கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 22, 2011

ஜெயலலிதா அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: மு.க.அழகிரி



மதுரை செல்லூரில் ரூ.29 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சாலை மேம்பாலத்தினை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று (22.01.2011) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், கவுஸ்பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

பாலத்தை திறந்து வைத்ததும் மு.க.அழகிரி சிறிது தூரம் நடந்து வந்தார். அதன் பிறகு காரில் ஏறி பாலத்தின் மறுமுனையான தத்தனேரி வரை சென்று பாலத்தை பார்வையிட்டார். பின்னர் அதே வழியாக திரும்பி வந்தார். அப்போது பாலத்தின் இருபுறமும் மக்கள் நின்று கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பாலத்தில் இருந்தபடியே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: பாலத்தின் தரம் எப்படி உள்ளது?
பதில்: பாலம் மிகவும் நன்றாக உள்ளது.

கேள்வி: அதிமுக வெற்றி பெற்று அடுத்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?


பதில்: ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


கேள்வி: திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை எந்த அளவுக்கு செய்துள்ளது?


பதில்: கலைஞர் ஆட்சியில் சொன்னதையும் செய்துள்ளோம். சொல்லாததையும் நிறைவேற்றுவோம்.


கேள்வி: மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஆக்கப்படுமா?


பதில்: நேற்று கூட மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் பேசினேன். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்கோ வசதி அளிக்கப்படாமல் இருந்ததையும் அவருடன் பேசினேன். விரைவில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

கேள்வி: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதிய அரசு மருத்துவமனை திறக்கப்படாமல் உள்ளதே?


பதில்: முதல்வரின் தேதி கிடைக்கவில்லை. தேதி கிடைத்தவுடன் விரைவில் திறப்பு விழா நடைபெறும்.


கேள்வி: மதுரையில் 10 வருடமாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த பாலம் தற்போது முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது பற்றி?

பதில்: இந்த பாலம் விரைவாக கட்டி முடிக்க ஆணையிட்டேன். பாலம் தற்போது திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மதுரையில் க்ஷ்29 கோடியில் கட்டப்பட்ட வைகையில் நீண்ட பாலம் :
இந்த பாலத்தின் மொத்த மதிப்பு ரூ.29 கோடி. வைகை ஆற்றின் அருகே அமைந்துள்ள மிக நீண்டபாலமாகும். இதன் மொத்த நீளம் 942 மீட்டர். அகலம் 11 மீட்டர். வைகை ஆற்றின் ஒரு பகுதியில் ஆற்றின்உயரத்துக்கும், ரயில்வே பாலத்தின் உயரத்துக்கும் சேர்த்து சாதாரண சாலை மேம்பாலத்தை விட இரண்டுமடங்கு உயரத்துடன் நவீன தொழில்நுட்பத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலேயே இத்தகையதனிச்சிறப்புடன் கட்டப்பட்ட முதல் பாலம் இதுவாகும்.
மொத்தம் 28 தூண்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த பாலம் கடந்த 2000ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு, 2003ம் ஆண்டு பணி தொடங்கியது. அதன் பிறகு கிடப்பில் போடப்பட்டது. இதற்கு பின்னர்துவங்கப்பட்ட எல்லீஸ் நகர் பாலம் முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது. மத்திய அமைச்சர்மு..அழகிரி முயற்சியால் தற்போது பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment