கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

ஸ்டாலின் பிறந்த நாள்: கலைஞர் வாழ்த்து







துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 01.03.2011 அன்று 59 வயது பிறந்தது. பிறந்த நாளை அவர் எளிமையாக கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்தார். பின்னர் குடும்பத்தினருடன் காலை 6.30 மணிக்கு கோபாலபுரம் இல்லம் சென்றார். அங்கு முதல்வரும் தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். அதையடுத்து செனடாப் சாலையில் உள்ள இல்லம் சென்றார். அங்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, சபரீசன், உதயநிதி, கிருத்திகா, மு.க.தமிழரசு, செல்வம், செல்வி, அமிர்தம் மற்றும் குடும்பத்தினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். காலை 8 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. வரவேற்றனர். அங்கு ஸ்டாலின் 59 கிலோ எடையுள்ள கேக் வெட்டினார். காலை 8 மணி முதல் பகல் 1.30 மணி வரை நாற்காலியில் அமராமல் நின்றவாறு தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட கியூவில் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னர் பர்னாலா, பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், ஆர்.எம்.வீரப்பன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் போனில் வாழ்த்து கூறினர். சந்திரகாசன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மாணிக்தாகூர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.
நிதி அமைச்சர் அன்பழகன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோசி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறன், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், எம்பிக்கள் ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, பட அதிபர் எஸ்.மார்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், காயத்ரிதேவி, ஞானசேகரன், விடியல் சேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தேசிய லீக் பஷீர் அகமது, தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், தாவூத் மியாகான் ஆகியோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, குமரி அனந்தன், சுப வீரபாண்டியன், ரவிகுமார் எம்.எல்.ஏ., மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், தலைமை செயலர் மாலதி, டி.ஜி.பி. லத்திகா சரண் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகை குஷ்பு, நடிகர்கள் பாக்யராஜ், சந்திரசேகர், ஜெயமணி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், குகநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜே.எம்.ஆரூண் எம்.பி, சுகவனம், முன்னாள் அமைச்சர்கள் திருநாவுக்கரசர், அந்தியூர் செல்வராஜ், பூவை.ஜெகன் மூர்த்தி, வி.பி.மணி
பேராயர்கள் சின்னப்பா, எஸ்றா சற்குணம், தொ.மு.ச. பேரவை தலைவர் செ.குப்புசாமி, பொது செயலாளர் மு.சண்முகம், ரத்தினசபாபதி, கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, காசி முத்துமாணிக்கம், என்.கே.பி.ராஜா, சற்குணபாண்டியன், சங்கரி நாராயணன், காயத்ரி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, கே.சி.பழனிச்சாமி, நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் ஸ்டாலினுக்கு நோட்டு மாலை அணிவித்தனர். திருவண்ணாமலை நகராட்சி தலைவர் ஸ்ரீதரன், 59 தட்டுகளில் பழங்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தார். வெள்ளி ரதமும், ரூ.25000 தேர்தல் நிதியும் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நீலமேகன் சீரிவரிசை பொருட்களுடன் வந்தார்.
பேச்சாளர் எஸ்.எம்.கே.அண்ணாதுரை பிரச்சார பாடல் சி.டி வழங்கினார். திருவண்ணாமலை கோயில் பிரசாதம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி தி.மு.க. செயலாளர் அன்புதுரை தலைமையில் தி.மு.க.வினர் 10 ஆயிரம் மோர் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார்கள். ஆட்டுக் குட்டி, செவ்வாழைக்குலை, பழங்கள், இனிப்பு வகைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு நேரில் சென்ற திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பொன் னாடை அணிவித்து, தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி, நினைவுப் பரிசையும் அளித்து பிறந்த நாள் வாழ்த்தும் தெரி வித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொரு ளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த. வீரசேகரன் ஆகியோரும் உடனிருந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் யசோதா தலைமையில் கொறடா ஞானசேகரன் மற்றும் அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் துணை முதல்வரை வாழ்த்தியிருக்கிறோம்.


மு.க.ஸ்டாலின் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, தமிழகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் பல சேவைகள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகவும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாகவும் நெஞ்சார வாழ்த்துகிறோம் என்றார்.





No comments:

Post a Comment