கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 18, 2011

திருவாரூரில் முதல்வர் போட்டி : பட்டாசு வெடித்து திமுகவினர் மகிழ்ச்சி




திமுக வேட்பாளர்கள் பட்டியல் 17.03.2011 அன்று வெளியிடப்பட்டது. இதில், முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த திமுகவினர் மாவட்ட செயலா ளர் பூண்டி கலை வாணன், நகர செயலாளர் சங்கர் ஆகியோரின் தலைமையில் திருவாரூர் பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்கள், பஸ்களில் இருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகில் ஒன்றிய, நகர திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நீடாமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ சித்தமல்லி சோமசுந்தரம், நகர செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் கடைவீதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட திமுக செயலா ளர் பூண்டி கலைவாணன், திருவாரூர் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் கூறுகையில், “திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுவதை அறிந்து கட்சியினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை முதல்வர் சந்தித்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெறச்செய்ய பாடுபடுவோம்” என்றனர்.

No comments:

Post a Comment