கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 27, 2011

தபால் ஓட்டுகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையத்துக்கு ஆர்வமில்லை - ஆசிரியர் மன்றம் குற்றச்சாட்டு


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்களை தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் கொடுக்கவில்லை. ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து மே 13ம் தேதி காலை 7 மணி வரை தபால் ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது, சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
திமுக ஆட்சி நடக்கும்போதெல்லாம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணப்பயன் நிறைவாக கிடைக்கும். அதனால், அவர்கள் நன்றியுடன் திமுக கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். ஆனால், இப்போது அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வசதியாக, தபால் ஓட்டளிக்க ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
மன்னார்குடி பகுதியில் தபால் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராதாபுரம் தொகுதி வாக்குச் சாவடியில் பணியாற்றியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பிய வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 23ம் தேதி வரை கிடைக்கவில்லை. அதை அதிமுகவினர் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை பற்றி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.
அதிமுக கூட்டணியினர் தபால் வாக்குகளை இடைமறித்து, தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக கள்ள ஓட்டுகளாக பதிவு செய்து வருவது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. எனினும், தபால் வாக்குகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையே ஏன்? முறைகேடுகள் நடப்பதை கண்டும், காணாததுபோல் இருப்பது ஏன்?.

No comments:

Post a Comment