கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தோல்வி பயத்தில் அதிமுகவினர் வன்முறை - மு.க.அழகிரி குற்றச்சாட்டு


தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுவதாக மு.க.அழகிரி கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் வாக்கு பதிவின்போது எட்டிமங்கலத்தில் தி.மு.க, அ.தி.மு.க. வினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தி.மு.க. பிரமுகர் நாச்சிமுத்து அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயத்துடன், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் மலைச்சாமி, மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரையும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 14.04.2011 அன்று மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறினார்.
இதன் பிறகு, மு.க.அழகிரி கூறியதாவது:
தேர்தல் வாக்கு பதிவில் மக்கள் எழுச்சியை பார்த்து தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி என்பதை அறிந்ததும், அ.தி.மு.க.வினர் தோல்வி பயம் காரணமாக வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே தி.மு.க. கூட்டணியினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன், மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆகியோரும் வந்தனர்.

No comments:

Post a Comment