கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 28, 2011

மாநில அரசின் ஆலோசனை பெறாமல் பொது நுழைவுத்தேர்வு பற்றி முன்மொழிவு எடுக்கப்படாது - அமைச்சர் கபில் சிபல்


மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமல், பொது நுழைவுத் தேர்வு குறித்து முன்மொழிவு எடுக்கப்படாது என்று கபில் சிபல் உறுதியளித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேல்படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு அறிமுகம் தொடர்பாக, தாங்கள் அனுப்பிய கடிதத்தை ஜனவரி 3ம் தேதி பெற்றுக்கொண்டேன். மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களின் கடிதத்தை மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வழங்கியுள்ளேன். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் எந்த முன்மொழிவும் எடுக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment