கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 6, 2011

சாய்பாபா குணமடைய வாழ்த்துகிறேன்: கலைஞர்


புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் செயலாளர் சக்கரவர்த்திக்கு தமிழக முதல் அமைச்சர் கலைஞர் பேக்ஸ் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், சாய்பாபா மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என்ற செய்தியை கேள்விப்பட்டு நான் வேதனை அடைகிறேன். அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துகிறேன். அவருடைய ஆயிரக்கணக்கான ஆர்வலர்களின் வாழ்த்துக்களுக்கு இணங்க மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

அவர் மீது எனக்கு அதிக மரியாதையும் அளப்பெரிய பாசமும் உண்டு. தமிழகம் மீதும் தமிழக மக்கள் மீதும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். சென்னை நகர மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு உரிய நேரத்தில் மிகவும் தாராளமாக நிதி உதவி வழங்கியதை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment