கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 6, 2011

கலைஞர் செயலாளர் கே.சண்முகநாதன் ராஜினாமா


தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் ஏற்கனவே சட்டமன்ற செயலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே.சண்முகநாதன், மறுபணி அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளராக பணியாற்றி வந்தார்.

முதலமைச்சர் கருணாநிதி எங்கு சென்றாலும் அவரது நிழல் போலவேகூட இருந்து பணியாற்றிய சண்முகநாதன், எந்த கூட்டங்கள், விழாக்கள் நடந்தாலும் முதல்-அமைச்சரின் பின்னால் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்.

தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன் வெளியே சுற்றுப்பயணம் செல்லும்போதோ, கூட்டங்களுக்கு செல்லும்போதோ கெஜட்டட் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் உடன் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கே.சண்முகநாதன், அரசு பணியில் இருந்து அதாவது முதலமைச்சரின் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.

இனி அவர் அரசு ஊழியர் இல்லை என்பதால் முதலமைச்சர் கருணாநிதி செல்லும் எந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கும் செல்வதற்கு தடை இல்லை. தேர்தல் கமிஷன் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. `ஏன் கலந்து கொண்டீர்கள்?' என்று கேட்கவும் முடியாது.

No comments:

Post a Comment