கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர், டூப்பர் ஹிட்டாகும்



திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர், டூப்பர் ஹிட்டாகும் என மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் நடிகை குஷ்பு தெரிவித்தார்.
மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் தளபதியை ஆதரித்து நடிகை குஷ்பு 24.03.2011 அன்று சுப்ரமணியபுரம், ஜீவா நகர், சோலைஅழகுபுரம் மெயின் ரோடு, பழங்காநத்தம், பைகாரா பகுதிகளில் வேனில் இருந்தவாறே பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

நான் சினிமாவில் மட்டும் கதாநாயகி. உண்மையான கதாநாயகி திமுகவின் தேர்தல் அறிக்கை தான். 2006ல் தோல்வியடைந்த ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்க சென்று விட்டார். மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. இன்ஸ்டன்ட் காபி, டீ போல அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வந்தார். ஜெயலலிதா இன்னும் மாறவில்லை. கூட்டணி கட்சிகாரர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டார். கடந்த 5 ஆண்டு உடன் இருந்த வைகோவை தூக்கியெறிந்து விட்டார். நாளைக்கு உங்களையும் அம்போவென விட்டுவிட்டு போய்விடுவார்.
அவருடைய திமிர், அகம்பாவம் இன்னும் குறையவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து விட்டார். ஆனால் சுயபுத்தி இல்லாமல் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். மதுரைகாரர்களுக்கு பாசம் அதிகம். அதை விட தில்லு அதிகம். யார் தப்பு செய்தாலும் குற்றம், குற்றமே என நெற்றிக்கண்ணை திறந்து காட்டி விடுவார்கள். அண்ணன் அழகிரி தென்மண்டலத்தை தன் மண்டலமாக்கி, பொன் மண்டலமாக்கி உள்ளார். மதுரையின் வளர்ச்சியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு முக்கிய பங்குண்டு. எனது அரசியல் பிரவேசத்தில் எனது முதல் கன்னி பேச்சை இங்கிருந்து துவக்குகிறேன். இதைவிட பெருமை எனக்கு வேறு என்ன வேண்டும்.
உதயசூரியன் 6 கோடி மக்களின் இதய சின்னம். ஜெயலலிதா எந்த நன்மையும் செய்ய மாட்டார். அவர் ஆட்சிக்கு வந்தால் திமுக தந்த நல்ல திட்டங்களையும் பறித்து விடுவார். அறிவியலில் நியூட்டன் பார்முலா. சினிமா என்றால் ரஜினி பார்முலா. அரசியல், தேர்தல் என்றால் அது அண்ணன் அழகிரி பார்முலா. நீங்க நல்லாயிருக்கனும்னா திமுகவுக்கு ஓட்டளியுங்கள். மதுரை மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும். திமுக தேர்தல் அறிக்கை ‘சூப்பர் டூப்பர்‘ ஹிட்டாகும். மதுரையை மலேசியா மாதிரி மாற்ற திமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்திற்கு மருமகளாக வந்தேன். இப்போது மகளாக ஓட்டு கேட்கிறேன். திமுக தான் பெரிய கூட்டணி. அதிமுக வெறும் சீட்டணி தான்‘

இவ்வாறு அவர் பேசினார்.
குஷ்பு கொடுத்த பிளையிங் கிஸ்!
பழங்காநத்தம் பகுதியில் குஷ்பு பிரசாரம் செய்த போது அவ்வழியாக சென்ற பள்ளி மாணவிகளை பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்தார். பைக்காராவில் கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தையை தூக்கி வைத்து கொண்டு எவ்வளவு புஷ்டியாக உள்ளது பார்த்தீர்களா! இந்த குழந்தை அடுத்த தலைமுறைக்கான குழந்தை. இதற்கு தேவையான திட்டங்களை திமுக அரசு கொண்டு வரும் என்றார்.

சொந்தமாக யோசிக்க தெரியாத ஜெ.: குஷ்பு

மதுரை சொக்கலிங்கநகர், பை பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.


அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது: மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல் அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்

ஏனென்றால் கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர்.


ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார்.


ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.


பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.


ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.


கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்.

கலைஞர் அனைவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காக காங்கிரீட் வீடு கட்டித் தருகிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிளாட்பாரத்தில் தான் படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.


குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார்.


திமுக அரசு கொண்டு வந்த திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. தற்போது திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து போலி வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். சொந்தமாக யோசிக்க தெரியாத ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட வேண்டுமா? என்றார்.


No comments:

Post a Comment