கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 17, 2011

மக்களுக்காக திமுக தொடர்ந்து பாடுபடும் - ராயபுரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



ராயபுரம் பகுதி திமுக சார்பில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுவின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ராயபுரம் பாலு முதலி தெருவில் 16.07.2011 அன்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் கட்பீஸ் பழனி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
திமுக பெறாத வெற்றியும் அல்ல, பெறாத தோல்வியும் அல்ல. இரண்டையும் ஒன்றாக கருதும் இயக்கம் திமுக. ஒரு சிலரைப்போல் தோற்றுவிட்டால் கோடநாட்டுக்கு ஓய்வு எடுக்க செல்ல மாட்டோம்.
தோற்றாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். ஆட்சி மாற்றம்தான் ஏற்பட்டதே தவிர மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வரி வரிவிதித்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுகவுக்கு 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள்தான் குறைவாக கிடைத்துள்ளது. வாக்கு வித்தியாசம் மாற நாட்கள் வெகுதொலைவில் இல்லை. புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாவும், அதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்போவதாகவும் ஜெயலலிதா கூறுகிறார். எத்தனை விசாரணை கமிஷன் அமைத்தாலும் சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது.
ஜெயலிலதா ஆட்சி பொறுப்பேற்று 60 நாட்கள் ஆகிறது. இந்த 60 நாட்களில் 60 கொலைகள், 120 வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள், 8 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா? திமுகவினரை பழிவாங்க, நில ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க ஒரு தனித் துறையை உருவாக்கியுள்ளனர். தவறு நடந்து இருந்தால் வழக்கு போடலாம். பழிவாங்கும் எண்ணத்தோடு வழக்கு தொடர்ந்தால், அதற்கு அதிகாரிகளும் துணைபோனால் அதனை சட்டப்படி திமுக சந்திக்கும். நில ஆக்கிரமிப்பு என்று பூச்சாண்டி காட்டும் ஜெயலலிதா சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பினாமி பெயரில் ஆக்கிரமித்தார். இதுவரை அதனை தலித் மக்களுக்கு வழங்கினாரா?
வருகிற 27ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு சம்மன் வந்துள்ளது. இந்த வழக்கில் பலமுறை வாய்தா வாங்கி வழக்கை சந்திக்க தைரியம் இல்லாத ஜெயலலிதா எங்களை மிரட்டுவதா?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக துணை பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, மேயர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், செங்கை சிவம், மதிவாணன், டன்லப் ரவி, இளைய அருணா, வி.பி.ஆர்.இளம்பரிதி, கிரிராஜன், அருள்அரசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment