கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

கவிஞர் வாலியின் கண்டுபிடிப்பு


மே 13ஆம் தேதி வரையில் கலைஞரையும், கழகத்தையும் பாராட்டிக் கொண்டிருந்த பலர், தற்போது தங்கள் நிலையைக் கொஞ்சமும் கூச்சப்படாமல் மாற்றிக்கொண்டு விட்டனர். அறிவாலய விழாக்கள் பலவற்றில் பங்கேற்றுக் கலைஞரைப் புகழ்ந்து தள்ளி, ஜெயலலிதாவைக் கடுமையாய்த் தாக்கிக் கேலி செய்தவர்களுள் கவிஞர் வாலிக்கு முதல் வரிசையில் இடமுண்டு.

இப்போது ஜுனியர் விகடனின் (26.06.11) முதல் பக்கத்தில், ரங்கநாயகி என்னும் தலைப்பில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது. ஸ்ரீரங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயலலிதா என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கவிஞரோ, அரங்கநாதர் கோயிலில் உள்ள ரங்கநாயகியே அவர்தான் என்கிறார்.

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்

வாழ்த்துகிறார்கள் இன்று

எங்க நாயகிதான் - அந்த

ரங்க நாயகி என்று!

அடடா... எத்தனை பெரிய கண்டுபிடிப்பு!

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment