![](http://2.bp.blogspot.com/-Lp0XcXO06WY/TawfakNNuNI/AAAAAAAADpw/lQZLVK_UwB4/s400/A.jpg)
திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.பி.சாமியை ஆதரித்து, காலடிப்பேட்டையில் 09.04.2011 அன்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் தனியரசு தலைமை வகித்தார். நிதியமைச்சர் க.அன்பழகன் பேசியதாவது:
ஜனநாயக முறையில் ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி மீண்டும் தொடர, மக்கள் அக்கறை காட்ட வேண்டும். மக்கள் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார். எனவே, இந்த நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு தரவேண்டும்.
ஜெயலலிதாவுடன் சேர்ந்து திமுகவை அழித்து விடலாம் என்று திட்டமிட்டு சில தலைவர்கள் அவருக்கு துணை போயிருக்கிறார்கள்; அது நடக்காது. விஜயகாந்த் மீது நான் குற்றம் சொல்ல மாட்டேன். அவருக்கு தெரிந்த அரசியல் அவ்வளவுதான். ஜெயலலிதாவை ஆதரிக்கிற சில பத்திரிகைகள், “திமுக பின் தங்குகிறது; எதிரணி முந்துகிறது” என்று கூறி, திமுகவை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. திமுகவை வீழ்த்த நினைப்போரை மக்கள் வீழ்த¢த வேண்டும். இதை தமிழக மக்கள் உணர்ந்து தமிழகத்தையும், தமிழினத்தையும் காப்பாற்ற உதயசூரியனுக்கு ஓட்டு போட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment