கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 2, 2011

கலைஞருடன் ப.சிதம்பரம் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (01.01.2011) மாலை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது புத்தாண்டையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு, அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.


சென்னை அருகே தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்க, பிரதமர் மன்மோகன் சிங் நாளை சென்னை வருகிறார். இரண்டு நாள் பயணமாக வரும் பிரதமர் மன்மோகன் சிங், சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment