூக நீதியைப் பற்றி பேச கலைஞருக்கு என்ன உரிமை இருக்கிறது, தகுதி இருக்கிறது.

நாங்கள் பிறந்ததற்குப் பிறகு பிறந்தவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து நீங்கள் எப்படி எங்களைக் கேட்காமல் பிறந்தீர்கள் என்றால், நீங்கள் பிறக்க வில்லையே நாங்கள் என்ன பண்ணுவது.(கைதட்டல்) நீங்கள் பிறந்திருந்தால் உங்களை கேட்டுவிட்டு நாங்களும் பிறந்து இருப்போம். நாங்கள் பிறந்த பிறகு நீங்கள் கேட்காமல் பிறந்திருக்கிறீர்கள். சமூக நீதியை இவர்களா காப்பாற்றுகிறார்கள்? அரசியலிலே எதை வேண்டு மானாலும், யார் வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் தெளிவு ஏற்படாது என்பது உண்மை என்றாலும் அவர்கள் எல்லாம் அரசியல் நோக்கத்திற்காகப் பேசுகிறார்கள். அவர்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள், அதை எதிர்க்கிற கட்சியையும் ஆதரிப்பார்கள். கம்யூனிஸ்டை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். அவர்களுடைய நிலையிலே நாம் இருக்க முடியாது. இப்போதுகூட சிலபேர் மேடையிலே பேசுகிறபோது சில கட்சியைச் சேர்ந்தவர்கள் இத்தனை இடங்கள் எங்களுக்கு வேண்டும் என்று பேசுகிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் அவர்கள் கட்சித் தலைவரி டத்திலே முழு நம்பிக்கை இல்லை. நம்முடைய கட்சியிலே அப்படி ஆளுக்கு ஆள் அப்படிப் பேசமாட் டார்கள். கலைஞரிடத்திலே நம்பிக்கை உள்ள கட்சி, கலைஞர் தான் பேசுவார், அவர் சொல்லித்தான் பேசுவார். ஆக அப்படியெல்லாம் அவர்கள் பேசினாலும்கூட திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல கடமை கண்ணியம் காப்பற்றுகிற கட்சி மட்டுமல்ல, கட்டுப்பாட்டைக் காப்பாற்றுகிற கட்சி அந்தக் கட்டுப்பாடுதான் நாம் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய சக்தியை நமக்குத் தந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டுமானால் கழகத் தோழர்கள் கட்டுப்பாட்டோடு கலைஞருடைய தலைமையிலே தொடர்ந்து பணியாற்ற உறுதி எடுக்க வேண்டுமென்று கேட்டு, வாழ்க கலைஞர் என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு நிதியமைச்சர் பேராசிரியர் உரையாற்றினார்.

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் முதல்வர் கலைஞர் - துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர் கள் நேற்று (30.8.2010) தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக் கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் அவர் கள் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கலை ஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தவறு வதில்லை என்று கூறி னார்.

எப்போதும், சிறு பான்மை மக்களின் பாது காப்பு அரணாக விளங்கு பவர் தலைவர் கலைஞர். நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய கனிவான கோரிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பி தழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தி னர் என்று குறிப்பிடுகின் றீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல.

நான் உங்களில் ஒருவன் நான் உங்களின் ஒரு வனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்று வருகி றேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களில் ஒருவனாக என்னை கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண் டும்.இங்கு பேசிய பேராசி ரியர் காதர் மொய்தீன் அவர்களும், தம்பி தயாநிதி மாறன் அவர் களும் ஒன்றை குறிப்பிட் டனர்.

தலைவர் கலைஞர் ஆட்சி உங்களால் உரு வாக்கப்பட்ட ஆட்சி என்றும், உங்களுக்காக நடக்கும் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்கள். எதிர் கட்சித் தலைவர் நம் முடைய ஆட்சியைப் பற்றி கூறும் போது மைனாரிட்டி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு தலைவர் கலை ஞர் அவர்கள் இது மைனாரிட்டி ஆட்சி தான். இஸ்லாமிய பெரு மக்கள் போன்ற மைனா ரிட்டி மக்களுக்கான ஆட்சி என்று தொடர்ந்து பதில் கூறுவார்.

சாதனைப்பட்டியல்

கலைஞர் அவர்கள் எத்தனையோ சிறப்பான திட்டங்களை சிறு பான்மை மக்களுக்காக வகுத்து நிறைவேற்றி வருகிறார். தலைவர் கலை ஞர் அவர்கள் எப்போ தெல்லாம் ஆட்சிக்கு வரு கிறாரோ, அப்போதெல் லாம் பல சாதனைகளை செய்து வருகிறார். அந்த சாதனை குறிப்புகளை பார்க்கும் போது, அது ஒரு பெரும் பட்டியலாக உள்ளது.

1969ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக் கப்பட்டது. அதனை கடந்த அ.தி.மு.க. அரசு 2001 இல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடு முறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கலைஞர் அவர்களின் கழக ஆட்சியில் தான். 1973 ஆம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தான்.

1974ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசி னர் மகளிர் கல்லுரிக்கு கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டியதும் தலைவர் கலைஞர்தான்.

1989ஆம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாய மக்கள் பெரும்பயன் எய் தும் வகையில் சிறுபான் மையினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது.

1998 இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என் பது 2200 ஆக உயர்த்தப் பட்டு, 2008 இல் 2400 ஆகவும் உயர்த்தப்பட் டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999ஆம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப் பப்பட்ட முறையை கை விட்டு, 1999 முதல் விண் ணப்பிக்கும் அனைவ ருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் தலைவர் கலைஞர்தான்.

1999ஆம் ஆண்டு பிற் படுத்தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று உருவாக் கியவர் கலைஞர். ஆனால், செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 2003இல் சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தை பிற் படுத்தப்பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006இல் ஆட்சிப் பொறுப் பிற்கு வந்த கலை ஞர் மீண்டும் சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் தி.மு.க. அரசு தொடர்ந்து உதவி வருகின்றது.

2000 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப் பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங் கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக் கீட்டில் இஸ்லாமியர்க ளுக்கு, 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை 15.9.2007இல் அண்ணா அவர்க ளின் 99ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர் அவர்களே.

2008 இல் சீறாப் புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டய புரத் தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் கலைஞர்தான். உலமாக் கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத் தப்பட்டது. தமிழக மேலவையிலும், டில்லி மேலவையிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம் பெறச் செய்ததும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக முதல் வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர் கள் எப்போதும் இல் லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த் தவரும் கலைஞர் தான். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடு பட்டு, சிறுபான்மை மக் களின் பாதுகாப்பு அர ணாக விளங்கும் தலைவர் கலைஞருக்கும், கழக ஆட்சிக்கும் பக்க பல மாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை எல் லாம் நான் அன்போடு கேட்டு கொள்கிறேன்.

சிறப்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த திருப்பூர் அல்தாப் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம். இவ் வாறு துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வன்முறையை கட்டவிழ்க்க கம்யூனிஸ்ட்கள் திட்டம்


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட இயக்கம், தி.க.வாக போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி, தி.மு.க என்ற நிலையில் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் அமைதியான முறையில், அறவழியில் நடத்தின.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த போதுகூட, 1938ம் ஆண்டுவாக்கில் சென்னை, தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் அறப்போர் வீரர்கள் அணிவகுத்து நின்று முதல் அணியிலே யார் யார் என்று பெயர் குறிப்பிடப்பட்டு, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பள்ளியின் வாசலில், குறிப்பிட்ட தோழர்கள் மாத்திரம் அமைதியான முறையில் மறியல் செய்து கைதாகியிருக்கிறார்களே தவிர, மொழிப் போராட்ட வீரர்கள், பள்ளியை முற்றுகையிடுவார்கள் என்றோ அல்லது இந்தியைக் கட்டாயப்படுத்திய அன்றைய ஆட்சியாளர்களுடைய கோட்டையை முற்றுகையிடுவார்கள் என்றோ கட்சித் தலைமையினால் அறிவிக்கப்படவுமில்லை. அப்படியொரு போராட்டத்தில் ஈடுபடவும் இல்லை.
ஆனால், கம்யூனிஸ்ட்கள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள், அடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள், அதற்கடுத்து, மறியல் என்பார்கள், அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் முற்றுகை என்பார்கள்.
அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு, அவர்கள் அணிவகுத்து வரும் படைக்கு முரசு கொட்டி வரவேண்டும் என்றும், முற்றுகைப் போராட்டத் தளபதிகளுக்கு முகமன் கூறி வரவேற்பு வழங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள்.
இப்படித்தான் கம்யூனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கைப் பேரணிகளாக மாறி கோட்டை முற்றுகை என்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அவர்கள் வைத்த கொள்ளிதான், இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்துவிட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம்.
தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறைச் சேட்டைகளை, கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிட்டு, தி.மு.க அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால்தான் அதை வைத்துக் கொண்டு தேர்தலில் தாங்கள் நிற்கவோ அல்லது தங்கள் கூட்டணித் தலைவி வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு, திட்டங்களைத் தீட்டுகின்றனர், தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.
கடந்த 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதற்கு எந்த அரசாவது ஏன் மேற்கு வங்கம், கேரளா போன்ற கம்யூனிஸ்ட் அரசுகளாவது முன் வந்தது உண்டா?
ஆனால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கதையாக தமிழ்நாட்டில் மாத்திரம் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்றும், அதற்கு கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும், அதைக் காவலர்கள் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறை பெரிதுபடுத்தி, தமிழக அரசின் உச்சகட்ட அராஜகம் என்று ஊருக்கு ஊர் சொல்லுவோம் என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகை ஜனநாயகம் என்று எனக்கு தெரியவில்லை.
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் அவர்களுக்கு 3 முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி, மற்றும் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர், சமையல் உதவியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்திற்குப் பதிலாக சிறப்பு கால முறை ஊதியம் வழங்க இந்த ஆட்சிக்காலத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. முதல் முறையாக வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகைக் கால முன்பணம், ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சியில்தான் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியிலேதான் இவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு காலத்தில் விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன.
சத்துணவு அமைப்பாளர்கள், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் தமிழகத்தில் தற்போது பெற்று வரும் ஊதியத்தின் அளவு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம். இந்நிலையில் அவர்கள் முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா?
கோட்டையை முற்றுகையிட வேண்டிய அளவிற்கு என்ன நடந்து விட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டுவரப்பட்டதைப் போல தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதா? அந்த ஆட்சியில் இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றே தெரியாத அளவிற்கு நிலைமை இருந்ததே, அது போல இப்போது நடக்கிறதா?
எதற்காக முற்றுகை போராட்டம்? கடந்த ஆண்டு 21&11&2009ல் சத்துணவு பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் எம்.பழனிநாதன், வரதராசன் போன்றவர்கள் எல்லாம் வள்ளுவர் கோட்டத்திலே பல்லாயிரக்கணக்கான சத்துணவு பணியாளர்கள் திரண்டிருந்து எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடத்தினார்களே, அந்த அலுவலர்கள் எல்லாம் உண்மையை அறிய மாட்டார்களா?
அவர்கள் மத்தியில் நான் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக பதினைந்து சலுகைகளை அறிவித்த போது அந்த மண்டபமே எதிரொலிக்கின்ற அளவுக்கு அவர்கள் கையொலி செய்யவில்லையா? அந்த விழாவிலே பேசியது மாத்திரமல்லாமல், அந்தச் சலுகைகளுக்காக நன்றி தெரிவித்து, பழனிநாதனும், சூரியமூர்த்தியும் அறிக்கைகள் விட்டார்களே?
ஏன், சத்துணவு பணியாளர்களுக்காக 2006ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப் பேற்ற சில மாதங்களில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டபோது சட்டப் பேரவையிலேயே 2 கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ், பா.ம.க. கட்சியினரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துப் பேசினார்களே.
உண்மையிலே சொல்லப்போனால், சத்துணவுப் பணியாளர்கள் அனைவரும் நல்ல மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில சங்கத்தினர் மட்டும், அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், ஒரு சில கோவில்களைப் பார்த்துவரலாம் என்று கூறி ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகிறார்களே தவிர வேறல்ல.
வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது அல்லது வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற சலுகைகள் கிடைத்துள்ளதா என்பதைசத்துணவு ஊழியர்கள் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Monday, August 30, 2010

மூப்பனாரின் 9வது ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி


மறைந்த ஜி.கே. மூப்பனாரின் 9வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று (30.08.2010) பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தவைர் தங்கபாலு, திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி 'மூப்பனாரின் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகத்தை திரைப்பட பாடலாசிரியர் வாலி வெளியிட்டார்.


முன்னதாக மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி தீப்பந்தம் ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவில் தீப்பந்தத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.


மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தீர்மானம்


இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட தொகுப்பு வீடுகளுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை உயர்த்தியதற்காக முதலமைச்சர் கலைஞருக்கு பாராட்டுத் தெரிவித்து மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி. சித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.செங்குட்டுவன், டி.உதயசூரியன், சி.கோவிந்தசாமி, எஸ்.குணசேகரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலர் க. அலாவுதீன், நிதித் துறை முதன்மை செயலர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டி.உதயசந்திரன், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பாக்கியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளுக்கு மாநில அரசின் பங்குத் தொகையான 11 ஆயிரத்து 250 உடன் 15 ஆயிரம் உயர்த்தி, 26 ஆயிரத்து 250 ஆக நிர்ணயம் செய்து இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசின் பங்குத்தொகையுடன் ரூபாய் 60 ஆயிரமாக கடந்த 1.4.2010 முதல் தமிழக முதலமைச்சர் கலைஞர் உயர்த்தி வழங்கினார்.

தற்போது மேலும், 15 ஆயிரம் உயர்த்தி மாநில அரசின் பங்குத்தொகையாக 41 ஆயிரத்து 250 வழங்கப்படும் என்று அறிவித்து, ஒரு குடியிருப்பு கட்டுவதற்கு மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் கலைஞருக்கும், மாநில அரசின் பங்குத் தொகையினை உயர்த்தியதற்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் முன்மொழிந்தார்.

இத்தீர்மானம் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களான மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பொன்விழா சுய வேலை வாய்ப்புத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்,

முழு சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை தமிழகத்தில் திறம்பட செயல்படுத்தியமைக்காக உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்ததற்காகவும், அகில இந்திய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்காகவும் இக்கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு 3 பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ததுஉச்சநீதிமன்றம்



தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் மூன்று மாணவியர் கொல்லப்பட்ட வழக் கில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி யது. வழக்கில் சம்பந்தப் பட்ட 3 முக்கிய குற்ற வாளிகளுக்கும் வழங் கப்பட்ட தூக்குத் தண் டனையை உச்சநீதிமன் றம் உறுதி செய்து இன்று (30.8.2010) தீர்ப்பு வழங்கியது.

கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக் கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீதி மன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, 2000 ஆம் ஆண்டு பிப்ர வரி 2 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இதனால், அ.தி. மு.க., தொண்டர்கள் வன்முறையில் இறங்கி னர். கோவை வேளாண் பல்கலைக் கழக மாண வியர், தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட் டியில் பேருந்தில் சென்ற போது, அ.தி.மு.க., தொண்டர்கள் பேருந்தை தீ வைத்துக் கொளுத்தினர்.

மேல்முறையீடு

இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற மூன்று மாணவியர் தீயில் கருகி பலியாயினர். இந்த வழக்கில் சேலம் நீதி மன்றம், 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் முனியப்பன், நெடுஞ் செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்ட னையும் அளித்து தீர்ப்பு கூறியது. இதே ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட் டது. சாட்சியங்களை மொழி மாற்றம் செய் வதில் காலதாமதமானது. இதற்கிடையே இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசு தரப் பில் அல்டாப் அகமது ஆஜரானார். குற்றவாளி களுக்கு விதிக்கப்பட் டுள்ள தூக்குத் தண்டனையை ஆதரித்து அல்டாப் அகமது வாதாடினார். அரசியல் தலைவ ருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொண்டர்கள் உணர்ச்சி வயப்படுவது இயல்பு தான். ஆனால், பேருந்தை எரித் ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. பிறர் சொல்லக்கேட்டு இவர் கள் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டுள் ளது. எனவே, இவர்கள் மீதான தண்டனை ரத்து செய்ய வேண்டும்' என, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தூக்குத் தண்ட னையை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி யுள்ளது.

நீதிபதிகள் தீர்ப்பு

அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சமூகத்துக்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மிகவும் கொடுமையான செயல். உச்சநீதிமன்றம் மிகவும் அரிதான வழக்கில்தான் தூக்குத் தண்டனை வழங்கி வருகிறது. இதுவும் ஓர் அரிதான வழக்கு.

எனவே 3 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மாணவிகள் வந்த சுற்றுலா பேருந்துக்கு தீ வைக்கப்பட்டபோது காவல்துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் மேலும் தண்டனை பெற்ற 25 பேரும் உயர்நீதிமன்றம் அறிவித்தபடி தண்டனையை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்யலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.

பலியான மாணவிகளின் பெற்றோர் கருத்து

பேருந்து எரிப்பு சம்பவத்தில் பலியான கோகிலவாணியின் தந்தை தற்போது, நாமக்கல்லில் கோழிப் பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து வீராச்சாமி கூறியதாவது,

தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் சம்பவம் நடந்தது கடந்த 2000ம் ஆண்டு. தீர்ப்பு 2010ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பாக இருக்கிறது. பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கண்கூடாக நடந்த சம்பவத்துக்கு இவ்வளவு காலம் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர் என்றார்.


மேலும் பேசிய அவர், இந்த தீர்ப்புக்காக பாடுபட்ட அரசாங்கத்துக்கும், மாணவ மாணவிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் இந்த சம்பவத்தில் நடைபெறக் கூடாது என்றார்.

தீர்ப்பு குறித்து ஹேமலதாவின் தாயார் காசியம்மாள் கூறுகையில், வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் நான் சந்தோஷம் அடைகிறேன். என்னைப் போல பெற்றோர்கள் இனி இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க கூடாது. இந்த தண்டனையை நிறைவேற்றினால் ஓரளவாது இனி குற்றங்கள் குறையும்.


ஹேமலதாவின் உறவினர் சந்திரசேகர் கூறுகையில், காயப்பட்ட மனதுக்கு சிறிய ஆறுதலான விஷயம்தான் இந்த தீர்ப்பு. எதிர்காலத்தில் எந்த குழந்தைகளுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றார்.

காயந்திரியின் தந்தை வெங்கடேஷ் கூறுகையில், இன்று காலையில் இருந்தே பதட்டத்துடனும், வேதனையுடனும் இருந்தோம். இந்த தீர்ப்பு மனநிறைவை அளிக்கிறது. இது சரியான தீர்ப்பு. சேலத்தில் கொடுத்த தீர்ப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்குக்காக உழைத்த வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

வீரமணி, இல.கணேசன் கருத்து

உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது, வளர வேண்டிய பிள்ளைகள் தீயில் கருகியதை நினைக்கும்போது, அவர்கள் பெற்றோர்கள், உடன் இருந்த மாணவிகளுன் மனநிலையை பார்க்கும்போது, நிச்சயமாக இந்த தண்டனை ஒரு சமூக விரோதத்துக்கு எதிரானக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கட்சிக் கண்ணோட்டமோ, ஜாதி மத கண்ணோட்டத்துக்கோ இடமே இல்லை. சட்டக் கண்ணோட்டம் மட்டும் அல்ல. இது நியாயக் கண்ணோட்டம் என்றார்.


பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், சட்டம் தனது பங்கினை சரியாக செய்துள்ளது. தாமதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் பயணம் செய்யக் கூடிய வாகனத்தை, உணர்ச்சி மேலிட்டு தாக்கிய காரணத்தால் ஏற்பட்ட அந்த நஷ்டத்திற்கு எதுவுமே ஈடாகாது என்றார்.





திருக்குவளையை தத்தெடுத்தது அண்ணா பல்கலை. கல்லூரி


நாகை மாவட்டம், திருக் குவளையில் திருச்சி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல் லூரி உள்ளது. இக்கல் லூரி சார்பில் முன்மா திரி கிராம தொழில் நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின்படி, திருக் குவளை ஊராட்சியை தத்தெடுக்கும் விழா முதல் வர் கலைஞர் இல்லத் தில் நேற்று நடந்தது.

விஜயன் எம்.பி. தலைமை வகித்தார். விழாவில், திருச்சி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் பேசியதாவது: முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக் குவளை கிராமத்தை தத்து எடுத்து அப்பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில், திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் மகிழ்ச்சி அடை கிறது. உலகத்தில் எரி சக்தி தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்னும் 40 ஆண்டு களுக்குதான் பெட்ரோ லிய பொருள்கள் இருக் கும் என்று கூறப்படு கிறது. நாம் மாற்று எரி சக்தியை பயன்படுத்த வேண்டும். வீட்டிலேயே சூரிய ஒளியை கொண்டு சமையல் செய்யலாம். மின் விளக்கு எரியவிட லாம். இதனடிப்படை யில் பொறியியல் கல் லூரி சார்பில், திருக் குவளை தெருக்களில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் அனைத்து தெரு விளக் குகளும் சோலார் விளக் காக மாற்றப்படும். தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள் ளியில் மழை நீரை குடி நீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளுக்கும் இத்திட் டம் விரிவுபடுத்தப்படும். குளங்களில் இருந்து கையால் நீர் இறைக்கும் கருவி குறைந்த செலவில் தயாரிக்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் மிச்சமாகும் உணவுப் பொருட்கள், காய்கறி கழிவுகளில் எரி வாயு தயாரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. ரூ.15 ஆயிரம் செல வில் வீட்டில் கழிவறை கட்டப்பட்டு, சேமிக்கப் படும் மனித கழிவை உரமாக மாற்றும் திட்ட மும் உள்ளது. அரசும், தொண்டு நிறுவனங் களும் முன் வந்து நிதி தந்தால், இத்திட்டத்தை விரிவாக செய்யலாம்.

Sunday, August 29, 2010

இலங்கைத்தமிழருக்கு நிதி: கலைஞரை சந்தித்த பிறகு நாராயணசாமி


இ‌ந்‌திய வெளியுறவு‌த்துறை செயல‌ர் ‌நிருபமா ரா‌வ், நாளை முத‌ல் இல‌ங்கை‌யி‌ல் 3 நா‌ட்க‌ள் பயண‌ம் மே‌ற்கொ‌ள்‌கிறா‌‌ர்.

இல‌ங்கை செ‌‌ல்லு‌‌ம் அவ‌ர் த‌மிழ‌ர்களை சொ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் குடி அம‌ர்‌த்துவது ப‌ற்‌றி அ‌ந்நா‌ட்டு அரசு‌ட‌ன் ‌விவா‌தி‌‌க்‌கிறா‌ர்.

இதையடு‌த்து வவு‌னியா, யா‌ழ்பாண‌ம், ‌தி‌ரிகோணமலை‌யி‌ல் உ‌ள்ள ‌நிவாரண‌ப் முகா‌மிக‌ளி‌ல் ‌நிருபமா ரா‌வ் ஆ‌ய்வு நட‌த்து‌கிறா‌ர்.



வட‌க்கு, ‌கிழ‌க்கு மாகாண‌ங்க‌ளி‌ல் ‌‌நிவாரண‌ப்ப‌‌ணிக‌ள் கு‌றி‌த்து அவ‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ள்‌கிறா‌ர்.மேலு‌ம் அ‌க்டோப‌ரி‌ல் அயலுறவு அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா கொழு‌ம்பு செ‌ல்வத‌ற்கான ஏ‌ற்பாடுகளையு‌ம் அவ‌ர் கவ‌னி‌க்‌கிறா‌ர்.


இந்நிலையில் இன்று மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாம் சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.


இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ‘’இலங்கைத்தமிழர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தமிழர்கள் வீடு கட்ட 1,500 கோடி வட்டியில்லா கடன் வழங்குகிறது மத்திய அரசு.

இலங்கை தமிழர் பகுதியில் மின்சார உற்பத்திக்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார்.


கலைஞர் வீட்டையே கொடையாகக் கொடுத்தபிறகு ஆக்கிரமிப்பு எதற்கு செய்யப் போகிறார் - எதிர்க்கட்சிகளுக்கு மேயர் விளக்கம்


தமி ழக முதல்வர் கலைஞர் தனது வீட்டையே கொடை யாகக் கொடுத்தபிறகு, ஆக்கிரமிப்பு எதற்கு செய்யப் போகிறார் என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கிண்டியில் உள்ள அய். டி.சி. நிறுவனத்திடமி ருந்து பதினான்கரை கிரவுண்டு திறந்தவெளி நிலத்தை கையகப்படுத்தி மேயர் மா.சுப்பிர மணியன் கேள்வி கிண்டி யில் உள்ள அய்.டி.சி. நிறுவனம் சென்னை மாந கராட்சிக்கு வழங்கிய திறந்தவெளி நிலத்தினை நேற்று (28.8.10) மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை யில் சென்னை மாநக ராட்சி கையகப்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்த மான இந்த இடம் திறந்த வெளி நிலம் என்று பெயர்ப்பலகை வைக்கப் பட்டு, புல்டோசர்கள் மூலம் தேவையற்ற கழி வுகள் அகற்றப்பட்டது.

இந்த இடத்தினை மேயர் மா.சுப்பிர மணி யன்ஆய்வு செய்து கூறு கையில், தமிழக முதல் வர் கலைஞரின் உத்தர வுப்படியும், துணை முத லமைச்சர் மு.க. ஸ்டா லின் அவர்களின் அறி வுரைப்படியும் சென்னை மாநகராட்சி கடந்த 4 ஆண்டுகளாக திறந்த வெளி நிலங்களை கைய கப்படுத்தும் நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. அய்.டி.சி. நிறு வனம் வழங்கிய பதினான் கரை கிரவுண்டு நிலம் பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் நேற்று முன்தினம் முறைப்படி சென்னை மாநகராட்சிக்கு ஒப்ப டைக்கப் பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சி இந்த இடத் தினை கையகப்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்த மான நிலம் என்று பெயர்ப்பலகை வைக்கப் பட்டுள்ளது. வடசென் னையில் பெரம்பூரில் சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் முரசொலி மாறன் பூங் காவைப் போன்று இந்த இடத்திலும் அழகிய பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும்.

சென்னை மாநகராட்சி மூலம் கடந்த 4 வருடங் களில் மாடம்பாக்கத்தில் சுமார் ரூபாய் 600 கோடி மதிப்பிலான 30 ஏக்கர் நிலமும், கோயம்பேடு பேருந்து நிலையம் எதி ரில் மாநகராட்சிக்கு சொந் தமான ரூபாய் 200 கோடி மதிப்பிலான நிலமும், அண்ணாநகர், செனாய் நகரில் ரூபாய் 200 கோடி மதிப்பிலான நிலமும், வி.பி. ஹால் அருகில் 44 கிரவுண்டு சுமார் ரூபாய் 200 கோடி மதிப்பிலும் என பல் வேறு இடங்களில் ரூபாய் 3000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு, சென்னை மாநகராட் சியால் கையகப்படுத்தப் பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காக்கள் உருவாக் கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் தான் குடியிருக் கும் வீட்டையே ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவதற்காக மருத் துவ சேவைக்காக நாட் டுக்கே ஒப்படைத்து உள்ளார்கள். அந்த வீட்டை ஒட்டி பின்பகுதியில் உள்ள ஒரு சிறிய சந்து ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதா கூறு வது கேலிக்குரியதாகும். அந்த இடம் எந்தவித ஆக்கிரமிப்பும் கிடை யாது.

முதல்வரின் பாது காப்பு அலுவலர்கள் பயன் படுத்தி வருகின்றனர். அதே போன்று, அண்ணா அறிவாலயம் எதிரிலும் எந்த வித ஆக்கிரமிப்பு கிடையாது. அந்தப்பகுதி யில் பூங்கா அமைக்கப் பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விஷயங்களுக்காக அ.தி.மு.க. ஆர்ப் பாட்டம் நடத்து வது வேடிக்கையானது. வீட்டையே நாட்டிற் காக முதல்வர் கொடை யாகக் கொடுத்த பிறகு, எதற் காக ஆக்கிரமிப்பு செய் யப் போகிறார்கள்.

போராட்டம் நடத் துபவர்கள் அந்த இரண்டு இடங்களுக்கும் சென்று பார்த்து விட்டு போராட் டம் நடத்தட்டும். கண் இருந்தும் குருடர்கள் என்பதை விட கருத்துக் குருடர்கள் என்று இவர் களை கூறலாம் என்று தெரிவித்தார்

சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள்


மக்கள் நலனுக்காக சிறப்பாக பணி யாற்றிய மாவட்ட ஆட்சியர் களுக்கு முதல் அமைச்சர் கலை ஞர் விருதுகள் வழங்கினார்.

சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளி கையில் கடந்த 2 நாள்களாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நேற்று நடந்து முடிந்தது. மாநாட்டின் இறுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அப்போது, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய ஆட் சியர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா, தேனி மாவட்ட ஆட் சியர் பூ.முத்துவீரன், விருது நகர் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் ஆகியோரை தலைமை செயலாளர் கே.எஸ். சிறீபதி மேடைக்கு அழைத் தார். அவர்கள் வந்து முதல் அமைச்சர் கலைஞரிடம் விரு துகளை பெற்றுக்கொண்டனர். அவர்களின் சிறப்பான சேவையை முதல் அமைச்சர் கலைஞர் பாராட்டினார்.

அதுபோல், முதல் அமைச் சர் தனிப் பிரிவில் இருந்து 1.8.2009 முதல் 31.7.2010 வரை பெறப்பட்ட மக்களின் மனுக் களில், அதிகப்படியான மனுக் களுக்கு சிறந்த முறையில் நட வடிக்கை எடுத்த தேனி மாவட்ட ஆட்சியர் பூ.முத்து வீரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் மு.ஜெயராமன், கன் னியாகுமரி மாவட்ட ஆட் சியர் ராஜேந்திர ரத்னூ ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக் கும் முதல் அமைச்சர் கலை ஞர் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவின் இறுதியில் தலை மைச் செயலாளர் கே.எஸ். சிறீபதி பேசியதாவது: இந்த மாநாட்டில் பல் வேறு திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்தோம். அதிலுள்ள நிறை, குறைகளைப் பற்றி விவா தித்து, இன்னும் சிறப்பாக செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. திட்டங் களை நிறைவேற்றுவதில் தமி ழகம் ஏற்கெனவே முன்னோடி மாநிலமாக உள்ளது. இன்னும் முன்னேற்றம் பெறுவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

யார் யாருக்கெல்லாம் திட் டங்கள் சென்று சேர வேண் டுமோ, அவர்களிடம் அவற்றை கொண்டு சேர்ப்பதற்கு நல்ல முறையில் களப்பணிகள் நடந் துள்ளன. கடந்த ஆட்சியர் மாநாட்டுடன் ஒப்பிட்டால் வெகுவான முன்னேற்றம் காணப் பட்டன. இந்த மாநாட்டில் குற்றம், குறைகளை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டிய திருந்தது. அந்த அளவுக்கு களப்பணிகள் இருந்தன. முழு மனதுடன் நீங்கள் பணியாற் றியது தெரிய வந்தது. நம்மை அந்த அளவுக்கு இயக்கிய முதல் அமைச்சர் பாராட்டுக்கு உரியவர்.

அடுத்து வரும் சில மாதங் களில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென் றால் 4 ஆண்டுகள் முடிந்து அய்ந்தாவது ஆண்டில் இந்த ஆட்சி வீறுநடை போடுகிறது. அதனால் இன்னும் முனைப் புடன் அரசு திட்டங்களை குற் றச்சாற்றுகளுக்கு ஆளாகாத நிலையில் செயல்படுத்த வேண் டும். மாநாட்டின் போது சில மாவட்டங்களில் உள்ள குறை களையும் சுட்டிக் காட்டி னேன். ஒரு குறையும் இல்லா மல் இருக்க வேண்டும் என் பதுதான் என் எண்ணம்.

இவ்வாறு அவர் பேசினார். இறுதியில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களிலும் இளையவ ரான கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அருண்ராய் நன்றி கூறினார்.

இலவச உதவி கொடுத்தோம் என்பதை விட மக்களுக்கு மரியாதை கொடுத்தோம் என்பதே உயர்ந்தது - மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் நிறைவுரை


சென்னை கோட்டை யில் 2 நாள்கள் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நேற்று மாலை முடிந்தது. மாநாட்டு முடி வில் முதலமைச்சர் கலை ஞர் ஆற்றிய உரை வரு மாறு:

இந்த 2 நாள்களில், தமிழ கத்தை மேலும் முன் னேற்றக் கூடிய, வலுப்படுத் தக்கூடிய பல்வேறு பிரச் சினைகளைப் பற்றியெல் லாம் விவாதித்து, ஒவ்வொரு விவாதத்தினுடைய முடிவி லும் சில தீர்க்கமான தீர்மா னங்களை வடித் தெடுத்து அவற்றை நிறை வேற்று கின்ற நிலையில் சங்கல்பம் செய்திருக் கிறோம். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த ஒரு ஆண்டுக் காலத்தில் இன்னும் ஆட்சி யர்கள் அல்லது காவல் துறை கண்காணிப்பாளர் கள் கூட்டம் ஒன்றோ, இரண்டோ நடைபெறக் கூடும். அதற்குப் பிறகு, பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஜன நாயக நாட்டில் அது தவிர்க்க முடியாத ஒன்று.

அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும், வெற்றி பெறுபவர்களும், வெற்றி பெறாதவர்களும் இணைந்து நின்று மக்கள் பணியாற்ற தங்களை ஒப் படைத்துக்கொள்வதுதான் ஜனநாயக நெறியாகும். அந்த நெறியைக் காப்பாற்றுகின்ற இயக்கம் என்னைத் தலை வராகக் கொண்டிருக்கிற இந்த இயக்கம். இந்தியா முழுவதும் பாராட்டு!

எந்த ஆட்சியாக இருந் தாலும், அது மக்களுக்காக நடைபெறுகின்ற ஆட்சி யாக இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் மறக்க முடியாத திட்டங்களாக, மறுக்க முடியாத திட்டங் களாக இருக்கின்ற திட்டங் களை இந்த மாநிலத்திலே மாத்திரமல்ல, இந்தியா முழுதும் பாராட்டுகிறார் கள். அது வெற்றி மேல் வெற்றியைத் தந்து கொண் டிருக்கின்ற திட்டங்களாக இன்றைக்கு அமைந் திருக்கிறது.

அது தனிப்பட்ட என் ஒருவனால் அல்ல. இந்த அமைச்சரவையில் இருக் கின்ற அமைச்சர்களால் அல்ல. எதிரே அமர்ந்திருக் கின்ற மாவட்ட ஆட்சியர் கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆங்காங்கு கிராமப் புறங்களிலே இருக்கின்ற ஒவ்வொரு வேர் போன்ற, விழுது போன்ற அத்தனை வட்டாரங்களும் துணை யாக இருக்கின்ற காரணத் தால் தான் இந்த வெற்றி களைப் பெற முடிகிறது.

நாடு வாழும் நலிவு தீரும்!

நான் வழங்கியிருக்கின்ற திட்டங்களை நானே நெறி முறையோடு நிறைவேற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டு கோளாகும். இது நான் தீட்டிய திட்டம், நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதேச்சாதிகார மனப் பான்மையிலே அல்ல. நா மெல்லாம் சேர்ந்து உருவாக் கிய திட்டம். இந்தத் திட்டத் தை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் நாடு வாழும், நலிவு தீரும் என்ற அந்த நிலைமையிலேதான் இந்தத் திட்டங்களையெல் லாம் நாம் தீட்டியிருக்கின் றோம்.

குறிப்பாக, இன்றைக்கு நாம் புதிதாக அறிமுகப் படுத்தி, நிறைவேற்றத் தொடங்கியிருக்கின்ற திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம். 3 லட்சம் வீடுகளை முதற்கட்டமாக நாம் காங் கிரீட் வீடுகளாக இந்த ஆண்டிற்குள் கட்டுவ தென்ற திட்டத்தைத் தொடங்கி, அடுத்த 6 ஆண்டு காலத்திற்குள் இந்த திட்டத்தைத் நாம் தொ டர்ந்து நிறைவேற்றவிருக் கிறோம். நாம் என்று சொல் வதால், நீயே இருந்து நிறை வேற்றப் போகிறாயா? என்று யாராவது கேட்பார் கள். யார் வந்து நிறைவேற்றி னாலும், ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை யாரும் நிறுத்தமுடியாது, நிறை வேற்றித்தான் ஆக வேண் டும் என்பதற்காக அப்படி சொல்கிறேன்.

இந்த திட்டம் தொ டர்ந்து நிறைவேறி 21 லட்சம் வீடுகள் ஏழையெளிய மக்களுக்குக் கிடைக்க நாம் பாடுபட வேண்டும். அந்த வகையிலே ஆட்சியர்களி டம் நான் பேசிய வகையில் அந்தத் திட்டத்திற்கான தொடக்கத்தை ஏற்கனவே நாம் ஆரம்பித்து விட் டோம். அதை இன்னும் விரைவுபடுத்த பாடுபட வேண்டும்.

இலவச வீட்டுமனைப்பட்டா

ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டம் மற்றும் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலா ளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் பற்றி இன்றைக்கு எதிர்க்கட்சி களுடைய பிரசாரம் மும் முரமாக நடைபெறுகிறது. பத்திரிகைகளிலே பார்த் தால் சில தலைவர்கள், பொறுப்பற்ற முறையிலே என்று சொல்ல மாட்டேன், பொறுப்போடுதான் சொல் கிறோம் என்று கருதிக் கொண்டு அறைகூவல் விடுக்கின்றார்கள்.

அதில், பட்டா கொடுத் தாலும், கொடுக்கா விட்டா லும் இருக்கின்ற இடத்தை எல்லாம் பட்டா போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களைத் தூண்டி விடுகின்ற மனோபாவம் இன்றைக்கு வளர்ந்திருக் கின்றது. நான் அவர்களுக் காக அல்ல, இந்த அரசு நிதானமாக அதே நேரத்தில் நேர்மையோடு இன்றைய திட்டங்களை நிறைவேற் றும் என்பதற்கு அடை யாளமாக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு, விவசாயக் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 356 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம் என்பதை பெருமையோடு, மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் என்று எடுத்துக் கொண்டால், 7 லட்சத்து 44 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் இந்த 4 ஆண்டு காலத்திலே வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படி வழங்கப்பட்டிருப் பதை உறுதிப்படுத்த அவர் கள் பயன்பெற என்னென்ன தேவையோ அவைகளை யெல்லாம் அந்தந்த வட் டாரத்திலே உள்ள அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

பல வாரியங்கள் இந்த அரசால் உருவாக்கப்பட்டி ருக்கின்றன. நேற்றைக்குக் கூட தென்னை விவசாயிகள் நல வாரியம் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. அந்த வாரியத்திற்கும் உறுப்பினர் கள், தலைவர் மற்றும் நடை முறைகள் பற்றி இரண் டொரு நாளில் இந்த அர சின் மூலமாக வெளியிட விருக்கிறோம். மக்களுக்கு பணம் கொடுத்தோம், இலவச உதவிகளைச் செய் தோம், வீடு கொடுத்தோம் என்பது மாத்திரம் அல்ல. இதை யெல்லாம் விட உயர்ந்தது, நம்முடைய மக்களுக்கு மரியாதை கொடுத்தோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

மரியாதை

அந்த மரியாதையைக் கொடுத்தோம் என்பதற்கு அடையாளமாக நான் நம் முடைய தலைமைச் செய லாளரிடம் கேட்டுக் கொண்டேன், அவரும் அது நடை பெற்று வருகிறது, இருந்தாலும் 100 விழுக்காடு அளவுக்கு நடைபெறுவ தற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கி றோம் என்று அவர் என் னிடத்திலே சொன்னார். அவர் சொன்னதை வைத்துக் கொண்டு நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாவட்ட ஆட்சியர்கள் அவர்களு டைய மாவட்டங்களில் அந்த மரியாதையை மக் களுக்குத் தருகின்ற அந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும். உங்க ளுக்குப் புரியாமல் இருக்க லாம், என்ன மரியாதை? என்று கூட நீங்கள் கேட்க லாம்.

வாரியங்களிலே பல பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த உறுப் பினர்கள் யாராவது விபத் தில் இறந்து விட்டால் அவர்களுடைய குடும்பத் திற்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். அந்த ஒரு லட்சம் பெரிதல்ல. அதை விடப் பெரிது, அந்தக் குடும்பத்துக்கு நாம் தரு கின்ற மரியாதை. ஒரு லட்சம் ரூபாயை ஒரு குமாஸ்தா மூலம் அல்லது ஒரு அதி காரி, தபால்காரர் மூலம் அந்த வீட்டிற்கு அனுப்பப் படலாம்.

ஆனால் கலெக்டரோ அல்லது யாராவது ஒரு தாசில்தார் போன்ற அதி காரியோ அந்த வீட்டிற்குச் சென்று அந்த வாரிய உறுப்பினர் இறந்தவருக்கு மாலை மரியாதை செய்தால், அது நாம் நம்முடைய மக்களை எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கும் என்பதையும், அதை நிறை வேற்ற வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன். வாரிய உறுப்பினர்கள் விபத்திலே இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை யாக இறந்தால் ரூ.15 ஆயிரமும் வழங்கிக் கொண் டிருக்கிறோம்.

இறந்தவர் களுக்கு பணம் மாத்திர மல்ல, அவர்களுக்கு மரியா தையும் நாம் செலுத்த வேண்டும். இப்போது விடுதலை வீரர்கள் இறந்து போனால் அவர்களுடைய வீடு களுக்கு சென்று மரியாதை செலுத்துவது போல, வாரிய உறுப்பினர் களாக இருப் போர் இறந்து போனாலும், அவர்களு டைய வீடு களுக்குச் சென்று மரியாதை செலுத் துவதை ஒரு பழக்க மாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

பல்வேறு திட்டங்கள், சாதாரண சாமான்ய மக் களை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அந்த வேண் டுகோளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று உங்களை யெல்லாம் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.