கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 28, 2011

அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து 1ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க அறப்போராட்டம்


அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் வரும் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் நடைபெறுகிறது. அதில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திமுக தலைமை கழகம் 28.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அறப்பேராட்டம் நடைபெறுகிறது. வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள் துணை முதல்வர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் தலைமை வகிக்கின்றனர்.
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார்.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார். இதேபோல மற்ற மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை தாங்குகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment