கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 15, 2011

அதிமுக கூட்டணியில் ஒருவரை புகழ்ந்தால் மற்றவருக்கு பிடிக்காது - நடிகை குஷ்பு


அதிமுக கூட்டணியில் ஒருவரை புகழ்ந்து பேசினால் மற்றொருவருக்கு பிடிக்காது என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜாவை ஆதரித்து 05.04.2011 அன்று நடிகை குஷ்பு பேசியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தமிழகத்துக்கு நல்ல பல திட்டங்களை செய்துள்ளார். அவரை விட மகன் ராஜா உங்கள் பகுதிக்கு அதிக திட்டங்களை செயல்படுத்துவார்.
நல்ல தலைவர் என்றால் சொந்தமாக செயல்பட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை அறிவித்து 5 நாள் கழித்து அதை காப்பி அடித்து, எதிர்க்கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
திமுக கூட்டணியில், முதல்வர் வேட்பாளராக கருணாநிதி உள்ளார். எதிரணியில் முதல்வர் வேட்பாளர் யார், கூட்டணியின் தலைவர் யார் என்றே தெரியவில்லை. விஜயகாந்தும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இயலாது.
சோனியா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் பேசுகிறார்கள் என்றவுடன் மிஸ்டர் 41ம், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பேசுவோம் என அறிவித்து உள்ளனர்.
ஜெயலலிதாவை புகழ்ந்தால் 41க்கு பிடிக்காது, இவரை புகழ்ந்து பேசினால் ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. வரும் 13ம் தேதிக்கு பிறகு ஜெயலலிதா கோடநாடு போய்விடுவார்.
நீடாமங்கலம்& மன்னார்குடி அகல ரயில் பாதை பணியை ஒரு ஆண்டில் முடிக்க உறுதுணையாக இருந்தவர் டி.ஆர்.பாலு.
மேலும் மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதை பணி தொடங்க உள்ளது. மேலும் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். எனவே ராஜாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

No comments:

Post a Comment