கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 18, 2011

இ.யூ.முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு


நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இடம் பெற்றுள்ளது.

இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு துறைமுகம், நாகப்பட்டினம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்த்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர்மொய் தீன் ஆகியோர் மார்ச் 15ஆம் தேதி கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் முகமது ஷேக் தாவூத்,

துறைமுகத்தில் அல்தாப் ஹுசைன்,

வாணியம்பாடியில் அப்துல் பாசித்

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் கருணாநிதியிடம் வாழ்த்து :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் 3 பேர், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்தாப் (துறைமுகம்), அப்துல் பாஷித் (வாணியம்பாடி), முகமது ஷேக்தாவூது (நாகப்பட்டினம்) ஆகியோரை, முதல்வரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
வேட்பாளர்கள் மூவரும் கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் கலைஞருடன் சந்திப்பு :
முன்னதாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், “திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த அணி மாபெரும் வெற்றி பெற்று 6வது முறையாக கருணாநிதி முதல்வராக வருவார். மக்களின் குறைகளை தெரிவிக்கவே, நாங்கள் விமர்சனம் செய்தோம். தனிப்பட்ட முறையில் திமுகவை யோ, ஆட்சியையோ விமர்சிக்கவில்லை. ஆட்சியில் பங்கு கோரிக்கை பற்றி காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்” என்றார்.

No comments:

Post a Comment