கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 28, 2011

தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு


தளி, ஓசூர் தொகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜ்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் கட்சி பணியாற்றி வருகிறோம். பல்வேறு இன்னல்களை சந்தித்தும் கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களின் பிரச்னைகளுக்காக பலமுறை சிறைக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை மதிக்காமல் தேர்தலில் போட்டியிட தளி தொகுதி எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழு, ஓசூர் வட்ட குழு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முறையும் தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ ராமசந்திரனுக்கு அனுமதி கொடுத்தது மிகுந்த மனவேதனைக்குரிய விஷயம். எனவே, நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் தளி மற்றும் ஓசூர் தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம்.
பாத்திர உற்பத்தியாளர் திமுகவுக்கு ஆதரவு :

தமிழ்நாடு எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்தது.
மாநில தலைவர் பூபதி ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.ஜி.பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ‘சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவது’ என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தி செய்யும் தொழிலில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று பூபதி ராஜா தெரிவித்தார்.

No comments:

Post a Comment