கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 23, 2011

இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கலைஞர்


இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.


22.01.2011 இரவு 11 00 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை இடைமறித்துத் தாக்கியதில் ஜெயக்குமார் இறந்து விட்டதாகவும், மற்றும் இருவர் தாக்குதலில் இருந்து தப்பித்து கரை சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது.


இதனை அறிந்த முதல்வர் கருணாநிதி இன்று (23 1 2011) தன்னைச் சந்தித்த மத்திய நிதித் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இச்சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டதுடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, இது தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்றும், இத்தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.


இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட இன்று
(23 1 2011) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் அறிக்கை தர உத்தரவு :

தமிழக மீனவர்கள் 2 பேர், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அத்துமீறல்களை ஏற்று கொள்ள முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.
இலங்கை அரசின் இந்த அத்துமீறல்களை ஏற்று கொள்ள முடியாது என்றும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இப்பிரச்னையை கடுமையாக எடுத்து கொண்டுள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment