கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, January 19, 2011

நானாக எந்த பதவியையும் கேட்க மாட்டேன் : மு.க. அழகிரி


புதிய மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா இன்று (19.01.2011) மாலை டெல்லியில் நடக்கிறது. ஊழல் கண்காணிப்பிற்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டமும் டெல்லியில் நடைபெற உள்ளது.

இவ்இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று (19.01.2011) காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

மத்திய மந்திரி பதவியை நீங்கள் ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறதே?

இதற்கான தெளிவான பதிலை கலைஞர் கூறி விட்டார். மேலும் நான் பதில் கூற ஒன்றும் இல்லை.

புதிய மந்திரி சபை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. அதில் தி.மு.க. வுக்கு கூடுதலாக மந்திரி பதவி கிடைக்குமா?

இந்த கேள்வியை பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் மாநில அரசியலுக்கு திரும்புவீர்களா?

நான் தற்போது மத்திய மந்திரி.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தற்போது நீங்கள் கட்சியில் வகிக்கும் பதவியை விட பெரிய பதவி வழங்கப்படுமா? நானாக எந்த பதவியையும் கேட்க மாட்டேன். அவர்களாக தந்தால் ஏற்றுக்கொள்வேன். ஆ. ராசா பதவியில் இருந்து நீக்க நீங்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறதே? ஊடகங்கள்தான் இதை பிரச்சாரம் செய்கின்றன. நான் எதையும் வலியுறுத்தவில்லை.


கலைஞர் - மு.க. அழகிரி சந்திப்பு


மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் இருந்து விமானம் மூலம் 18.01.2011 அன்று காலை சென்னை வந்தார்.


அவர் கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

No comments:

Post a Comment