கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 25, 2011

கோவையில் திமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு : கருணாநிதி, ஸ்டாலின் சென்னை திரும்பினர்



கோவையில் 24.07.2011 அன்று & 24.07.2011 அன்று திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி 23.07.2011 அன்று அதிகாலை சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை வந்தார். ரெசிடென்சி ஓட்டலில் தங்கினார். இரு தினங்களும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். 24.07.2011 அன்று இரவு 8 மணியளவில் பொதுக்குழு நிறைவுபெற்றது. பின்னர், ரெசிடென்சி ஓட்டலில் தங்கிய கருணாநிதி, 25.07.2011 அன்று காலை 10.10 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 22ம் தேதி கோவை வந்தார். அன்றையதினம் கூட்ட ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். இரு தினங்களும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்துகொண்டார். 24.07.2011 அன்று இரவு 8 மணியளவில் பொதுக்குழு நிறைவுபெற்றதும் சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் இருந்து நேரடியாக பீளமேடு விமான நிலையம் சென்றார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சென்றார். இருவரும், ஒரே விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment