கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

கருணாநிதி கோரிக்கையை ஏற்று கேரளாவில் 5 மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை அறிவிப்பு


தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு வரை பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. திருவனந்தபுரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் கேரள அரசு அலுவலங்களில் பணிபுரியும் தமிழர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். இதை கேரள அரசு ஏற்றுள்ளது. இது பற்றி, கேரளா முதல்வர் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று பொங்கல் தினமான வருகிற 15ம் தேதி திருவனந்தபுரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment