கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

மக்களை மதிக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - அன்பழகன் பிரசாரம்


மக்களை மதிக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அமைச்சர் க.அன்பழகன் கூறினார்.
வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் நிதியமைச்சர் க.அன்பழகன் 24.03.2011 அன்று திருமங்கலத்தில் உள்ள சத்தியசாய் நகர், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, தில்லையாடி வள்ளியம்மை நகர், என்.வி.நடராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன், வில்லிவாக்கம் பகுதி செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அன்பழகன் பேசுகையில், ”இந்த தேர்தல் தீய சக்திகளுக்கு எதிராக நடைபெறும் தேர்தல். திமுக அரசு ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து அதை காப்பாற்றி வருகிறது. தொழிலாளர், அரசு ஊழியர், காவலர்கள் ஆகியோரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அரசு. மக்களை மதிக்காத, மக்களை ஏமாற்றுபவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. ஏழைகள் வாழ, முற்போக்கு பணிகள் தொடர நடைபெறும் நல்லாட்சி நீடிக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.

No comments:

Post a Comment