கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

முதல்வர் உத்தரவின்படி இலங்கை அகதிகளுக்கான வீடு கட்டும் பணி துவக்கம்


முதல்வர் கருணாநிதி உத்தரவின்பேரில், காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகளுக்கான வீடு கட்டும் பணி துவங்கியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990ல் இருந்து செயல்படுகிறது. இங்கு 72 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் வசித்து வருகின்றனர். இலங்கை தமிழர்களின் நலன் கருதி அகதிகளாக வசிக்கும் இவர்களுக்கு கலைஞரின் காப்பீட்டுத் திட்டம், இலவச காஸ் இணைப்பு, கலர் டிவி, கர்ப்பிணி பெண்களுக்கான உதவி தொகை என தமிழக மக்கள் பெற்ற அனைத்து சலுகைகளையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அகதிகள் முகாமில் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன்படி, காட்டுமன்னார்கோவிலில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் 75 குடும்பங்களை சேர்ந்தோருக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வீடும் தலா
ஸீ1
லட்சம் நிதியில் பாண்டிச்சேரி மல்டி பர்ப்பஸ் சோசியல் வெல்பேர் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டுவதற்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு பணி துவங்கியது.
வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகத்திடம் இடத்தை வாங்கி 42 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை தொண்டு நிறுவன அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment