கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

சமச்சீர் கல்விதான்! ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு : ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


சமச்சீர் கல்வி வழக்கில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை பல தரப்பினரும் வரவேற்றனர். ஆனால், பிடிவாதமாக சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக அரசு மேல் முறையீடு மனு செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு, மக்கள் விருப்பத்துக்கு எதிரான தமிழக அரசின் போக்குக்கு அடுத்த அடி இது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியின்போது 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறியதும், அவசர சட்டம் மூலம் சமச்சீர் கல்வித் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெற்றோர் சார்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சியாம் சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு கடந்த மாதம் தாக்கல் செய்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 9 பேர் அடங்கிய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. அந்த கமிட்டி சமச்சீர் பாடபுத்தகங்களை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தமிழக அரசு அமைத்த கமிட்டி அறிக்கையை ஆய்வு செய்தனர். பின்னர் வழக்கில் இறுதி விசாரணை நடத்தி வரும் 22ம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும், சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு கூறினர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
அதில் தமிழக அரசு கூறியிருப்பதாவது:
உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை அமல்படுத்த தான் அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த அரசு இதை அமல்படுத்தவில்லை. இந்த அரசு இதை அமல்படுத்தியுள்ளது. இதற்காக சமச்சீர் கல்வி தரமற்றது என்று முடிவு செய்து அதற்காக தான் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
சமச்சீர் கல்வி தரமற்றது என்றும். இந்த ஆண்டு இதை அமுல்படுத்த முடியாது என்றும் இந்த கமிட்டி அரசுக்கு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை சரியானது தான். இதை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது தவறானது.
இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. மாணவர்கள் நலன் கருதி தான் சமச்சீர் கல்வி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி தருவது தான் அரசின் நோக்கம்.
எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு மேல்முறையீடு மனுவில் கூறியுள்ளது.
இதில் எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த தடையும் விதிக்க கூடாது என்று பெற்றோர் தரப்பில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் சார்பாக வக்கீல் கே.பாலு, பொதுக் கல்விக்கான மாநில மேடை பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கேவியட் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் முன்பு 21.07.2011 அன்று மதியம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பாக மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு அளித்த தீர்ப்பின் படி தான் தமிழக அரசு பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகம் வழங்க முடிவு செய்தது. தமிழக அரசு சமச்சீர் கல்வியை தற்போதைக்கு தள்ளிதான் வைத்துள்ளது, தனியார் பள்ளிகளிடம், கடந்த
அரசு ஒப்புதல் பெறாமல் சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடித்து விட்டது. மாணவர்களுக்கு தரமான கல்வியை தர தான் சமச்சீர் கல்வியை அரசு தள்ளிவைத்து, சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
சமச்சீர் கல்வி தரமற்றது என்று அரசு அமைத்த 9 பேர் கமிட்டி அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது தவறானது. சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது சட்டவிரோதமானது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
நீதிபதிகள் கேள்வி:
நீதிபதிகள் குறுக்கிட்டு,� சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் தவறான பாடங்களை நீக்கி விட்டு புதிய புத்தகம் அச்சிட்டு கூடுதலாக தரலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கும் போது, அதை செய்ய அரசு ஏன் தயங்குகிறது? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தரப்பில் மூத்த வக்கீல் முகில்ரோத்கி, அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி, சமச்சீர் கல்வி தரமற்றது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.
பெற்றோர்கள் தரப்பில் மூத்த வக்கில்கள் ஏ.கே.கங்குலி, ரவிவர்மா, ஆர்.விடுதலை, கே.பாலு ஆகியோர் ஆஜராகி, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும், மாணவர்கள் கடந்த 2 மாதமாக எந்த புத்தகமும் படிக்காமல் குழப்பத்தில் உள்ளனர். 9 கோடி புத்தகங்கள்
ஸி200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த தடையும் விதிக்க கூடாது என்றனர்.
இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது, வரும் 26ம் தேதி இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர். அப்போது அரசு வக்கீல் பி.பி.ராவ் குறுக்கிட்டு, வரும் 22ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் விநியோகிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், வரும் 22ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நீடித்து ஆகஸ்டு மாதம் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment