கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 28, 2011

மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு -


இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட சம்ப வம் குறித்து அறிந்ததும் அன்று தன்னை சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த சம் பவத்திற்கு முதலமைச்சர் கலைஞர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை சுட் டிக் காட்டி இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்குதல் செயல்கள் தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்தத் தாக்கு தலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் இறந்த ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அன்றே நிவாரண தொகை ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியி டம் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண நிதி வழங்கியதை தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரிக்கு அரசு வேலை வழங்க உத்தர விட்டுள்ளதாக ஏ.கே. எஸ்.விஜயன் எம்.பி. தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் அறிவித்தபடி ஜெயக் குமாரின் மனைவி முரு கேஸ்வரிக்கு ஆறுகாட் டுத்துறை அங்கன்வாடி மையத்தில் உதவியாள ராக பணிபுரிவதற்கான நியமன ஆணை (25.01.2011) அன்று இரவு வழங் கப்பட்டது. இதனை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் வழங்கினார்.

No comments:

Post a Comment