![](http://3.bp.blogspot.com/-FYZgWpdC4k0/TbQw-tiuXlI/AAAAAAAAD0g/kskw2gkXrdI/s400/K.jpg)
சத்ய சாய் பாபா(85) 24.04.2011 அன்று மரணம் அடைந்தார். 28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் 24.04.2011 அன்று மறைந்தார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
’’நமது அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய புட்டபர்த்தி அருள்திரு சத்ய சாய்பாபா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் துன்புறுகிறேன்.
2007-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையிலே நடைபெற்ற போது, அவரைப் பற்றி நான் பேசும்போது, மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்றும் அதாவது மக்கள் நலப் பணிக்காக அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஒன்று சேர்வதில் தவறில்லை என்றும் கூறினேன்.
இவ்வளவு விரைவில் அவர் நம்மையெல்லாம் விட்டு மறைந்து விடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. அவரது மறைவால் வருந்தும் எண்ணற்ற அவருடைய சீடர்களின் துயரத்தில் நானும் பங்கேற்பதோடு, என்னுடைய தனிப்பட்ட ஆழ்ந்த இரங்கலையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.
No comments:
Post a Comment