கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 18, 2011

திமுக கூட்டணிக்கு தேசிய லீக், வேளாளர் சங்கம் போதகர்கள் மையம் ஆதரவு


திமுக கூட்டணிக்கு தேசிய லீக், அகில இந்திய போதகர்கள் உதவி மையம், வேளாளர் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து 17.03.2011 அன்று திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
தேசிய லீக் கட்சியின் தலைவர் பசீர் அகமது, பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாநில நிர்வாகிகள் ஜபகர் அலி, நூரூதின், பைரோஸ் அகமது சாதிக், நசீர் உள்ளிட்ட பலர் திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் 17.03.2011 அன்று சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின்போது பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.
அகில இந்திய போதகர்கள் உதவி மையத்தின் தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் ஸ்டீபன், நிர்வாகிகள் ஜோன்குட்டி, ஜேசுதாஸ் மனோகர், ஜெயசிங்ராஜ், குமார், வில்பிரட்ராஜ், செல்லர்ட் மற்றும் 100க்கும் மேற்பட்ட போதகர்கள் மற்றும் கன்னியாகுமரி வேளாளர் சங்கத்தின் தலைவர் சாஸ்தன்குட்டி பிள்ளை, வக்கீல் சந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள், தனித்தனியாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 17.03.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன், அமைச்சர் கீதாஜீவன், இளைஞர் அணி துணை செயலாளர் அசன் முகமது ஜின்னா, வக்கீல் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment