கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 29, 2011

சமச்சீர் கல்வியில் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது : தமிழக அரசு தகவல் - சுப்ரீம் கோர்ட்டில் சலசலப்பு


சமச்சீர் கல்வியில் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது என்று அரசு வக்கீல் அளித்த பதிலால் உச்ச நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சமச்சீர் கல்வி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் முன்பு 27.07.2011 அன்று 2 வது நாளாக விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
மூத்த வக்கீல் பி.பி.ராவ்:
சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் ஆராய்ந்து பார்க்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்த்து சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது. எனவே இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது. இதற்காக தான் அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
மூத்த வக்கீல் பி.பி.ராவ்:
சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் ஆராய்ந்து பார்க்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்த்து சமச்சீர் கல்வியில் பல குறைபாடுகள் உள்ளது. எனவே இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது. இதற்காக தான் அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் ,ஜனார்த்தனராஜா ஆகியோர் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை 2011 ம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு அமல்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். இதை பின்பற்றி சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய கடந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சடித்து விட்டனர். எனவே தான் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தீர்ப்பை பின்பற்றி வருகிறோம்.
நீதிபதிகள்:
சமச்சீர் கல்வியில் குறைபாடுகள் இருந்தால் அதை நீக்கி இருக்கலாம். அதை விட்டு விட்டு சமச்சீர் கல்வி திருத்த சட்டத்தை கொண்டு வந்தது ஏன்?
வக்கீல் ராவ்:
கல்வி மற்றும் சட்டத்துறையில் தமிழக அரசுக்கு சரியாக ஆலோசனை கூறும் நபர் யாரும் இல்லை, சட்ட திருத்தம் கொண்டு வந்தது தேவையற்றது. (அரசு வக்கீலே இப்படி பதில் கூறியதால் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.)
வக்கீல் ராவ்:
கல்வி மற்றும் சட்டத்துறையில் தமிழக அரசுக்கு சரியாக ஆலோசனை கூறும் நபர் யாரும் இல்லை, சட்ட திருத்தம் கொண்டு வந்தது தேவையற்றது. (அரசு வக்கீலே இப்படி பதில் கூறியதால் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.)
அரசு சார்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார்:
சமச்சீர் கல்வியினால் மாணவர்கள் தரம் குறைந்துவிடும். எனவே பழைய பாடத்திட்டத்தை வழங்குவது தான் சரியானது. பழைய பாடத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. உயர்நீதிமன்றம், 9 பேர் அடங்கிய குழு கொடுத்த அறிக்கையை சரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை. இந்த அறிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது தவறானது.
எனவே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
மெட்ரிக்குலேசன் தரப்பு வக்கீல்கள் அரிமாசுந்தரம், ராஜீவ்தவான்:
பழைய பாடப்புத்தகம் தான் தரமானது என்று பள்ளிகள் தரப்பில் கருத்துக்கள் தெரிவித் துள்ளன.
இதை கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 28.07.2011 அன்று தள்ளிவைத்தனர்.
ராவ் விளக்கம்:
உச்ச நீதிமன்றத்தில் 27.07.2011 அன்று மாலை விசாரணை முடிவடையும் நேரத்தில் வக்கீல் பி.பி.ராவ் கூறுகையில், ‘சமச்சீர் கல்வி சட்டத்தை தமிழக அரசு திருத்தியது தேவையற்றது என்று கூறியது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது தமிழக அரசின் கருத்து அல்ல’ என்றார்.

No comments:

Post a Comment