கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 29, 2011

ஸி66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு : பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆஜர்


சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா 27.07.2011 அன்று ஆஜராகவில்லை.
ஜெயலலிதா 1991 & 1996ல் முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஸி66 கோடி சொத்துகள் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் அவருடைய தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூலை 27ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார் கடந்த 25ம் தேதி நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் அவர், �தமிழக முதல்வர் ஜெயலலிதா, இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக இயலாது. அவரிடம் கேட்கப்பட உள்ள கேள்விகளுக்கான பதில்களை எழுத்து மூலம் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரிடம் பதில் பெற வேண்டும்� என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு 27.07.2011 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வரவில்லை. சசிகலா, இளவரசி மட்டும் ஆஜராகினர். கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், சுதாகரனால் ஆஜராக முடியவில்லை என்றும், அவருக்கு விலக்கு அளிக்கும்படியும் கோரி அவரது வக்கீல் சரவணக்குமார் மனு செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் வக்கீல் குமார் வாதாடியதாவது:
கடந்த 2009, டிசம்பர் 31ம் தேதி குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பிரிவு 313 (5) அமலுக்கு வந்தது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் கேள்வி & பதில் நடைமுறைக்காக நேரில் ஆஜராகத் தேவையில்லை. அரசுதரப்பு கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளிக்கலாம். எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக தேவையில்லை.

இவ்வாறு வக்கீல் குமார் வாதிட்டார்.
அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், சுதாகரனுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment