கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

6வது முறையாக ஆட்சியமைத்த பின் தமிழிசை மூவர் மணிமண்டபம் கருணாநிதி திறந்து வைப்பார் - செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேட்டி


‘சீர்காழியில் கட்டப்பட்டு வரும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை, 6வது முறையாக ஆட்சியமைத்து முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்’ என்று செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் முதல்வர் கருணாநிதி ரூ.1.51 கோடியில் சீர்காழி தாலுகா அலுவலகம் அருகில் மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டார். மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 8 மாதமாக நடந்து வருகிறது. இப்பணியை செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 20.04.2011 அன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகி றது. மணிமண்டபம் கட்டு மான பணியில் சுதை வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான 2 கல் யானைகளும், அதன் மேல் பண்ணும், பரத மும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
மணிமண்டபத்தின் உட்புரத்தில் ரூ.30 லட்சத்தில் தயார் செய்யப்பட்ட தமிழிசை மூவர் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. விரை வில் பணிகள் முடிந்து, முதல்வராக கருணாநிதி 6வது முறையாக பதவியேற்ற பின் மணிமண்டபத்தை திறந்து வைப்பார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment