கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 29, 2011

திமுக முன்னணி பேச்சாளர் 'அலைகடல் ' வெற்றிகொண்டான் மரணம்




திராவிட முன்னேற்றக் கழக முன்னணி பேச்சாளர் வெற்றிகொண்டான் 29.01.2011 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ‌சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி 29.01.2011அன்று காலமானார். திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தன்னுடைய கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் வெற்றிகொண்டான். தனக்காகவும், தன்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்காகவும் கட்சி தலைமையையும், அமைச்சர்களையும் நெருங்காதவர். தான் கலந்துகொண்டு பேசும் கூட்டங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் பேச்சாற்றலால் ஈர்ப்பவர்.


புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி - சித்தியம்மாள் ஆகிய தம்பதிகளுக்கு பிறந்தவர் வெற்றிகொண்டான். இவருக்கு ஒரு அக்காவும், தங்கையும் உள்ளனர்.


ஜெயங்கொண்டத்தில் காபி தூள் வியாபாரம் செய்து வந்த வெற்றி கொண்டான், ராஜாமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெற்றி கொண்டானுக்கு ராணி என்கிற மகளும், உதய சூரியன், கருணாநிதி என இரண்டு மகன்களும் உள்ளனர்.

‡.˜.L. RÛXYŸ L£QÖŒ‡›Á R–² ÚTor• CYÛW ÙT¡‰• LYŸ‹R‰. ARÁ «Û[YÖL ‡.˜.L.«¥ ÚNŸ‹‰ T‚VÖ¼½]ÖŸ.

UeLºeLÖL ‡.˜.L. SP†‡V ÚTÖWÖyPjL¸¥ TjhÙLÖ�| TX˜Û\ ÛL‰ ÙNšV�Ty| pÛ\›¥ AÛPeL�TyPÖŸ. p\‹R ÚToNÖ[WÖ] CYŸ, J£˜Û\ ‡£Y�QÖUÛX›¥ SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚTpVÛR ÚLyP ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ RU‰ ŒÛ\° EÛW›¥, ``ÙY¼½ ÙLÖ�PÖÁ GÁÛ]� ÚTopÚX ÙY¼½ ÙLÖ�PÖÁ'' GÁ¿ “LZÖW• syz]ÖŸ. ‡.˜.L.«¼LÖL AVWÖ‰ T‚VÖ¼½ Y‹R ÙY¼½ÙLÖ�PÖÛ] TÖWÖy|• YÛL›¥ ‡.˜.L. 1992-• B�| SP†‡V ˜�ÙT£• «ZÖ«¥ RÛXÛUe LZL†‡Á NÖŸ‘¥ LÛXOŸ «£‡Û] ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ YZjf]ÖŸ.

வெற்றிகொண்டான் மறைவு குறித்து தகவலறிந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள் விரைந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

30.01.2011 அன்று அதிகாலை 2 மணிக்கு ஜெயங்கொண்டம் ஆண்டான் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
30.01.2011 அன்று காலை ஜெயங்கொண்டம் வந்தார். அவர் வெற்றி கொண்டான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, சிவசங்கர், ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்கள்.

30.01.2011 அன்று மாலை 4 மணிக்கு வெற்றிகொண்டான் இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment