கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 12, 2011

சமச்சீர் கல்வி வழக்கு : அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் 3 கேள்வி


சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றி கமிட்டி சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது உள்பட 3 கேள்விகளை ஐகோர்ட் நீதிபதிகள் எழுப்பினர்.
சமச்சீர் கல்வி வழக்கில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் 12.07.2011 அன்று ஆஜராகி, கூறியதாவது:
கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில், 9 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் கல்லூரி முதல்வராக உள்ளார். தொடக்க கல்வி பற்றி தெரியாத நிபுணர்கள்தான் அந்த கமிட்டியில் இடம் பெற்றனர். அந்த கமிட்டி சரியாக செயல்படவில்லை.
கடந்தாண்டு நடந்த இந்த கமிட்டி கூட்டத்தில் ஒரே நாளில் எந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்யவேண்டும் என முடிவு செய்து, அன்றைக்கே சமச்சீர் கல்வி புத்தகத்தை அச்சடிக்கவும் முடிவு செய்துவிட்டனர். ஏன் இவ்வளவு அவசரம் காட்டினார்கள்? இதில் அரசியல் உள்நோக்கத்துடன் தற்போதைய அரசு செயல்படவில்லை. மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் தரமான கல்வியை தர வேண்டும் என்ற நோக்கத்தோடு இதற்காக சட்டத் திருத்தத்தை முதல்வர் கொண்டு வந்தார்.
மத்திய அரசின் சட்டத்துக்கு விரோதமாக சமச்சீர் கல்வி உள்ளது. எனவே, இந்தாண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது.
இவ்வாறு பேசினார்.
தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, “சமச்சீர் கல்வியை நிறுத்திவைத்து சட்ட திருத்தம் கொண்டுவர தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றி தமிழக அரசு செயல்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி வழக்கை கடந்தாண்டு விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ‘சமச்சீர் கல்வியை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் கடந்த அரசு இதை பின்பற்றவில்லை. 1 மற்றும் 6 வகுப்புக்கு மட்டுமே சமச்சீர் கல்வியை கொண்டுவந்துவிட்டு மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை தீர ஆராய்ந்து பார்த்து மீண்டும் புதிய கமிட்டி அமைத்து முடிவு செய்தபிறகுதான் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கடந்த அரசு இதை பின்பற்றாமல் அவசரமாக 9 கோடி சமச்சீர் புத்தகத்தை அச்சடித்துவிட்டது. மாணவர்கள் நலனுக்காகத்தான் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக்கூடாது’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அரசு வக்கீலுக்கு 3 கேள்விகள் எழுப்பினர். ‘‘சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றி கமிட்டி சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? அரசு அமைத்த கமிட்டியின¢ அறிக்கை சரியாக உள்ளதா? இந்த அறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் கல்வியை அரசு ஒத்திவைத்தது சரியா, இல்லையா? என்று மட்டும் அரசு வக்கீல் பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணையை இன்று முடித்துவிடுகிறோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment