கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, January 26, 2011

சிதம்பரம் கோயிலை அரசுக்குச் சொந்தமாக்கியது தி.மு.க.அரசு! - அமைச்சர் பெரியகருப்பன் இல்ல மணவிழாவில் முதல்வர் கலைஞர் விளக்கம்



சிதம்பரம் கோயில் யாரோ சிலருக்குச் சொந் தம் என்ற நிலையை மாற்றி அரசுக்கு சொந் தம் என்று ஆக்கியது தி.மு.க அரசு என்று கூறி விளக்கமளித்தார் முதல மைச்சர் கலைஞர். 24.01.2011 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இல்ல மணவிழாவில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு :-

சிவகங்கை மாவட்டக் கழகத்தின் செயலாள ரும், அறநிலையத் துறை அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் அன்பு மகன் டாக்டர் பி.ஆர். கருத்தான் என்கிற கோகு லகிருஷ்ணனுக்கும், மதுரை க.ப. நவநீத கிருஷ்ணன் அவர்களின் அன்பு மகள் டாக்டர் ந. பாரு பிரியதர்ஷினிக்கும் இந்த மணவிழா இன் றைக்கு இனிதே நடை பெற்றுள்ளது. நம்மு டைய மத்திய உள் துறை அமைச்சர் அவர்கள் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக் கொண் டார்.

ஆகவே, நான் இயல்பாக பெண் வீட்டுக் காரனாக என்னை ஆக்கிக் கொண்டு (கைதட்டல்) இந்த இல்லறக் கூட்ட ணியின் சார்பாக (பலத்த கைதட்டல்) இருவரும் இணைந்து மணமக் களை வாழ்த்தி - மண மக்களை வாழ்த்த வந்தி ருக்கின்ற தமிழ்ச் சமு தாயத்தின் பெருமக்க ளையும், வாழ்வதற்கு வகை கண்டு நம்முடைய கடமையை ஆற்ற வேண் டியவர்களாக இருக் கின்றோம் என்பதை எடுத்துச் சொல்ல விரும் புகிறேன்.

நான் அணிந்திருக்கின்ற இந்தக் கண்ணாடி வழியாகத்தான்!

தம்பி பெரிய கருப் பன் அவர்கள் அற நிலையத் துறை அமைச் சராகப் பொறுப்பேற்று ஆற்றி வருகின்ற பணி கள் என்னை மாத்தி ரமல்ல - ஆன்மீகப் பெரு மக்களை மிகமிக பெரு மையிலே, மகிழ்ச்சியிலே ஆழ்த்தக்கூடியவையாக இருக்கின்றன. இவரை எப்படி நான் - எந்தப் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து, அற நிலையத் துறை அமைச் சராக ஆக்கினேன் என்று நம்முடைய மத்திய உள் துறை அமைச்சர் அவர் கள் வியப்பு தெரிவித் தார்கள். நான் எந்தப் பூதக் கண்ணாடி யைக் கொண்டும் பார்க்க வில்லை.

நான் அணிந் திருக்கின்ற இந்தக் கண் ணாடி வழியாகத்தான் அவரைப் பார்த்தேன். (கைதட்டல்) ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிக மாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து - இவர்தான் சரியான ஆள்-அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன். (கைதட்டல்)
பெரியகருப்பன் அவர்கள், பெயரால் கொஞ்சம் அச்சுறுத்தல் தரக்கூடியவர் (கைதட் டல்)-மீசையால் கொஞ்சம் அச்சுறுத்தக் கூடியவர். ஆனால், இரண்டுக்கும் மாறு பாடாக உள்ளத்தால் நம்முடைய அன்பை யெல்லாம் கவர்ந்தவர். (கைதட்டல்) அப்படிப் பட்ட நல்ல தம்பி - அன்புத் தம்பி - அருமை யான தம்பி - எனக்கு வாய்த்த தம்பிகளில் ஒருவர். அவர் கொண் டிருக்கின்ற தெய்வீக நம்பிக்கையைக் கூட - என்பால் கொண்டிருக் கின்ற மரியாதையின் காரணமாக, கொஞ்சம் மறைத்துக்கொண்டு (கைதட்டல்) அந்தப் பணியைத் திறம்பட ஆற்றிக் கொண்டிருப் பவர்.

ஒருநாள் சட்ட மன்றத்தில் கேள்வி நேரத்தில் - எதிர்க்கட்சி யிலே இருந்தவர்கள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தபோது, என் பின்னால் அமர்ந் திருந்த தம்பி பெரிய கருப்பனை நான் திரும் பிப் பார்த்துக் கேட் டேன். எத்தனை கோயில் களில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடத்தியி ருக்கிறோம் என்று கணக்கு இருக்கிறதா? என்று கேட்டேன்.

இருக்கிறது என்று என் னிடத்திலே அவர் எடுத்துக்காட்டினார். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் தமிழகத்திலே உள்ள கோயில்களில் குட முழுக்கு நடைபெறு வதும், அந்த ஆலயங் களுக்குத் தேவையான - எல்லாவகையான பூஜை களும் நடத்தப்படுவதை யும் பட்டியலிட்டு என் னிடத்திலே அவர் காட் டினார்.

தமிழர் தலைவர் வீரமணி

இதை நான் சொல் வதற்குக் காரணம் - நம் முடைய தமிழர் தலை வர் வீரமணி அவர்கள் இதை நான் பெருமை யாகக் கருதுகிறேன் என்று எடுத்துக் கொள்ள மாட் டார் என்று கருது கிறேன். அவர் குறிப் பிட்ட தமிழகத்தினு டைய அந்நாள் பிரிமி யர் பனகல் அரசர் ஆட்சிபுரிந்த அந்தக் காலத்திலேயே நிறுவப் பட்டதுதான் இந்த அற நிலையத் துறை. பனகல் அரசர் இயற்றிய சட்டம்.

துணைப்பாடம்- பனகல் அரசர் பற்றி

நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. இப் போது கூட நான் நம் முடைய மத்திய அமைச் சரிடத்திலே சொன் னேன். 1937 ஆம் ஆண்டு திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் நான் அய்ந் தாம் வகுப்பிலே சேர்ந்த போது, எனக்குத் தரப் பட்ட மிக முக்கியமான பாடப் புத்தகம் - துணைப் பாடம் (நான் டீடெயில்) - பனகல் அர சரைப் பற்றியதுதான்.

அந்தப் புத்தகத்தை இப் போது தேடினேன். எத் தனை ஆண்டுகளுக்குப் பிறகு? 1937-லே நான் படித்த புத்தகத்தை - திருவாரூர் பள்ளிக் கூடத்திலே தேடிப் பார்த்துக் கிடைக்காமல் - நீதிக் கட்சிக் காலத் திலே இருந்த பெரியவர் கள், மாவட்ட அதிகாரி கள் -இவர்களை யெல் லாம் விசாரித்துக் கிடைக்காமல், இறுதி யாக மன்னார்குடியிலே ஒரு நூல் நிலையத்திலே பனகல் அரசரைப் பற் றிய அந்தத் துணைப் பாடப்புத்தகம் எனக்குக் கிடைத்து - அதைப் படித்துப் பார்த்தேன். அதிலே இருக்கின்ற மிக முக்கியமான பக்கம் தான், தமிழ்நாட்டிலே கோயில்களில், மடால யங்களில், அறநிலையம் என்ற பெயரால் அக் கிரமங்கள் நடைபெறு கின்றன.

அவைகளை யெல்லாம் கண் காணித்து, ஆலயங்க ளுக்கு வருகின்ற பொருள்கள் ஒழுங் காகச் செலவிடப்படு கின்றனவா? திருவிழா என்றும், தெப்ப உற் சவம் என்றும் நடத்தப் படுகின்ற விழாக்களில் செலவழிக்கப்படுகின்ற பணத்திற்கு ஒழுங்கான கணக்கு இருக்கிறதா? தினம் தினம் ஆலயத் திற்கு ஆகின்ற செலவிற்கு - ஆலயத்திலே பணி யாற்று கின்றவர்களுக் குத் தரப்படுகின்ற ஊதி யங்களுக்குக் கணக்கு இருக்கிறதா என்ற இவைகளையெல்லாம் ஆராய்ந்து, அறிந்து - அதிலே சிறு ஓட்டை உடைசல் வராமல், ஊழல் வராமல் பார்த்துக் கொள்கின்ற அந்தப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது தான் - அந்தச் சட்டத் தின்மூலம் கிடைத்த வெற்றியாகும்.


அந்த வெற்றியினு டைய ஒரு கட்டத் தைத்தான் அண்மை யிலே சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்திலே நாம் அனுபவித்தோம். சிதம்பரத்திலே உள்ள அந்தக் கோயில் ஆதிக் கம், இதுவரையிலே தீட்சிதர்களுடைய கையிலேதான் இருந்தது. அதை அறநிலையத் துறைக்கு மாற்ற வேண்டு மென்பதற்காக வழக் காடி, போராடி - அந்த வழக்கிலே நம்முடைய அரசு, வழக்காடிய வர்கள் பக்கம் நின்று, அதிலே வெற்றி பெற்று - சிதம்பரம் கோயில் யாரோ சில பேருக்குச் சொந்தம் என்ற நிலை மாறி - இன்றைக்கு அரசு டைமையாக ஆக்கப் பட்டிருக்கிறது என்றால், இது நீதிக் கட்சி - அத னுடைய தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், பனகல் அரசர் போன்ற வர்கள் ஆற்றிய பெரும் பணியின் காரணமாகத் தான் இது முடிந்தது என்பதையும் - அப் படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, புகழ் வாய்ந்த, மேன்மை வாய்ந்த - ஆன்மீகத்திற்கும் நாம் விரோதி அல்ல;

அவர் களில் நல்லவர்கள் இருந் தால், அவர்களையும் வாழ வைக்கவேண்டும் - அவர்கள் மூலமாக அருந் தொண்டாற்ற, அறத் தொண்டுகளை ஆற்றிட வேண்டும் என்பதற்காக எடுக்கப் பட்ட அந்த முயற்சியின் விளைவுதான் இன் றைக்கு இந்த அறநிலை யத்துறை. அந்தத் துறை யில் நல்லவர்கள் அமைச்சர்களாக ஆக வேண்டும்-அந்தத் துறையில் அமைச்சர் களாக இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் மக் கள் பணியாற்ற வேண் டும். மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும். ஆன்மீகத்திற்கும் அவர்கள் அன்பர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மனி தாபிமானத்திற்கும் அவர்கள் அரும்பணி ஆற்ற வேண்டும்.

அப் படிப்பட்டவர் யார் என்று பார்த்தால், நமக்குக் கிடைத்தவர் - தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் - நம்முடைய பெரியகருப்பன் என்று சொன்னால் அது மிகை யாகாது. பெரியகருப் பன் அவர்களைப் பற்றி தம்பி வைரமுத்து அவர் கள் இங்கே சொன்ன போது, அவர் மீசையைப் பற்றிக் குறிப் பிட்டுச் சொன்னார். மீசை மாத்திரமல்ல; மீசை முகத்திலே இருக் கலாம்.

எனக்குக் கூட அப்படியொரு ஆசை

ஆனால், அகத்திலே உள்ள ஆசை எனக்குத் தெரியும். அவருடைய அகத்திலே உள்ள ஆசை, மீசையை விடப் பெரி யது. அந்த ஆசை என்ன வென்றால், தமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும்; தமிழ கத்தில் இன்னும் பல திட்டங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்; தமிழகத்திலே இந்த ஆட்சி தொடர்ந்து இருந்து மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டுமென்கின்ற அந்த ஆசை பெரிய கருப்பன் அவர்களுக்கு உண்டு (கைதட்டல்) என்பதை நான் நன்றாக அறிவேன்.

அதனால் தான் இங்கே அவரு டைய பெயரைச் சொல் லும்போது, நீங்கள் காட்டிய ஆர்வம் - அவரை அமைச்சர் என்று விளித்தபோது, காட்டப்பட்ட ஆர் வத்தைவிட - மாவட்டச் செயலாளர் என்று சொன்னபோது,

அதிக ஆர்வத்தை நீங்கள் காட் டினீர்கள். எனக்குக் கூட அப்படியொரு ஆசை இருக்கிறது. (கைதட் டல்) முதலமைச்சர் என்று சொல்லும் போது, நீங்கள் இவ் வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா? அல் லது திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் என்று சொல்லுகிற நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், (கைதட்டல்-பலத்த ஆரவாரம்) - தலைவர் என்று சொல் வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.

ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்பதை உங் களுக்குத் தெரிவித்து, மணமக்கள் வாழ்க! வாழ்க!! என்று கூறி விடைபெறுகிறேன். -

இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றி னார்.

No comments:

Post a Comment