

நான் சினிமாவில் மட்டும் கதாநாயகி. உண்மையான கதாநாயகி திமுகவின் தேர்தல் அறிக்கை தான். 2006ல் தோல்வியடைந்த ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்க சென்று விட்டார். மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. இன்ஸ்டன்ட் காபி, டீ போல அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வந்தார். ஜெயலலிதா இன்னும் மாறவில்லை. கூட்டணி கட்சிகாரர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டார். கடந்த 5 ஆண்டு உடன் இருந்த வைகோவை தூக்கியெறிந்து விட்டார். நாளைக்கு உங்களையும் அம்போவென விட்டுவிட்டு போய்விடுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சொந்தமாக யோசிக்க தெரியாத ஜெ.: குஷ்பு
மதுரை சொக்கலிங்கநகர், பை பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது: மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல் அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்
ஏனென்றால் கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர்.
ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார்.
ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.
பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்.
குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார்.
திமுக அரசு கொண்டு வந்த திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. தற்போது திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து போலி வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். சொந்தமாக யோசிக்க தெரியாத ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட வேண்டுமா? என்றார்.
No comments:
Post a Comment