கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

சிப்காட்டின் ஆதாய பங்கு தொகை முதல்வர் கருணாநிதியிடம் பீ14.48 கோடி ஒப்படைப்பு


'சிப்காட்’ நிறுவனத்தின் ஆதாய பங்கு தொகை ரூ.14 கோடியே 48 லட்சத்துக்கான காசோலையை சிப்காட் தலைவர் நிரஞ்சன் மார்டி, முதல்வர் கருணாநிதியிடம் 11.01.2011 அன்று வழங்கினார்.
கடந்த 1971ம் ஆண்டு நிறுவப்பட்ட சிப்காட் நிறுவனம், 40 ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் வளாகங்கள் அமைத்து முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனம் 2009&10 ஆண்டில் ரூ.302 கோடியே 9 லட்சம் மொத்த வருமானமாகவும், ரூ.92 கோடியே 19 லட்சம் நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதாய பங்கு தொகையை சிப்காட் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டுக்கான ஆதாய பங்கு தொகையான ரூ.14 கோடியே 48 லட்சத்துக்கான காசோலையை, புதிய தலைமை செயலகத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் தலைவர் நிரஞ்சன் மார்டி, முதல்வர் கருணாநிதியிடம் நேற்று வழங்கினார். அப்போது, தொழில்துறை முதன்மை செயலர் ராஜீவ் ரஞ்சன் உடனிருந்தார்

No comments:

Post a Comment