கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 30, 2010

மழை பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் : முதல்வர் கலைஞர் உத்தரவு


வட கிழக்குப் பருவமழை பாதித்த மாவட்டங் களில், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது பற்றி தமிழக வருவாய் நிருவாக ஆணையர் ந.சுந்தரதேவன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது,

தமிழகத்தில் நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப் பாக, தென் மாவட்டங் களில் கடந்த ஒரு வார காலமாகப் பெய்து வரும் கனமழை காரண மாகப் பாதிக்கப்பட் டுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கை கள் குறித்து முதலமைச் சர் கலைஞர் கடந்த 25 ஆம் தேதியன்று ஆய்வு செய்ததைத் தொடர்ந்து நேற்று (29.11.2010) மீண் டும் ஆய்வு செய்தார். அப்போது மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணி களை மேலும் விரைவு படுத்திட வேண்டு மென்றும், பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றுக்கு உடனடியாக ஏற்பாடு கள் செய்திட வேண்டு மென்றும், நிவாரண உதவிகளைச் சற்றும் தாமதம் இல்லாமல் உரியவர்களுக்கு வழங் கிட ஆவன செய்திட வேண்டுமென்றும்; மழையின் காரணமாகப் பகுதியாகவும், முழுமை யாகவும் சேதமடைந்த 1,254 குடிசைகள் மற்றும் வீடுகளுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் 25 லட் சத்து 8 ஆயிரம் ரூபாயும், இறந்த 335 கால்நடை களுக்கு முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாயும், இம்மழை காரணமாக, உயிரிழந்த 103 பேரின் குடும்பங்களுக்கு உட னடி நிவாரண உதவியாக மாவட்ட ஆட்சியர் அள வில், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல மைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து மேலும் ஒரு லட்ச ரூபாயும் ஆக 2 லட்சம் ரூபாய் வழங் கிட வேண்டுமென்றும் முதலமைச்சர் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மழையி னால் மதுரை, விழுப் புரம், தருமபுரி, தஞ்சா வூர், ஈரோடு, திருச்சி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரிய லூர், பெரம்பலூர் மற் றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏறத் தாழ ஒரு லட்சத்து 42 ஆயிரம் எக்டேர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், மழை நீர் முழுமையாக வடிந்த வுடன் பயிர்ச் சேதம் குறித்து கணக்கிடப் பட்டு, அரசின் நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கிட நடவடிக்கை கள் மேற்கொள்ளப் படும் என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உர கொள்கையில் மாற்றம் மத்திய அரசு பரிசீலனை - மு.க.அழகிரி


இந்திய உர நிறுவனங்களின் சங்க 46வது ஆண்டு கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் விழா மலரை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி வெளியிடுகிறார். இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பெற்று கொள்கிறார். அருகில் இந்திய உர நிறுவனங்களின் சங்க தலைவர் வெள்ளையன்.

உரங்கள் தட்டுப்பாடின்றி தரமாக கிடைக்க, தேசிய உரக் கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்திய உர நிறுவனங்க ளின் சங்க 46வது ஆண்டு கருத்தரங்கு டெல்லியில் நேற்று (29.11.2010) தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து, அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது:
இந்தியாவின் மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 160 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நமக்கு முன் உள்ள மிகப் பெரிய சவால். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, உரக் கொள்கைகள் உட்பட எந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் உரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், பல்வேறு உரங்களுக்கும் மத்திய அரசு மானியங்கள் வழங்கி வருவதால், விலை உயர்வின் சுமை விவசாயிகளை பாதிக்காமல் பாதுகாக்கிறது. கடந்த காலங்களில் உரக் கொள்கை முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இல்லை. உரத் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் சரியான கொள்கை தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது.
புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உர மானியங்களை குறைக்கவும் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கொள்கையை கடந்த ஏப்ரல் முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய உரக் கொள்கையில் மேலும் மாற்றங்கள் செய்வது பற்றி அரசு பரிசீலிக்கிறது.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு வெள்ளோட்டம் - முதல்வர் கருணாநிதி அறிக்கை


போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (29.11.2010) வெளியிட்ட அறிக்கை:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர் தல் கடந்த 25ம் தேதி தமிழகமெங்கும் நடைபெற்றது. தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அ.தி.மு.க., தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.), இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி.), காங்கிரஸ் கட்சி யின் போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனம் (ஐ.என்.டி.யு.சி), தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆத ரவு பெற்ற சங்கங்கள் என மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.
அதிலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகளின் ஆதரவானவர்கள் இணைந்து, கூட்டணியாக போட்டியிடப் போவதாக அறிவித்து, அது 2011 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னணி என் பதைப் போல ஏடுகள் சில பெரும் முக்கியத்துவம் தந்தது. ஜெயலலிதாவோ, கொடநாட்டில் இருந்தவாறே அ.தி.மு.க. தலைமையிலான சங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று அறிக்கைகள் வெளியிட்டார்.
மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 580 ஊழியர்களில், 1 லட்சத்து 28 ஆயி ரத்து 377 பேர், அதாவது 96 சதவிகிதத்தினர் வாக்களித்தனர். வாக்கு எண் ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.தான் முன்னணி யில் இருந்து வெற்றி பெற்றது. தே.மு.தி.க., ம.தி.மு.க., உட் பட்ட எட்டு சங்கங்களின் ஆதரவுடன் போட்டியிட்ட, அ.தி.மு.க. தொழிற்சங்கம் இரண்டாவது இடத்திற்குகூட வர முடியாமல், மூன் றாவது இடத்திற்கு வந்துள்ளது.
தி.மு.க. தொழிற்சங்கம் 73,450 வாக்குகளை அதா வது 57.31 சதவிகிதம் பெற்று முதல் இடத்திலும், சி.ஐ.டி.யு., 19,002 வாக்குகளைப் பெற்று இரண்டா வது இடத்திலும், அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்கங்கள் 15,765 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற ஐ.என்.டி.யு.சி., சங்கம் 4,824 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திலும், பா.ம.க. சங்கம் 2,857 வாக்குகளைப் பெற்று 6ம் இடத்திலும், விடுதலை சிறுத்தை கள் சங்கம் 2,307 வாக்குகளைப் பெற்று 7ம் இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் 1,912 வாக்குகளையும் பெற்றுள்ளன.
தொ.மு.ச வெற்றி பெற்று முதல் இடத்திற்கு வர வாக்களித்த அத்தனை தொழிலா ளர் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியையும், அந்த வெற்றிக்காக உழைத்த அந்தச் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் தொ.மு.ச.விற்கு வாக்களிக்காமல், வேறு சங்கங்களுக்கு வாக்களித்தவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை. அவர்கள் கட்சி கட்டுப்பாடு கருதி வாக்களித்திருக்கலாமே தவிர, திமுக அரசு தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்யவில்லை, சலுகைகளை அளிக்கவில்லை என்று எண்ணியிருக்க மாட்டார் கள் என்பதை நான் அறிவேன்.
அதனால்தான் நான் 27ம் தேதி மாலையில் வேலூர் கூட்டத்தில் பேசும்போதுகூட, கம்யூனிஸ்ட் கட்சி சங்கம் வெற்றி பெற முடியாமல், தி.மு.க. சங்கம் பெரு வெற்றியைப் பெற்று வருகிறது என்ற செய்தியைக் கேட்டபோது, அதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. இடதுசாரி இயக்கத்தினுடைய தோழர்கள் வெற்றி பெறாமல் போய் விட்டார்களே என்ற சங்கடம்தான் எனக்கு என்று குறிப்பிட்டேன்.
அ.தி.மு.க.வின் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்ட போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் இந்தத் துறையின் அமைச்சர் நேருவைப் பார்த்த போது, “நான் அ.தி.மு.க. தான், ஆனாலும் தொ.மு.ச.விற்குத் தான் வாக்களிப்பேன், கார ணம் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை என்றெல்லாம் கொடுப்பார்“ என்று சொன்ன போது, நேரு அவரிடம் உன் தோள் மீது அ.தி.மு.க. அடையாளமிட்ட சிறு துண்டை அணிந்திருக்கிறாயே என்று கேட்க, அதற்கு அவர் அது எப் போதும் என் தோள் மீது தான் இருக்கும், அதை எடுக்க மாட்டேன், இருந்தாலும் இந்தத் தேர்தலில் என் வாக்கு தொ.மு.ச.விற்குத் தான் என்று கூறினாராம்.
அந்த அளவிற்கு நம்முடைய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதை அறிந்து எனக்கு மகிழ்ந்து கொண்டே அந்தத் தொழிலாளர்களுக்கு என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்த்தேன்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001ம் ஆண்டு முதல் 2004&2005ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் வேண்டுமென்று கேட்ட போதும், 8.33 சதவீத அளவிற்குத் தான் கொடுத்தார். ஆனால் அந்தத் தொழிலாளர்களை ஏமாற்றுவதைப் போல தேர்தல் ஆண்டான 2005&2006ம் ஆண்டில் மட்டும் 20 சதவீதம் போனஸ் என்று அறிவித்து ரூ.63.15 கோடி போனசாகக் கொடுத் தார். ஆனால் தி.மு.க. 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் போனஸ் என்ற அளவிற்கு 2006&2007ல் ரூ.86.26 கோடியும், 2007&2008ம் ஆண்டில் ரூ.87.32 கோடி யும், 2008&2009ல் ரூ.88.27 கோடியும், 2009&2010ல் ரூ.88.27 கோடியும், 2010& 2011ல் ரூ.99.54 கோடியும் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
சம்பள உச்சவரம்பு அதிகப்பட்சம் ரூ.3,500 என்பதை ரூ.10,000 ஆக உயர்த்தியும் தகுதி தொகையை ரூ.2,500 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதன் பலனாக 2005&2006ல் ஒரு பணியாளர் பெற்ற அதிகபட்சத் தொகை ரூ.6,000 என்பது 2006&2007 முதல் ரூ.8,400 என்ற அளவிற்குப் பெற்று வருகிறார் என்கிறபோது தொ.மு.ச.வை வெற்றி பெற வைத்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
ஐந்தாண்டுகள் என மாற்றப்பட்ட ஊதிய ஒப்பந்தக் காலத்தை மூன்று ஆண்டு கள் என மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட் சிக் காலத்தில் தொழிலாளர்களோடு ஊதிய ஒப்பந்தம் போட்டபோது, ஊதிய ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் 9 சதவீதம் என்றும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.600 என்றும் இருந்தது.
தி.மு.க. ஆட்சியில் 2007ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீத ஊதிய உயர்வு என்றும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆயிரம் ரூபாய் என்றும் ஒப்புக் கொள்ளப் பட்டது. மேலும் இந்த ஊதிய ஒப்பந்தத்தில் விலைவாசிப்படி அடிப் படை சம்பளத்தில் சதவீத முறையில் கணக்கிட ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் ஆண்டு ஊதிய உயர்வுத் தொகை ஒன்றரை மடங்காக உயர்த்தப்பட்டது. ஊதிய ஒப்பந்தத்தால் ஆண்டிற்கு கூடுதல் செலவு ரூ.200 கோடி என்பதிலிருந்தே அர சுக்கு உள்ள அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற 6278 தொழிலாளர்களுக்கு 31&7&2009 வரை நிலுவையில் இருந்து வழங்கப்பட ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை சுமார் ரூ.115 கோடி அரசால் முன்பணமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகை மேற்கண்ட தொழிலாளர்கள் சென் னைக்கு அழைத்து வரப்பட்டு காசோலை மூலமாக நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.10 கோடி அரசால் வழிவகை முன்பணமாக வழங்கப்பட்டு, அது ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 31&3&2009 வரை நிலுவையில் இருந்த விடுப்பு ஒப்படைப்புத் தொகை வழங்கப்பட்டது.
முதல் முறையாக 17800 பதலி பணியாளர்களுக்கும் 2008&2009ம் ஆண்டுக்குரிய போனஸ் வழங்கப்பட்டது. 2009&2010ம் ஆண்டிற்கும் வழங்கப்படுகிறது. ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதி பத் தாம் வகுப்பு தேர்ச்சி என் பதை எட்டாம் வகுப்பு தேர்ச்சி என குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையிருப்பின் நிர்ணயிக்கப்பட்ட உயர அளவான 160 செ.மீ. என்பதிலிருந்து அரை செ.மீ. குறைத்துக் கொள்ளலாம்.
2006 முதல் 2010 வரை, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக 12,279 பேரும், கருணை அடிப்படையில் 1183 பேரும், பதலிப் பணியாளர்களாக 31,313 பேரும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் 2005&2006ல் பதவி உயர்வு பெற்றவர்கள் 171 பேர் மட் டுமே. ஆனால் தி.மு.க. ஆட் சியில் 2006ல் 744, 2007ல் 1805, 2008ல் 1119, 2009ல் 856 பேர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வும் ஆட்சி யில் இருந்த கட்சி தானே, ஜெயலலிதாவும் முதல் அமைச்சராக இருந்தவர் தானே, அவர் வேண்டுகோள் விடுத்தும் அ.தி.மு.க. சங்கத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்வி எழ லாம். அ.தி.மு.க. ஆட்சியில் சலுகைகள் பறிக்கப்பட்டன. அதற்கு உதாரணம் வேண்டுமா?
போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டாக உயர்வு, புதிய பணியாளர் கள் நியமனத்திற்குத் தடை, போக்குவரத்துக் கழகத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுத்தம், பதவி உயர்வு நிறுத்தம், போ னஸ் மற்றும் ஊக்கத் தொகை 20 சதவீதம் தரப்படாததால் 17 நாட்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சி யாக அவர்களுக்குரிய வருடாந்திர ஊதிய உயர்வு, மறுகட்ட ஆய்வின் மூலம் ஊதிய உயர்வு ஆகியவைகள் மறுக்கப்பட்டன
போக்குவரத்துத் துறையிலே பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அலுவலர்களுக்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட நன்மைகளும், அ.தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட தீமைகளும் தான் தொழிலா ளர் சங்கத் தேர்தலில் திமுக பெற்ற மாபெரும் வெற் றிக்கு முக்கியமான காரணம்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, திமுக அரசு இதுபோலவே சமுதாயத்திலே உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய தேவைகளை உணர்ந்து, நிறைவேற்றும் பணியில் முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றுகிறது. எந்த ஒரு முற்போக்குப் பணிக்கும் வெள்ளோட்டம் விடுவது என்பது எப்போதும் பழக்கமான ஒன்று. அந்த வகையில் 2011ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம்தான் நடந்து முடிந்துள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேர்தல் வெற்றி.
இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

கலைஞருடன் ஜி.கே. மணி சந்திப்பு



முதல்வர் கருணாநிதியை பாமக தலைவர் ஜி.கே.மணி, சென்னை கோட்டையில் நேற்று (29.11.2010) சந்தித்து பேசினார். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
பின்னர் நிருபர்களிடம் ஜி.கே. மணி கூறியதாவது:
நீதிபதி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வன்னியர் மட்டும் நீதிபதியாக இருக்கிறார். எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு நீதிபதி நியமனத்தில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டோம். அது உச்சநீதிமன்றத்தில் உள்ள விவகாரம் என்று முதல்வர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என ராமதாஸ் கூறி வரு கிறார். அனைத்து சமுதாய தலைவர்களுடன் வந்து முதல்வரிடம் மனு கொடுத் தார். தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே மக்களின் சமூக, பொருளா தார, கல்வி நிலை அறிய தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன். எங்கள் கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். முதல்வருடனான எங்கள் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

மழைக்கு பலியான 103 பேர் குடும்பங்களுக்கு தலா ஸி2 லட்சம் உதவித்தொகை


தமிழகத்தில் மழை காரணமாக உயிரிழந்த 103 பேர் குடும்பங்களுக்கு தலா ஸி2 லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாளாக, வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களிலும் கடுமையாக பெய்து வருகிறது. இதனால், 103 பேர் இறந்துள்ளனர். பல பகுதிகளில் விவசாய பயிர்கள் , நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், குடிசைகள் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவித்தொகை அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கம் முதல் வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நிவாரணப் பணிகள் பற்றி முதல்வர் இன்று 2ம் நாளாக ஆய்வு செய்தார். மழையினால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ராமநாதபுரம், ஈரோடு, மதுரை, கடலூரில் பாதிக்கப்பட்ட 301 குடும்பங்கள் மற்றும் 6787 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தினமும் 10 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம், குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மழையினால் முழுமையாக சேதமடைந்த 1254 குடிசைகள், வீடுகளுக்கு தலா ஸி2000 வீதம் ஸி25 லட்சத்து 8 ஆயிரமும், இறந்த 335 கால்நடைகளுக்கு முதல் கட்டமாக ஸி3 லட்சமும் மழையினால் உயிரிழந்த 103 பேர் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஸி1 லட்சமும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஸி1 லட்சமும் ஆக ஸி2 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மதுரை, விழுப்புரம், தர்மபுரி, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி, கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மழை நீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை ஆட்டிப் படைப்பது புத்தகம் அல்ல; நூல்! : வி.அய்.டி. பல்கலை. விழாவில் முதல்வர் கலைஞர் பேச்சு





வேலூர், வி.அய்.டி. பல்கலைக்கழக வளாகத்தில் அறிஞர் அண்ணா மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா - காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மற்றும் சார்லஸ் டார்வின் விடுதிக் கட்டடங்களுக்கு 27.11.2010 அன்று அடிக்கல் நாட்டு விழாக்களில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:-

அண்ணா அவர்களுடைய சிலையைத் திறந்து வைப்பதாலோ அல்லது பெயரை ஒருவர், தான் இருக்கும் இடத்திற்கோ அல்லது தன்னுடைய ஒரு அமைப்புக்கோ சூட்டிவிட்டால் மாத்திரம் அண்ணா வின் புகழ் முழுமை அடைந்து விடாது. அண்ணா என்பது அய்ந் தரை அடி குள்ள உருவம் அல்ல; அண்ணா என்பது வெற்றிலை பாக்கு போட்டு, சிவந்திருக்கின்ற பற்களும், உதடுகளும் படைத்த உருவம் அல்ல - அண்ணா என்பவர் சாதாரண, எளிமை யான ஒரு சட்டை போட்டு, அந்தச் சட்டையோடு காட்சி தருகின்ற ஒரு எளிய மனிதர் அல்லர் - அண்ணா என்பவர், அவரை பேருருவாய் பார்த் தால், அண்ணா என்ற அந்த மூன் றெழுத்திற்குப் பின்னால் அடங்கி யிருக்கின்ற இலக்கியம் தெரியும் - அரசியல் தெரியும் - பொருளாதாரத் தத்துவம் தெரியும் - உலகத்திலே உள்ள நாடுகளுடைய வரலாறு தெரியும் - அண்ணாவிற்குத் தெரியாத வரலாறு இல்லை - அவருக்குத் தெரியாத இலக்கியம் இல்லை - அவருக்குத் தெரியாத கலை இல்லை - அவருக்குத் தெரியாத எழுத்து இல்லை. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் சக்திதான் பேரறிஞர் அண்ணா ஆவார் கள். அண்ணா அவர்கள் நீண்ட காலம் வாழவில்லை. அதுதான் நமக்குப் பெரும் குறை. 59 ஆண்டுக் காலம் வாழ்ந்து - மணிவிழா நடத்து வதற்கு மாபெரும் திட்டத்தையெல் லாம் நாம் வகுத்துக் கொண்டி ருந்தபோது, நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு, நம்மை விட்டுப் பிரிந்து விட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவருடைய சிலையை ஆயிரக்கணக்கான இடங்களிலே திறந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தில் - பல்கலைக் கழகமாகவே விளங்கிய அவருடைய சிலையை - அதுவும் தம்பி விசுவநாதன் அவர்கள் இங்கே நிறுவியிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்தச் சிலையைப் பார்க்கின்ற ஆசிரியர்கள், இந்தச் சிலையைப் பார்க்கின்ற மாணவர்கள் - அவர்கள் சொன்னார்களே, 40 மாநிலங்களிலே இருந்து, 40-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்ற வர்கள் இந்தப் பல்கலைக்கழகத்திலே இருக்கிறார்கள் என்று - அந்த மொழிக்காரர்கள் எல்லாம் புரிந்து கொண்டு - அண்ணாவினுடைய கொள்கைகள் என்ன என்பதை ஆராய்ந்து, அறிந்து அதைச் செயல் படுத்துகின்ற வகையிலே ஈடுபடுவார் களேயானால், இன்றையதினம் அண்ணாவினுடைய சிலையைத் திறந்து வைப்பதற்கு நிச்சயமாக மதிப்பு உண்டு. அப்படிப்பட்ட மாமேதை அறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அவர்கள் மிக எளிமையான வாழ்வுதான் வாழ்ந்தார். அவர் ஏதோ தமிழகத்தினுடைய அதிபராக இருந்து, தமிழகத்திலே சர்வாதிகாரியாக இருந்து, உலக நாடுகளுடைய பார்வைக்கெல்லாம் உட்பட்டு, அந்தப் பார்வைக்குத் தென் பட்டு வாழ்ந்தவர் அல்லர். ஆனால், அவரை உலக நாடுகள் சுற்றிக் கொண் டிருந்தன. அண்ணா என்ன சொல் கிறார் என்று அவரது ஒவ்வொரு கருத்தைப் பற்றியும், அவருடைய கருத்து என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள உலக அறிஞர்கள் எல்லாம் தவியாய்த் தவித்தார்கள். ஆனால், அவர்களுடைய ஆசை களுக்கு, அவர்களுடைய எண்ணங் களுக்குத் தீனி போட முடியாமல், விளக்கம் அளிக்க இயலாமல், காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. இன்னும் பல ஆண்டுக் காலம் அவர் வாழ்ந்திருப்பாரேயா னால், ஏன் - இந்தச் சிலையைத் திறக்கிற இந்தக் காலம் வரை யிலேகூட, அவர் வாழ்ந்திருப்பாரே யானால் - எவ்வளவோ பயன்கள் இந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும். நாங்கள் இந்த ஆட்சியிலே அரிசி விலையைக் குறைத்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று கொடுத்து - ஏழை களுடைய வாழ்விலே - இறைவன் தந்த வரம் இது என்று சொல்கின்ற அளவிற்கு ஏழைகளுடைய அரசாக இந்த அரசு இருக்கிறது என்றால், அந்தத் திட்டத்தை நாங்கள் இன் றைக்கு நடைமுறைப்படுத்தினாலும் கூட, அதற்கு அணிவகுத்துக் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அரிசி திட்டம் தந்தார் - அதைப்போல, ஏழையெளி யவர்களுடைய வாழ்க்கைக்கு வழிவகுத்துத் தருகிற திட்டங்களால், இன்றுள்ள இந்த அரசுக்கு பேரும், புகழும் வருகிறது - மக்களுடைய ஆதரவு பெருகுகிறது . எனக்கு வழிகாட்டியாக உள்ளது அதைப்போலவே, இன்றையதினம் அண்ணா சிலையைத் திறந்து வைக்கின்ற இதே நேரத்தில், அய்யன் வள்ளுவனுடைய சிலையையும் திறந்து வைத்திருக்கின்றோம். இங்கே சொன்னார்கள் - 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை குமரிக் கடலில் நான் உருவாக்கி வைத்து, பெருவிழா நடத்தி அதைத் திறந்து வைத்தேன் என்று சொன்னார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினுடைய தமிழகத் தலைவர் - என்னுடைய அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் - கொஞ்சம் அரசியல் ரீதியாக நானும், அவரும் வேறுபட்டிருந்தாலும்கூட, அந்த விழாவிற்குத் தவறாமல் வருகை தந்து, அந்த விழாவிலே எனக்கொரு புத்தகத்தைக் கொடுத்தார் - ஆங்கிலப் புத்தகம் அது. அந்தப் புத்தகத்தி னுடைய தலைப்பு - என்றும் நீ வெல்வாய் என்பதுதான். இன்றைக் கும் அந்தப் புத்தகம் என்னுடைய கையிலே இருக்கிறது - என்னுடைய அறையிலே உள்ள பீரோவில் இருக் கிறது - என்னுடைய நூல் நிலையத் திலே இருக்கிறது - என்னுடைய மேசையில் இருக்கிறது - அதை நான் படிக்க, வைத்துப் போற்ற அந்தப் புத்தகம் இருக்கிறது. ஏனென்றால், என்றும் நீ வெல்வாய் என்பது தலைப்பு. அந்தப் புத்தகத்தைப் பெற்ற தற்குப் பிறகு - நான் ஞானசேகரன் அவர்களுக்குச் சொல்லிக் கொள் கிறேன். - நம்முடைய மூப்பனார் அவர்கள் தந்த அந்தப் புத்தகமே எனக்கு வழிகாட்டியாக - எனக்கு ஒவ்வொரு முறையும் ஆறுதலாக, எனக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்பதை தம்பி ஞானசேகரனுக்குச் சொல்லிக் கொள்கிறேன். தம்பி ஞானசேகரன் - இதை நீங்கள் மாத்திர மல்ல; உங்களுடைய நண்பர்களுக் கெல்லாம் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் (கைதட்டல்).

இப்படி குமரிக் கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வைக்கிறோமே - அது மழைக்குத் தாங்குமா? புயலுக்குத் தாங்குமா அந்தச் சிலை? என்றெல்லாம் கேட்ட போது, அந்தச் சிலையை வடித்துத் தந்த கணபதி ஸ்தபதியார் சொன்னார் - நிச்சயமாகத் தாங்கும் - நான் உறுதி அளிக்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன அடுத்த ஆண்டே எவ்வளவு பெரிய சூறாவளி, புயல் - ஒரு முறை அல்ல; பலமுறை அடித்தும்கூட, அந்தச் சிலை சேதாரம் இல்லாமல் அங்கே நின்று கொண்டி ருக்கிறது. ஏனென்றால், வள்ளுவ ருடைய சிலையை நாம் அவ்வளவு அஜாக்கிரதையாக வைக்கமாட் டோம்; வைக்கவில்லை. மிக உறுதி யான நிலையிலேதான் அதை நாம் வைத்திருக்கிறோம் - ஒருவேளை மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு பெரும் வெள்ளம் போல், ஊழி ஏற்படுமே யானால், அந்த ஊழியும்கூட, வள்ளு வரை ஒன்றும் செய்ய முடியாது என்பது போலத்தான் அது அமைக் கப்பட்டிருக்கிறது (கைதட்டல்).

இந்தச் சிலையைக் கூட இங்கே நான் திறந்து வைத்தபோது, தம்பி விசுவநாதன் அவர்களிடம் - என்ன? வள்ளுவர் சிலையிலே கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறதே? என்றுகூட கேட்டேன். என்ன? என்று கேட்டார். பிறகு தனியாகச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே, இத்தகைய சிலைகள் வெளிநாடு களுக்குச் செல்கின்றபோது, வள்ளுவர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று புராண காலத்திலே புராணிகர்களால், பஞ்சாங்கங்களில் வெளியிடப்பட்ட அந்தப் படங் களை வைத்துக் கொண்டு - தாடி, மீசை - அதைப்போல, குடுமி, ருத்தி ராட்சம், திருநீர்ப் பட்டை, குங்குமம், கையிலே உத்திராட்சம் - என்றெல் லாம் வைக்கப்பட்ட அந்தச் சிலை - இப்பொழுது துரை முருகன் இங்கே சொன்னதைப் போல, சட்டப் பேரவையிலே திருவள்ளுவர் படத்தை வைக்க வேண்டுமென்று நான் எண்ணியதற்குக் காரணமே, தமிழ் நாட்டு மக்களுக்கு - திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்றே இன்னும் தெரியவில்லை. பூணூல் போட்டிருப் பாரா? அவர் பிராமணரா? விரும்பு வார்கள் ஒரு சிலர் - ஒரு நல்லவன் இருந்தால், ஒரு அறிவாளி இருந்தால், அந்த அறிவாளியை உலகமே புகழ்ந்தால் - ஒரு கூட்டம் இருக்கிறது தமிழ்நாட்டில். அவர்கள் யாரென் றால் பிராமணர். ஏனென்றால், அவ்வளவு அறிவு உள்ளவராக அவர் இருப்பதற்குக் காரணம், அவர் பிராம ணராக இருப்பதுதான் என்று பிரா மணராக அவரை ஆக்கி விடுவார்கள். இந்தியாவையே நூல் ஆட்டிப் படைக்கிறது பூணூலை வைத்து மாத்திரம் இன்றைக்குத் தமிழ்நாட்டிலே மாத்தி ரமல்ல; இன்றைக்கு இந்தியாவிலே என்னென்ன நடக்கிறது என்பதை யெல்லாம் நாம் மறந்து விடக் கூடாது. சட்ட நூல் அல்ல; இந்தி யாவை மாத்திரமல்ல - இந்தியாவிலே இருக்கின்ற பல மாநிலங்களை ஆட்டிப் படைக்கின்ற நூல் - சட்டப் புத்தகம் அல்ல. புத்தகத்திற்கு நூல் என்று ஒரு பெயருண்டு தமிழில். ஆனால், தமிழ்நாட்டையோ, இந்தி யாவையோ ஆட்டிப்படைப்பது புத்தகம் அல்ல; நூல் ஆட்டிப் படைக்கிறது - நூல் என்றால் புத்தகம் என்று பொருள் கொள்க. ஆகவே, அந்த நூலால், புத்தகத்தால், சட்டங் களால் நிறைவேற்ற முடியாதவை எதுவுமே இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு, நாடு போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலே நாம் நம்முடைய நாட்டு ஜனநாய கத்தைக் காப்பாற்ற, பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த அரசியல் தத்துவத்திற்காகப் பாடுபட்டாரோ, எந்த அரசியல் தத்துவம் நம்மை யெல்லாம் படைக்க வேண்டுமென்று கருதினாரோ, அந்த ஜனநாயக தத்துவத்திற்கு நம்மையெல்லாம் ஆட்படுத்த, நாமெல்லாம் அணி வகுத்து நிற்க பாடுபட வேண்டும்; பணியாற்ற வேண்டும். முக்கியமாக, மனிதன் எங்கிருந்து தோன்றினான்? எப்படித் தோன்றினான்? குரங்கி லிருந்து தோன்றினானா? அல்லது வேறு பிராணிகளிடமிருந்து தோன்றி னானா என்றால், மனிதன் இன்னும் தோன்றவே இல்லை என்பதுதான், என்னுடைய வாதம். மனிதன் இன்னும் தோன்றவே இல்லை. மனி தன் தோன்றினால், அவன் இப்படி யெல்லாம் இருக்க மாட்டான். எனக்கு வருகிற சந்தேகம் எல்லாம், குரங்குகள் எல்லாம் கூட்டம் போட்டு, மனிதர்களிடமிருந்து குரங்கு தோன்றியது என்று ஒரு தீர்மானம் போட்டாலும், ஆச்சர்யப்படுவதற் கில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை யிலே இந்த உலகம் போய்க் கொண்டி ருக்கிறது. விஞ்ஞானம் வளருகிறது - அதே நேரத்திலே, ஒருபுறம் அஞ்ஞான மும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சி அறிவியலை உருவாக்கி, அமளியை அடக்கி, எல்லா மக்களும் ஒன்றாக, ஒற்றுமை யோடு வாழ்ந்து, எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு கலந்து பேசி, எல்லா மக்களும் ஓரணியில் திரண்டு நின்று உலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஞானம். முடியாது - அப்படிச் செய்ய முடியாது - ஒரே குண்டு வீச்சில் ஆயிரம் மக்களை ஒழிக்க வேண்டும் - இதுதான் நியாயம் என்றால், அது ஞானம் அல்ல; அஞ் ஞானம். எனவே, அந்த அஞ்ஞானம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அதற்குத்தான் நாம் இன்றைக்கு இருபெரும் தலைவர்களுடைய சிலைகளை இங்கே திறந்து வைத் திருக்கின்றோம். ஒருவர் வள்ளுவர் - இன்னொருவர் பேரறிஞர் அண்ணா. அது மாத்திரமல்ல; உலகம் எப்படித் தோன்றியது? மனிதன் எப்படித் தோன்றினான்? மனிதன் எங்கிருந்து வந்தான்? என்ற தத்துவத்தை நாட் டிற்குச் சொன்ன டார்வின் என்ற அந்த மேதையினுடைய பெயரால், இந்த விழாவின்மூலம் ஒரு விடுதிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம். அதைப் போலவே காயிதே மில்லத் பெயரால் இன்னொரு விடுதிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறோம். அவர்களுடைய பெயர்களெல்லாம் விளங்க, துலங்க நாம் - கட்டடங் களுக்குப் பெயர் வைத்தால் மாத்திரம் போதாது; சிலைகளை நிறுவினால் மாத்திரம் போதாது; அவர்கள் என்ன சொன்னார்களோ, அந்தத் தத்துவத் தின் படி நடக்க நம்மையும் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கும் அந்தப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த இனிய விழாவில், என்னுடைய அன்புத் தம்பி விசுவ நாதன் அவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நடத்தி, பேரும், புகழும் பெற்று, உலகம் புகழக்கூடிய அள விற்கு - பல்கலைக்கழகத்தினுடைய வேந்தராக இங்கே இயங்குகிறார் என்றால், அத்தகைய புகழும், பேரும் இந்த அண்ணனுக்கும் உரியது என்ற அந்த முறையிலே அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

-இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Monday, November 29, 2010

கலைஞர் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்கள்


திமுக தலைவர் கருணாநிதியுடன் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டங்கள் பற்றி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில்,

’’திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வாரியாக கலந்துரையாடல் கூட்டங்கள் பின்வரும் தேதிகளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.


5-ந் தேதி காலை 9 மணி - புதுக்கோட்டை
7-ந் தேதி காலை 9 மணி - தர்மபுரி தெற்கு
20-ந் தேதி காலை 9 மணி - கரூர்
21-ந் தேதி காலை 9 மணி - திருச்சி
22-ந் தேதி காலை 9 மணி - திருநெல்வேலி.


இக்கூட்டங்களில் மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.


மற்ற மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் கூட்ட நாட்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.


Sunday, November 28, 2010

ஆரியர் - திராவிடர் போராட்டம் மூண்டு விட்டது ஆரியத்தை வீழ்த்துவோம் - வாரீர்! : முதல் அமைச்சர் கலைஞர் பிரகடனம்



வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட திமுக சார்பில் 27.11.2010 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கலந்து கொண்டார். அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்க!

இன்றைய நிகழ்ச்சிகள் - காலை 8 மணிக்கு சென்னையிலே புறப்பட்டு துரைமுருகனும் அவரோடு சேர்ந்து இந்த விழாக்களை நடத்திய வர்களும் காட்டிய கருணையினால் ஏறத்தாழ மாலை 3 மணிக்கு மதிய உணவருந்தி, அதற்குப் பிறகு வேறு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வெள்ளம் போல் மக்கள் குழுமியிருக்கின்ற வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
என்னைப் பற்றியும், வேலூர் மக்கள் காட்டு கின்ற ஆர்வத்தைப் பற்றியும் இங்கே உரையாற் றிய மத்திய இணையமைச்சர் தம்பி ஜெகத்ரட் சகன் அவர்கள், என்னை மக்கள் ஆண்டவனாகக் கருதுகிறார்கள் என்று சொன்னார். அப்படிக் கருதக்கூடாது என்பதற்காக பெரியார் எத்தனை ஆண்டு காலம் போராடி இருக்கிறார் என்பதை யும், அண்ணா எத்தனை ஆண்டு காலம் போராடி யிருக்கிறார் என்பதையும், நான் எத்தனை ஆண்டுகாலம் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறேன் என்பதையும் நம்முடைய ஜெகத்ரட்சகன் ஏன் மறந்து விட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதனை மகானாகக் கருதுவதும், அல்லது ஆண்டவ னாகக் கருதி ஏமாறுவதும் இந்த நாட்டிலே வழக்கமாக இருக்கிற காரணத்தினால், அப்படி கருதக்கூடாது என்கின்ற அறிவுரையை அய்யா பெரியார் அவர்கள் பல்லாண்டு காலமாக வழங்கி வந்தார்கள்.
மனிதனை ஆண்டவனாகக் கருதி ஏமாறக் கூடாது என்றுதான் அறிவுறுத்துகிறோம். அவரு டைய குருகுலத்தில் பயின்றவன் நான். நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்களுக்குச் சொல்லிக் கொள் கிறேன். அவருடைய பெயர் ஜெகத்ரட்சகன் என்று இருக்கின்ற காரணத்தினால், என்னையும் ஜெகத்ரட்சகனாக கருதிக் கொண்டு, ஆண்டவன் என்று மக்கள் என்னைச் சொல்வதாகச் சொன்னார். பின்னால் இருந்து தாய்மார்கள், ஆண்டவன் போகிறான், ஆண்டவன் போகிறான் என்று சொன்னதை, தான் கேட்டதாக ஜெகத்ரட்சகன் சொன்னார். அப்போது ஜெகத்ரட்சகன் என்ன சொல்லியிருக்க வேண்டும். ஆண்டவன் அல்ல அம்மா! ஆள்பவர் போகிறார் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆண்டவன் என்றால் ஞயளவ வநளேந (கடந்த காலம்). ஆள்பவன் என்றால் ஞசநளநவே வநளேந (நிகழ்காலம்). (பலத்த கைதட்டல்). ஆள்பவன் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆண்டவன் போகிறார் என ஜெகத்ரட்சகன் ஒத்துக் கொண்டாலும், நான் ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஆண்டவனாக இருப்பதில் லாபம்தான். ஏனென்றால், எந்தக் குறையை மக்கள் சொன்னாலும், கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம், திருவரங்கத்திலே போய் ஆண்டவனிடத்திலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முறையிடுகிறார்களே, அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார்? என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? ஆண்டவனுக் குள்ள சவுகரியம் ஆள்பவனுக்குக் கிடையாது. அதனால்தான் ஆண்டவனாக இருக்க விரும்ப வில்லை. ஆள்பவனாகவே இருந்து மக்களுக்கு அன்றாடம் பணியாற்று வதற்கு, அவர்களுக்குச் சேவை செய்வதற்கு நான் விரும்புகின்றேன். ஆண்டவன் என்றெல்லாம் சொல்லி, மக்களை ஏமாற்றுகின்ற ஒரு கூட்டம் இருக் கின்றது. அந்தக் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, வீழ்த்தி, அதில் யாரும் ஏமாறாமல் இருக்கின்ற பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்வது தான் நமது கடமை. அந்தப் பகுத்தறிவுப் பிரச்சா ரத்தை நாம் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உறுதி யெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்). ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கே குழுமியிருக்கின்றீர்கள். உங்களை யெல்லாம் ஆண்டவன் பெயரால், பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் நான் ஏமாற்ற விரும்பவில்லை. ஏமாற்றவும் கூடாது. அப்படி ஏமாற்றுபவர்களை நாம் விடப் போவதும் இல்லை. ஆகவே, எழுச்சி பெற்ற இளைஞர்கள், எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய சிற்பிகள், நீங்கள் பெரியார் வழியில், அண்ணா வழியில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில், திராவிட முன்னேற்றக் கழக வழியில் வீறு நடைபோட்டு சமுதாயச் சீர்திருத்தங்களை, சமுதாயப் புரட்சிகளை இந்த நாட்டில் உருவாக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு கிராமத் திலே பிறந்தவன். தஞ்சை மாவட்டத்தில் திருக் குவளை என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவன். இன்றைக்குத்தான் அந்த ஊருக்கு நம்முடைய மத்திய அரசினுடைய உதவியினால் ஒரு பல்கலைக் கழகம் வந்திருக்கிறது. இன்றைக்குத்தான் அந்த ஊருக்கு ஒரு மருத்துவமனை வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சின்னஞ்சிறு குக்கிராமத்திலே பிறந்து, ஒவ்வொரு நாளும் என்னுடைய வீட்டி லேயிருந்து ஏழு கல் தொலைவில் உள்ள ரயில டிக்குச் சென்று, ரயில் ஏறி பிறகு திருவாரூரிலே போய் படித்துக் கொண்டிருந்தவன் நான். அப்படி ஏறத்தாழ கிராமவாசியாகவே இருந்த என்னை, இன்றைக்கு உங்களுடைய முதலமைச்சராக ஆக்கியிருப்பது எது என்றால், என்னு டைய தலைமை அல்ல, என்னுடைய சக்தி அல்ல. ஏதோ அந்தராத்மா, ஆண்டவன் சக்தி என்றெல்லாம் கருதி என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்ப வில்லை. என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக் கிறீர்கள் என்றால் - நான் எவ்வளவு எச்சரிக்கையாகச் சொல்கிறேன் பாருங்கள், மறந்து விடக்கூடாது - உயர்த்தியிருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறீர்கள் (கைதட்டல்). இங்கே உட்கார்ந்து இருக்கின்ற ஒவ்வொருவரும் எழுந்து நின்று, ஒவ்வொரு வருடைய தோளையும் கொடுத்து, ஒரு தோள் மீது ஏறி, இன்னொரு தோள் மீது ஏறி, இன்னொரு தோள் மீது ஏறி இப்படி உச்சிக்கு வந்தவன் நான். ஆகவே, உங்கள் தோள்தான் எனக்கு இன்றைக்கு அடிபீடமாக இருக்கின்ற தோள். ஏன்? எதற்காக? உங்களுக்காகப் பாடுபட, உங்களுக்காகப் பணி யாற்ற, தமிழ்நாட்டிலே பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், ஆதி திராவிடர்கள், அருந்ததியர்கள் என்றெல்லாம் பிரிக் கப்பட்டுக் கிடந்த இந்த அருமையான சமுதாயத்தை ஒன்றுபடுத்தி, மனிதனில் நீயும் மனிதன்; மண் ணன்று! என்று உணர்த்தி மனித சமுதாயத்திலே நம்மைக் கலக்கச் செய்த மாபெரும் இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தை வழித் தோன்றலாகக் கொண்டு உருவானது தான் நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சி போதித்த சமுதாயச் சிந்தனை, சமூகநீதி - இவைகளின் அடிப்படையிலே பிறந்ததுதான் திராவிடர் இயக்கம். அந்த திராவிடர் இயக்கத்தின் கிளைதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த திராவிட என்ற சொல்லை நாம் நாட்டிலே பரப்புவதற்கும், மக்களுடைய மனங் களிலே பதிய வைப்பதற்கும், எதிர்க்கட்சிக்காரர் களுடைய ஏளனங்களுக்குப் பதிலளிப்பதற்கும், விளக்கமளிப்பதற்கும், விளக்கமளித்து நிலை நாட்டுவதற்கும் எப்பாடு பட்டிருக்கிறோம் என்று சொல்ல முடியாது. திராவிட என்ற சொல்லே கிடையாது என்று சொன்னார்கள். திராவிட என்ற வார்த்தையே கிடையாது என்று கூறினார்கள். திராவிட என்ற இனமே கிடையாது. பெரியாரு டைய கூற்று அது, அண்ணாதுரையின் கூற்று, கருணாநிதியின் கூற்று என்று சொல்லிக் கொண்டி ருந்தார்கள். இன்றைக்கு திராவிட என்பது, புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அவசியமான வார்த்தை யாக ஆகி விட்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அந்த அளவிற்கு திராவிட என்ற சொல்லுக்கு பெருமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே நேரத்திலே அந்தச் சொல்தான் எதிரிகளுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. அந்தச் சொல்தான் இந்த இயக்கத்தை எப்படி யாவது அழிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தை பகைவர்களுக்கு ஊட்டியிருக்கிறது. அதைத்தான் நான் உங்களுக்கு விளக்க விரும்புகின்றேன் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாதனைகளைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். நான் தொடக்கத்திலே குறிப்பிட்டதைப் போல, தஞ்சை மாவட்டத்திலே, சின்னஞ்சிறு கிராமத்திலே, திருக்குவளை என்ற சிற்றூரிலே பிறந்த எனக்கு, என்னுடைய சுற்றுப்புறம், சுற்றுச் சூழல் எப்படி இருந்தது என்றால்- நான் இங்கே சொல்ல விரும்பு கின்றேன், என்னுடைய அருமை கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் யாராகிலும் இந்தக் கூட்டத்திலே இருக்கக்கூடும். வராமல் இருக்க மாட்டார்கள். அவர்கள் அறிவைத் தேடி அலை பவர்கள். அவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சொல் கின்றேன். அந்தச் சின்னஞ்சிறு கிராமத்திலே விவசாயத் தொழிலாளர்களுடைய போராட் டம் நடைபெற்றபோது - மணலி கந்தசாமி போன்ற வர்கள் போர்க்களத்திலே நின்று அந்தப் போராட் டத்தை நடத்தியபோது, சீனிவாச ராவ் போன்ற வர்கள், ஆதிதிராவிட விவசாயிகளுக்காக போர்க் கொடி உயர்த்தியபோது, அந்தப் போர்க்கொடியின் நிழலில் நின்றவன் நான். எனவே, இளமைக் காலத்திலே என்னுடைய உள்ளத்தை ஆதிக்கம் செலுத்தியது, கம்யூனிசத் தத்துவம்தான். ருஷ்ய நாட்டு லெனினுடைய போத னைகள்தான். ஸ்டாலினுடைய செயல்கள்தான் என்னுடைய இருதயத்தை அன்றைக்கு ஆக்கிரமித்துக் கொண்டி ருந்தது. அந்தக் காலகட்டத்தில் எங்கள் மாவட் டத்தைச் சேர்ந்த பெரிய பெரிய மிராசுதாரர்கள், மிட்டாதாரர்கள், குட்டிக் குபேரர்கள் இவர்க ளெல்லாம் எந்த அளவிற்கு ஆதிதிராவிடத் தொழி லாளர்களை, விவசாயிகளை பாடுபடுத்தினார்கள், என்னென்ன கடுமையான தண்டனைகளை யெல்லாம் கொடுத்தார்கள் என்றால், குற்றம் செய்த ஒரு தலித் விவசாயியை, கூலிக்காரா! நீ குற்றம் செய்தாயா, இல்லையா? என்று கேட்டு, அந்த விவசாயி அதை நிரூபிப்பதற்கு முன்பே, சாணிப் பாலை காய்ச்சி, சுண்டக்காய்ச்சி, கொதிக்க கொதிக்க அந்தச் சாணிப்பாலால் அந்த ஆதிதிராவிடத் தோழனை குளிப்பாட்டுவார்கள். அவன் துடித்துத் துவளுவான். அந்தக் காட்சியையெல்லாம் நான் கண்டிருக்கின்றேன். அதனுடைய விளைவு, கருணாநிதியை ஒரு கம்யூனிஸ்ட்காரனாக அன்றைக்கு ஆக்கியது. அப்படியானால், இன்றைக்கு நீ கம்யூனிஸ்ட்டா, இல்லையா? என்று கேட்பீர்களே யானால், இன்றைக்கும் நான் கம்யூனிஸ்ட்தான். கம்யூனிஸ்ட் கட்சியிலேதான் கம்யூனிசம் இல்லையே தவிர, என்னிடத்திலே கம்யூனிசம் இருக்கிறது.

தி.மு.க. செய்த தவறு என்ன என்று கம்யூனிஸ்டுகளால் கூற முடியுமா?

கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிசத்தைத் துறந்து வெகு நாளாயிற்று. ஏன் நீங்கள் அங்கேயெல்லாம் போக வேண்டியதில்லை. கடந்த முறை நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் நாங்கள், சி.பி.எம்., சி.பி.அய்., காங்கிரஸ் ஆகிய இந்தக் கட்சிகளெல்லாம் ஒன்றாக இணைந்து தேர்தலிலே போட்டியிட்டோம். இப்பொழுது இந்தத் தேர்தலிலே என்ன நிலைமை? நாங்கள் விலக்காமலே அவர்களாகவே - சி.பி.அய்., சி.பி.எம். ஆகிய கட்சிகள் அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? நான் அவர்களைக் கேட்க விரும்புகின்றேன். தனியாக டிநே வடி - டிநே என்று சொல்வார்களே, அப்படிக்கூட அந்தக் கட்சிகளின் தலைவர்களிடத்திலே பேசுவ தற்கு நான் தயாராக இருக்கின்றேன். தி.மு.க. எந்தக் கொள்கையிலே உங்களிடமிருந்து பிறழ்ந்தது? தி.மு.க. எந்தத் தத்துவத்திலே உங்களிடமிருந்து தவறியது? ஏன் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து - நாங்கள் ஜெயலலிதாவோடு இருப்போம் என்று சொல்கிறீர்கள்? என்று நான் கேட்க விரும்பு கின்றேன். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல முடியும்? என்ன தவறு செய்தேன் என்று குற்றம் சாட்டிவிட்டு, என்னை ஒதுக்கி வைத்தால், நான் ஒதுங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால், எந்தக் குற்றமும் என் மீது சாற்ற முடி யாமல்; ஒரே ஒரு குற்றம் - சோனியா காந்தி தலைமையிலே உள்ள காங்கிரஸ் கட்சியோடு நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம், கூட்டணி வைத்திருக்கிறோம் என்ற ஒன்றைத் தவிர எங்கள் மீது வேறு என்ன சொல்ல முடியும்? அது என்ன தவறான கூட்டணியா? நீங்கள் வைக்காத கூட்டணியா? சி.பி.அய்., சி.பி.எம்., தி.மு.க. எல்லாக் கட்சிகளும் சேர்ந்துதான் காங்கிரசோடு கூட்டணி வைத்து அகில இந்திய அரசியலிலே பெரு வெற்றியைப் பெற்றோம். மறக்க முடியுமா? பிறகு என்னதான் நடந்தது? வடக்கே இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் பிரகாஷ் காரத் எனக்கு அருமையான நண்பர். அந்த பிரகாஷ் காரத் அவர்களும், இந்த மாநிலத்திலே சென்னை யிலே இருந்து அரசியல் நடத்தி, திராவிட முன் னேற்றக் கழகத்தின் ஆதரவைப் பெற்று ராஜ்ய சபா உறுப்பினராகி இருக்கின்ற நண்பர் டி.ராஜா அவர்களும் என்னிடத்திலே வந்து பேசினார்கள். அதுதான் ஆரம்பம். நீங்கள் காங்கிரஸ் கட்சி அணியிலே இருக்கக் கூடாது என்றார்கள். ஏன்? என்று கேட்டேன். அவர்கள் அணுசக்திப் பிரச் சினையில் அமெரிக்காவோடு ஒரு உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் கைவிட்டால்தான் அவர்களோடு கூட்டணியில் இருக்க முடியும்? என்றார்கள். அதைப் பற்றி நான் அவர்களி டம் பேசுகிறேன். அதற்காக ஏன் கூட் டணியை கலைக்க வேண்டும்? மதவாத சக்திகளை எதிர்த்து, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து, சாதியை அடிப் படையாகக் கொண்ட சக்திகளை எதிர்த்து, ஒரு கூட்டணி உருவாக்கினோம். இந்தியாவில் ஒரு பெரும் புரட்சியைச் செய்து, அந்தக் கூட்டணிக் கான வெற்றியைப் பெற்றோம். இப்போது திடீரென்று அமெரிக்காவை காரணம் காட்டி, அணுகுண்டை காரணம் காட்டி, காங்கிரசிலே இருந்து நீங்கள் பிரிவது என்றால் சரியல்ல. நீங்கள் உற்ற காரணங்களைச் சொல்லுங்கள். நான் சோனியா காந்தி அம்மையாரிடம் பேசுகிறேன். மன்மோகன்சிங் அவர்களோடு பேசுகிறேன், பிரணாப் முகர்ஜியோடு பேசுகிறேன் என்று சொன்னேன். நான் சொன்னவாறு அவர்களோடு பேசினேன், இரண்டு மூன்று முறை பேசினேன். அந்தப் பேச்சுக்குப் பிறகு திடீரென்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னை வந்து சந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்தி விட்டார்கள். சென்னைக்கு வருவார்கள், வீட்டிலே சந்திப்பார்கள், கட்சி அலுவலகத்திலே சந்திப்பார்கள், தலைமைச் செயலகத்திலே சந்திப்பார்கள், இப்படி இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்துப் பேசிய பிரகாஷ் காரத்தும், சி.பி.ஐ. நண்பர் ராஜாவும் என்னி டத்திலே பேசுவதை திடீரென்று நிறுத்தி விட்டார்கள்.

தொழிலாளர்களை வேட்டையாடிய ஜெயலலிதாவோடு சேர்ந்தது நியாயமா?

ஏன் என்று பிறகு விசாரித்தால், நான் காங்கிரசை ஆதரிக்கப்போகிறேன் என்று இவர்கள் ஒரு கற்பனையை செய்து கொண்டு, அதனால் இனி மேல் கருணாநிதியிடம் பேசி புண்ணியம் இல்லை என்று விலகிக்கொண்டார்கள். விலகுவதற்கு முன்பு, ஒரு உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த கட்சிகளின் தலைவர்கள், நாங்கள் இனிமேல் உங்களோடு உடன்பாடு கொள்ள முடியாது. எங்களால் இதை ஜீரணிக்க முடியாது, ஆகவே விலகிக்கொள்கிறோம் என்று சொன்ன துண்டா? இல்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே, இவர்கள் வெளியேறி விட்டார்கள். வெளியேறி அடுத்ததாக, தி.மு.கழக அரசு பாட்டாளிகளுக்கு எதிரான அரசு. தொழிலாளர்களுக்கு எதிரான அரசு என்று அறிக்கை விட்டார்கள். நான் கேட்டேன், ஏன் நீங்கள் இல்லாததைச் சொல்லுகிறீர்கள்? தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் என்ன சொல்லிவிட்டோம். நீங்கள் என்ன தொழிலாளர் களுக்கு ஆதரவான கட்சியுடனா போய்ச் சேர்ந் திருக்கிறீர்கள். அந்த அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது, தொழிலாளர்களை எல்லாம் துடிக்கத் துடிக்க வேட்டை ஆடியவர் அல்லவா? அங்கே போய்ச் சேருகிறீர்களே, என்ன நியாயம்? என்று கேட்டபோது, பதிலே சொல்லாமல், அவர்களுடைய பத்திரிகைகளிலும் சரி, கூட்டங் களிலும் சரி, தி.மு.கழக அரசை கண்டபடி தூற்றவும், என்னுடைய சொந்த விவகாரங் களைப் பற்றிப் பேசவும், எனது குடும்பத்தைப் பற்றிப் பேசவும், என்னுடைய மனைவியைப் பற்றி எழுதவும் என்கின்ற அளவிற்கு உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டார்கள். நான் இப்போதும் கேட்கின்றேன்; நீங்கள் அப்படிச் செல்ல வேண்டிய காரணம் என்ன? நீங்கள் சென்றாலும் பரவாயில்லை, அந்தக் காரணத்தையாவது சொல்லுங்கள். நீங்கள் சொல்லக்கூடிய ஒரே காரணம், நாங்கள் காங்கிரஸ் கட்சியோடு உடன்பாடு கொள்கின்றோம் என்பது தான். அந்த உடன்பாடு ஒன்றும் புதிதல்ல. நீங்களும் சேர்ந்து செய்து கொண்ட உடன்பாடுதான் அது. அந்த உடன்பாட்டை நீங்கள் முறித்துக்கொண்டு, அதற்குக் காரணம் நாங்கள் என்று சொன்னால், அதை ஏற்க நான் தயாராக இல்லை என்பதை மாத்திரம், என்னுடைய அருமை கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இங்கே தம்பி பொன்முடி சொன்னார். தொழிலாளர்களுடைய பிளவின் காரணமாக என்ன ஆயிற்று? தமிழ்நாட்டிலே போக்குவரத்துத் தொழிலாளர்களு டைய தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் அய்ந்து ஆறு சங்கங்கள் போட்டியிட்டு, நாம் ஒன்றாக இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டு, சி.பி.அய். சார்பாக ஒரு சங்கம், தே.மு.தி.க. அது ஒரு சங்கம், இப்படி பல பிரிவுகளாகி அதிலெல்லாம் போய் சேர்ந்து கொண்டு - இதிலே மறுமலர்ச்சி வேறு, அதெல்லாம் சேர்ந்து கொண்டு - இன்றைக்கு என்ன ஆயிற்று?

தொழிலாளர் சங்கத் தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்புடைய சங்கம் என்ன ஆனது?

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக் கின்ற ஒரு பெரிய நிறுவனம், அந்தப் பேருந்து தொழி லாளர் களுடைய பெரிய சங்கத்தை பிளவுபடுத்தி, அய்ந்து ஆறு கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட காரணத்தால் - கம்யூனிஸ்ட் சங்கம், கம்யூனிஸ்ட் சார்புடைய சங்கம் வெற்றி பெற முடியாமல், தி.மு.கழகச் சார்புடைய சங்கம் பெருவெற்றியைப் பெற்று வருகிறது என்ற செய்தியை கேள்விப்படு கிறோமே, (கை தட்டல்) அதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. இங்கே பொன்முடி போன்றவர் கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை. அய்யோ, இடது சாரி இயக்கத்தினுடைய தோழர்கள், அந்த அமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெறாமல் போய் விட்டார்களே! என்ற சங்கடம் தான் எனக்கு. தொழிலாளர்களுடைய போராட்டத் திலேயாவது ஒன்றாக இருந்தி ருக்கலாமே- அந்த அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது அவர்களுக்கு வெறுப்பு, எரிச்சல். இது காங்கிரசை எதிர்த்து செய்த விஷயமல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய லட்சியத்திற்கு எதிராக நடை பெறுகிற காரியம். ஏனென்றால், திராவிட என்ற சொல்லுக்கு இன்று நேற்றல்ல, பல்லாண்டு காலமாகவே இந்த எதிர்ப்பு இருந்து வருகிறது. என்றைக்கு நாங்கள் திராவிட என்று சொல்ல ஆரம்பித்தோமோ, அன்றைக்கே ஒரு பக்கத்திலே இருந்து ஆரியம் படமெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆரியம் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் படமெடுக்க ஆரம்பித்தது. ஒரு நாடகத்திலே அண்ணா அவர்கள் ஆரியத்தைப் பற்றிச் சொல்வார் - விளக்கி விட்டுச் சொல்வார் - விதைக்காமலே விளையும் கழனி என்று சொல்வார். எது என்று கேட்டால், அதுதான் அம்மா ஆரியம் என்பார். சந்திரமோகன் நாடகத்தில் இத்தகைய உரையாடல் களை அண்ணா அன்றைக்கே தீட்டினார். அதுதான் இன்றைக்கும் செயல்படுத்தப்படுகிறது. அதைத்தான் நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியிடத்திலே கேட் கிறோம். இத்தகைய இன உணர்வை உருவாக்கிய இந்த இயக்கத்தை, அதன் காரணமாகவே அழிக்க நினைக்கிற சிலரோடு நீங்களும் சேர்ந்துகொண்டு அதற்காக புஜபல பராக்கிரமத்தை காட்டு கிறீர்கள் என்றால், நாங்கள் எப்படி அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றுதான் கேட்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைய தினம் காங்கிரசோடு கூட்டணியில் இருக்கிறது என்றால், தமிழகத்திலே, இந்தியாவிலே இரு பெரும் அரசுகள் - இங்கே மாநில அரசு, மத்திய அரசு என்று இருபெரும் அரசுகள் இருப்பதை அறிந்துதான் கூட்டணியில் இருக்கின்றோம்.

காங்கிரசில் நம்மை விரும்பாத சில விஷமிகள் கழகக் கூட்டணிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்!

மத்திய அரசு மாநில அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது - மாநில அரசு மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சில காங்கிரஸ்காரர்கள்கூட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படி மத்திய அரசு மாநில அரசுக்கு துணையாக இருக்கிறதோ, அதே போல மாநில அரசு மத்திய அரசுக்குத் துணையாக இருக்கிறது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதை காங்கிரஸ்காரர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிலரால் ஜீரணிக்க முடியாத நிலை. ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே கூட்டணிக்குத் தலைமை வகிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், ஏதேதோ பேசுகிறார்கள். அதை தட்டிக் கேட்கவும், அடக்கவும் டெல்லியிலே இருக்கின்ற தலைவர்கள், பெரியவர்கள் வரவேண்டியிருக்கிறது - அல்லது அவர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், இங்கே இருக்கின்ற சில விஷமிகள், தூண்டிவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருக்கின்ற உறவை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அப்படிக் கெடுத்தால், இந்த உறவைத் துண்டித்தால், அது யாருக்கு நஷ்டம் என்றால் துண்டிக் கின்றவர்களுக்குத்தான் நஷ்ட மாகும். இன்னும் சொல்லப்போனால், துண்டிக் கின்றவர்களுக்கும், துண்டிக்கப்படுகின்றவர் களுக்கும் சேர்த்து இரண்டு பேருக்கும் நஷ்டம். ஏனென்றால், நாம் இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற சக்திகள். நாம் இருவரும் சாதி துவேஷங்களை ஏற்றுக் கொள்ளாத சக்திகள். காங்கிரசாக இருந்தாலும், கழகமாக இருந்தாலும் நாம் என்றென்றும் மதவாதத்தை இந்தியாவிலோ தமிழகத்திலோ நுழைவதற்கு அனுமதிக்காதவர்கள். நமக்குள்ளே ஒரு பிளவை ஏற்படுத்தினால், மதவாதம் சுலபமாக உள்ளே நுழைய முடியும் என்று மதவாதத்தினால் மகிழ்ச்சியடைந்து கட்டிப் புரண்டு கொண்டிருப்பவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தை பொன்னான சந்தர்ப்பமாகக் கருதி உள்ளே நுழைந்து விடுவார்கள். ஆகவேதான் நான் சொல்லு கின்றேன். மதவாதத்தை இன்றைக்கு எதிர்த்து நிற்கின்ற, விரும்பாத, வெறுக்கிற சக்தி தி.மு. கழகம். அந்தக் கழகம் காங்கிரசுடன் கொண்டிருக்கின்ற உடன்பாடு, அதை மேலும் வலுப்படுத்திக் கொள்வ தற்காகத்தானே தவிர, வேறல்ல என்பதை சிண்டு முடிபவர்களுக்கு, பிணக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுபவர்களுக்கு நான் அறிவுரையாகச் சொல்லுகின்றேன். அதே நேரத்தில் மேலே இருப் பவர்கள் இவர்களை யெல்லாம் இனியும் துளிர் விடாமல், இனியும் இப்படிப்பட்ட பேச்சுக்களை யெல்லாம் பேசி இருப்பதைக் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு மேலே உள்ளவர்களுக்கும் இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஏதோ பெரிய கூட்டம் கூடியிருக்கின்றது. இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் கருணாநிதிக்கு எல்லாம் பேச வேண்டும் என்று தோன்றிவிட்டது போலிருக்கிறது என்று கருதுவார்களேயானால், அது தவறு. நான் இதைவிடப் பெரிய கூட்டத்தை யெல்லாம் பார்த்தவன். இதைவிட பெரிய மாநாடுகளையெல்லாம் கண்டவன். அந்த மாநாடு களிலும், கூட்டங்களிலும் எனக்கு எவ்வளவு அடக்கம் இருந்ததோ, அந்த அடக்கத்திலே கிஞ்சிற் றும் குறைவில்லாமல், அந்த அடக்கத்தோடுதான் இன்றைக்கும் நான் பேசுகின்றேன். நாம் ஒன்றாக இருந்தால்தான், இந்திய அரசும் தமிழகத்திலே இருக்கின்ற தமிழக அரசும் கைகோர்த்துக் கொண்டு மதவாதத்தை எதிர்த்தால்தான், மதவாதத்தை அழிக்க முடியும் - அதை மாண்டு போகச் செய்ய முடியும். அந்த. உறுதியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற அதே நேரத்தில், தற்கால அரசியலைப் பற்றிய ஒன்றிரண்டு செய்திகளைச் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

ஜனநாயகத்தை மதித்து ராசா பதவி விலகினார்!

இப்பொழுது ஸ்பெக்ட்ரம் - ஸ்பெக்ட்ரம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதில், நம்முடைய கழக அமைச்சர் தம்பி ராசாவைப் பற்றி நாடாளு மன்றத்தில் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி தினந்தோறும் கூச்சல் போட்டார்கள். நாடாளுமன்றம் என்பது கூச்சல் போடுகிற இடம் அல்ல. பாராளுமன்றம் என்பது கூடிப் பேசுகிற இடமே தவிர கூச்சல் போடுகின்ற சந்தை அல்ல. என்ன வேண்டும் என்று கேட்டபோது, ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னால், பாராளுமன்றம் நிம்மதியாக நடக்குமா? அப்படி நடக்குமேயானால், அதற்கு உறுதி உண்டென்றால், எங்கள் ராசா ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார். இந்தப் பதவி பெரிதல்ல. பாராளுமன்ற ஜனநாயகம்தான் பெரிது என்ற முறையிலே ராசா, ராஜினாமா செய்தார்.
அதற்குப் பிறகு என்ன கேட்கிறார்கள்? பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் - ஜெ.பி.சி. குழு (துடிவே ஞயசடயைஅநவே உடிஅஅவைவநந) விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அறிவார்ந்த வேலூர் பகுதி மக்களே, அரசியல் தெரிந்த நண்பர்களே - இந்தியாவினுடைய சரித்திரம் புரிந்தவர்களே, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிலே ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளையெல்லாம் தெளிவாக உணர்ந்தவர்களே, உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். முந்த்ரா ஊழல் என்று ஒரு பெரிய ஊழல். முந்த்ரா ஊழல் - அதில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் என்ற நிதியமைச்சருக்கு தொடர்பு உண்டு என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது, பாராளுமன்றத்தில். உடனே அந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்ய அறிவுரை கூறியது. அவர், ராஜினாமா செய்தார். அதோடு, அவருடைய ராஜினாமாவோடு முந்த்ரா ஊழல் பற்றிய பாராளுமன்ற விவாதங்கள், கூச்சல், குழப்பங்கள் ஓய்ந்தன. ஏன்? டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் ராஜினாமா செய்தவுடன் பாராளுமன்றத்திலே கூச்சல் இல்லை - குழப்பம் இல்லை. அவரைப் பற்றி மோசமான விமர்சனங்கள் இல்லை. தமிழ் நாட்டிலே அப்போது அவரைப் பற்றி எழுது வதற்கு ஆனந்த விகடனுக்கு கை ஓடவில்லை. கல்கிக்கு கை ஓடவில்லை. தினமணிக்கு கை ஓட வில்லை - நிறுத்திக் கொண்டார்கள் - முடிந்து விட்டது. முந்த்ரா ஊழல் வெறும் முணுமுணுப்போடு முடிந்துவிட்ட ஊழலாக ஆகிவிட்டது. நான் சொல்கிறேன், இன்றைக்கு ராசாமீது குறையே இருக்கட்டும். ராஜினாமா செய்த பிறகு, டி.டி.கிருஷ்ண மாச்சாரியைப் பற்றி வந்த முந்த்ரா ஊழல் நின்று விட்டது. ராசா மீது பேசப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மாத்திரம் இன்னும் பேசப்படுகிறதே என்ன காரணம்? ராசா தலித். டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் - அவரது பெயரிலேயே இருக்கிறது ஆச்சாரியார். ஆச்சாரியாருக்கு ஒரு நியாயம் - ஆதி திராவிடருக்கு ஒரு நியாயமா? இதுதான் இந்தியாவிலே சமதர்மமா? கூச்சல் போடுகின்ற கட்சிகளைக் கேட்கிறேன். ஒன்றை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய அரசில் தி.மு.கழக அரசில் உமாசங்கர் என்கிற ஒரு ஆதி திராவிடத் தோழர் - அவர் ஆதி திராவிடரா அல்லவா என்பது விசாரணையில் இருக்கிறது. அவர்மீது ஒரு புகார் வந்தபோது, அதை நாங்கள் கேட்டோம் - விளக்கம் கேட்டோம் அவரிடத்திலே. விளக்கம் கேட்டவுடன் இந்த கம்யூனிஸ்ட்டுகள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் எல்லாம், ஆஹா! உமாசங்கர் தலித் என்ற காரணத்தால், ஆதி திராவிடர் என்ற காரணத்தால் அவரை ஒழிக்கப் பார்க்கிறார் கருணாநிதி என்றெல்லாம் சொன்னார்கள். ஒன்றும் ஒழிக்கவில்லை. இவர்களுடைய எதிர்ப்பைக் கண்டதும் என்றே எடுத்துக் கொள்ளட்டும். அல்லது நியாயமாக சட்டரீதியாக செய்யப்பட்ட காரியம் என்று எடுத்துக் கொள்ளட்டும். தற்காலிக மாக விலக்கப்பட்டிருந்த அவரை மீண்டும் பணியிலே சேர்த்து ஆணை பிறப்பித்தது இந்தக் கருணாநிதிதான். தலித் என்பதற்காக அடியோடு பழி வாங்க வேண்டும் என்று எண்ணவில்லை - தலித் ஆயிற்றே என்று எதிர்க் கட்சிக்காரர்கள் சொன்னவுடன், ஆமாம் - தலித்துதான். இருந் தாலும், பிறகு விசாரித்துக் கொள்ளலாம். இப் போது அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் என்று அவரை பதவியிலே அமர்த்தியிருப்பது இந்தக் கருணாநிதிதான்.

பத்திரிகைகள் வேண்டுமென்றே ஊழல் என்று எழுதுகிறார்கள்

நீங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும் - தலித், இங்கே ஒரு மாடல் - அங்கே ஒரு மாடல். அவர்களை நடத்துவதற்கு தி.மு.க. கையாளுகின்ற முறையும், தி.மு.க. அல்லாத வேறு கட்சிகள், மதவாதக் கட்சிகள், ஏன் இன்னும் சொல்லப் போனால் கம்யூனிஸ்ட் கட்சிகளே கூட கையாளு கின்ற முறையும் எப்படி வித்தியாசப்படுகின்றது என்பதை தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதிலே தவறு நடைபெற்றிருக்கிறதா இல்லையா? அதற்கு விசாரணைகள் நடைபெறு கின்றன. சி.பி.அய்.விசாரணை, நீதி மன்ற விசாரணை எல்லாம் நடைபெறுகிறது. அந்த விசாரணை நடைபெற்று முடிந்தபிறகு, அந்த விசாரணையின் முடிவு என்ன இருக்கிறதோ, அதற்கேற்ப திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய முடிவைச் செய்யும். ராசா தன்னுடைய முடிவை அறிவிப்பார். அது வேறு விஷயம். அதற்கு இடையிலே இந்த அளவிற்கு வெறியாட்டம் போடுகிறார்களே? பத்திரிகையைப் புரட்டினால், ஏதோ இமய மலையே கவிழ்ந்துவிட்டதைப் போல ஏதேதோ பேசுகிறார்களே - ஒரு பத்திரிகையிலே சைபர் சைபர் சைபர் என்று ஏழு சைபர் போட்டு, இத்தனை இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று போடுகிறார்கள். அத்தனை இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று நிரூபிக்க முடியுமா? முடியாது. வேண்டுமென்றே மக்களை பயமுறுத்துவதற்காக இத்தனை இலட்சம் ரூபாய் ஊழல் என்கின்றார்கள். நான் கேட்கின்றேன். நீதிமன்றத்தில், பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 66 கோடி அவர் முறைகேடாக சேர்த்திருக்கிறார் என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் பணம் இவ்வளவு என்று இன்னமும் வழக்கு, ஏறத்தாழ பத்து வருடங்களாக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. ஓராண்டா? ஈராண்டா? பத்தாண்டு காலம். அவர்களுடைய வழக்கு என்றால் தள்ளிக் கொண்டே போகும். அந்த வழக்கு பத்தாண்டாக நடைபெற்று இன்னமும் தீர்ப்புக் கூறப்படவில்லை. தீர்ப்பு கூறப்படுவதற்கு முன்பு இன்னும் என்னென்ன வாய்தா வாங்குவார்களோ தெரியாது. மொழி பெயர்ப்பு சரியில்லை என்று சொல்வார்கள் - சாட்சி சரியாக வரவில்லை என்று சொல்வார்கள் - வந்த சாட்சி நொண்டிக் கொண்டு வந்தார் என்று சொல் வார்கள் - வந்த சாட்சி போட்ட கையெழுத்து சரியில்லை என்று சொல்வார்கள். இப்படியெல் லாம் எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி, வழக்கு நீடித்து நீடித்து 12 ஆண்டுகாலம் 13 ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு. ஏறத்தாழ 2 கோடியே ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சொத்தோடு ஆரம்பிக்கப்பட்ட முதலமைச்சரு டைய வாழ்க்கை - முதலமைச்சர் என்றால் என்னைக் கருதிக் கொள்ளாதீர்கள். முன்னாள் முதலமைச்சரு டைய வாழ்க்கை, 2 கோடியே ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயிலே ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கை 68 கோடி ரூபாய் - 70 கோடி ரூபாய் என்ற அளவிற்கு சொத்துக் குவிப்பு என்று நிரூபிக்கப்பட்டு, அதற்கான தீர்ப்பு வழங்கப்பட விருக்கிறது. ஆனால், வழக்கை முடிப் பதற்கு அவர்கள் விரும்பவில்லை. ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒத்திப் போடு கின்ற காரண ங்களைத் தேடித் தேடி, நீதிபதியிடத்திலே சொல்லிச் சொல்லி வலியுறுத்திக் கொண்டே யிருக்கிறார்கள்.

ஜெயலலிதா ஊழலை தினமணி போன்ற ஏடுகள் திரும்பிப் பார்க்காததேன்?

நான் கேட்கின்றேன் - இன்றைக்குக் கின்னாரம் கொட்டுகின்ற பத்திரிகைகளைக் கேட்கின்றேன் - டமாரம் அடிக்கின்ற பத்திரிகைகளைக் கேட்கின் றேன். மணியோசை முழங்குகின்ற தினமணி போன்ற ஏடுகளைக் கேட்கின்றேன். மலர் என்ற பெயரோடு துர்நாற்றம் வீசுகின்ற பத்திரிகைகளைக் கேட்கின் றேன். நீங்களெல்லாம் பெங்களூர் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்க்கக்கூடாதா? அந்த நீதிமன்றத்திலே என்ன நடக்கிறது என்று கேட்பது தவறா? ஜெ.பி.சி. குழு (துடிவே ஞயசடயைஅநவே உடிஅஅவைவநந) விசாரணை வேண்டும் என்று கேட்பவர்கள், இந்திய நாட்டினுடைய அரசியல் சரித்திரத்தில் முந்த்ரா ஊழலுக்குப் பிறகு அது வெளிப்பட்ட பிறகு அதைப் பற்றி விசாரிக்க ஜெ.பி.சி. வேண்டும் என்று பாராளுமன்றத்தைக் குழப்பத்திலே ஆழ்த்தியது உண்டா? இல்லை. நான் முதலிலே சொன்னதைப் போல, அது ஆரியம். இது திராவிடம். ஆரியம் என்றால் ஒன்று. திராவிடம் என்றால் ஒன்று. தம்பி துரைமுருகன் அதைப் பற்றி இங்கே பேசினார். அது ஒரு யுத்தமே நடக்கிறது இப்போது. 71ஆம் ஆண்டு தந்தை பெரியார், இப்போது நடைபெறுவது திராவிட - ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப் பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று ஒரு வாதத்திலே எழுதியிருந்தாலும் கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

ஆரிய - திராவிட யுத்தம் இப்போது அரசியல்ரீதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

இப்பொழுது அரசியல்ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்க வேண்டிய, அதைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது. நம்முடைய தோள் வீரத்தோள்தான். ஆனால், தமிழன் வீரத்தை நிலைநாட்டிய அளவிற்கு, விவேகத்தைப் பயன்படுத்தியது இல்லை. விவேகத்தைப் பயன்படுத்தாத காரணத்தால், வீரம் இருந்தும் தமிழன் - திராவிடன் தன்னுடைய வலிவை, தன்னுடைய ஆட்சியை, தன்னு டைய அதிகாரத்தை இழக்க நேரிட்டது. அத்தகைய வீழ்ச்சி திராவிடத்திற்கு ஏன் ஏற்பட்டது? திராவிடனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்த்து, அந்த வீழ்ச்சியிலேயிருந்து நம்மைத் தடுப்பதற்கு, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, எதிர்கால சமுதாயத்தை - நம்மையல்ல, இங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னதைப்போல், எனக்கு 87 வயது ஆகிவிட்டது. எதிர்காலச் சமுதாயம் என்றால் உங்கள் பேரன் பேத்திகள் அவர்கள் எல்லாம் வாழ்வதற்கு, அவர்கள் வைத்திருப்பது உண்மையான மீசைதான் - ஒட்டுமீசையல்ல. உண்மையான மீசைதான் என்று இவ்வுலகத்திற்கு நிலைநாட்டிக் காட்டுவதற்கு தமிழன் வாழ்ந்தான் - அவனை வீழ்த்துவதற்கு ஏதேதோ மோசடிகள் செய்யப்பட்டன. அவைகளையெல்லாம் வீழ்த்தி விட்டு, தமிழன் இன்று ஓரணியில் திரண்டான் என்ற உறுதியான நிலையை ஏற்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கைநீட்டுகிறது. இந்தக் கழகத்தினுடைய கையைப் பிடித்துக் கொண்டு, சமுதாயத்திலே இருக்கின்ற ஏழை - எளியவர்கள், பாட்டாளி மக்கள், ஆடவர் - பெண்டிர், உழவர் பெருமக்கள், நெசவாளிகள், சிறுபான்மைச் சமுதாயத்தினர், தேய்ந்தோர் - இன்னும் தேய்ந்து கொண்டிருப்போர் அவர்களெல்லாம், அத்தனை பேரும் இந்த திராவிட சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்வோம் - ஆரியத்தினுடைய சூழ்ச்சியினை வெல்வோம் - அதற்கு என்றைக்கும் அடிபணிய மாட்டோம் என்கின்ற உறுதியினை எடுத்துக் கொள்வோம் என்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொண்டு, சமுத்திரம் போல் வேலூர் பொதுக்கூட்டத்திலே நீங்கள் திரண்டிருக்கின்ற இந்தக் காட்சியைக் கண்டு நான் மீண்டும் மீண்டும் நம்பிக்கை பெறுகிறேன். ஆறாவது முறை - ஏழாவது முறை என்றார்கள். எல்லா முறையும் நாம்தான். அந்த நிலையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறு கின்றேன்.


இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

பெரியார் சிந்தனைகளை விஞ்சக் கூடியவர்கள் உலகத்தில் இதுவரை யாரும் தோன்றவில்லை! - கவிஞர் கனிமொழி எம்.பி. உரை




தந்தை பெரியார் கொள்கைகள் வெற்றி பெற்றால்தான் உண்மையான சமத்துவ - சம உரிமை உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி.


வைக்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் (26.11.2010) உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்ட தாவது:


" அய்யா நடத்தி வெற்றி பெற்ற வைக்கம் போராட் டத்தின் 85ஆம் ஆண்டு விழாவிலே கலந்து கொள் வதில் நான் பெருமை அடைகிறேன் பொதுவாக குருவுக்குச் சிஷ்யர்கள்தான் குரு காணிக்கை செலுத் துவார்கள். இங்கு எனது குருவான ஆசிரியர் எனக்கு நினைவுப் பரிசு அளித்து, சால்வை போர்த்தி சிறப்பு செய்திருக்கிறார், அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் திடலே இடம் பெயர்ந்ததோ!

சென்னையிலிருந்து பெரியார் திடலே இங்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு, வெளி மாநிலத்தில் நடைபெறும் விழா வில் கருஞ்சட்டைக் குடும்பங்கள் திரண்டு இருப் பது கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது (பலத்த கரவொலி) .


85 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் அவர் கள் இங்கு வந்து போராட்டம் நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார் என்பது சாதாரணமானதல்ல. ராஜாஜி போன்றவர்கள், தமிழ்நாட்டில் அதிகம் வேலை இருக்கும்போது இன்னொரு மாநிலத்திற்குச் சென்று எதற்காகப் போராட வேண்டும் என்று தடுத்துப் பார்த்தும் தந்தை பெரியார் அவர்களின் போராட்ட உணர்வைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை.

சேகுவாராவும், தந்தை பெரியாரும்

மாவீரன் சேகுவாரா இன்றைய இளைஞர்கள் இதயத்தில் இடம் பிடித்த போராட்ட வீரர். தனது பூமியாகிய கியூபாவில் போராடி வெற்றி பெற்று விட்ட நிலையில், அதோடு திருப்தி அடையாமல், எந்தெந்த நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்படு கின்றனவோ அந்தந்த நாடுகளுக்கெல்லாம் சென்று சுதந்திரத்திற்காகப் போராடினார் என்று படித் திருக்கிறோம்.


தந்தை பெரியார் அவர்களும் தமிழ் மண்ணில் பல சமூகப் புரட்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும், கேரளாவில் - இந்த மண்ணில் நிலவும் வருணாசிரமக் கொடுமையை ஒழிப்பதற் காகப் புறப்பட்டு வந்தார் என்றால் அது சாதாரண மானதல்ல.


அதே போல் தான் சமூகநீதிப் போராட்டத்தில் இந்தியாவில் அடக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு இதயத்திலும் நிற்பவர் நமது அய்யா அவர்கள்தான்.
மற்றவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது; யாருக்கும் ஒன்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்று தந்திரமாகப் பேசுவோர் உண்டு. ஆனால் யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூக மாற்றத்திற்குத் தேவையான புரட்சிகரக் கருத்துகளை எடுத்துக் கூறி வந்தவர் பெரியார் ஒருவர்தான்.

பெண்ணுரிமை பற்றிப் பேச வந்தவர்கள்

பெண்ணுரிமை பற்றிப் பேச வந்தவர்கள் எல்லாம் நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது, அதனைக் கட்டிக் காக்க வேண்டும், பெண் ணென்றால் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார்கள். பெண்களின் உரிமைகளை மற்றவர்கள்தான் தீர்மானிக்கும் நிலை இந்நாட்டில் - அப்படி ஆண்களால், மற்றவர்களால் தீர்மானிக்கப் படுவதுதான் பெண்களின் உரிமைகள் என்றும் சாதிப்பார்கள்.


ஆனால் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளா தவர் நமது அய்யா. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் தங்களின் உரிமைகளை அவர்களே போராடிப் பெற வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையாகும்.

அன்னை நாகம்மையார் பெற்ற பக்குவம்

வைக்கத்தில் தான் சிறைப்பட்டால், அடுத்துத் தம் துணைவியார் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு, தமது தங்கை கண்ணம்மாள் முன்னின்று நடத்தும் அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தி, தயார் நிலையில் வைத்தவர் தந்தை பெரியார்.


எந்த அளவுக்கு அன்னை நாகம்மையார் பக்குவப் பட்டிருந்தார்?


என் கணவன் ஈ.வி. இராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் ராஜத் துரோகக் குற்றத்துக் காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி என்னிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.


அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டும்; அதற்காக அவர் ஆயுள் வளர வேண்டும் என்று நாகம்மையார் குறிப்பிடுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?
உண்மையான ஒரு போராளி தன்னைச் சுற்றி யுள்ளவர்களையும் போராளிகளாக வைத்திருப்பார்கள்.

பெரியாரை விஞ்சக் கூடிய சிந்தனையாளர் யார்?

இவ்வுலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை விஞ்சக் கூடியவர்கள் யாரும் தோன்றவேயில்லை.
அதனால்தான் இன்றும் பெரியார் பிரமிப்புக் குரியவராக காணப்படுகிறார்.
இந்தியா டுடே ஒரு சிறப்பிதழை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநில ஆட்சி களைப்பற்றியெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம் - திராவிடர் ஆட்சி!

குஜராத் - நரேந்திரமோடி, டில்லி - ஷீலா தீட்சித் பற்றியெல்லாம் எழுத முடிகிறது. ஆனால் இந்தியா விலேயே சிறந்த ஆட்சியை நடத்தி வரும் கலைஞர் பற்றி ஒரு வரி கிடையாது.
காரணம் - இங்கு நடப்பது திராவிடர் ஆட்சி!

ஆம், சூத்திரர் ஆட்சியே!

ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் ஹண்டே அவர்கள் திமுக ஆட்சியை தேர்டு ரேட் கவர்ன் மெண்ட் என்று குறிப்பிட்டார். முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள். அதற்கு உடனடியாகப் பதில் கொடுத்தார்.
மூன்றாந்தர அரசு அல்ல; இது நான்காம் தர மக்களுக்காக - சூத்திர மக்களுக்காக நடத்தப்படும் சூத்திரர்களின் அரசு என்றார் (பலத்த கரஒலி!)

ஏகலைவனின் கட்டை விரல் காணிக்கையாக கேட்கப்பட்டது ஏன்?

மகாபாரதத்திலே கர்ணன் தேரோட்டியின் மகன் என்பதாலேயே புறக்கணிக்கப்படுகிறான்.
ஏகலைவன் எனும் பழங்குடியைச் சேர்ந்தவன் வில் வித்தையில் தேர்ந்தவன்; மற்றவர்களை யெல்லாம் விஞ்சியவன் என்று தெரிந்த நிலையில், அவன் கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றான் துரோணாச்சாரி என்றால் இது எந்த வகை தர்மம்? கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றபின் அவன் எப்படி அம்பை எய்திட முடியும்?
ஏகலைவன் சத்திரியனாக இருந்திருந்தால் கட்டை விரல் காணிக்கையாகக் கேட்கப்பட்டு இருக்காது! மாறாக, மாலைகள்தான் அவன் கழுத்தில் விழுந்திருக்கும்.
வழி வழியாக நம் மக்களின் திறமைகள் மறுக்கப் பட்டு வந்திருக்கின்றன. வருணாசிரமத்தால் ஒடுக்கப் பட்டு வந்திருக்கின்றன.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் - எதிர்ப்போர் யார்?

ஜாதியெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியானால் ஜாதி வேறுபாடு பார்க்காமல் அர்ச்சகர்களாக இருக் கலாம் என்றும் சட்டம் செய்தால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்களே, அது ஏன்? அந்த உயர்ஜாதி மனப்பான்மை அவர்களை விட்டு அழிந்து போகவில்லை.


பார்ப்பனர்கள், பார்ப்பனியம் என்று வருகிற போது நாங்கள் எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதும் வெறுப்புக் கொள்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
சித்தர்கள் பார்ப்பனர்களைப் பற்றிப் பாட வில்லையா?
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
என்று சிவ வாக்கியர் பாடவில்லையா?

கருத்துகளை உருவாக்கும் இடத்தில் இருப்போர் யார்?

வேதம் உதவாது, இப்பொழுது திமுக ஆட்சியின் 108 தான் வந்து உதவுகிறது. தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதிப் போராட்டங்களால்தான் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களில் சிலர் மருத்துவர் களாகியுள்ளனர்! பலர் பொறியாளர்களாகியிருக் கின்றனர். ஆனால் கருத்துகளை உருவாக்கக் கூடிய இடத்தில், திட்டங்களுக்குக் கரு கொடுக்கும் இடத் தில், உருவாக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்!


கவுரவக் கொலைகள் நடக்கின்றன - ஜாதி மனப் பான்மை இருப்பதால்தானே இந்தக் கொடுமை. இதனை ஒழிப்பது நமது கடமையல்லவா!

இது என்ன தமிழ் சினிமாவா?

உயர் பதவிகளில் இருப்பவர்களிடத்திலே இன்னும் பழைய மனப்பான்மை இருந்து வருகிறது. பெண் ஒருவர் நீதிமன்றத்திற்குச் செல்லுகிறார். தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தாகக் கூறி நீதி கேட்கிறார். அந்த நீதிபதி அதற்கு என்ன தீர்வு - தீர்ப்புக் கூறுகிறார்?


யார் உன்னைப் பாலியல் பலாத்காரம் செய் தானோ அவனையே கல்யாணம் செய்துகொள் என்று தீர்ப்பு வழங்குகிறார்.
இந்தத் தீர்ப்பு நியாயம்தானா? இது எந்த வகையைச் சேர்ந்தது? இது என்ன தமிழ் சினிமாவா?

பெரியார் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும்

எல்லாத் தளங்களிலும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் பரவ வேண்டும், வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சி அடைந்த ஓர் உண்மையான சமத்துவ - சம உரிமையுள்ள சமுதாயத்தைக் காண முடியும். அதற்காக நாம் பிரச்சாரம் செய்வோம் - பாடுபடுவோம் - தந்தை பெரியார் எண்ணங்களை நிறைவேற்றுவோம் " என்று கூறினார் கவிஞர் கனிமொழி.

திமுகவின் தொ.மு.ச. வெற்றி-73,450வாக்குகள்!

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுக தொழிற்சங்கமான தொமுச வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் அமைச்சர் நேரு நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில், தொமுச தலைவர் குப்புசாமி, பொதுச்செயலாளர் சண்முகம்.

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். இதற்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்படும். இந்த ஆண்டு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அரசு அழைப்பு அழைப்பு விடுத்தது.
இதை எதிர்த்து பணியாளர் சம்மேளனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிற்சங்கங்களுக்கு இடையே தேர்தல் நடத்தி, அதில் அதிக வாக்குகளை பெறும் தொழிற்சங்கம் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி, அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான அங்கீகார தேர்தல், மாநிலம் முழுவதும் 513 போக்குவரத்து பணிமனைகளில் கடந்த 25ம் தேதி நடந்தது.
திமுக தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் தொழிற்சங்கமான சிஐடியு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 13 சங்கங்கள் போட்டியிட்டன. அண்ணா தொழிற்சங்கத்துக்கு தேமுதிக, ஐனதா தளம், புதிய தமிழகம், மதிமுக உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.


தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து 343 ஓட்டுப் பெட்டிகள், சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மாநகர் மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் ஹாதி முன்னிலையில் நேற்று (27.11.2010) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாவட்ட வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இன்று (28.11.2010) இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1 லட்சத்து 28,173 வாக்குகள் பதிவாகின. இதில் நேரடியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1 லட்சத்து 21,101. தபால் ஓட்டுகள் 6,498, செல்லாத ஓட்டுகள் 574. மொத்தம் செல்லுபடியான ஓட்டுகள் 1 லட்சத்து 27,599.
இதில் தொமுச 73,450 வாக்குகள் (57.31%) பெற்று வெற்றி பெற்றது. சிஐடியு 19,002 வாக்குகள் (14.83%) பெற்று 2வது இடத்தை பெற்றது. அண்ணா தொழிற்சங்க பேரவை (அதிமுக) 15,765 வாக்குகள் (12.30%) பெற்று 3வது இடத்தை பெற்றது.
திமுகவின் தொ.மு.ச. வெற்றி பெற்றுள்ளது.வெற்றி பெற்ற தொமுசவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல நல்ல பலன்களை பெற்று வருகிறார்கள். ஆனால் 2001ம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர் ஆக்குவேன் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு விற்க ஆணை பிறப்பித்தார்.

போனஸ் தொகையை 20 சதவீதம் என்பதை 8.33 சதவீதமாக குறைத்தார். 3 ஆண்டு ஒப்பந்த ஊதியத்தை 5 ஆண்டு என்று தன்னிச்சையாக நீட்டித்தார். ஆண்டு தோறும் வழங்கிய பொங்கல் கருணைத் தொகை இல்லை என்று கூறினார்.

முழு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி காலம் 30 ஆண்டுகள் என்பதை 33 ஆண்டுகள் என்று உயர்த்தி ஒய்வூதியத்தில் குழப்பத்தை விளைவித்தார். இதனை எதிர்த்து போராடிய தொழிலாளர்களை பழி வாங்கி சிறைக்கு அனுப்பி பணி மாற்றம், பதவி இறக்கம் செய்து தொழிலாளர்களை பழி வாங்கினார்.

இவை எல்லாவற்றையும் எதிர்த்து போராடிய தொழிலாளர்களுக்கு தலைவர் கலைஞர் ஆறுதல் கூறி வந்தார். மீண்டும் 5வது முறையாக ஆட்சி பொறுப்பெற்ற பிறகு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த நாட்களை ஊதியத்துடன் கூடிய பணி நாட்களாக கருதி அரசு ஆணை பிறப்பித்தார். 5 ஆண்டு ஒப்பந்தம் என்பதை மீண்டும் 3 ஆண்டாக குறைத்து அரசு ஆணை பிறப்பித்தார். போனஸ் தொகை ரூ.5 ஆயிரம் என்பதை ரூ.8 ஆயிரத்து 400 ஆக உயர்த்தி வழங்கினார்.

ஓய்வூதியத்திற்கு வருமான வரி விலக்கு பெற்று தந்த ஒரே முதல்வர் கலைஞர்தான். 35 ஆயிரம் புதிய பணியாளர்களை தேர்வு செய்ததுடன் 10 ஆயிரம் புதிய பஸ்களை வாங்கித்தந்து போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தினார்.

இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த தொ.மு.ச. பேரவை போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணியாளர் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தவும், ஊதிய முரண்பாடுகளைகளையும், பதவி உயர்வு மற்றும் 5 ஆண்டுக்கு ஒரு ஆய்வுப் பலன்களை பெற்று தரவும், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உள்ள ஊதிய தேக்க நிலையை களையவும், பேருந்து இயக்கம் மற்றும் எரிபொருள் சிக்கனம் என்ற பெயரால் தொழிலாளர்கள் பழி வாங்கப்படுவதை தடுக்கவும் தண்டனைகளை குறைக்கவும் தொ.மு.ச. பேரவை பாடுபடும் என்று தொழிலாளர்கள் மத்தியில் வாக்குறுதிகளை வைத்து ஓட்டு கேட்டது.

மின் வாரிய ஊழியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, வீட்டு வாடகைபடி மற்றும் இதர சலுகைகளை பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்து தொ.மு.ச. வாக்கு கேட்டது.

தொழிலாளர்களுக்கு இடர் வரும்போது, முதல்வர் கருணாநிதியும், தொ.மு.ச. பேரவையும் உறுதுணையாக இருந்து குறைகளை தீர்த்ததை தொழி லாளர்கள் மறக்கவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கி பணிச் சுமையை குறைத்த முதல் அமைச்சர் கருணாநிதிக்கும் தொ.மு.ச. பேரவைக்கும் நன்றி காணிக்கையாக வாக்கு களை அளித்து நன்றி கடன் செலுத்திய தொழிலாளர்களுக்கு தொ.மு.ச. பேரவை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தொ.மு.ச. வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தொ.மு.ச. மீண்டும் நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு மு.சண்முகம் கூறியுள்ளார்.


போக்குவரத்து சங்க தேர்தலில் பங்கேற்ற மற்ற சங்கங்களின் ஓட்டு விவரம் வருமாறு:
புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி - 2,307.
இந்திய தேசிய போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் - 4,824.
நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் - 293.
பாட்டாளி தொழிற்சங்க பேரவை - 2856.
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம் - 23.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் - 2204.
தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் எச்எம்எஸ் பேரவை - 915.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பட்டய (டிப்ளமோ) தொழில்நுட்ப பணியாளர்கள் சம்மேளனம் - 3,942.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் - 1,912.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பட்டதாரி மற்றும் பொது தொழிலாளர்கள் நலச்சங்கம் - 105.

தொழிற்சங்க தேர்த லில் வெற்றி பெற்றதற் கான சான்றிதழை தொழி லாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் செ. குப்புசாமியிடம் தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியான அப் துல் ஹாதி வழங்கினார்.

தமிழகத்தில் 12 ஆண்டு க்கு முன்பு 1998ல் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற தொமுசவுக்கு 26 ஆயிரத்து 577 ஓட்டுகள் கிடைத்தது. இந்த தேர்தலில் கூடுதலாக 46 ஆயிரத்து 873 ஓட்டுகள் வாங்கியுள்ளது.
அண்ணா தொழிற்சங்கம் 23 ஆயிரத்து 917 ஓட்டுகள் வாங்கி, இரண் டாம் இடத்தை பிடித்தது. இந்த தேர்தலில் 8 ஆயிரத்து 152 ஓட்டுகள் குறைந்து, 3வது இடத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் தள்ளப்பட்டு ள்ளது. சிஐடியூ 15 ஆயிரத்து 890 ஓட்டுகள் வாங்கி நான் காம் இடத்தில் இருந்தது. இந்த தேர்தலில் கூடுதலாக 3 ஆயிரத்து 112 ஓட்டுகள் வாங்கி 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பணியாளர் சம்மேளனம், ஏஐடியூசி சங்கங்களின் ஓட்டு விகிதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து டெப்போக்களிலும் தொமுச அதிக ஓட்டுகள் வாங்கியுள் ளது. ஆனால், மதுரை, குமரி மாவட்டம் மார்த்தாண்டாம் அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போக்களில் மட்டும் சிஐடியூ அதிக ஓட்டு வாங்கியுள்ளது. மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவில் 585 ஓட் டுகள் பதிவாகின. அதில், சிஐடியூ - 286, தொமுச - 212, அண்ணா தொழிற்சங்கம் - 69, பணியாளர் சம்மேளனம - 10 ஓட்டுகள் பெற்றுள்ளது.