கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 28, 2011

தேவேந்திர குல வேளாளர் பிரச்னை : நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதல்வர் உத்தரவு


குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள், தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும், அந்த உட்பிரிவுகள் அனைத் தையும் ஒன்றாக இணைத்து தேவேந் திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண் டும் என்றும், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம.தங்க ராஜ் அளித்த கோரிக்கை, கடைய நல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல் போன்ஸ் மூலம் தமிழக அரசின் கவ னத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தக் கோரிக்கை குறித்து ஜனவரி 26 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தா லோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் க.அன்பழகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி, தமிழரசி, மதிவாணன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், ஆதிதிராவி டர் நலத்துறை செயலாளர், ஆணை யர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கோரிக்கையை சட்ட ரீதியாக பரிசீலித்து நடைமுறைப்படுத் திட நீதிபதி ஜனார்த்தனத்தைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து பரிந்துரை பெறலாம் என்று முதல மைச்சர் கலைஞர் ஆணையிட்டுள் ளார்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment