கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

கலைஞரைப் பற்றித் தமிழருவி மணியன்...


( 2006ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு உறுப்பினராகத் தமிழருவி மணியன் கலைஞரால் நியமிக்கப்பட்டபோது, அவர் முரசொலியில் எழுதியுள்ள கவிதை இது )

நேற்று நீ

வடமொழியோடு என்றும் வாடாத தமிழுக்குச்

செம்மொழி என்ற சரியாசனம் தந்தாய்

இன்று நீ

இந்த மண்ணில் வாழும் எவரும்

தமிழ் படித்தே ஆகவேண்டும் என்ற

விதியயான்று செய்தாய்

நாளை நீ

நியாயத் தராசிருக்கும் நீதிதேவன் கொலுமண்டபத்தில்

அன்னைத் தமிழ் ஆள்வதற்கு அரியாசனம் அமைத்தாய்

என்றும் நீ

செய்கரிய இச்சாதனைகளால்

தமிழர்தம் நெஞ்சங்களில்

தஞ்சைக் கோபுரமாய் உயர்ந்தாய்

தமிழ் என்றாலும் தமிழர் என்றாலும்

திறனறிந்து போற்றுவார் உன்போல் யாருண்டு?

வளர் நிலவாய் வாழ்க வற்றாத உன் தமிழ்த் தொண்டு!

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment