கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

அஇமூமுகவிலிருந்து விலகிய ஒச்சாத்தேவர் தலைமையிலான அக்கட்சியினர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு


அஇமூமுகவிலிருந்து விலகிய ஒச்சாத்தேவர் தலைமையிலான அக்கட்சியினர், 23.03.2011 அன்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
டாக்டர் சேதுராமன் தலைமையிலான அ.இ.மூ.மு.க.வுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இசக்கிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு அந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன் அந்த கட்சியினரே கொடியை இறக்கி கிழித்தனர். மாநில துணைத் தலைவர் ஒச்சாத்தேவர் தலைமையில், ஒரு கோஷ்டியினர் விலகி, ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூ.மு.க.வில் இணைந்தனர்.
இவர்கள், மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை 23.03.2011 அன்று சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஒச்சாத்தேவர் கூறும்போது “அ.தி.மு.க. வில் அ.இ.மூ.மு.க. அடமானம் வைக்கப்பட்டு மூழ்கி விட்டது. இனிமேல் மீளாது. நாங்கள் தாய் கட்சியான மூ.மு.க.வில் இணைந்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்“ என்றார்.

No comments:

Post a Comment