கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 27, 2011

பொய் வழக்குகளை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் : ஆக.1ல் நடக்கிறது


அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் வழக்குகள் போடுவதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் 1ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
வடசென்னை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் 26.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக அரசின் அடக்குமுறை தர்பார், அராஜக நடவடிக்கை, பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்குகள் போடுவது ஆகியவற்றை கண்டித்து, திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடசென்னை மாவட்ட திமுக சார்பில் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்டக்கழக நிர்வாகிகள், தலைமை கழக & பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கவுன்சிலர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் மற்றும் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment